rocky
26-02-2008, 01:41 PM
நிலவே! சூரியனிடம் பெற்ற
ஒளியைத்தானே நீயும் தருகிறாய்,
பின் உன்னால் மட்டும் எப்படி முடிகிறது,
நெருப்பையும் இத்தனை இதமாய்த்தர?
ஒருவேளை கடன் வாங்கிய
வெளிச்சம் என்பதால்தான் இப்படி
கஞ்சத்தனம் செய்கிறாயோ?
நிலவே! எதனால் நீ
தேய்ந்து மறைகிறாய்?
அப்படியென்ன துயரமுனக்கு?
ஒருவேளை இரவல் வாங்கி
ஒளிரும் நிலையை எண்ணி
இளைத்து விடுகிறாயோ?
நிலவே! எதனால் நீ
மீண்டும் வளர்கிறாய்? அதற்குள்
என்ன மாற்றம் உன்னுள்?
ஒருவேளை வாங்கிய
கடனுக்கெல்லாம் ஒருநாள் வட்டியை
கட்டிவிட்டு வந்துவிடுகிறாயோ?
நிலவே! தொலைவினில்
அழகாய்த் தெரியும் நீ
அருகினில் கரடுமுறடாய்
இருப்பது எதனாலோ?
ஒருவேளை இந்தக்
கவிஞர்களெல்லாம் உன்னைப்
பெண்களுடன் ஒப்பிட்டதாலா?
ஒளியைத்தானே நீயும் தருகிறாய்,
பின் உன்னால் மட்டும் எப்படி முடிகிறது,
நெருப்பையும் இத்தனை இதமாய்த்தர?
ஒருவேளை கடன் வாங்கிய
வெளிச்சம் என்பதால்தான் இப்படி
கஞ்சத்தனம் செய்கிறாயோ?
நிலவே! எதனால் நீ
தேய்ந்து மறைகிறாய்?
அப்படியென்ன துயரமுனக்கு?
ஒருவேளை இரவல் வாங்கி
ஒளிரும் நிலையை எண்ணி
இளைத்து விடுகிறாயோ?
நிலவே! எதனால் நீ
மீண்டும் வளர்கிறாய்? அதற்குள்
என்ன மாற்றம் உன்னுள்?
ஒருவேளை வாங்கிய
கடனுக்கெல்லாம் ஒருநாள் வட்டியை
கட்டிவிட்டு வந்துவிடுகிறாயோ?
நிலவே! தொலைவினில்
அழகாய்த் தெரியும் நீ
அருகினில் கரடுமுறடாய்
இருப்பது எதனாலோ?
ஒருவேளை இந்தக்
கவிஞர்களெல்லாம் உன்னைப்
பெண்களுடன் ஒப்பிட்டதாலா?