சிவா.ஜி
18-03-2008, 12:33 PM
பதினெட்டாயிரம் அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைந்திருந்தது அந்த ராணுவத்தளம்.சர்ச்சைக்குரிய எல்லைப் பிரச்சனையில் இருக்கும் சியாச்சின் மலைப் பிரதேசம்.ரோஜாத் தோட்டம் என்று அர்த்தம்...ஆனால் அபாயம் நிறைந்த,எதிரிகளின் ஊடுருவல் அதிகமாக நிகழக்கூடிய சென்ஸிடிவ் பகுதி.முருகைய்யா.....தருமபுரி மாவட்டத்தின் ஒரு சின்ன கிராமத்தைச் சேர்ந்தவன்..சர்வீஸில் சேர்ந்து 10 ஆண்டுகள் ஆகிறது.சமீபத்தில்தான் இந்த இடத்துக்கு மாற்றலாகியிருந்தான்...அவுல்தார் அவனுடைய பதவி.மேஜர் கன்னாவின் குழுவில் அவருக்கு நம்பிக்கையான வீரன்.
கையில் இருந்த வெள்ளை உலோக கோப்பையில் தேநீர் இருந்தது.ஒரு மடக்குக்கு ஒரு முறை சூடு படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.அத்தனைக் குளிர்.இங்கு வருவதற்குமுன் உடனிருந்த நன்பர்கள் நிறைய சொல்லியிருந்தார்கள்...இந்த பிரதேசத்தின் குளிர் பற்றியும்....ஆபத்துகள் பற்றியும்.சண்டையில் இறந்தவர்களை விட பனிப்பொழிவிலும்,நிலச் சரிவிலும்,கடுமையான குளிரிலும் இறக்கும் வீரர்களின் எண்ணிக்கைதான் இங்கே அதிகம் என்று.ஆனால் ஒரு உண்மையான கீழ்படிதல் உள்ள வீரனாய் எதைப்பற்றியும் அச்சப்படாமல்...இங்கே வந்திருந்தான்.
இங்கு வந்து பார்த்தப் பிறகுதான் இவனைப்போல எத்தனையோ பேர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்காக காவல் இருப்பதைப் பார்த்துவிட்டு...இவனும் அவர்களில் ஒருவன் என்ற பெருமிதத்தை அடைந்தான்.மிகச் சிறிய கூடாரங்கள்...அதுவும் அக்டோபர் மாதங்களில் பணிப்பொழிவில் பூமிக்கு அடியில் போய் விடும்.ஒரு ஆள் மட்டும் நுழையக்கூடிய வகையில் பேரல்களால் ஆன சுரங்கப்பாதை போன்ற வழியில்தான் அந்த கூடாரங்களை அடையவேண்டும்.இதற்குள்தான் எட்டு பேர் வசிக்க வேண்டும்.கெரசின் ஸ்டவ்தான் பல விஷயங்களுக்கு உதவுகிறது.பனியை உருக்கி குடிநீராக்குவதற்கும்,கூடாரத்துக்கு வெளிச்சம் மற்றும் கதகதப்பைத் தருவதற்கும் அந்த ஸ்டவ்தான் துணை.
சரேலென்று இறங்கும் அபாயமான சரிவுகளில்...கொஞ்சமும் பயமின்றி ஆடு மேய்க்கும் சிறுவர்களை ஆச்சர்யத்துடன் பார்ப்பான்.அவர்கள்தான்...இந்திய ராணுவத்தினருக்கு நம்பகமான தகவல் தரும்....உளவாளிகள்.எதிரிகளின் நடமாட்டத்தைக் கவனித்து உடனுக்குடன் தகவல் சொல்லி விடுவார்கள்அப்படி ஒரு சிறுவனிடமிருந்து வந்த தகவலின் அடிப்படையில்தான்...முருகய்யாவும்,இன்னும் சில ஜவான்களும்...அந்த இடத்துக்குப் போனார்கள்.யாரையோ எதிர்பார்த்து....மறைந்திருந்தார்கள்....வெப்பமான மூச்சுக்காற்றால் மீசை முடியில் உருவான..ஐஸ் கட்டிகளை அடிக்கடி உடைத்துக்கொண்டு காத்திருந்தார்கள்....
கொஞ்ச நேரத்தில் ஒரு உருவம் மிக மிக மெதுவாக...அசாதரணமான...ஜாக்கிரதை உணர்வுடன்...மெள்ள முன்னேறி வந்து கொண்டிருந்தது.தெளிவாகத் தெரியாததால்...ஆளை அனுமானிக்க முடியவில்லை....கிட்ட நெருங்கியதும்...ஒரே பாய்ச்சல்...தரையில் கிடத்தி..கைகள் இரண்டையும் முதுகுக்கு கொண்டு வந்து விலங்கிட்டார்கள்.பின் அப்படியே கொத்தாக தூக்கி நிறுத்தியதும்தான் தெரிந்தது அது ஒரு பெண்.நல்ல திடகாத்திரமாக இருந்தாள்.பஞ்சாபிப் பெண்களுக்கே உரிய நல்ல உயரம்....வலுவான உடல்.அடிக்கடி அந்தப்பக்கத்திலிருந்து இங்கே ஊடுருவும் எதிரிகளில் பெண்களும் இருப்பார்கள்.இவர்கள் ஆண்களை விட அழுத்தக்காரர்கள்...சாமான்யமாக அவர்களை பேச வைக்க முடியாது.
