View Full Version : இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா..?
சிவா.ஜி
29-02-2008, 08:37 AM
சிக்னலில் சிவப்பை தாண்டிய வாகன ஓட்டியிடம் போலீஸ் விசாரிக்கிறது...
போலீஸ்; ஏன்யா சிக்னல் கிராஸ் பண்ணே.....லைசன்ஸ் எடு...
ஓட்டுநர்: இனிமேத்தாங்க எடுக்கனும்...
போலீஸ்: அடப்பாவி லைசன்ஸ்-ஏ இல்லையா...இதுல ரெட்-ஐ வேற க்ராஸ் பண்ணியிருக்கே என்னா தைரியம் உனக்கு..?
ஓட்டுநர்: ஹி...ஹி..தண்ணியடிச்சிருக்கறதுனால சிக்னலைப் பாக்கல சார்...
போலீஸ்: தண்ணி வேற அடிச்சிருக்கியா...
ஓட்டுநர்: அதனாலத்தான் சார்.. இந்த சிக்னலுக்கு முன்னால இருக்குற சிக்னல்ல நின்னுக்கிட்டிருந்த போலீஸ்காரர் மேல வண்டியை ஏத்திட்டு வந்துட்டேன்...
போலீஸ்: என்னாது...போலீஸ் மேலேயே ஏத்திட்டு வந்துட்டியா...
ஓட்டுநர்: சார் வண்டியை திருடிட்டு வரும்போது மெதுவாவா சார் வருவாங்க..அதான் வேகமா வந்தேன்..அவருதான் குறுக்கே வந்துட்டாரு...
போலீஸ்:??????????????????
:D :D :D
நல்ல இருக்குங்க சிவா அண்ணா, போலீஸ் கார் சிக்னல் என்றவுடன் ரீடர் டைஜஸ்ட்டில் படித்த ஒரு நகைச்சுவை தான் ஞாபகத்துக்கு வருகிறது..
வேகமாக கார் ஓட்டி சென்ற ஒருவனை போலீக்காரன் ஒருவர் துரத்தி பிடித்துவிட்ட பிறகு சொல்வார், நான் உன்னை தூரதிய பொழுது நீ காரை இன்னும் வேகமாய் ஓட்ட ஆரம்பித்தாய் அதற்கு ஒரு நல்ல பொய் சொல்லிவிடு உன்னை விட்டுவிடுகிறேன்..
சிக்கியவர் சிறிது யோசித்துவிட்டு சொன்னார், சென்ற வாரம் என் மனைவி ஒரு போலீஸ்காரருடன் ஓடிவிட்டாள், நீங்கள் என்னை துரத்திய உடன் அந்த போலிஸ்காரர்தான் மீண்டும் என் மனைவியை என்னிடம் திருப்பிக் கொடுக்க துரத்துகிறாரோ என்று காரை நான் அதிவேகமாய் ஓட்டினேன்.. நீ சொன்னது எனக்கு பிடித்துவிட்டது நீ போகலாம் என்றார் போலிஸ்காரர்..
நன்றி ரீடர் டைஜஸ்ட்
அன்புடன் ஆதி
அனுராகவன்
29-02-2008, 08:48 AM
ஹா..ஹா..ஹா....சிரிக்க முடியல....
நல்ல சிரிப்புதான்..
மீண்டும் சிரிக்க வைக்குது...
தொடர்ந்து தங்க..
சிவா.ஜிக்கு ஒரு ஜெ போடலாம்..
நாங்க சிரிக்க ரெடியாக இருக்கிறோம்.
என் நன்றி
செல்வா
29-02-2008, 09:15 AM
ஆமா அந்த ஓட்டுனர் பேரு என்ன (சிவா.ஜினு சத்தியமா சொல்ல மாட்டேன்) ......
ஹா...ஹா.... ரொம்பநல்லாருக்கண்ணா..
(அது சரி யான்பு பொறேனு சொல்லிட்டு மன்றத்துல வந்து வண்டி ஓட்டுறீங்களா? அடுத்த வாரம் வருவீங்கல்ல அப்போ கவனிச்சுக்கறன்...)
lolluvathiyar
29-02-2008, 11:05 AM
ஆகா அருமை இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா என்றால் இருக்கு இன்னும் ஒன்னு பாக்கி இருக்கு அதானுங்க லஞ்சம் கம்முனு ஒரு வெட்டு வெட்டீட்டு போகனுமுல்ல, இதே மாதிரி நான் ஒரு கதை எழுதி இருந்தேன் சிவா ஜி
டிராபிக் போலீஸ் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9748)
மன்மதன்
29-02-2008, 11:43 AM
எல்லாத்தையும் பண்ணி புட்டு இன்னும் என்ன பாக்கி இருக்குன்னு கேள்வி வேற.. ஐய்யோ.. :D
mania
29-02-2008, 02:06 PM
சூப்பர் சிடுவேஷன் ஜோக் சிவா...!!!!!
