PDA

View Full Version : பிரிவோம் சந்திப்போம்



நம்பிகோபாலன்
10-03-2008, 11:56 AM
என்னை பற்றிய நினைவுகளில்
எல்லம் உன்னை பற்றிய நினைவுகலே
மேலோங்கி நிற்கிறது....

இருவரின் அலைவ்ரிசையும்
ஓன்றாகி போனதா...
நம் அன்பும் நட்பும்
சரிவிகத்தில் சமமாகி
மகிழ்ச்சியாய் மலர்ந்த
மாதங்கள் பல....
உன்னில் நானும்
என்னில் நீயும்
மனதால் சேர்ந்த நாட்கல் சில
இன்று
பணம் மட்டுமே
வாழ்க்கையாய்
நீ ஒரிடத்திலும்
நான் ஒரிடத்திலும்
இருந்தாலும்
காலம் என்றாவது
உன்னை என்னை பார்க்க
செய்யும்
அப்பொழுது
உன் விழியோர நீர் உணர்த்தும்
நம் நட்பை....

சுகந்தப்ரீதன்
11-03-2008, 10:23 AM
இரண்டை இழந்துதான் ஒன்றைப் பெற வேண்டியிருக்கு இந்த வாழ்வில் நம்பியாரே...!!

உங்கள் விழியோரம் நீருறும் அந்தநாள் விரைவில் உங்கள் வாழ்வில் வர வாழ்த்துக்கள் கோபாலரே...!!

தொடருங்கள் உங்கள் கவிதைகளை..!!

இப்போது பிரிவோம்.. சந்திப்போம் மீண்டும்..!!

நம்பிகோபாலன்
11-03-2008, 11:06 AM
என்னை விட்டு பிரிந்து போன தோழிக்காக
நான் எழுதியது..
எழுத்து பிழைக்கு மன்னிக்க...

அமரன்
11-03-2008, 12:58 PM
வாழ்க்கையை பசுமையாக்க
பணமே பிரதானம் என்ற நிலை..
பசுமையான அந்நினைவுகள்
வேளாண்மைக்கு உரமாகட்டும்...

பாராட்டுகள் நம்பி.

பிரிந்த தோழிக்கு எழுதிய கவிதையில்
பத்திகளை பிரிக்க மனம் ஒப்பவில்லைப்போலும்..