முதல் வேலையாக அவளை முழுச் சோதனை செய்து...வெடிகுண்டு எதுவும் அவள் வைத்திருக்கவில்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு...காலில் கட்டி வைத்திருந்த கத்தியை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு...கூடாரத்துக்கு அழைத்து வந்தார்கள்.மேஜர் கன்னா...கீழே இருந்த மற்றொரு பேஸ்(BASE)க்கு போயிருந்ததால்..அவரைத் தொடர்புகொண்டு விவரத்தைச் சொல்லியதும்,உடனே புறப்பட்டு வருவதாகச் சொன்னார்.அவர் வரும் வரை அவளை பத்திரமாக...நாற்காலியோடு சேர்த்து கட்டி வைத்தார்கள்.ஒரு அலட்சிய புன்முறுவல் அவள் உதட்டில் ஓடிக்கொண்டிருந்தது....ஜவான்களைப் பார்த்து கேலி செய்வதாய் அது இருந்தது....அது கொடுத்த எரிச்சலில்...ஒரு ஜவான்..பளிச்சென்று அவள் முகத்தில் அறைந்தான்.அதற்கெல்லாம் அசராத உறுதியுடன் ஏதோ முணுமுணுத்தாள்.....க்யா போல்த்தியே தூ குத்தி....என்ன முணுமுணுக்கிறாய் நாயே..என்று மறுபடியும் அவனே அறைந்தான்...இப்போது சத்தமாக பஞ்சாபியில்....அந்தர்கே கல் நை குலா சக்தே.....எனக்குள்ள இருக்கற எந்த தகவலையும் உங்களால வெளியே எடுக்க முடியாது என்று இரைந்தாள். ஓ பி தேக்லேங்கே..சாலி...அதையும் பாத்துடலாம்...என்று மீண்டும் அடிக்கப் போனவனை முருகையா தடுத்து...மேஜர் வரும் வரை அவளை எதுவும் செய்ய வேண்டாம்..என்று சொல்லிவிட்டு அவளுக்கருகில் இரண்டு ஜவான்களை நிற்கச் சொல்லிவிட்டு...வெளியே வந்தான்.மேலும் சில ஜவான்களை அழைத்து கூடாரத்துக்கு காவல் வைத்துவிட்டு தன்னுடன் சிலரை அழைத்துக்கொண்டு கிளம்பிப்போனான்.மேஜர் வருவதற்குள் திரும்பிவிடலாமென்று நினைத்துக்கொண்டு.
மேஜர் கன்னா வந்ததும்....நேரே அவளைக் கட்டி வைத்திருந்த கூடாரத்துக்குள் நுழைந்தார்.அவரும் பஞ்சாபி என்பதால்...அவளை பஞ்சாபியிலேயே விசாரித்தார்....எந்த பலனும் இல்லை.வாயைத் திறக்கவே இல்லை.தனது இராணுவ முறையைப் பிரயோகித்தார்...எந்த மாற்றமும் இல்லை.தவ நிலையில் அமர்ந்திருக்கும் யோகியைப் போல அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.அப்படி அவள் அமர்ந்திருந்தது அவரை இன்னும் ஆத்திரப்படுத்தியது....ரைஃபிள் பிடித்துக் காய்த்துப்போயிருந்த.அந்த வலுவான கைகளால் ரப் பென்று அவள் கன்னத்தில் அடித்ததில்...விரல் நகம் கண்னில் பட்டு கீழிமை கிழிந்து ரத்தம் வந்தது....சிவந்த கண்ணம் மேலும் சிவந்து விரலடையாளங்களை வெளிக்காட்டியது.அதற்கும் அசையாமல் தலையை மட்டு சாய்த்து தோள்பட்டையால் வழிந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டாள்.
வெளியே சின்னதாக ஒரு சலசலப்பு....தபால் கொண்டு வரும் நாய் வந்திருந்தது...உண்மையாகவே நாய்தான்.அந்த மலைப்பிரதேசத்தில் ஏறி வந்து குறிப்பிட்ட இடத்தில் தபால்களை சேர்க்குமாறு அந்த நாயைப் பழக்கியிருப்பார்கள். தற்காலிகமாக அவளை அந்த ஜவான்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வந்த கன்னா...தபால் பையைப் பிரித்துக்கொண்டிருந்த ஜவானைப் பார்த்து...என் பெயருக்கு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார்.புரட்டிப் பார்த்துவிட்டு...நஹி சாப் என்றான்.
