PDA

View Full Version : அற்புத மருத்துவம் வாங்கோ!!!



அனுராகவன்
12-02-2008, 11:53 AM
அருகம்புல்லின் பயன்கள்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். இதை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு வகைகள் சாப்பிடலாம்.

அருகம்புல் சாறு குடிப்பதனால் ஏற்படும் பலன்கள்

நாம் எப்பொழுதும் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும்.
வயிற்றுப் புண் குணமாகும்.
இரத்த அழுத்தம் (பீ.பி) குணமாகும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.
சளி, சைனஸ், ஆஸ்துமா போன்ற நோய்களை குணப்படுத்தும்.
நரம்புத் தளர்ச்சி, தோல் வியாதி ஆகியவை நீங்கும்.
மலச்சிக்கல் நீங்கும்.
புற்று நோய்க்கு நல்ல மருந்து.
உடல் இளைக்க உதவும்
இரவில் நல்ல தூக்கம் வரும்.
பல், ஈறு கோளாறுகள் நீங்கும்.
மூட்டு வலி நீங்கும்.
கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
நம் உடம்பை தினமும் மசாஜ் செய்தது போலிருக்கும்.

-அனு:icon_b:

அனுராகவன்
12-02-2008, 11:55 AM
பூண்டில் மருத்துவம்...


பூண்டு... நமது அன்றாட சமையலில் பயன்படும் ஒரு பொருள். இதில் சுவை மட்டும் அல்ல...

இந்த பூண்டின் மருத்துவ பயன்கள் பற்றி...

* பூண்டையும் உப்பையும் சேர்த்து கசக்கி சாறெடுத்து தடவ அளுங்கு, மேல்தோல் சரிவு குணப்படும்.

* காது மந்தமாக இருப்பவர்களுக்கு தொடர்ந்து பூண்டு சாறினை காதில் ஊற்றி வரலாம்.

* பூண்டு சாறினை வலிப்பு வருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் கொடுத்து வர மெல்ல மெல்ல குணம் பெறலாம்.

* இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள் உள்ளுக்கு சாப்பிட கொடுக்க குணம் எளிதில் கிடைக்கும்.

* டான்ஸல் என்கிற உள்நாக்கு வளர்ந்திரப்பவர்கள் - அந்த வளர்ந்த உள்நாக்கு சதை வளர்ச்சியின் மீது தடவ பூண்டு சாறினை தடவி குணம் கிடைக்கும்.

* அஜீரணம், வயிற்றுப்புசம் போன்ற பாதிப்பிருந்தால் வெள்ளைப் பூண்டுடன் மிளகு, கையாந்துரையை அரைத்து உண்ணலாம்.

* பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட கொழுப்பு (கொலஸ்ட்ரால் குறையும்) ரத்தக் கொதிப்பு, ஹைபவர் டென்ஷன் போன்ற பாதிப்புள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து.

* பூண்டு பல மருத்துவ நன்மை கொண்டு இருப்பினும் கூட மூலம், பௌத்திரம், பாதிப்பு இருப்பவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏன் எனில் பூண்டு ஒரு வெப்ப உண்டாக்கி. எனவே மூல பௌத்திர பாதிப்புகளை அதிகப்படுத்தி விடும்.

அனுராகவன்
12-02-2008, 11:58 AM
பீட்ரூட்டின் மருத்துவ பயன்கள்...


பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வடர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.

தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.

பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணக்கள் உற்பத்தியாகும்.

பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்.

Narathar
12-02-2008, 12:01 PM
உங்கள் பகிர்தலுக்கு நன்றி அனு

யவனிகா
12-02-2008, 12:02 PM
நல்ல தகவல்கள் தோழியே...தொடருங்கள்.

அனுராகவன்
12-02-2008, 12:03 PM
உங்கள் பகிர்தலுக்கு நன்றி அனு

ம்ம் நன்றி நாரதரே..!!
நான் தொடர்ந்து தர ஆசைப்படுகிறேன்..!!
அனைவருக்கும் பயன்படட்டுமே..!!
ம்ம் என் நன்றி!!:)

அனுராகவன்
12-02-2008, 12:05 PM
நல்ல தகவல்கள் தோழியே...தொடருங்கள்.

ம்ம் நீங்களும் பல தரலாமே யவனிகா..!!
ம்ம் நன்றி!!!

Narathar
12-02-2008, 12:10 PM
ம்ம் நன்றி நாரதரே..!!
நான் தொடர்ந்து தர ஆசைப்படுகிறேன்..!!
அனைவருக்கும் பயன்படட்டுமே..!!
ம்ம் என் நன்றி!!:)


ம்ம் நீங்களும் பல தரலாமே யவனிகா..!!
ம்ம் நன்றி!!!

அதென்ன கொஞ்சம் ஓவராகவே "ம்ம்ம்" காரமிடிகின்றீர்கள்????

குறைத்துக்கொள்ளலாமே? இதற்கு ஒரு மருந்தும் இல்லையா?

aren
12-02-2008, 12:16 PM
ம்ம் நன்றாக இருக்கிறது. ஆனால் அருகல்புல்லை எங்கே போய் தேடுவது.

அனுராகவன்
12-02-2008, 12:17 PM
அதென்ன கொஞ்சம் ஓவராகவே "ம்ம்ம்" காரமிடிகின்றீர்கள்????

குறைத்துக்கொள்ளலாமே? இதற்கு ஒரு மருந்தும் இல்லையா?

நல்லது நாரதா..
அன்பாக உள்ளவங்களிடம் பேசும்போது நான் அப்படிதான் பேசுவேன்
என்ன செய்வது பழக்க தோசம்..
ஆகா வந்துடார்யா நாரதர் அந்துடாரு.!!

அனுராகவன்
12-02-2008, 12:19 PM
ம்ம் நன்றாக இருக்கிறது. ஆனால் அருகல்புல்லை எங்கே போய் தேடுவது.

எங்க இருக்கிங்க ஆரென்..!
நான் வேணுமுனா ஊரிலிருந்து கொண்டு வர சொல்லுரேன்..
காசுக்குதான் வாங்கனும் ஆரென்..!!

