Nanban
06-07-2003, 09:15 AM
காற்றில் ஆடும் நாற்றின் சப்தமாய்
நீ பொழிந்தது பொய்கை.
அகத்தை செவிடாக்கி
ஓட்டினுள் இழுத்து கொண்டு
நத்தையாய் சுருங்கிய நான்....
சிதறிய நீர்த்திவலைகளில்
வானவில்லின் வண்ணமாய்
கதிரவனின் கைகள் சிறையில்...
பார்த்தும் பாராத நிறக்குருடாய்
என் கண்களின் பாவை...
ஓட்டை உடைத்து, குருடை சரி செய்து
நீ நடந்த பாதையில் இன்று நான்
மொழிகள் பேசி, விழிகள் வீசி
நீ திரிந்த இடங்களில் தேடுகிறேன்
எதைத் தேடுகிறேன் - இலக்கில்லாமல்?
மரமும், இலையும், தழையும்
செழித்திருக்கின்றன.
உன் மொழிகளைத் தின்றதினால் தானோ?
முல்லைச் சிறுமி, இன்று கொடியாய் மரத்தில்.
முல்லை மொக்குகளாய் மணக்கிறது
சிரிக்கும் உன் மெல்லொலி
இன்றும் வீசும் தென்றல்
வழிகாட்டியாய் முன்னே செல்லும்.
புதிதாய் நாற்று நடும்
புதுப் பெண்கள் எல்லோருக்கும்,
எல்லைகள் கட்டப் பட்டிருக்கும்
சங்குக் கழுத்தைக் கடந்து -
என் பயணம் நடந்தது.
எல்லைகள் உனக்கும் உண்டாக்கப்பட்டதா?
எல்லை தாண்டும் தீவிரவாதியின்
எச்சரிக்கையுடன் உன் மனை நோக்கி
என் கால்கள் தளர்வுடன்..
காடு, கழனி கழிந்து கரையேறி
பயணம் முடியும் நிறுத்தத்திற்கு
நீண்ட தூரம் முன்னே
இறங்கி நடந்த வழிகள் எல்லாம்
புதிதாய்க் கடைகள் - இப்பொழுது.
விற்பதற்கு நம்மைப் பற்றிய பேச்சு இல்லை,
புதிதாய் புறம் பேசுகிறார்கள்
புதியவர்களைப் பற்றி.
உன்னைப் பற்றியும், என்னைப் பற்றியும்
பேச்சில்லை என்பதால் -
நீயும், நானும் கடந்த காலம்
கடந்த காலம், நிகழ் காலத்தினுள்
காலெடுத்து வைத்து,
தன் சக கடந்த காலத்தைத் தேடுகிறது.
மாறிப் போன காலத்தில்
உன் வீட்டு காரை பெயர்ந்த சுவர்கள் -
என்றோ நான் கிறுக்கிய
சில பென்சில் கோடுகளை
மறக்காமல் வைத்திருந்தது.
'ஓடிப்போன ராசாவே,
ஒரு வரி எழுதிப் போடக் கழியலயா
உனக்கு?'
கிழவி கேட்ட கேள்விக்கு
பதில் சொல்லாமல்
பக்கத்தில் விளையாடிய பேரனுக்கு
மிட்டாய் கொடுத்துக் கேட்டேன் -
'உன் பெயரென்ன?'
அவன் சொன்னான் - என் பெயரை.
வீட்டினுள் ஒரு நிழல் கடந்து போய்
அடுப்பங்கரையில் வேலை தொடங்கியது.
தோட்டத்தில் ஒரு நத்தை
அரவம் கேட்ட நிமிடத்தில்
சுருங்கிக் கொண்டது ஓட்டிற்குள்.......
நீ பொழிந்தது பொய்கை.
அகத்தை செவிடாக்கி
ஓட்டினுள் இழுத்து கொண்டு
நத்தையாய் சுருங்கிய நான்....
சிதறிய நீர்த்திவலைகளில்
வானவில்லின் வண்ணமாய்
கதிரவனின் கைகள் சிறையில்...
பார்த்தும் பாராத நிறக்குருடாய்
என் கண்களின் பாவை...
ஓட்டை உடைத்து, குருடை சரி செய்து
நீ நடந்த பாதையில் இன்று நான்
மொழிகள் பேசி, விழிகள் வீசி
நீ திரிந்த இடங்களில் தேடுகிறேன்
எதைத் தேடுகிறேன் - இலக்கில்லாமல்?
மரமும், இலையும், தழையும்
செழித்திருக்கின்றன.
உன் மொழிகளைத் தின்றதினால் தானோ?
முல்லைச் சிறுமி, இன்று கொடியாய் மரத்தில்.
முல்லை மொக்குகளாய் மணக்கிறது
சிரிக்கும் உன் மெல்லொலி
இன்றும் வீசும் தென்றல்
வழிகாட்டியாய் முன்னே செல்லும்.
புதிதாய் நாற்று நடும்
புதுப் பெண்கள் எல்லோருக்கும்,
எல்லைகள் கட்டப் பட்டிருக்கும்
சங்குக் கழுத்தைக் கடந்து -
என் பயணம் நடந்தது.
எல்லைகள் உனக்கும் உண்டாக்கப்பட்டதா?
எல்லை தாண்டும் தீவிரவாதியின்
எச்சரிக்கையுடன் உன் மனை நோக்கி
என் கால்கள் தளர்வுடன்..
காடு, கழனி கழிந்து கரையேறி
பயணம் முடியும் நிறுத்தத்திற்கு
நீண்ட தூரம் முன்னே
இறங்கி நடந்த வழிகள் எல்லாம்
புதிதாய்க் கடைகள் - இப்பொழுது.
விற்பதற்கு நம்மைப் பற்றிய பேச்சு இல்லை,
புதிதாய் புறம் பேசுகிறார்கள்
புதியவர்களைப் பற்றி.
உன்னைப் பற்றியும், என்னைப் பற்றியும்
பேச்சில்லை என்பதால் -
நீயும், நானும் கடந்த காலம்
கடந்த காலம், நிகழ் காலத்தினுள்
காலெடுத்து வைத்து,
தன் சக கடந்த காலத்தைத் தேடுகிறது.
மாறிப் போன காலத்தில்
உன் வீட்டு காரை பெயர்ந்த சுவர்கள் -
என்றோ நான் கிறுக்கிய
சில பென்சில் கோடுகளை
மறக்காமல் வைத்திருந்தது.
'ஓடிப்போன ராசாவே,
ஒரு வரி எழுதிப் போடக் கழியலயா
உனக்கு?'
கிழவி கேட்ட கேள்விக்கு
பதில் சொல்லாமல்
பக்கத்தில் விளையாடிய பேரனுக்கு
மிட்டாய் கொடுத்துக் கேட்டேன் -
'உன் பெயரென்ன?'
அவன் சொன்னான் - என் பெயரை.
வீட்டினுள் ஒரு நிழல் கடந்து போய்
அடுப்பங்கரையில் வேலை தொடங்கியது.
தோட்டத்தில் ஒரு நத்தை
அரவம் கேட்ட நிமிடத்தில்
சுருங்கிக் கொண்டது ஓட்டிற்குள்.......