PDA

View Full Version : வரமானவளே...!



யாழ்_அகத்தியன்
16-03-2008, 01:23 PM
என் கனவே நீ என்பதால்தான்
கலைந்துபோகும் உறக்கத்தை
விரும்புவதில்லை நான்

*
உன் விழிகளுக்கு
இமையாக மட்டுமல்ல

உன் உறக்கத்தில்
உன்னைக் காக்கும்
விழியுமாவேன் நான்

*

நீயே எனக்கான கவிதை
என்பதைக் கண்டறிந்ததில்
கிறுக்கன் நான் கவிஞனானேன்
உனக்காய் உலகுக்கு

*
ஆயிரம் கவிதை எழுதிக்
கிறுக்கனானேன்

உன் பெயர் எழுதி
கவிஞனானேன்

*உனக்கான கவிதை என்று
தெரிந்தும் எனக்கா என நீ
கேக்கும் அழகுக்காகவே

எத்தனை கவிதையும்
எழுதலாம் நான்


-யாழ்_அகத்தியன்