அன்புடன்
மணியா...
அமரன்
29-02-2008, 03:27 PM
சூப்பர் சிடுவேஷன் ஜோக் சிவா...!!!!!
அன்புடன்
மணியா...
"சிடு" வேசன் யாருங்க தல..
ஹி..ஹி... வேசம் போடுபவனை ஏன் வேசன் என்று சொல்லக்கூடாது..
அமரன்
29-02-2008, 03:31 PM
...
போலீஸ்; ஏன்யா சிக்னல் கிராஸ் பண்ணே.....லைசன்ஸ் எடு...
..?
மிருகங்களை பாதுகாக்க புளூகிராஸ் இருக்கு.. மனிசப்பிறவிகளைப் பாதுகாக்க எந்த அமைப்பும் இல்லையேன்னு சொல்றவங்களே .. கொஞ்சம் கவனிங்க.. மனிசங்களைப் பாதுகாக்கத்தான் இந்த "சிக்னல்கிராஸ்" தண்டம்..
அக்னி
29-02-2008, 03:58 PM
ஆமா அந்த ஓட்டுனர் பேரு என்ன (சிவா.ஜினு சத்தியமா சொல்ல மாட்டேன்) ......
இப்பிடிச் சொல்லி, முதல் சிக்னல்ல நின்ன பொலீஸ்காரர் ஆயிடாதீங்க அண்ணாச்சி...
மனோஜ்
29-02-2008, 06:14 PM
என்னபா இது போலிசுனா மாமுல் தானா ?
ஹஹஹ சூப்பர் சிவா
அறிஞர்
29-02-2008, 09:45 PM
ஒன்றுக்கு மேல் ஒன்றாக சிரிப்பு...
அருமை சிவா.....
சிவா.ஜி
01-03-2008, 04:03 AM
http://www.tamilmantram.com:80/vb/ http://www.tamilmantram.com:80/vb/ http://www.tamilmantram.com:80/vb/
வேகமாக கார் ஓட்டி சென்ற ஒருவனை போலீக்காரன் ஒருவர் துரத்தி பிடித்துவிட்ட பிறகு சொல்வார், நான் உன்னை தூரதிய பொழுது நீ காரை இன்னும் வேகமாய் ஓட்ட ஆரம்பித்தாய் அதற்கு ஒரு நல்ல பொய் சொல்லிவிடு உன்னை விட்டுவிடுகிறேன்..
சிக்கியவர் சிறிது யோசித்துவிட்டு சொன்னார், சென்ற வாரம் என் மனைவி ஒரு போலீஸ்காரருடன் ஓடிவிட்டாள், நீங்கள் என்னை துரத்திய உடன் அந்த போலிஸ்காரர்தான் மீண்டும் என் மனைவியை என்னிடம் திருப்பிக் கொடுக்க துரத்துகிறாரோ என்று காரை நான் அதிவேகமாய் ஓட்டினேன்.. நீ சொன்னது எனக்கு பிடித்துவிட்டது நீ போகலாம் என்றார் போலிஸ்காரர்..
சூப்பரான ஜோக் ஆதி...படித்து சிரித்தேன்.பதிந்ததற்கு நன்றி தம்பி.
சிவா.ஜி
01-03-2008, 04:05 AM
ஆகா அருமை இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா என்றால் இருக்கு இன்னும் ஒன்னு பாக்கி இருக்கு அதானுங்க லஞ்சம் கம்முனு ஒரு வெட்டு வெட்டீட்டு போகனுமுல்ல, இதே மாதிரி நான் ஒரு கதை எழுதி இருந்தேன் சிவா ஜி
டிராபிக் போலீஸ்
அதுதான் வாத்தியாரே அடுத்தது...செஞ்சிருக்கறது சின்ன தப்பா..? இவ்ளோ பெரிய குற்றத்துக்கு பெரிய வெட்டாத்தான் வெட்டனும்....
logini
25-03-2008, 08:49 AM
நல்லா இருக்கு வாழ்த்துக்கள். அவன் உளராமல் இருந்திருந்தால் தப்பித்திருப்பான்.
