PDA

View Full Version : பரம்பொருள்..



rambal
01-04-2003, 04:58 AM
பரம்பொருள்..

வெற்றிடமாய் எங்கும் நான்
வியாபித்திருக்க
ஒற்றைப் புள்ளியில் நீ
மையமாய் குவிந்திருக்கிறாய்..

பட்டமாய் நான்
பறந்து கொண்டிருக்க
ஆட்டுவிக்கும்
கயிறாய் நீ..

சண்டை சச்சரவு
என நான் சுற்றித்திரிய
சமாதானமாய்
நீ சிரித்துக் கொண்டிருக்கிறாய்...

படைப்பின் பெருமையில்
நான் பூரித்திருக்க
ஒன்றுமே அறியாதது போல்
படைத்துக்கொண்டிருக்கிறாய்...

அதிசயங்களைக் கண்டு
நான் ஆர்ப்பரிக்க
நீயோ அமைதியாக நின்று
அதிசயமாகிறாய்...

நான் முடிவைப்பற்றிய
பயத்திலிருக்க
நீயோ முடியாத முடிவாய்
தொடர்ந்துகொண்டிருக்கிறாய்..

உன்னைத்தேடி நான்
எங்கெங்கோ ஓடிக்கொண்டிருக்க
என்னுள் நீ
ஒளிந்திருக்கிறாய்...

Mano.G.
01-04-2003, 05:16 AM
அருமை ராம்பால்ஜி
அருமை

தொடருங்கள்
வாழ்த்துக்கள்

மனோ.ஜி

Narathar
01-04-2003, 05:31 AM
என்றும் எனக்குள் நீ.........
அருமையான கவிதை!!!

இளசு
01-04-2003, 06:22 AM
உயரிய தத்துவம் சொல்லும்
அரிய கவிதை.
அருமை ராம் அருமை.

aren
01-04-2003, 06:42 AM
அருமையாக உள்ளது. தொடருங்கள் உங்கள் கவிதைகளை.

நன்றி வணக்கம்
ஆரென்

Hayath
12-04-2003, 07:11 AM
"ஒன்றுமில்லாத ஒன்றே இறைவன்" என்பதை உங்கள் கவிதை நினைவு படுத்துகிறது பாராட்டுக்கள். இது போல நிறைய கவிதைகளை எதிர்பார்க்கிறேன்.

Nanban
12-04-2003, 07:36 AM
என்னை
என்னுள் ஆக்கித் தரும்
மனமே இறைவன் -
தேடுதல் எல்லாம்
என்னுள்ளே இருக்க
என்னை நானே
தேடத் துவங்குகிறேன்.

Nanban
10-01-2004, 09:28 AM
தேடுதல்களைத் துவக்கி வைத்த தலைப்பு.......

sriram
19-01-2004, 03:12 AM
தாகூரின் கீதாஞ்சலியை படித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள்!