சிவா.ஜி
06-03-2008, 11:56 AM
என்னடா செல்லம்...ரொம்ப டயர்டா இருக்கியா...உனக்கு எத்தனை தடவை சொல்றது...எல்லா வேலையையும் இழுத்து போட்டுக்கிட்டு செய்யாதேன்னு...கேக்கறதேயில்ல...உக்காரு...உன் காலை இப்படி என் மடி மேல போடு...
விடுங்க...யாராவது பாத்துடப்போறாங்க...புருஷன் பொண்டாட்டிக் காலை பிடிக்கறதா....
ஹய்யோ...ஹய்யோ...நீ எந்தக்காலத்துல இருக்க...இப்பெல்லாம் அந்த மாதிரி வித்தியாசமெல்லாம் யாருமே பாக்கறதில்ல..நீயும்தான் வேலைக்குப் போற..என்னை மாதிரியே..என்னை மாதிரியே என்ன..என்னைவிட அதிகமாவே சம்பாதிக்கற....அப்புறமென்ன வித்தியாசம்?
அதெல்லாம்..இருக்கட்டும்....எனக்கு என்னவோ போல இருக்கு...எங்க வீட்லயெல்லாம் நான் இப்படி பாத்ததே கிடையாது...எங்கப்பாவோட அதிகாரம்தான் கொடிகட்டி பறக்கும்...உக்காந்த இடத்துக்கே அவர் கேட்டதெல்லாம் வரணும்...
அவங்க வாழ்ந்த காலத்துக்கு அப்படி...இது நம்ம காலம்....அவங்க மாதிரி இருக்க முடியுமா?
இருங்க வாசல்ல யாரோ வந்திருக்கற மாதிரி இருக்கு..
இந்தாம்மா செல்வி...ரொம்ப நன்றிம்மா...கல்யாண வீட்ல எல்லாரும் என் பொண்ணையேத்தான் பாத்துக்கிட்டிருந்தாங்க...நெக்லெஸ் இவ்ளோ அழகா இருக்கேன்னு...உனக்கு ரொம்ப பெரிய மனசும்மா இவ்ளோ காஸ்ட்லியான நெக்லெஸை இரவல் குடுத்தியே....
பரவால்ல இருக்கட்டுங்க....
என்ன செல்வி இது...இவ்ளோ காஸ்ட்லியான நகையை எல்லாம் ஏன் இரவல் குடுக்கற...
பாவங்க அவங்க பொண்ணு...வயசுப்பொண்ணு....வெறுங்கழுத்தாப் போறது எனக்கே என்னமோ போல இருந்தது...அவங்க கேக்கல நானாத்தான் குடுத்தேன்..
நல்ல மனசோடத்தான் குடுத்திருக்க...ஆனாலும்..ஏதோ கெட்ட நேரத்துல இது தொலைஞ்சி போயிருந்தா அவங்களால புதுசா வாங்கிக்குடுக்க முடியுமா?இந்த மாதிரி இன்னொரு தடவை பைத்தியக்காரத்தனமா எதுவும் பண்ணாத...
அப்ப நான் பண்னது பைத்தியக்காரத்தனமா...? நல்லது செஞ்சதைப் பாராட்டலான்னுலும் பரவால்ல...இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாதீங்க...
உன் இஷ்டத்துக்கு இப்படி ஒரு தப்பை பண்ணிட்டு இப்ப என் கிட்டயே எதுத்து பேசறியா...
அதென்ன என்கிட்டயே....ஆம்பளங்கற திமிரா...ஏன் எனக்குன்னு எந்த முடிவும் எடுக்கற சுதந்திரம் எனக்கில்லையா..
மரியாதையா பேசு...என்னா திமிரு அதுன்னு...இன்னொரு வாட்டி இப்படி பேசுன.....
என்ன...என்ன பண்ணுவீங்க...அடிப்பீங்களா...என்னை என்ன காசு குடுத்தா கொத்தடிமையா வாங்கிட்டு வந்திருக்கீங்க...உங்ளைத்தான் காசு குடுத்து எங்கப்பா எனக்கு வாங்கி தந்திருக்காரு....