அனுராகவன்
13-02-2008, 11:00 AM
முருங்கையின் மருத்துவப் பயன்கள்

இது ஒரு சத்துள்ள உணவு, இது உடல் வலிமையைக் கொடுக்க வல்லது. இது சுபாவம் சூடு. ஆதலால் சூட்டுடம்புக்கு ஆகாது.
இதை உண்டால் சிறுநீரும் தாதுவும் பெருகும். கோழையை அகற்றும், முருங்கைக்காய் பிஞ்சு ஒரு பத்திய உணவாகும்.
இது, நெய் சேர்த்து சமைப்பது நல்லது.

சாதாரணமாக எல்லா வீட்டுக் கொல்லைகளிலும் தென்படும் முருங்கை மரத்தை மருத்துவ கொக்கிஷம் என்றே கூற வேண்டும். எண்ணற்ற வியாதிகளுக்கு ஏன்?
அநேகமாக எந்த வியாதிக்குமே, பலவகைகளில் மருந்தாகிறது.

முருங்கை மரத்தை விதையிலிருந்தும் அதன் கிளைகளை வெட்டி நட்டும் உற்பத்தி செய்யலாம்.
இதில் ஒட்டுச் செடிகூட உண்டு என்றால் உங்களுக்கு வியப்பாயிருக்கும். அந்த ஒட்டு வகையில் நல்ல சதைப்பற்றான சுவையான காய்கள் கிடைக்கும். நீண்ட காய்களை காய்க்கக் கூடியதாகவும் அதிக பலனை தரக்கூடியதாகவும் வளரும்.
முருங்கை மரத்தில் பட்டை, கீரை, காய், விதை, பிசின் அனைத்துமே பயன்படுகின்றன.

முருங்கைப் பட்டையை நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கும் வாயு தாங்கிய இடங்ளுக்கும் போடுவது வழக்கம்.
முருங்கை இலையை உருவிய பின் காம்புகளை நறுக்கிப் போட்டு மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் உண்ண, கை, கால் உடம்பின் வலிகள் யாவும் நீங்கி சிறு நீரைப் பெருக்கும்.

முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்பு சத்து இவை இருக்கின்றன. இந்த இலைகளை நெய்யில் பொரித்துச் சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.

முருங்கைப் பட்டை, உலோகச் சத்துக்கள் நிறைந்தது. உணவில் கலந்து உண்டால் நரம்புக் கோளாறுக்கு ஒரு நல்ல மருந்து.
முருங்கைக் காயை தென்னாட்டில் தான் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். வட நாட்டில் இதை அதிகமாகச் சமைத்து உண்பதைக் காண்போம்.

கடுமையான ரத்த, சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் இந்த வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக் காய் கை கண்ட மருந்து. முருங்கைக் காயை வேகவைத்து கொஞ்சம் உப்பு சேர்த்துச் சாப்பிடலாம். இதை உண்டதும் ஒரு தம்ளர் எருமை மோர் சாப்பிடுவது சீரணத்துக்கு உதவி செய்கிறது.

முருங்கை மரத்தின் மருந்து சக்தியை அறிந்தோ அறியாமலோ நாம் அடிக்கடி முருங்கைக்காயை உணவாகக் கொள்கிறோம். முருங்கைக்காய் சாம்பார் பலருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாயிற்றே!
முருங்கைக் காய்ச் சாம்பார் சுவையாக இருப்பதோடு அல்லாமல், மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண்நோய் இவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
-அனு

ஸ்ரீ
13-02-2008, 11:46 AM
அருமையான குறிப்புகள் அக்கா. நன்றி

ஜெகதீசன்
13-02-2008, 08:38 PM
நல்லாருக்கு. ஓபயோகமான ஸேதிதான்

அறிஞர்
13-02-2008, 09:52 PM
அருமையான தகவல்கள்....

அருகம்புல் பவுடராக கிடைக்கிறதா...

அனுராகவன்
13-02-2008, 10:27 PM
அருமையான தகவல்கள்....

அருகம்புல் பவுடராக கிடைக்கிறதா...
ஓ கிடைக்குமே..
அறிஞர் நல்ல நாட்டுமருந்து கடைக்கு சென்று பவுடரைக் கேளுங்கள்..
நன்றி அறிஞர் அவர்களே!!

தங்கவேல்
14-02-2008, 03:19 AM
அனு, எனக்கு முறுங்கை கீரை என்றால் உயிர். ஆனால் அம்மணிக்கோ அதை உறுவி எடுத்து செய்து தர சோம்பல். உங்களின் பதிவை காட்டியாவது கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.

நாகரா
14-02-2008, 04:34 AM
அருகம்புல், பூண்டு, பீட்ரூட், முருங்கை இவற்றின் அருங்குணங்கள் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி அனு. அனுவின் அற்புத மருத்துவம்ம்ம்.... இனிதே தொடரட்டும். யாம் நோயின்றி வாழ அது உதவட்டும்ம்ம்ம்....

அனுராகவன்
14-02-2008, 10:50 PM
எலுமிச்சம் பழம்
C:\Documents and Settings\User\My Documents\My Pictures\EIM0UOCA0S32SNCAARN1IYCAXB4VHDCA648MVZCAHWHDQCCA9951UXCA2I0EPICA7B274XCA0VIRZ7CAPJE0GQCAK7MZG8CAJJXN4BCAYHXPSQCAZ8OUG9CAFTV46RCA04ANUMCAQJZC9JCAAWCS2RCAC9TR5G.jpg
எலுமிச்சம் பழத்தை ஒரு சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். அந்தளவுக்கு நோய்கள் வராமல் தடுத்து உடல் நலத்தை காத்துக் கொள்ள என்னென்ன பொருட்கள் அவசியம் தேவையோ, அவைகள் அனைத்தும் இந்த பழத்தில் இருக்கின்றன.

ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது. முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண்போல பாதுகாக்கிறது.

எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால் மண்*ரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக் ஆகும்.
உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும் எலுமிச்சம் பழத்தின் மூலம் மனிதர்கள் பெற இயலும்.

இத்தனை நன்மை செய்யக்கூடிய எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை கட்டக்கூடிய குணமும் உண்டு. ஆனாலும் தேன் சேர்த்து உண்டு வந்தால் மலக்கட்டு நீங்கி விடும்.

அனுராகவன்
14-02-2008, 10:52 PM
அருமையான குறிப்புகள் அக்கா. நன்றி

நன்றி ஸ்ரீ..!!!
வாருங்கள் நீங்களும் பக்கேடுத்துக்கொள்ளுங்கள்..!!
நல்ல பல அரிய தகவல் தாங்க ஸ்ரீ..!

அனுராகவன்
14-02-2008, 10:55 PM
அனு, எனக்கு முறுங்கை கீரை என்றால் உயிர். ஆனால் அம்மணிக்கோ அதை உறுவி எடுத்து செய்து தர சோம்பல். உங்களின் பதிவை காட்டியாவது கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்.

ஓ அப்படியா சங்கதி!!
என் குறிப்பை பார்த்து செய்ய சொல்லுங்கள் தங்கவேல் நண்பரே!!
என் நன்றி உங்களுக்கு..!!

அனுராகவன்
14-02-2008, 10:56 PM
அருகம்புல், பூண்டு, பீட்ரூட், முருங்கை இவற்றின் அருங்குணங்கள் பற்றிய தகவல்களுக்கு மிக்க நன்றி அனு. அனுவின் அற்புத மருத்துவம்ம்ம்.... இனிதே தொடரட்டும். யாம் நோயின்றி வாழ அது உதவட்டும்ம்ம்ம்....

நன்றி நாகரா..!!
ஆகா ஆச்சிரியம் மற்றவர்கள் ஆக்கங்களில் பார்ப்பது..!!!!
மிக்க நன்றி தொடரட்டும் உங்கள் ஆன்மிக பயணம்.!!!

அனுராகவன்
14-02-2008, 11:08 PM
விஷம் இறங்க...

கரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு பிழிந்து ஒரு அவுன்ஸ் மோரில் கலந்து குடித்தால் பாம்புகடி விஷம் உள்பட எந்த விஷ கடியானாலும் விஷம் இறங்கும்.

விஷம் முறிக்கும் பிரமத்தண்டு!

பிரமத்தண்டு, அடிபாகத்தில் இருந்து நுனிப்பாகம் வரை சாம்பல் நிறத்தில் பூத்தாற்போல இருக்கும். இலைகள் சொரசொரப்போடு இலைகளின் ஓரங்களில் மிகவும் கூர்மையான முட்கள் அமைந்திருக்கும். காம்பில்லாமல் பல மடல்களாலான உடைந்த இலைகள் இருக்கும். பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையும் கடுகு போன்ற விதைகளையும் உடைய நேராக வளரும் சிறு செடி இனமாகும். இதன் வேர்கள் ஒரு அடி வரை செல்லக் கூடியது. பால் மஞ்சள் நிறமாக இருக்கும். இலைகளின் மீது வெண்ணிற பூச்சு தென்படும். கோடைக் காலத்தில் வெயில் கொடுமையால் சருகாகக் காய்ந்து அழிந்துவிடும். இலை, பால், வேர், விதை மருத்துவக் குணம் உடையது. நோயை முறித்து உடலைத் தேற்றவும், நல்ல தூக்கத்தையும் கொடுக்கும். தமிழகம் முழுதும் தரிசு நிலங்களிலும், ஆற்றங் கரைகளிலும், சாலை ஓரங்களிலும் தானாகவே வளர்கிறது.
வேறு பெயர்கள்: குறுக்குச் செடி, குடியோட்டிப் பூண்டு, குருக்கம், ததூரி, குடிவோட்டுப் பூண்டு, பிறத்தியுபுசுப்பி, பிரம்மதண்டி, வனமாலி, வாராகுகா, சுவாறகு, முகிக்கதசத்தை, ரசதூடு, பசயந்தனி, சாதலிங்கத்தை குருவாக்கி, கிறுமி அரி.

ஆங்கிலத்தில்: Argemone mexicana Linn, Papaveraceae

மருத்துவ குணங்கள்:

பிரமத் தண்டு இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, மேக ரணங்கள், குட்டம் குணமாகும்.

பிரமத்தண்டு இலைச் சாறை தேள் கொட்டிய இடத்தில் தடவ கடுப்பு நீங்கும்.

பிரமத்தண்டு இலைச் சாறு 30 மில்லியளவு குடிக்கக் கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட பேதியாகி பாம்பு விஷம் இறங்கும்.

பிரமத் தண்டு இலையை அரைத்துக் கட்டிவரக் கரப்பான், பேய்ச் சொறி, சிரங்கு, உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் குணமாகும்.

20 பூக்களை எடுத்து நீரில் ஊற வைத்து குளித்து வர 50 நாட்களில் கண் நோய் குணமாகும்.

பிரமத்தண்டு பால் 1 துளி கண்ணில் விட்டு வரக் கண் வலி, சதை வளர்தல், கண் சிவத்தல், அரிப்பு, கண் கூச்சம், நீர் வடிதல், கண் எரிச்சல் குணமாகும்.

இலை சூரணம், விதை சூரணம் சேர்த்து மிளகளவு 2 வேளை தேனில் கலந்து சாப்பிட்டு வர சயம், இருமல், நுரையீரல், சளி இருமல் குணமாகும்.

பிரமத்தண்டின் மூலச் சாம்பல் மிளகு அளவு எடுத்து சிறிது தேனில் 2 வேளை சாப்பிட்டு வர இரைப்பிருமல் (ஆஸ்துமா), காசம், கப நோய், நுரையீரல் நோய் குணமாகும்.

பிரமத் தண்டின் மூலச் சாம்பலால் பல் தேய்த்து வர பல் ஆட்டம், பல் சொத்தை, ழ்வடிதல், பல் கரைதல் குணமாகும்.