மீண்டும் உள்ளே வந்த கன்னா....கண்ணாலேயே அந்த ஜவான்களைப் பார்த்து ஏதாவது சொன்னாளா என்று கேட்டார். நஹி சாப்...மணி எத்தனை என்று மட்டும் கேட்டாள். என்று ஒருவன் சொன்னதுமே...அவருக்கு இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று தெரிந்தது.மீண்டும் அவளிடம் போய் சொல் எதற்கு மணி கேட்டாய்...யாரை எதிர்பார்க்கிறாய்...அல்லது ஏதாவது நிகழ்த்த நேரம் குறித்திருக்கிறீர்களா...என்று சரமாரியாகக் கேள்விகளை வீசினார்.எல்லாவற்றையும் கேட்டவள்..முதல் முறையாக...கிழிந்த உதடுகளூடே மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தினாள்.தொடர்ந்து பஞ்சாபியில்...இந்நேரம் எங்கள் திட்டம் நிறைவேறியிருக்கும் என்று மிகச் சத்தம் போட்டு சொல்லிவிட்டு சிரிக்கத் தொடங்கியவள் கன்னத்தில் மீண்டும் ஒரு அடி இடியாய் இறங்கியது.
உண்மையைச் சொல்...என்ன உங்கள் திட்டம்....நீ இப்போது சொல்லவில்லையென்றால்....இதுவரை காட்டியதிலும் மிகக் கடுமையைக் காட்டவேண்டியிருக்கும்...சொல்...வாயைத் திற.....
எதற்கும் அசையாத அவளைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஜவான்...சாப்...இவளை இப்படிக்கேட்டால் சொல்ல மாட்டாள்...அவர்கள் நம் ஆட்களை விசாரிக்கும் முறையில் விசாரித்தால் தான் சொல்லுவாள்..
மறுப்பதைப் போல தலையை அசைத்து வேண்டாம்...கொஞ்சம் பொறுக்கலாம்....இங்கே இன்னும் இரண்டு பேரைக் காவலுக்கு போடுங்கள்
சரி எங்கே முர்கய்யா....உடனடியாக ஒரு குழுவை தேடுதலில் ஈடு படுத்துங்கள்..
இவர் முருகய்யாவை தேடிக் கொண்டிருந்த அதே நேரம் முருகைய்யா தன்னுடன் மூன்று சிப்பாய்களை அழைத்துக்கொண்டு அந்தப் பெண்ணை மடக்கிய அதே இடத்துக்கு..வேறு வழியாகப் போய்க் கொண்டிருந்தான்.அந்த இடம் சமீபிக்கும்போதே தூரத்தில் நிழலாட்டத்தை உணர்ந்தார்கள்.காலடி சத்தம் கூட வராமல்...மெள்ள பதுங்கி அருகே நகர்ந்து ஒரு புதர் மறைவிலிருந்து கவனித்தார்கள்.மாலை நேரமென்றாலும்...அடர்ந்த மரங்கள் மேலும் பனியைப் போர்த்திக்கொண்டிருந்ததால் இன்னும் புஷ்டியாகி வெளிச்சத்தை வடிகட்டியிருந்தன.
கண்களைக் கூர்மையாக்கி கவனித்ததில் நான்கு பேர் தெரிந்தார்கள்.அதில் ஒருவன் கையில் ராக்கெட் லாஞ்சருடன் இருந்தான்.மற்ற மூன்று பேரும் இயந்திரத் துப்பாக்கியுடன் கண்களை சிறுத்தைகளைப் போல நாலாபுறமும் அலையவிட்டுக்கொண்டிருந்தார்கள்.
மெதுவாக கீழே அமர்ந்த முருகைய்யா குழுவினர்...அதிகம் பேசாமல்...அவர்களைத் தாக்கி பிடிக்க முடிவு செய்தார்கள்.திரும்பப்போய் இன்னும் ஆட்களைக் கூட்டிக்கொண்டு வர இப்போது நேரமில்லை.துணிந்து தாக்குதலை நடத்தி விட வேண்டியதுதான்...மிக மிக மெதுவாக...இரண்டு சிப்பாய்களில் ஒருவன் இடப்பக்கமும்...அடுத்தவன் வலப்பக்கமும் நகர்ந்தார்கள்.மீதமிருந்த ஒருவன் முருகய்யாவைக் கவர் செய்வதற்காக துப்பாக்கியை தயார் நிலையில் வைத்துக்கொண்டு அவன் பின்னால் நின்றுகொண்டான்.