என்னா கொழுப்பு உனக்கு...மளிகை கடை வெச்சிருக்கறவனெல்லாம் என்னை வாங்கி உனக்கு குடுத்தானா...வரதட்சணை வாங்கினதை குத்திக் காமிக்கறயா...பெரிய ஊர்ல உலகத்துல இல்லாத பணம்...
ஆமா அப்ப ஒரு லட்ச ரூபா கேக்கும்போது மட்டும் உங்க கண்ணுக்கு டிபார்ட்மெண்டல் ஸ்டோரா தெரிஞ்சது இப்ப மளிகைக் கடையா...இவ்ளோ ரோஷம் இருக்கற ஆளு எதுக்கு பணம் வாங்கனும்...எங்கப்பாவாது மளிகை கடை முதலாளி...உங்கப்பா கையைகட்டி வேலை செய்யற சாதாரண கிளார்க்குதான...
ஆமா சாதாரண கிளார்க்குதான்...இருந்தாலும் எங்களையெல்லாம் படிக்க வெச்சு இன்னைக்கு நாங்க இந்த நிலையில இருக்க வெச்சார்...உங்கப்பனை மாதிரி கலப்படம் பண்ணி காசு சம்பாதிக்கல...அந்த பணத்துல சாப்பிட்டு வளர்ந்தவதானே நீ...உன் புத்தி எப்படி இருக்கும்...?
கொஞ்சம் மரியாதையா பேசுங்க...உங்க குடும்பம் என்ன பெரிய ராஜ பரம்பரையா.... என்ன பெரிய நிலைமையில இப்ப நீங்க இருக்கீங்க...உங்களைவிட அதிகமாவே நான் சம்பாதிக்கறேன்...இவங்க யோக்கியதைக்கு..எங்க குடும்பத்தைப் பத்தி பேச வந்துட்டாங்க...
நிறுத்துடி...இனி ஒரு வார்த்தை வந்தது.....
என்ன...டி போட்டுப் பேசறீங்க...நானும் டா போட எவ்ளோ நேரமாகும்...
உனக்கு அவ்ளோ தைரியம் வந்துடிச்சா...எங்க டா போடு பாக்கலாம்....
சர்தான் போடா....
ப்ளார்.......ப்ளார்....
என்னையே அடிச்சிட்டியாடி நீ.....
நீ என்னை அடிச்சா நானும் உன்னை அடிப்பேன்...நீ மொதல்ல கையை ஓங்கினா என் கை என்ன காய் நறுக்கிகிட்டிருக்குமா...பதிலுக்கு பதில்தான்....
இனி உன்கூட வாழறதுல அர்த்தமே இல்லை...இந்த மாதிரி திமிர் பிடிச்ச..அடங்காப் பிடாரி கூட எவனும் வாழமாட்டான்...கெளம்பு உன் வீட்டுக்கு....ஒரு நிமிஷம் நீ இங்க இருக்கக்கூடாது......
சர்தான் போய்யா....எங்க வீடு இல்லையா எனக்கு...போறேன்...இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு விவாகரத்து நோட்டீஸ் வரும்
போடீ....நீ என்னா அனுப்பறது....நானே அனுப்பறேன் உனக்கு................
(அப்படியே இந்த டேப்பை...ரீவைண்ட் பண்ணுவோமா...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........டொக்.....)
என்ன செல்வி இது...இவ்ளோ காஸ்ட்லியான நகையை எல்லாம் ஏன் இரவல் குடுக்கற...
பாவங்க அவங்க பொண்ணு...வயசுப்பொண்ணு....வெறுங்கழுத்தாப் போறது எனக்கே என்னமோ போல இருந்தது...அவங்க கேக்கல நானாத்தான் குடுத்தேன்..
அட அட....என் பொண்டாட்டின்னா...பொண்டாட்டிதான்...எவ்ளோ நல்ல மனசு உனக்கு...இந்த மாதிரி நாலு பேருக்கு உதவலன்னா..நாமெல்லாம் என்ன மனுஷங்க....உன்னை நினைச்சு ரொம்ப பெருமைப்படறேன்....செல்லம் ஐ லவ்யூடா....