பிரமத்தண்டின் வேரை நிழலில் உலர்த்தி காய வைத்து இடித்துப் பொடியாக்கி சுண்டைக்காய் அளவு வெந்நீரில் சாப்பிட மலப் புழுக்கள் வெளியேறும்.

பிரமத்தண்டு விதைகள் முழுவதையும் நீக்கிவிட்டு செடிகள் முழுவதையும் சுத்தம் செய்து சாறு பிழிந்து 12 வயது வரை 1/2 தேக்கரண்டி அளவிலும் அதற்கு மேல் 1 தேக்கரண்டியளவிலும் குடிக்கக் கொடுக்க எல்லா விதமான விஷங்களும் பேதியாகி முறிந்துவிடும். அதிகம் பேதியானால் எலுமிச்சைச் சாறு கொடுக்கலாம். மிகவும் களைப்பாக இருந்தால் அரை அரிசி (குருணை) உணவு கொடுக்கலாம். இதைப் பாம்பு கடிக்கு மட்டும் கொடுத்தால் நல்லது. மற்ற விஷங்களுக்குக் கடிவாயில் சாற்றை விட்டு வந்தால் விஷம் தலைக் கேறாமல் முறியும்.

பிரமத் தண்டின் விதையை எடுத்து வந்து நீர்விட்டு அரைத்து கட்டியின் மேல் ஒரு புளிய இலை களத்துக்குப் பூசிவிடவும். 2 மணிக்கு ஒரு முறை புதிதாக செய்து வர கட்டி தானாக உருண்டு பழுத்து உடைந்து விடும்.

பிரமத் தண்டின் விதையை பொடி செய்து இலையில் சுருட்டிப் பீடி குடுப்பது போல புகையை இழுத்து வெளியில் விடப் பல்வலி, பற் சொத்தை, புழுக்கள் வெளியேறும்.

-அனு

அனுராகவன்
24-02-2008, 12:47 AM
கீழாநெல்லி
முல்லைத்தமிழ்



இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.

தொன்றுதொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள்காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச் சொல்லிலும், பயன்படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுகூடங்களில் இம்மூலிகை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

தாவரவியல் பெயர்: பைலாந்தஸ் அமாரஸ்
குடும்பம்: யூஃபோர்பியேசியே

கீழாநெல்லியானது ஒவ்வொரு மொழியிலும் கீழ்கண்டவாறு அழைக்கப்படுகிறது.

இந்தி: ஜராமலா, நிரூர், ஜங்லி யாம்பலி
வங்காளம்: புய்யாம்லா, சதாஹஸிர்மனி
குஜராத்தி: போன்யா அன்மலி
கன்னடம்: கிலநெல்லிக்கிடா, நெலநெல்லி
தமிழ்: கீழாநெல்லி, கீழ்க்காய்நெல்லி
மலையாளர்: கீழாநெல்லி, கீர்க்காநெல்லி
தெலுங்கு: நெல உசிரிகா
பீகார்: முய்யாரா, முலிகோஆ, காந்தாரா
ஓரியா: புய் ஆவோலா, பேடியான்லா.

சமஸ்கிருதம்: பூமியாம்லகி, தாமலகீ

இதன் முழுப்பகுதியும் நேரடியாகவே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

இதன் பயன்கள்:

மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற பல நோய்களுக்கும் கீழாநெல்லியானது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

கீழ்காய்நெல்லியில் பைல் நிரூலின், நார் செக்குரினின், 4-methoxy secyrinine, நிர் பைலின், தேலிக் ஆஸிட், எல்லாஜிக் ஆசிட், ஹேலிக் ஆஸிட் போன்ற 50-க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் இருப்பதனை அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

நவீன மருந்தியல் ஆய்வுகளின் மூலம், கீழாநெல்லியானது காளான் நோய்கள், புற்றுநோய்கள், இறுக்க நோய்கள் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுவதை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இம்மூலிகைக்கு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையுடையதெனவும் கல்லீரலை பாதுகாக்கும் தன்மையுடையதெனவும் பல்வேறு ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர்.

கீழாநெல்லியில் காணப்படும் ஹைப்போ பைலாந்தின், பைலாந்தின் போன்ற வேதிப் பொருட்கள் மீனுக்கும் தவளைக்கும் மட்டும் நச்சுதன்மையை யூட்டுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வேதிப் பொருளானது, மனிதர்களுக்கும மற்ற விலங்குகளுக்கும எந்தவித நச்சுத்தன்மையையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை எனவும் வெளிப்படுத்தி உள்ளனர்.

உண்ணும் அளவு: சாறு 10-20 மி.லி. ஒரு நேரத்துக்கு பயன்படுத்தலாம். தூள் : 3-6 கிராம்.

பயன்படுத்தும் முறைகள்

1. கீழாநெல்லி சமூலம் - கரிசலாங்கண்ணி, தும்பை - சீரகம் - பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு நன்றாக அரைத்து புன்னைக்காய் அளவு காலை மாலை மேற்கண்ட பாலில் ஏதாவது ஒன்றில் 7 நாட்கள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.

வயதிற்கேற்ப மருந்தின் அளவை குறைத்து சிறுபிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, புகை, புகையிலை, காரம், கொழுப்பு நீக்கிய மோர்சாதம், பால் சாதம், சாப்பிடுவது நல்லது. உப்பு வறுத்து சேர்க்கவும்.

2. கீழ்காய் நெல்லி சமூலம் - சீரகம், மஞ்சள் காரைவேர்பட்டை மூன்றும் சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து பசும்பால் அல்லது தேங்காய் பால் 300 மி.லி. கலக்கி தினம் காலை மாலை குடிக்க மஞ்சள்காமாலை நோய் குணமாகும்.

3. கீழா நெல்லி சமூலம், பேரம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரிசி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, பொன்னாங்கண்ணி இவைகளை சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து 3 நாள் 6 நேரம் எருமைத் தயிரில் கலந்து கொடுக்க இரத்தக்காமாலை உடனே குணமாகும்.