வெகுக்கூர்மையான காதுகளால்...எதிரிகள் சட்டென்று இவர்கள் நடமாட்டத்தைக் கவனித்துவிட்டார்கள்...எந்தப்பக்கம் என்று உறுதியாகத் தெரியாததால் நாலாபுறமும் சுட்டார்கள்.அதில் இடது பக்கம் போன ஜவானின் மீது குண்டு பாய்ந்து விழுந்தான்...எதிரிகளின் கவனம் சற்றே அந்தப் பக்கம் திரும்பிய சொற்ப நேரத்தை சாதகமாக்கிகொண்டு..முருகைய்யா தன்னை முழுவதுமாக வெளிப்படுத்திக்கொண்டு சரமாரியாக அவர்களை நோக்கி சுட்டதில் இருவர் விழுந்து விட்டனர்...ராக்கெட் லாஞ்சரை வைத்துக்கொண்டிருந்தவன் சடாரென்று அதைக் கீழே போட்டுவிட்டு இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியால் சுட்டான்.தோட்டா ஒன்ரு முருகையாவின் தோளைத் துளைத்துக்கொண்டு பாய்ந்தது.முருகய்யாவைக் கவர் செய்தவன்...சடாரென்று முன்னால் பாய்ந்து அவனைச் சுட்டதில் கையிலிருந்த துப்பாக்கி கீழே விழுந்து விட்டது...அதற்குள் வலது பக்கம் போன ஜவான் இயந்திரத்துப்பாக்கியுடன் சுட்டுக்கொண்டிருந்தவனை வீழ்த்திவிட்டான்...தோளில் பட்டிருந்த தோட்டாவையும் சட்டை செய்யாமல்...முருகைய்யா பாய்ந்து நின்று கொண்டிருந்தவனை மடக்கிவிட்டான்.
புயலடித்து ஓய்ந்ததைப் போல அந்தப் பகுதியே அமைதியாகிவிட்டது.விழுந்து கிடந்த மூன்று பேரையும் பார்த்துக்கொண்டே முருகைய்யா அந்த நாலாவது ஆளை கவனித்துக்கொள்ளும்படி மற்ற இரண்டு சிப்பாய்களுக்கும் உத்தரவிட்டான்.இரண்டு பேரும் அவனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு துப்பாக்கியை விலாவில் வைத்து அழுத்தினார்கள்.கீழே விழுந்துவிட்ட தன் துப்பாக்கியை எடுக்க குனிந்த முருகைய்யா டுமீல் என்ற சத்தத்தைக் கேட்டு அப்படியே நின்றுவிட்டான்..கீழே விழுந்து கிடந்தவர்களில் ஒருவன் கையில் கைத்துப்பாக்கியுடன் மெல்ல கீழே சாய்ந்து கொண்டிருந்தான்...புகையும் தன் துப்பாக்கியுடன் மேஜர் கன்னா அங்கே வந்து கொண்டிருந்தார்.நடக்கவிருந்ததை கன்னா தடுத்துவிட்டார் என்பதைத் தெரிந்துகொண்ட முருகைய்யா அவரை நன்றியுடன் பார்த்தான்.
இவனை இழுத்துட்டு வாங்க என்று உத்தரவிட்டுவிட்டு முருகய்யாவை ஆதரவுடன் தன் தோளில் சாய்த்துக்கொண்டு முகாமை நோக்கி நடந்தார்.
மாட்டிக்கொண்டவனிடமிருந்து கிடைத்த சில ஆதாரங்களை வைத்து அவர்கள் அன்று அங்கே ஆயுதங்களுடனும்,கண்கானிப்பு சாதன்ங்களுடனும் வந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்த வந்தவர்கள் என்று தெரிந்து கொண்டார்கள்.
சரியான சமயத்தில் அங்கே சென்ற முருகய்யாவை பாராட்டிய கன்னா
அதுசரி அந்தப் பெண்ணைக் கூடாரத்தில் வைத்துவிட்டு அந்த இடத்துக்குப் போகவேண்டுமென உனக்கு எப்படி தோன்றியது என்ரு கேட்ட்தும்
சார்...இவர்களின் ஊடுருவலைப் பற்றின செய்தி கிடைத்ததும்...உடனடியாக அந்த இடத்துக்குப் போய்...காத்திருந்து இவளைப் பிடித்துக்கொண்டு வந்தோம்.இங்கு வந்து சேரும்வரை எனக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.ஆனால் பொதுவாக நமக்கு வரும் செய்தியில் துல்லியமாக இடம் குறிப்பிடப்பட்டு இருக்காது,ஆனால் இந்த முறை சரியான இடத்தைப்பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது...அதுமட்டுமல்லாமல்...நம்மைப் போலவே இவர்களும் பயிற்சிப் பெற்றவர்கள்...மேலும் கூடுதலான ஆக்ரோஷம் உள்ளவர்கள்.இருந்தும் இவள் அதிக எதிர்ப்பைக் காட்டவில்லை.கையிலும் பெரிதாக ஏதும் ஆயுதமில்லை.கூடாரத்துக்கு வந்த பிறகு யோசித்தபோதுதான்...இவள் வேண்டுமென்றே பிடிபட்டிருப்பாளோ எனத் தோன்றியது.அதனால் சில ஜவான்களை அழைத்துக்கொண்டு வேறு வழியாக அதே இடத்துக்குப் போனோம்...நான் சந்தேகப்பட்டது சரியாகிவிட்டது.