ச்சீ...போங்க எனக்கு வெக்கமா இருக்கு.......
(இப்படியும் நிகழ்ந்திருக்கலாம்)
என்ன செல்வி இது...இவ்ளோ காஸ்ட்லியான நகையை எல்லாம் ஏன் இரவல் குடுக்கற...
பாவங்க அவங்க பொண்ணு...வயசுப்பொண்ணு....வெறுங்கழுத்தாப் போறது எனக்கே என்னமோ போல இருந்தது...அவங்க கேக்கல நானாத்தான் குடுத்தேன்..
நல்ல மனசோடத்தான் குடுத்திருக்க...ஆனாலும்..ஏதோ கெட்ட நேரம் தொலைஞ்சி போயிருந்தா அவங்களால புதுசா வாங்கிக்குடுக்க முடியுமா?இந்த மாதிரி இன்னொரு தடவை பைத்தியக்காரத்தனமா எதுவும் பண்ணாத...
ஆமாங்க...நான்கூட இதை யோசிக்கல...அவங்களே பாவம் கஷ்டப்படற குடும்பம்...அப்படி ஏதாவது ஒண்ணு ஆகியிருந்தா..கண்டிப்பா அவங்களால திருப்பிக் குடுக்க முடியாது....நாமளும் அவ்ளோ பெரிய பணக்காரங்க இல்ல...போனாப்போகுதுன்னு விடறதுக்கு....சாரிங்க இனிமே இப்படி பண்னமாட்டேன்...
சரி..சரி...பரவால்ல....விடு...
(இப்படியும் நிகழ்ந்திருக்கலாம்)
சர்தான் போய்யா....எங்க வீடு இல்லையா எனக்கு...போறேன்...இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு விவாகரத்து நோட்டீஸ் வரும்
போடீ....நீ என்னா அனுப்பறது....நானே அனுப்பறேன் உனக்கு................
(ஆனால் இப்படி நிகழ்ந்ததற்கான காரணம்....புரிந்துணர்வும்..பேச்சில் அன்பும் இல்லாததுதானே.....எதற்கும் உதவாத வெறும் ஈகோ...எதை சாதிக்கும்....??)
விடுங்க...யாராவது பாத்துடப்போறாங்க...புருஷன் பொண்டாட்டிக் காலை பிடிக்கறதா....
ஹய்யோ...ஹய்யோ...நீ எந்தக்காலத்துல இருக்க...இப்பெல்லாம் அந்த மாதிரி வித்தியாசமெல்லாம் யாருமே பாக்கறதில்ல..நீயும்தான் வேலைக்குப் போற..என்னை மாதிரியே..என்னை மாதிரியே என்ன..என்னைவிட அதிகமாவே சம்பாதிக்கற....அப்புறமென்ன வித்தியாசம்?
அதெல்லாம்..இருக்கட்டும்....எனக்கு என்னவோ போல இருக்கு...எங்க வீட்லயெல்லாம் நான் இப்படி பாத்ததே கிடையாது...எங்கப்பாவோட அதிகாரம்தான் கொடிகட்டி பறக்கும்...உக்காந்த இடத்துக்கே அவர் கேட்டதெல்லாம் வரணும்...
அவங்க வாழ்ந்த காலத்துக்கு அப்படி...இது நம்ம காலம்....அவங்க மாதிரி இருக்க முடியுமா?
இருங்க வாசல்ல யாரோ வந்திருக்கற மாதிரி இருக்கு..
இந்தாம்மா செல்வி...ரொம்ப நன்றிம்மா...கல்யாண வீட்ல எல்லாரும் என் பொண்ணையேத்தான் பாத்துக்கிட்டிருந்தாங்க...நெக்லெஸ் இவ்ளோ அழகா இருக்கேன்னு...உனக்கு ரொம்ப பெரிய மனசும்மா இவ்ளோ காஸ்ட்லியான நெக்லெஸை இரவல் குடுத்தியே....
பரவால்ல இருக்கட்டுங்க....
என்ன செல்வி இது...இவ்ளோ காஸ்ட்லியான நகையை எல்லாம் ஏன் இரவல் குடுக்கற...
