View Full Version : காதலனே!!!
அனுராகவன்
21-02-2008, 11:54 PM
காதலன்
மேகம் போன்ற என்
காதலனின் மீசை - அதில்
மோகம் கொண்டேன்
அதை கடிக்க ஒரு ஆசை
இகத்தினை காண
என் மனம் துடிக்கிறது
அகம் அதை
செல்லாமல் தடுக்கிறது..
துன்பம் என்னை நீ
பிரிந்த அந்தவேளை
இன்பம் நீ என்னுடன்
இருக்கும் இந்தவேளை
காதல் நமக்கு ஒரு
பாச தொடர்பே
சாதல் வேண்டாம்
இனி என்றுமே
சுகம் ஒரு
தேன் போன்றது
சோகம் அந்த நொடியே
விசம் போன்றது.
-அனு
அமரன்
22-02-2008, 06:52 AM
உங்கள் மற்றக்கவிதைகளை விட நயமும், வரியமைப்பும் மிளிர்கிறது. அதற்காக முதற்கண் எனது பாராட்டுதல்.
பக்கத்தில் இருக்கும்போது தேடாதிருப்பதும், விரும்பியும் சொல்லாமலிருப்பதும்,
எட்டச்சென்றபின் தேடுவதும் சொல்லாததை நினைந்து துடிப்பதும் மனித இயல்பு.
பிரிவுதுயர் விஷ முறிவானோரும் வையத்தில் உண்டு.:)
ஒரு பெரு மாற்றம் உள்ளது அக்கா உங்களின் மற்றக் கவிதைகளுக்கு இதற்கும் வார்த்தைகள் வசமாக துவங்கிவிட்டன் உங்களுக்கு..
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உங்களுக்கும் கவிதைக்கும்..
அன்புடன் ஆதி
அனுராகவன்
22-02-2008, 09:12 AM
உங்கள் மற்றக்கவிதைகளை விட நயமும், வரியமைப்பும் மிளிர்கிறது. அதற்காக முதற்கண் எனது பாராட்டுதல்.
பக்கத்தில் இருக்கும்போது தேடாதிருப்பதும், விரும்பியும் சொல்லாமலிருப்பதும்,
எட்டச்சென்றபின் தேடுவதும் சொல்லாததை நினைந்து துடிப்பதும் மனித இயல்பு.
பிரிவுதுயர் விஷ முறிவானோரும் வையத்தில் உண்டு.:)
நன்றி அமரன் அவர்களே..
எல்லாம் உங்கள் ஊக்கம்தான்.
அனுராகவன்
22-02-2008, 09:13 AM
ஒரு பெரு மாற்றம் உள்ளது அக்கா உங்களின் மற்றக் கவிதைகளுக்கு இதற்கும் வார்த்தைகள் வசமாக துவங்கிவிட்டன் உங்களுக்கு..
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உங்களுக்கும் கவிதைக்கும்..
அன்புடன் ஆதி
நன்றி ஆதி அவர்களே..