அவன் வெட்டுறதா இருந்தா அந்த பொலிஸ்காரன் தலையை தான் வெட்டனும்.
meera
25-03-2008, 10:18 AM
சிவா அண்ணா ரொம்ப நல்லா இருக்கு.
இதை தான் தவளை தன் வாயால் கெடும்னு சொல்லுறாங்களா:mini023::mini023:
சிவா.ஜி
25-03-2008, 11:42 AM
ஆமாம்மா....மொக்கை மதி மாதிரி....
பேசாம இருந்தாலாச்சும் ஏதோ ஒரு பொண்ணை காமிச்சிருப்பாங்க....புலம்பறதால....ஏமி லேது....அப்படித்தான் இதுவும்....
பேசாம அஞ்சோ பத்தோ வெட்டிட்டு போயிருக்கலாம்....ஹி..ஹி...
ஆமாம்மா....மொக்கை மதி மாதிரி....
பேசாம இருந்தாலாச்சும் ஏதோ ஒரு பொண்ணை காமிச்சிருப்பாங்க....புலம்பறதால....ஏமி லேது....அப்படித்தான் இதுவும்....
பேசாம அஞ்சோ பத்தோ வெட்டிட்டு போயிருக்கலாம்....ஹி..ஹி...
புலம்பலா நானா...ச்சேச்சே.. உங்களுக்கெல்லாம் போரடிக்குமேன்னு ச்சும்மா லுலுவாய்க்கு. போற போக்க பாத்தா எனக்கு கல்யாணம் நடந்தாலே பெரிய விஷயமாயிடும் போல இருக்கே..:eek::eek::eek::eek:
சிவா.ஜி
25-03-2008, 12:50 PM
புலம்பலா நானா...ச்சேச்சே.. உங்களுக்கெல்லாம் போரடிக்குமேன்னு ச்சும்மா லுலுவாய்க்கு. போற போக்க பாத்தா எனக்கு கல்யாணம் நடந்தாலே பெரிய விஷயமாயிடும் போல இருக்கே..http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/
சீக்கிரமா...கல்யாணச் சாப்பாடு போடுங்க மதி.அப்படியே திருச்சியும் நல்லா சுத்திப்பாக்க சான்ஸ் கிடைக்கும்....(மதி கல்யாணத்துக்கு உச்சிப் பிள்ளயாரைப் பாக்க வர்றதா...அந்த தொப்பையார்கிட்ட செப்பியிருக்கேன்...)
ஓவியன்
25-03-2008, 02:53 PM
ஏன் சிவா அமரனோட பெயரை ஓட்டுனர், ஓட்டுனர் என்று மாற்றிப் போட்டிருக்கீங்க - அமரன் வந்து கோவிக்கப் போறாரே......!!! :D:D:D
சிவா.ஜி
25-03-2008, 02:56 PM
ஏன் சிவா அமரனோட பெயரை ஓட்டுனர், ஓட்டுனர் என்று மாற்றிப் போட்டிருக்கீங்க - அமரன் வந்து கோவிக்கப் போறாரே......!!! http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/http://www.tamilmantram.com:80/vb/
ஆஹா.....ஓட்டுநரையே ஓட்டறீங்களா.....இருங்க அமரன் வரட்டும்......போட்டுக் குடுக்கறேன்..
அன்புரசிகன்
25-03-2008, 04:40 PM
தண்ணிமட்டும் தான் அடிச்சிருந்தாரா??? இல்ல வேற ஏதாவது????
தண்ணிமட்டும் தான் அடிச்சிருந்தாரா??? இல்ல வேற ஏதாவது????
தண்ணி அடிக்கப் போனவரை தண்ணி அடிச்சிருச்சுனு சொன்னாங்க..
அடி குழாயில் அடிக்கும் தண்ணியதான் சொல்றேன்..
அன்புடன் ஆதி
அன்புரசிகன்
25-03-2008, 04:55 PM
நான் நம்பீட்டன் ஆதி.....
இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா..?
இல்லவெ இல்லீங்கோ.......:icon_rollout:
இதுக்கே தாங்க முடி.........லை....:D :D :D
விகடன்
18-04-2008, 10:27 PM
தொடர்சுவையாக இருந்தது உங்கள் நகைச்சுவை.
பாராட்டுக்கள் சிவா.ஜி
சிவா.ஜி
19-04-2008, 04:26 AM
நன்றி விராடன். ஒரு மஹானுபாவன் என்மீது மோத இருந்தான். தப்பித்தேன். அந்த நிகழ்ச்சியின் விளைவால் உதித்த நகைச்சுவை இது.