PDA

View Full Version : ஆம்



resan2006
07-03-2008, 04:23 AM
ஆசையே துன்பத்திற்க்கு காரணம் ஆம்
ஆசைக்கேற்ப்ப உனது அசைவுகள் இல்லாதபோது
பற்றுவைப்பதே அபாயகரமானது ஆம்
அதில் அன்பு இல்லாதபோது
நானமே பென்னடிமைக்கு காரணம் ஆம்
அதில் ஞானம் இல்லாத போது
உழைப்பே உயராமைக்கு காரணம் ஆம்
அதல் சலிப்போடு இயங்கும் போது
வெற்றி கூட மலிவானதுதன் ஆம்
தோல்வியேனும் விலை கொடுக்காதபோது,
நாளையபொழுது கூட இரவுதான் ஆம்
பகலில் விழிக்காதபோது,
இந்த உலகம் கூட கனவுதான் ஆம்
விழித்துக்கொண்டே உறங்கும் போது
வானம் கூட எல்லைதான் ஆம்
இலக்கை மட்டும் பார்க்கும் போது
பாதைக்கூட கடினம்தான் ஆம்
பயணம் செய்ய மறுக்கும் போது

அமரன்
07-03-2008, 08:28 AM
எல்லாவற்றும் சிறிய இடைவெளி மிகவும் அவசியம்.. அப்படித்தானே ரேஷன்.
எடை கூடிய கவிதை. பார்த்து பதமாக தொடருங்கள்..

வாழ்த்துகள்

வசீகரன்
08-03-2008, 10:42 AM
மேற்கொள் இட்டு பின்னூட்டம் கொடுக்கலாம் என எண்ணினேன்.... ஆனால் எதை விடுத்து எதை மேற்கொள் இடுவது.... என்று சொல்லும் அளவுக்கு....அருமையான படைப்பு இது..... தன்னம்பிக்கையையும்....ஒழுக்க நெறியையும் திடமான மன
உரத்தையும் பறைசாற்றும் படைப்பு இது....
புதியவரான தாங்கள் இப்படி ஒரு பதிவை தந்தற்காக எனது இதய பூர்வ நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்...! வரிகளை சீராக இடைவெளி விட்டு அமைததிட முயலுங்கள் நண்பரே....
மன்ற நண்பர்கள் எளிதில் புரிந்து பின்னூட்டமிட வசதியாக இருக்கும்.... கவியின் அழகும் அதிகரிக்கும்...!

நிச்சயமாக மன்றத்தில் தொடர்ந்து எழுதுங்கள்...!

சுகந்தப்ரீதன்
11-03-2008, 10:39 AM
ஆம்... நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய கவிதைதான்...!!

வாழ்த்துக்கள்...தொடருங்கள்...!!