4. கீழா நெல்லியும் - கரிசலாங்கண்ணியும் சமஅளவு சேர்த்து நெல்லிக்காயளவு பாலில் சாப்பிட்டுவர பாண்டு, சோகை, இரத்தக் குறைவு மாறும்.

5. மாதவிடாய் அளவுக்கு மீறி போய்க்கொண்டிருந்தால் கீழ்க்காய் நெல்லி, அத்திப் பட்டை, அசோகப்பட்டை, அரசம் பட்டை, நாவல் பட்டை இவைகளை சமஅளவாக எடுத்து நன்றாக தூள்செய்து வைத்துக் கொண்டு தினம் ஒரு கரண்டி வீதம் தேன், வெந்நீர், பால் ஏதாவது ஒன்றில் மாறிமாறி சாப்பிட்டு வர கர்ப்பசாய நோய்கள் அனைத்தும் மாறி வெள்ளைப்பாடும் தீரும்.

6. கீழ்காய் நெல்லியை நன்றாக அரைத்து சொறி சிரங்கு படைகளில் போட உடனே மாறும்.

7. கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும்.

8. கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.

9. கீழாநெல்லிப்பொடி, நெல்லிக்காய்பொடி, கரிசாலைப் பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து தேனில் உண்டுவர அடிக்கடி வரும் சளித் தொல்லை, இரத்தக்குறைவு, இரத்தசோகை மாறி எதிர்ப் பாற்றல் பெருகும்.

10. கீழ்க்காய்நெல்லிச்சாறு, இளநீர், நெல்லிக்காய் சாறு, கரிசலாங் கண்ணி சாறு, பொன்னாங்கண்ணி சாறு இவைகள் ஒருலிட்டர் வீதமும், எலுமிச்சம்பழச்சாறு அரை லிட்டரும், பசும்பால் 5லிட்டரும், தூய நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய் 5 லிட்டரும், மதுரம், கொட்டம், நற்சீரகம், மாயக்காய், கிராம்பு, ஏலம், நற்சந்தனம், வலம்புரி, சடமாஞ்சில் ஆகியவை வகைக்கு 40 கிராம் வீதம் வாங்கி, நன்றாக இடித்து பசும்பால் விட்டு அரைத்து சாறுகள், எண்ணெய், பால் எல்லாவற்றையும் எண்ணெய்ச் சட்டியில் விட்டு அரைத்த மருந்தையும் சேர்த்து, சிறுதீயாக எரித்து மருந்து முதிர் மெழுகு பருவம் வந்ததும் எண்ணெயை வடித்து கொள்ளவும்.

தினமும் இதை தலையில் தேய்த்து தண்ணீரில் குளித்து வந்தால் கண்நோய்கள், பித்த நோய்கள், மேக நோய்கள், மேக உஷ்ணம், வறட்சை, கணை, பெரும்பாடு, காமாலை நோய்கள் தீரும். மஞ்சள் காமாலை நோயாளிக்கு இது சிறந்த மருந்தாகும்.

நன்றி :புதிய தென்றல்(வாழ்வியல் வழிகாட்டி)

க.கமலக்கண்ணன்
25-02-2008, 01:14 AM
அனு மிக மிக

அரிய படைப்பு நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

அதை நாம்தான் கடைபிடிக்கனும்

அதற்கு மிக அருமையாக மருத்துவத்தை தொகுத்து தந்தமைக்கு

அன்பான நன்றிகள் அனு...

அனுராகவன்
25-02-2008, 09:10 AM
நன்றி கமல்
என் வாழ்த்துக்கள் உங்களுக்கு..
தொடர்ந்து வருக..

mathura
27-02-2008, 10:16 AM
அப்பப்பா எத்தனை குறிப்புகள் அத்தனையும் முத்துக்கள் நன்றி தொடருக தொண்டு

அனுராகவன்
29-02-2008, 02:14 AM
நன்றி மதுரா...
என் நன்றி
தொடர்ந்து வாங்க..

அனுராகவன்
29-02-2008, 03:44 AM
சத்தான பப்பாளி

- ஆனந்த், கே.எஸ். ராமு
அவர்களுக்கு என் நன்றி..
ஆதாரம் :புதிய வழிகாட்டி(தென்றல்)

தமிழிலே "முற்றத்து முல்லைக்கு மணம் இல்லை" என்றொரு பழமொழியுண்டு. அது முல்லைக்கு மட்டுமல்ல. பல்வேறு விஷயங்களில் இதனை நாம் பார்க்க முடியும். அப்படி புறக்கணிக்கப்பட்ட பழவகைகளில் ஒன்றுதான் பப்பாளி. மிக மலிவான விலையில் கிடைக்கும் மிக சத்துவாய்ந்த இந்த கனியானது தன் தகுதிக்கேற்ற இடஒதுக்கீட்டைப் பெறவில்லை என்பது தான் சோகம்.

பப்பாளி எல்லா சூழ்நிலையிலும் நன்கு வளரக்கூடிய பழப்பயிர். தானாகவே வளரக்கூடியது, மிக குறைவான கவனிப்பே போதுமானது இந்த மரம். ஆனால் அது தரும் பலனோ மிக அதிகம். ஆனாலும் நோயாளிகளைப் பார்க்க செல்பவர்கள் கூட ஆரஞ்சு, ஆப்பிள் போன்ற விலை அதிகமான, பப்பாளியை விட சத்துக்குறைவான கனிகளைத்தான் வாங்கி செல்கிறார்களே தவிர, பப்பாளியைக் கவனிப்பாரில்லை.

பப்பாளியின் அறிவியல் பெயர் - Carica papaya. இது Caricaceae குடும்பத்தைச் சேர்ந்தது. பனைபோல பருத்து உயர்ந்து வளர்ந்தாலும் முருங்கையைப் போலவே பலமற்ற மரம் இது. எளிதில் முறிந்துவிடும் தன்மைகொண்ட இம்மரமானது, சரியான சூழலில் 20 ஆண்டுகளுக்கு மேல் பலன் தரக்கூடியது.

மீண்டும் தொடரும்..