முருகைய்யா சொன்னதைக்கேட்டதும் உடனடியாக முகம் மலர்ந்து..வெல்டன் மை பாய்ஸ்..என்று அவன் முதுகைத் தட்டிக்கொடுக்க தூரத்தில் ஹெலிக்காப்டரின் கிர்ர்ர்ர்ர்ர் சத்தம் சமீபித்துக்கொண்டிருந்தது.........
கையில் இருந்த வெள்ளை உலோக கோப்பையில் தேநீர் இருந்தது.ஒரு மடக்குக்கு ஒரு முறை சூடு படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.அத்தனைக் குளிர்.இங்கு வருவதற்குமுன் உடனிருந்த நன்பர்கள் நிறைய சொல்லியிருந்தார்கள்...இந்த பிரதேசத்தின் குளிர் பற்றியும்....ஆபத்துகள் பற்றியும்.சண்டையில் இறந்தவர்களை விட பனிப்பொழிவிலும்,நிலச் சரிவிலும்,கடுமையான குளிரிலும் இறக்கும் வீரர்களின் எண்ணிக்கைதான் இங்கே அதிகம் என்று.ஆனால் ஒரு உண்மையான கீழ்படிதல் உள்ள வீரனாய் எதைப்பற்றியும் அச்சப்படாமல்...இங்கே வந்திருந்தான்.
இங்கு வந்து பார்த்தப் பிறகுதான் இவனைப்போல எத்தனையோ பேர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்காக காவல் இருப்பதைப் பார்த்துவிட்டு...இவனும் அவர்களில் ஒருவன் என்ற பெருமிதத்தை அடைந்தான்.மிகச் சிறிய கூடாரங்கள்...அதுவும் அக்டோபர் மாதங்களில் பணிப்பொழிவில் பூமிக்கு அடியில் போய் விடும்.ஒரு ஆள் மட்டும் நுழையக்கூடிய வகையில் பேரல்களால் ஆன சுரங்கப்பாதை போன்ற வழியில்தான் அந்த கூடாரங்களை அடையவேண்டும்.இதற்குள்தான் எட்டு பேர் வசிக்க வேண்டும்.கெரசின் ஸ்டவ்தான் பல விஷயங்களுக்கு உதவுகிறது.பனியை உருக்கி குடிநீராக்குவதற்கும்,கூடாரத்துக்கு வெளிச்சம் மற்றும் கதகதப்பைத் தருவதற்கும் அந்த ஸ்டவ்தான் துணை.
சரேலென்று இறங்கும் அபாயமான சரிவுகளில்...கொஞ்சமும் பயமின்றி ஆடு மேய்க்கும் சிறுவர்களை ஆச்சர்யத்துடன் பார்ப்பான்.அவர்கள்தான்...இந்திய ராணுவத்தினருக்கு நம்பகமான தகவல் தரும்....உளவாளிகள்.எதிரிகளின் நடமாட்டத்தைக் கவனித்து உடனுக்குடன் தகவல் சொல்லி விடுவார்கள்அப்படி ஒரு சிறுவனிடமிருந்து வந்த தகவலின் அடிப்படையில்தான்...முருகய்யாவும்,இன்னும் சில ஜவான்களும்...அந்த இடத்துக்குப் போனார்கள்.யாரையோ எதிர்பார்த்து....மறைந்திருந்தார்கள்....வெப்பமான மூச்சுக்காற்றால் மீசை முடியில் உருவான..ஐஸ் கட்டிகளை அடிக்கடி உடைத்துக்கொண்டு காத்திருந்தார்கள்....
கொஞ்ச நேரத்தில் ஒரு உருவம் மிக மிக மெதுவாக...அசாதரணமான...ஜாக்கிரதை உணர்வுடன்...மெள்ள முன்னேறி வந்து கொண்டிருந்தது.தெளிவாகத் தெரியாததால்...ஆளை அனுமானிக்க முடியவில்லை....கிட்ட நெருங்கியதும்...ஒரே பாய்ச்சல்...தரையில் கிடத்தி..கைகள் இரண்டையும் முதுகுக்கு கொண்டு வந்து விலங்கிட்டார்கள்.பின் அப்படியே கொத்தாக தூக்கி நிறுத்தியதும்தான் தெரிந்தது அது ஒரு பெண்.நல்ல திடகாத்திரமாக இருந்தாள்.பஞ்சாபிப் பெண்களுக்கே உரிய நல்ல உயரம்....வலுவான உடல்.அடிக்கடி அந்தப்பக்கத்திலிருந்து இங்கே ஊடுருவும் எதிரிகளில் பெண்களும் இருப்பார்கள்.இவர்கள் ஆண்களை விட அழுத்தக்காரர்கள்...சாமான்யமாக அவர்களை பேச வைக்க முடியாது.
