நாகரா
21-02-2008, 12:50 PM
எனதெல்லா அடையாளங்களும்
கழிந்து விட்ட வெறுமையில்
கழிக்க முடியாத ஒன்று
உறுதியாய் நிற்கிறது.
உறுத்தும் அவ்வுண்மையின் அர்த்தகனம்
வெறுமையில் பரவ
கழிந்து விட்ட அடையாளங்களின்
இழப்பு ஈடு செய்யப்படுகிறது.
பரவும் பூரண உறுதியின் தன்மை
ஈடு இணையில்லாத என் மெய்ம்மை
அதில் தோய்ந்த என் முழுமை
அதன் விரல் வழி விழும் இம்மை
செய்யும் என் சொற்களின் ஜீவனே இம்மெய்.
கழிந்து விட்ட வெறுமையில்
கழிக்க முடியாத ஒன்று
உறுதியாய் நிற்கிறது.
உறுத்தும் அவ்வுண்மையின் அர்த்தகனம்
வெறுமையில் பரவ
கழிந்து விட்ட அடையாளங்களின்
இழப்பு ஈடு செய்யப்படுகிறது.
பரவும் பூரண உறுதியின் தன்மை
ஈடு இணையில்லாத என் மெய்ம்மை
அதில் தோய்ந்த என் முழுமை
அதன் விரல் வழி விழும் இம்மை
செய்யும் என் சொற்களின் ஜீவனே இம்மெய்.