க.கமலக்கண்ணன்
01-03-2008, 01:00 AM
பப்பாளிளின் சுவைமிகு

பலனை சுவையாக படைத்திட்ட அனு

பலமான நன்றி உங்களுக்கு

அனுராகவன்
02-03-2008, 01:29 AM
'இஞ்சி'யின் வல்லமை

நாம் அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பொருட்களில் மருத்துவ தன்மைகள் நிறைந்து காணப்படுவதில் இஞ்சிக்கு தனி இடம் உணடு. அதை உகந்த முறையில் பயன்படுத்தினால் பல்வேறு நோய்கள் குணமாகும் என்பது ஆயுர்வேத மருத்துவர்களின் கருத்து. இதோ உங்களுக்காக சில குறிப்புகள்

ஜீரண சக்தியும் ஞாபக சக்தியும்

இஞ்சியை தினமும் உணவில் கலந்து உட்கொள்வதால், நாம் உட்கொள்ளும் உணவு எளிதில் ஜீரணமடையும். இதனால், வயிற்றுக் கோளாறு தவிர்க்கப்படுகிறது. அத்துடன், ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும் வல்லமையும் இஞ்சிக்கு உண்டு.

வயிற்றுவலி

குடலில் உண்டாகும் கிருமிகளை அழிக்கும் திறம் கொண்ட இஞ்சியை சாறாக்கி அதில் சிறிது உப்பு கலந்து பருகினால் மலச்சிக்கல், வயிற்றுவலி போன்றவை இருந்த இடம் தெரியாமல் மாயமாகும். அதோடு, கல்லீரலையும் சுத்தம் செய்து ஆரோக்கியத்துக்கு வழிவகை செய்கிறது இஞ்சி.

பித்தம் போக்க...

பித்தம் அதிகமானல் தலைசுற்றல் உள்ளிட்ட இலவச இணைப்புகள் வந்து நம்மைத் தொல்லைப் படுத்தும். அதுபோன்ற சமயங்களில் இஞ்சியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சுக்குத் தூளை தேனில் கலந்து உண்டால் மிகுந்த நண்மை உண்டாகும்.

இவை மட்டுமின்றி பசியைத் தூண்டுவது, ஜலதோஷத்தைப் போக்குவது, தொண்டை வலியைப் போக்குவது உள்ளிட்ட பல மருத்துவ குணங்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளது இஞ்சி.

அனுராகவன்
08-03-2008, 04:51 AM
சூரிய சிகிச்சை செய்வோமா?


தற்போது ஐரோப்பிய நாடுகளில் சூரிய சிகிச்சை மிகவும் பிரபலமாகி வருகின்றது. சுற்றுலா தலங்களில் கடற்கரை ஓரங்களில் நடைபெறும் சூரியக் குளியல் என்பது வேறு. சூரிய சிகிச்சை என்பது வேறு. சூரிய சிகிச்சை என்பது முறையான மருத்துவ அறிவியல் பூர்வ அடிப்படையினால் ஆனது ஆகும்.

இயற்கை சிகிச்சை முறைகளில் ஒரு முக்கிய பகுதியாக சூரிய சிகிச்சை முறை இருந்து வந்தது. ஆனால் இன்று அலோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி என அனைத்து முறை மருத்துவர்களும் சூரிய சிகிச்சை அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.

குளிர் நாடுகளில் கட்டிட வடிவமைப்பாளர்கள் பொறியாளர்கள் மருத்துவர்கள் ஆகிய மூன்று வகையினரும் உள்ள குழுக்களின் மேற்பார்வையில் கண்ணாடிக் கட்டங்கள் மருத்துவமனையில் கட்டப்படுகின்றன. கண்ணாடி சூரியனின் ஒளிக் கதிர்களை கட்டடத்துக்குள் உட்புக அனுமதிக்கின்றது. நோயாளிகளை குளிரில் இருந்து காக்கின்றது. மேலும் சூரிய சிகிச்சையும் நடைபெறுகின்றது. ஆறாத புண்களுக்கு அநேக இடங்களில் சூரிய சிகிச்சை சிறந்த பயன் அளித்துள்ளது. காலை வெயில் சூரியனுடைய கதிர்களில் அவை மிகவும் சக்திவாய்ந்த பகுதியாக உள்ளன. சூரியனுடைய கதிர்களில் அவை மிகவும் சக்திவாய்ந்த பகுதியாக உள்ளன. இவற்றை மீறி ஊதாக்கதிர்கள் என்றும் புற ஊதாக் கதிர்கள் என்றும் இயற்பியலார் அழைக்கின்றனர். இவை மின்காந்தக் கதிர்வீச்சு ஆகும். நிறமாலையில் ஊதா நிறத்திற்கு அப்பால் இதன் கதிர்கள் உள்ளன. இவற்றைக் கண்ணால் காண இயலாது. இவற்றைப் பாதரச ஆவி விளக்குகள் கொண்டு பெறலாம். அலை நீள எல்லையில் இக் கதிர் வீச்சு ஒளிக்கதிர்களுக்கும் எக்ஸ்கதிர்களுக்கும் இடையே உள்ளது.

சூரிய வெளிச்சத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதே சூரிய சிகிச்சையின் மையக்கருத்தாகும். காலை சூரிய வெளிச்சம் மனித உடம்பிற்கு சிறந்த ரத்த விருத்தியாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சூரிய ஒளியில் வைட்டமின் டி தவிர ஏராளமான மருத்துவ இயல்புகள் உள்ளன. அவற்றை நோய் தீர்க்க பயன்படுத்துவதே சூரிய சிகிச்சையின் நோக்கமாகும். எனினும் மேற்கத்திய நாடுகளில் மக்களின் தோல்களில் நிறமி வேறுபாடுகள் இருப்பதால் சூரியக் கதிர்களின் கடுமையான தாக்கம் தோல்களில் அலற்சியை சில சமயங்களில் ஏற்படுத்துகின்றது.

நம்ம ஊருல நாம செய்ய முடியும்..
ஆனால் அதற்கு இடம் இல்லையே!!
அப்ப இடம் தான் முக்கியமா?