முதல் வேலையாக அவளை முழுச் சோதனை செய்து...வெடிகுண்டு எதுவும் அவள் வைத்திருக்கவில்லை என்பதை உறுதிப் படுத்திக்கொண்டு...காலில் கட்டி வைத்திருந்த கத்தியை மட்டும் அப்புறப்படுத்திவிட்டு...கூடாரத்துக்கு அழைத்து வந்தார்கள்.மேஜர் கன்னா...கீழே இருந்த மற்றொரு பேஸ்(BASE)க்கு போயிருந்ததால்..அவரைத் தொடர்புகொண்டு விவரத்தைச் சொல்லியதும்,உடனே புறப்பட்டு வருவதாகச் சொன்னார்.அவர் வரும் வரை அவளை பத்திரமாக...நாற்காலியோடு சேர்த்து கட்டி வைத்தார்கள்.ஒரு அலட்சிய புன்முறுவல் அவள் உதட்டில் ஓடிக்கொண்டிருந்தது....ஜவான்களைப் பார்த்து கேலி செய்வதாய் அது இருந்தது....அது கொடுத்த எரிச்சலில்...ஒரு ஜவான்..பளிச்சென்று அவள் முகத்தில் அறைந்தான்.அதற்கெல்லாம் அசராத உறுதியுடன் ஏதோ முணுமுணுத்தாள்.....க்யா போல்த்தியே தூ குத்தி....என்ன முணுமுணுக்கிறாய் நாயே..என்று மறுபடியும் அவனே அறைந்தான்...இப்போது சத்தமாக பஞ்சாபியில்....அந்தர்கே கல் நை குலா சக்தே.....எனக்குள்ள இருக்கற எந்த தகவலையும் உங்களால வெளியே எடுக்க முடியாது என்று இரைந்தாள். ஓ பி தேக்லேங்கே..சாலி...அதையும் பாத்துடலாம்...என்று மீண்டும் அடிக்கப் போனவனை முருகையா தடுத்து...மேஜர் வரும் வரை அவளை எதுவும் செய்ய வேண்டாம்..என்று சொல்லிவிட்டு அவளுக்கருகில் இரண்டு ஜவான்களை நிற்கச் சொல்லிவிட்டு...வெளியே வந்தான்.மேலும் சில ஜவான்களை அழைத்து கூடாரத்துக்கு காவல் வைத்துவிட்டு தன்னுடன் சிலரை அழைத்துக்கொண்டு கிளம்பிப்போனான்.மேஜர் வருவதற்குள் திரும்பிவிடலாமென்று நினைத்துக்கொண்டு.
மேஜர் கன்னா வந்ததும்....நேரே அவளைக் கட்டி வைத்திருந்த கூடாரத்துக்குள் நுழைந்தார்.அவரும் பஞ்சாபி என்பதால்...அவளை பஞ்சாபியிலேயே விசாரித்தார்....எந்த பலனும் இல்லை.வாயைத் திறக்கவே இல்லை.தனது இராணுவ முறையைப் பிரயோகித்தார்...எந்த மாற்றமும் இல்லை.தவ நிலையில் அமர்ந்திருக்கும் யோகியைப் போல அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.அப்படி அவள் அமர்ந்திருந்தது அவரை இன்னும் ஆத்திரப்படுத்தியது....ரைஃபிள் பிடித்துக் காய்த்துப்போயிருந்த.அந்த வலுவான கைகளால் ரப் பென்று அவள் கன்னத்தில் அடித்ததில்...விரல் நகம் கண்னில் பட்டு கீழிமை கிழிந்து ரத்தம் வந்தது....சிவந்த கண்ணம் மேலும் சிவந்து விரலடையாளங்களை வெளிக்காட்டியது.அதற்கும் அசையாமல் தலையை மட்டு சாய்த்து தோள்பட்டையால் வழிந்த ரத்தத்தை துடைத்துக்கொண்டாள்.
வெளியே சின்னதாக ஒரு சலசலப்பு....தபால் கொண்டு வரும் நாய் வந்திருந்தது...உண்மையாகவே நாய்தான்.அந்த மலைப்பிரதேசத்தில் ஏறி வந்து குறிப்பிட்ட இடத்தில் தபால்களை சேர்க்குமாறு அந்த நாயைப் பழக்கியிருப்பார்கள். தற்காலிகமாக அவளை அந்த ஜவான்களிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வந்த கன்னா...தபால் பையைப் பிரித்துக்கொண்டிருந்த ஜவானைப் பார்த்து...என் பெயருக்கு ஏதாவது இருக்கிறதா என்று கேட்டார்.புரட்டிப் பார்த்துவிட்டு...நஹி சாப் என்றான்.
