PDA

View Full Version : அன்னையே தெய்வம்...[02]



யாழ்_அகத்தியன்
18-03-2008, 09:55 AM
ஆயிரம் கைகள்
சேர்ந்து செய்த
மெத்தையில்
படுத்திருக்கிறேன்

உன் இருகையில்
மட்டும்தான்
தூங்கி இருக்கிறேன்


*
அம்மா உனக்கு
அவ்வளவு பாரமாய்
இருந்தேன் என்றா

பால் கொடுத்து
என்னை வளர்த்தாய்

நீ தூக்கவே
முடியாதளவுக்கு

*
வெற்றி பெற்றால்
தேடி வந்து வாழ்த்த
ஆயிரம் உறவுகள்

தோற்றுப்போனால்
தேடி வந்து அணைக்க
உன்னைத் தவிர யார்
எனக்கு

*

ஆயிரம் முறை
தலை சீவிய
சந்தோசம்

நீ
ஒரே ஒரு தடவை
தலை கோதிவிடும்போது

*
எல்லாம் சேலைதான்
எனினும்

நீ
கட்டிய சேலையில்தான்
என் நிம்மதியான தூக்கம்
அவிழ்ந்து கிடக்கிறது

*

என்னை நடக்க வைத்துப்
பார்க்க வேண்டும்
என்ற ஆசையை விட

நான் விழுந்து விடக்கூடாது
என்ற கவனத்தில்தான் இருந்தது
உன் தாய்ப்பாசம்


-யாழ்_அகத்தியன்

சுகந்தப்ரீதன்
18-03-2008, 03:07 PM
அற்புதம்.. நண்பரே..!!

அடுத்தடுத்து காதல் கவிதை எழுதிய தாங்கள்.. இப்போது அன்னையின் பெருமையை அடுக்கடுக்காய் எடுத்துரைக்க ஆரம்பித்திருக்கிறீர்கள்.. உங்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துகளும் பாராட்டுகளும் நண்பரே...!!

யாழ்_அகத்தியன்
31-12-2009, 06:35 PM
மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கும் கருத்துக்கும்