க.கமலக்கண்ணன்
08-03-2008, 07:57 AM
அருமையான தகவல் நன்றி அனு உங்களை தவிர வேறு யாராலும் மிக்க உபயோகமான செய்தி அனு அவர்களே...

ராஜா
08-03-2008, 08:11 AM
அருமையான தகவல் நன்றி அனு உங்களை தவிர வேறு யாராலும் மிக்க உபயோகமான செய்தி அனு அவர்களே...

அப்டின்னா....?

க.கமலக்கண்ணன்
08-03-2008, 08:31 AM
அப்டின்னா....?

காதை கிட்ட கொண்டுவாங்க சொல்லுறேன். (அப்படின்னா ? அப்படித்தான்)

ராஜா
08-03-2008, 08:57 AM
புரிஞ்சுது கமல்...!

அனுராகவன்
09-03-2008, 07:25 AM
நன்றி கமலகண்ணன் அவர்களே..!!
நன்றி ராஜா அவர்களே!!
தொடர்ந்து வாருங்கள்...
நல்ல தகவல் யார் தந்தா என்ன?
நன்றி...

அனுராகவன்
09-03-2008, 08:17 AM
சோயா பீன்ஸ்

உடல் ஆரோக்கியங்களை நமக்கு வழங்கும் சக்தி கொண்ட உணவுப்பொருள் என்பது முக்கியமானது. நம்பமுடியாத நல்ல விஷயங்களை நமக்குக் கொடுக்கிறதா சோயா பீன்ஸ் (Soybeans)?
என்ன இருக்கிறது?

சோயாவில் அனைத்து வைட்டமின் "பி" வகைகளும் இருக்கின்றன. குறிப்பாக தயாமின் (Thiamin Thiamin), நியாசின் (Niacin), போலிக் ஆசிட், ரைபோபிளேவின் (Riboflavin) போன்றவை அதிகமாக இருக்கின்றன. இவை இருதயம், கல்லீரல் செயல்பாடுகளில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

தானிய வகைகளிலேயே சோயாவில்தான் அதிக புரோட்டின் இருக்கிறது. 100 கிராம் சோயாவில் 43 கிராம் புரோட்டின் கிடைக்கிறது. இந்த புரோட்டினில் நம் உடலுக்குத் தேவையான அடிப்படை அமினோ அமிலங்கள் அனைத்தும் இருக்கின்றன. (இந்த அமினோ அமிலங்களை நம் உடல் தானாகவே உருவாக்கிக்கொள்ள முடியாது). மாமிச புரோட்டினுக்கு இணையாக வரக்கூடிய ஒரே ஒரு சைவ புரோட்டின் சோயா பீன்ஸ்தான்.

சோயாவில் கொழுப்பு குறைவாகவே இருக்கிறது. 100 கிராமில் 20 கிராம் கொழுப்புதான் இருக்கிறது.

சோயாவில் கார்போஹைட்ரேட் (Carbohydrate) அளவும் குறைவுதான். 100 கிராமில் 30 கிராம்தான்.

சோயாவில் நல்ல நார்ச்சத்து இருப்பதால் தளர்ந்த சோர்வடைந்த இருதயத்திற்கு சோயாவின் பாதுகாப்பு அபரிமிதமானது.

சோயா ஒரு இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட். இதில் லெசித்தினும், வைட்டமின் "ஈ" யும் சேர்ந்து இருக்கிறது.

மினரல்கள் சோயாவில் நிறைய இருக்கின்றன.மக்னீஷயம் (magnesium) 280 மி.கி.,கால்சியம் (calcium) 277 மி.கி., பாஸ்பரஸ் 704 மி.கி. இருக்கிறது. இதனால் சோயா சுலபமாக எலும்புகளுக்கும், பற்களுக்கும் பாதுகாப்பு வழங்கும். தவிர, சோயாவில் இருக்கும் இரும்புச்சத்து இரத்தத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

சோயா மூலம் கிடைக்கும் நேரடியான பலன்கள் என்ன?

1. உறுதியான எலும்புகள் உங்களுக்கு நிச்சயம் தொடர்ந்து நீங்கள் சோயா பால் குடிப்பதால். சோயாவில் கால்சியம் குறைவாக இருந்தாலும், சோயாவில் இருக்கிற தாவர ஹார்மோன் எலும்புகளின் தேய்மானத்தையும், உதிர்வையும் தடுக்கும் சக்தி கொண்டது.

2.மெனோபாஸ் (Menopause) பிரச்னைகளைத் தடுக்கும் ஆற்றல் சோயாவுக்கு உண்டு. இதில் இருக்கிற ஐசோ பிளேவினாஸ் பெண் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல செயல்படும் சக்தி கொண்டது. இது அற்புதமாக மெனோபாஸ் நிலையின்போது ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கும் சக்தி கொண்டது.

2. இருதயத்தின் சக்தியைக் கூட்டுவதில் சோயா அபாரமாகச் செயல்படும். இரத்தக் குழாய்களின் இளகுத் தன்மையை அதிகரித்து, கொலஸ்டிரால் அளவைக் குறைத்து, இரத்தக் குழாய்களுக்குள் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும்.

4. சோயா சில வகை புற்றுநோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. தினசரி 25கி. நீங்கள் நல்ல ஆரோக்கியமாக இருந்தால் போதும். ரிஸ்க் இருக்கிறது என்றால், 50 கி. எடுத்துக்கொள்ளுங்கள். இது ப்ராஸ்டேட் கான்ஸர் உருவாக்குகிற என்ஸைமைத் தடுக்கும் சக்தி கொண்டது. பெண்களுக்கு கர்ப்பப்பை கான்ஸர் வராமல் தடுக்கும்.

5. சோயாவின் உணவுப்பொருள் தகுதி மற்றவற்றைவிட அதிகம். இயற்கையாகவே இருக்கிற ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட், வைட்டமின் ''ஈ'' லெசித்தின் போன்றவை கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இருதயப் பாதுகாப்பில் ஈடுபடுகின்றன.