மீண்டும் உள்ளே வந்த கன்னா....கண்ணாலேயே அந்த ஜவான்களைப் பார்த்து ஏதாவது சொன்னாளா என்று கேட்டார். நஹி சாப்...மணி எத்தனை என்று மட்டும் கேட்டாள். என்று ஒருவன் சொன்னதுமே...அவருக்கு இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்று தெரிந்தது.மீண்டும் அவளிடம் போய் சொல் எதற்கு மணி கேட்டாய்...யாரை எதிர்பார்க்கிறாய்...அல்லது ஏதாவது நிகழ்த்த நேரம் குறித்திருக்கிறீர்களா...என்று சரமாரியாகக் கேள்விகளை வீசினார்.எல்லாவற்றையும் கேட்டவள்..முதல் முறையாக...கிழிந்த உதடுகளூடே மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தினாள்.தொடர்ந்து பஞ்சாபியில்...இந்நேரம் எங்கள் திட்டம் நிறைவேறியிருக்கும் என்று மிகச் சத்தம் போட்டு சொல்லிவிட்டு சிரிக்கத் தொடங்கியவள் கன்னத்தில் மீண்டும் ஒரு அடி இடியாய் இறங்கியது.
உண்மையைச் சொல்...என்ன உங்கள் திட்டம்....நீ இப்போது சொல்லவில்லையென்றால்....இதுவரை காட்டியதிலும் மிகக் கடுமையைக் காட்டவேண்டியிருக்கும்...சொல்...வாயைத் திற.....
எதற்கும் அசையாத அவளைப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு ஜவான்...சாப்...இவளை இப்படிக்கேட்டால் சொல்ல மாட்டாள்...அவர்கள் நம் ஆட்களை விசாரிக்கும் முறையில் விசாரித்தால் தான் சொல்லுவாள்..
மறுப்பதைப் போல தலையை அசைத்து வேண்டாம்...கொஞ்சம் பொறுக்கலாம்....இங்கே இன்னும் இரண்டு பேரைக் காவலுக்கு போடுங்கள்
சரி எங்கே முர்கய்யா....உடனடியாக ஒரு குழுவை தேடுதலில் ஈடு படுத்துங்கள்..
இவர் முருகய்யாவை தேடிக் கொண்டிருந்த அதே நேரம் முருகைய்யா தன்னுடன் மூன்று சிப்பாய்களை அழைத்துக்கொண்டு அந்தப் பெண்ணை மடக்கிய அதே இடத்துக்கு..வேறு வழியாகப் போய்க் கொண்டிருந்தான்.அந்த இடம் சமீபிக்கும்போதே தூரத்தில் நிழலாட்டத்தை உணர்ந்தார்கள்.காலடி சத்தம் கூட வராமல்...மெள்ள பதுங்கி அருகே நகர்ந்து ஒரு புதர் மறைவிலிருந்து கவனித்தார்கள்.மாலை நேரமென்றாலும்...அடர்ந்த மரங்கள் மேலும் பனியைப் போர்த்திக்கொண்டிருந்ததால் இன்னும் புஷ்டியாகி வெளிச்சத்தை வடிகட்டியிருந்தன.
கண்களைக் கூர்மையாக்கி கவனித்ததில் நான்கு பேர் தெரிந்தார்கள்.அதில் ஒருவன் கையில் ராக்கெட் லாஞ்சருடன் இருந்தான்.மற்ற மூன்று பேரும் இயந்திரத் துப்பாக்கியுடன் கண்களை சிறுத்தைகளைப் போல நாலாபுறமும் அலையவிட்டுக்கொண்டிருந்தார்கள்.
மெதுவாக கீழே அமர்ந்த முருகைய்யா குழுவினர்...அதிகம் பேசாமல்...அவர்களைத் தாக்கி பிடிக்க முடிவு செய்தார்கள்.திரும்பப்போய் இன்னும் ஆட்களைக் கூட்டிக்கொண்டு வர இப்போது நேரமில்லை.துணிந்து தாக்குதலை நடத்தி விட வேண்டியதுதான்...மிக மிக மெதுவாக...இரண்டு சிப்பாய்களில் ஒருவன் இடப்பக்கமும்...அடுத்தவன் வலப்பக்கமும் நகர்ந்தார்கள்.மீதமிருந்த ஒருவன் முருகய்யாவைக் கவர் செய்வதற்காக துப்பாக்கியை தயார் நிலையில் வைத்துக்கொண்டு அவன் பின்னால் நின்றுகொண்டான்.
வெகுக்கூர்மையான காதுகளால்...எதிரிகள் சட்டென்று இவர்கள் நடமாட்டத்தைக் கவனித்துவிட்டார்கள்...எந்தப்பக்கம் என்று உறுதியாகத் தெரியாததால் நாலாபுறமும் சுட்டார்கள்.அதில் இடது பக்கம் போன ஜவானின் மீது குண்டு பாய்ந்து விழுந்தான்...எதிரிகளின் கவனம் சற்றே அந்தப் பக்கம் திரும்பிய சொற்ப நேரத்தை சாதகமாக்கிகொண்டு..முருகைய்யா தன்னை முழுவதுமாக வெளிப்படுத்திக்கொண்டு சரமாரியாக அவர்களை நோக்கி சுட்டதில் இருவர் விழுந்து விட்டனர்...ராக்கெட் லாஞ்சரை வைத்துக்கொண்டிருந்தவன் சடாரென்று அதைக் கீழே போட்டுவிட்டு இடுப்பிலிருந்த கைத்துப்பாக்கியால் சுட்டான்.தோட்டா ஒன்ரு முருகையாவின் தோளைத் துளைத்துக்கொண்டு பாய்ந்தது.முருகய்யாவைக் கவர் செய்தவன்...சடாரென்று முன்னால் பாய்ந்து அவனைச் சுட்டதில் கையிலிருந்த துப்பாக்கி கீழே விழுந்து விட்டது...அதற்குள் வலது பக்கம் போன ஜவான் இயந்திரத்துப்பாக்கியுடன் சுட்டுக்கொண்டிருந்தவனை வீழ்த்திவிட்டான்...தோளில் பட்டிருந்த தோட்டாவையும் சட்டை செய்யாமல்...முருகைய்யா பாய்ந்து நின்று கொண்டிருந்தவனை மடக்கிவிட்டான்.