பாவங்க அவங்க பொண்ணு...வயசுப்பொண்ணு....வெறுங்கழுத்தாப் போறது எனக்கே என்னமோ போல இருந்தது...அவங்க கேக்கல நானாத்தான் குடுத்தேன்..
நல்ல மனசோடத்தான் குடுத்திருக்க...ஆனாலும்..ஏதோ கெட்ட நேரத்துல இது தொலைஞ்சி போயிருந்தா அவங்களால புதுசா வாங்கிக்குடுக்க முடியுமா?இந்த மாதிரி இன்னொரு தடவை பைத்தியக்காரத்தனமா எதுவும் பண்ணாத...
அப்ப நான் பண்னது பைத்தியக்காரத்தனமா...? நல்லது செஞ்சதைப் பாராட்டலான்னுலும் பரவால்ல...இப்படி வாய்க்கு வந்ததையெல்லாம் பேசாதீங்க...
உன் இஷ்டத்துக்கு இப்படி ஒரு தப்பை பண்ணிட்டு இப்ப என் கிட்டயே எதுத்து பேசறியா...
அதென்ன என்கிட்டயே....ஆம்பளங்கற திமிரா...ஏன் எனக்குன்னு எந்த முடிவும் எடுக்கற சுதந்திரம் எனக்கில்லையா..
மரியாதையா பேசு...என்னா திமிரு அதுன்னு...இன்னொரு வாட்டி இப்படி பேசுன.....
என்ன...என்ன பண்ணுவீங்க...அடிப்பீங்களா...என்னை என்ன காசு குடுத்தா கொத்தடிமையா வாங்கிட்டு வந்திருக்கீங்க...உங்ளைத்தான் காசு குடுத்து எங்கப்பா எனக்கு வாங்கி தந்திருக்காரு....
என்னா கொழுப்பு உனக்கு...மளிகை கடை வெச்சிருக்கறவனெல்லாம் என்னை வாங்கி உனக்கு குடுத்தானா...வரதட்சணை வாங்கினதை குத்திக் காமிக்கறயா...பெரிய ஊர்ல உலகத்துல இல்லாத பணம்...
ஆமா அப்ப ஒரு லட்ச ரூபா கேக்கும்போது மட்டும் உங்க கண்ணுக்கு டிபார்ட்மெண்டல் ஸ்டோரா தெரிஞ்சது இப்ப மளிகைக் கடையா...இவ்ளோ ரோஷம் இருக்கற ஆளு எதுக்கு பணம் வாங்கனும்...எங்கப்பாவாது மளிகை கடை முதலாளி...உங்கப்பா கையைகட்டி வேலை செய்யற சாதாரண கிளார்க்குதான...
ஆமா சாதாரண கிளார்க்குதான்...இருந்தாலும் எங்களையெல்லாம் படிக்க வெச்சு இன்னைக்கு நாங்க இந்த நிலையில இருக்க வெச்சார்...உங்கப்பனை மாதிரி கலப்படம் பண்ணி காசு சம்பாதிக்கல...அந்த பணத்துல சாப்பிட்டு வளர்ந்தவதானே நீ...உன் புத்தி எப்படி இருக்கும்...?
கொஞ்சம் மரியாதையா பேசுங்க...உங்க குடும்பம் என்ன பெரிய ராஜ பரம்பரையா.... என்ன பெரிய நிலைமையில இப்ப நீங்க இருக்கீங்க...உங்களைவிட அதிகமாவே நான் சம்பாதிக்கறேன்...இவங்க யோக்கியதைக்கு..எங்க குடும்பத்தைப் பத்தி பேச வந்துட்டாங்க...
நிறுத்துடி...இனி ஒரு வார்த்தை வந்தது.....
என்ன...டி போட்டுப் பேசறீங்க...நானும் டா போட எவ்ளோ நேரமாகும்...
உனக்கு அவ்ளோ தைரியம் வந்துடிச்சா...எங்க டா போடு பாக்கலாம்....
சர்தான் போடா....
ப்ளார்.......ப்ளார்....