புயலடித்து ஓய்ந்ததைப் போல அந்தப் பகுதியே அமைதியாகிவிட்டது.விழுந்து கிடந்த மூன்று பேரையும் பார்த்துக்கொண்டே முருகைய்யா அந்த நாலாவது ஆளை கவனித்துக்கொள்ளும்படி மற்ற இரண்டு சிப்பாய்களுக்கும் உத்தரவிட்டான்.இரண்டு பேரும் அவனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு துப்பாக்கியை விலாவில் வைத்து அழுத்தினார்கள்.கீழே விழுந்துவிட்ட தன் துப்பாக்கியை எடுக்க குனிந்த முருகைய்யா டுமீல் என்ற சத்தத்தைக் கேட்டு அப்படியே நின்றுவிட்டான்..கீழே விழுந்து கிடந்தவர்களில் ஒருவன் கையில் கைத்துப்பாக்கியுடன் மெல்ல கீழே சாய்ந்து கொண்டிருந்தான்...புகையும் தன் துப்பாக்கியுடன் மேஜர் கன்னா அங்கே வந்து கொண்டிருந்தார்.நடக்கவிருந்ததை கன்னா தடுத்துவிட்டார் என்பதைத் தெரிந்துகொண்ட முருகைய்யா அவரை நன்றியுடன் பார்த்தான்.
இவனை இழுத்துட்டு வாங்க என்று உத்தரவிட்டுவிட்டு முருகய்யாவை ஆதரவுடன் தன் தோளில் சாய்த்துக்கொண்டு முகாமை நோக்கி நடந்தார்.
மாட்டிக்கொண்டவனிடமிருந்து கிடைத்த சில ஆதாரங்களை வைத்து அவர்கள் அன்று அங்கே ஆயுதங்களுடனும்,கண்கானிப்பு சாதன்ங்களுடனும் வந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்த வந்தவர்கள் என்று தெரிந்து கொண்டார்கள்.
சரியான சமயத்தில் அங்கே சென்ற முருகய்யாவை பாராட்டிய கன்னா
அதுசரி அந்தப் பெண்ணைக் கூடாரத்தில் வைத்துவிட்டு அந்த இடத்துக்குப் போகவேண்டுமென உனக்கு எப்படி தோன்றியது என்ரு கேட்ட்தும்
சார்...இவர்களின் ஊடுருவலைப் பற்றின செய்தி கிடைத்ததும்...உடனடியாக அந்த இடத்துக்குப் போய்...காத்திருந்து இவளைப் பிடித்துக்கொண்டு வந்தோம்.இங்கு வந்து சேரும்வரை எனக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.ஆனால் பொதுவாக நமக்கு வரும் செய்தியில் துல்லியமாக இடம் குறிப்பிடப்பட்டு இருக்காது,ஆனால் இந்த முறை சரியான இடத்தைப்பற்றிய தகவல் கிடைத்திருக்கிறது...அதுமட்டுமல்லாமல்...நம்மைப் போலவே இவர்களும் பயிற்சிப் பெற்றவர்கள்...மேலும் கூடுதலான ஆக்ரோஷம் உள்ளவர்கள்.இருந்தும் இவள் அதிக எதிர்ப்பைக் காட்டவில்லை.கையிலும் பெரிதாக ஏதும் ஆயுதமில்லை.கூடாரத்துக்கு வந்த பிறகு யோசித்தபோதுதான்...இவள் வேண்டுமென்றே பிடிபட்டிருப்பாளோ எனத் தோன்றியது.அதனால் சில ஜவான்களை அழைத்துக்கொண்டு வேறு வழியாக அதே இடத்துக்குப் போனோம்...நான் சந்தேகப்பட்டது சரியாகிவிட்டது.
முருகைய்யா சொன்னதைக்கேட்டதும் உடனடியாக முகம் மலர்ந்து..வெல்டன் மை பாய்ஸ்..என்று அவன் முதுகைத் தட்டிக்கொடுக்க தூரத்தில் ஹெலிக்காப்டரின் கிர்ர்ர்ர்ர்ர் சத்தம் சமீபித்துக்கொண்டிருந்தது.........