என்னையே அடிச்சிட்டியாடி நீ.....
நீ என்னை அடிச்சா நானும் உன்னை அடிப்பேன்...நீ மொதல்ல கையை ஓங்கினா என் கை என்ன காய் நறுக்கிகிட்டிருக்குமா...பதிலுக்கு பதில்தான்....
இனி உன்கூட வாழறதுல அர்த்தமே இல்லை...இந்த மாதிரி திமிர் பிடிச்ச..அடங்காப் பிடாரி கூட எவனும் வாழமாட்டான்...கெளம்பு உன் வீட்டுக்கு....ஒரு நிமிஷம் நீ இங்க இருக்கக்கூடாது......
சர்தான் போய்யா....எங்க வீடு இல்லையா எனக்கு...போறேன்...இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு விவாகரத்து நோட்டீஸ் வரும்
போடீ....நீ என்னா அனுப்பறது....நானே அனுப்பறேன் உனக்கு................
(அப்படியே இந்த டேப்பை...ரீவைண்ட் பண்ணுவோமா...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...........டொக்.....)
என்ன செல்வி இது...இவ்ளோ காஸ்ட்லியான நகையை எல்லாம் ஏன் இரவல் குடுக்கற...
பாவங்க அவங்க பொண்ணு...வயசுப்பொண்ணு....வெறுங்கழுத்தாப் போறது எனக்கே என்னமோ போல இருந்தது...அவங்க கேக்கல நானாத்தான் குடுத்தேன்..
அட அட....என் பொண்டாட்டின்னா...பொண்டாட்டிதான்...எவ்ளோ நல்ல மனசு உனக்கு...இந்த மாதிரி நாலு பேருக்கு உதவலன்னா..நாமெல்லாம் என்ன மனுஷங்க....உன்னை நினைச்சு ரொம்ப பெருமைப்படறேன்....செல்லம் ஐ லவ்யூடா....
ச்சீ...போங்க எனக்கு வெக்கமா இருக்கு.......
(இப்படியும் நிகழ்ந்திருக்கலாம்)
என்ன செல்வி இது...இவ்ளோ காஸ்ட்லியான நகையை எல்லாம் ஏன் இரவல் குடுக்கற...
பாவங்க அவங்க பொண்ணு...வயசுப்பொண்ணு....வெறுங்கழுத்தாப் போறது எனக்கே என்னமோ போல இருந்தது...அவங்க கேக்கல நானாத்தான் குடுத்தேன்..
நல்ல மனசோடத்தான் குடுத்திருக்க...ஆனாலும்..ஏதோ கெட்ட நேரம் தொலைஞ்சி போயிருந்தா அவங்களால புதுசா வாங்கிக்குடுக்க முடியுமா?இந்த மாதிரி இன்னொரு தடவை பைத்தியக்காரத்தனமா எதுவும் பண்ணாத...
ஆமாங்க...நான்கூட இதை யோசிக்கல...அவங்களே பாவம் கஷ்டப்படற குடும்பம்...அப்படி ஏதாவது ஒண்ணு ஆகியிருந்தா..கண்டிப்பா அவங்களால திருப்பிக் குடுக்க முடியாது....நாமளும் அவ்ளோ பெரிய பணக்காரங்க இல்ல...போனாப்போகுதுன்னு விடறதுக்கு....சாரிங்க இனிமே இப்படி பண்னமாட்டேன்...
சரி..சரி...பரவால்ல....விடு...
(இப்படியும் நிகழ்ந்திருக்கலாம்)
சர்தான் போய்யா....எங்க வீடு இல்லையா எனக்கு...போறேன்...இன்னும் கொஞ்ச நாள்ல உனக்கு விவாகரத்து நோட்டீஸ் வரும்
போடீ....நீ என்னா அனுப்பறது....நானே அனுப்பறேன் உனக்கு................
(ஆனால் இப்படி நிகழ்ந்ததற்கான காரணம்....புரிந்துணர்வும்..பேச்சில் அன்பும் இல்லாததுதானே.....எதற்கும் உதவாத வெறும் ஈகோ...எதை சாதிக்கும்....??)