சோயாவில் ஐசோபிளேவோன்கள் இருக்கிறது என்கிறீர்களே? அப்படி என்றால் என்ன?

இவற்றை தாவர ஹார்மோன்கள் என்று சொல்கிறார்கள். இவை நம் உடல் ஹார்மோன் போலவே செயல்படும் திறன் கொண்டவை. சோயாவில் இருக்கும் இந்த ஐசோபிளேவோன்கள் பெண்களின் முக்கிய ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் போல செயல்படும் சக்தி கொண்டது. பருவ வயதில் அதிக சோயாவை எடுத்துக்கொள்வதால் பிற்காலத்தில் வரும் மார்புப் புற்றுநோய்கள் தடுக்கப்படும் என்று உறுதி சொல்லப்படுகிறது.

சோயா புரோட்டின் கடைகளில் கிடைக்கிறது. வாங்கும்போது இதில் கவனிக்க வேண்டியது என்ன?

கடைகளில் சோயா புரோட்டின் இரண்டு விதங்களில் கிடைக்கும்.

1. சோயா புரோட்டின் கான்ஸ்ஸென்ட்ரேட்: இதில் 70 சதவிகித புரோட்டின் இருக்கும். இது சுலபத்தில் கரையாது. நிறைய முயற்சி செய்து கரைக்க வேண்டி இருக்கும். சுலபத்தில் ஜீரணமாகக் கூடியது. குழந்தைகளுக்கு, கர்ப்பிணிகளுக்கு, பால் கொடுக்கும் பெண்களுக்கு, வயதானவர்களுக்கு இந்த வகை நிறைய உதவும். இதில் சில சிக்கல்களும் இருக்கின்றன. முதலில் சுவை சிலருக்குப் பிடிக்காத மாதிரி இருக்கும். இரண்டாவது சிலருக்கு காற்று வெளியேறிக்கொண்டே இருக்கும். மூன்றாவது இதில் ஐசோபிளேவினேன்கள் அளவு குறைவாக இருக்கும். இதனால் மெனோபாஸ் பிரச்னைக்காக சாப்பிடும் பெண்களுக்கு இந்த சோயா புரோட்டின் கான்ஸ்ஸென்ட்ரேட் உதவாது.

2. சோயா புரோட்டின் ஐசோலேட்: இதில் புரோட்டின் அளவு 90 சதவிகிதம் இருக்கிறது. கூடவே அத்தனை அடிப்படை அமினோ அமிலங்களும் உள்ளன.

சோயாவில் எந்தக் கெடுதலும் இல்லையா?

இருக்கிறது. வயிற்றில் ஜீரணத்திற்கு உதவும் டிரிப்சின் என்கிற என்ஸைமின் வேலையைத் தடுப்பதில் சோயா ஈடுபடுகிறது. ஆக இதைத் தடுக்க சோயாவை நல்ல சூட்டில் வேக வைக்கவேண்டும். தவிர உடலில் இரும்புச்சத்து கிரகிப்பை சோயா தடுக்கிறது. இதனால் இரத்த சோகை உருவாகலாம். இதைத் தடுக்க வைட்டமின் "சி" நிறைந்த பழங்களைச் சாப்பிடுங்கள்.

சோயாவை எப்படி எடுத்துக்கொள்ளலாம்?

சோயா பல விதங்களில் கிடைக்கிறது. உங்கள் விருப்பத்திற்குப் பயன்படுத்தலாம். சிலவற்றை கீழே கவனியுங்கள்.

1. சோயாபீன்: இது மஞ்சள் மற்றும் பழுப்பு நிறங்களில் பெரிய மணிகளின் அளவில் கிடைக்கும். உலர்ந்த சோயா பீன்களை காற்றில் புகாத டப்பாக்களில் வையுங்கள். இரண்டு கப் சோயா பீன்களைத் தயாரிக்க, ஆறு கப் தண்*ரில் இரவு முழுக்க ஊற வையுங்கள். பின் காலையில் வடித்து, கழுவி, ப்ரஷர் குக்கரில் மறுபடியும் 6 கப் தண்*ர் ஊற்றி 40 நிமிடத்திற்கு குறைந்த சூட்டில் வேக வையுங்கள். இதற்குப் பின்பே உப்பு தேவை என்றால் சேர்க்கவும். முன்பே சேர்த்தால் சோயாபீன்கள் மென்மையாவதை உப்பு தடுக்கும்.

2. சோயா பால்: தினசரி பாலைத் தவிர்த்துவிட்டு 200 மி.லி. சோயா பாலுக்கு மாறிவிடலாம். நீங்களே தயாரிப்பதில் அந்த வாசனை உங்களை குடிக்கவிடாமல் தடுக்கும். கடைகளில் கிடைக்கிற சோயா பால் நல்ல சாய்ஸ்.

3. டெக்ஸ்டர்ட் சோயா: இதுவும் கடைகளில் கிடைக்கும். பார்ப்பதற்கு மாமிசத் துண்டுகள் போலவே இருக்கும். உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வழக்கமான கறிகளுக்குப் பதில் இந்த வகை சோயாவை பயன்படுத்தலாம். இதில் 70 சதவிகித புரோட்டின் இருக்கிறது. மிகக் குறைந்த கொழுப்பு, நிறைய நார்ச்சத்து மற்றும் ஐசோபிளேவினோன்கள் இருக்கின்றன. தேவைப்பட்டால் இதில் கொஞ்சம் வினிகர் அல்லது எலுமிச்சைச் சாறு பிழிந்து ஈரப்படுத்திக்கொள்ளலாம்.

4. டோபு: பார்ப்பதற்கு வெண்ணெய் மாதிரி இருக்கும். இது சோயாவை, ஜிப்ஸம் என்கிற கால்சியம் கோயாகுலன்ட் சேர்த்து கர்டிலிங் செய்து தயாரிக்கப்படுகிறது. புரோட்டின், வைட்டமின் "பி" நிறைந்தது. அரை கப்பில் 10.1 கி. புரோட்டின் இருக்கும். இது சாதாரண பாலில் 5.1 தான் இருக்கும். சோயா பால் மாதிரி இல்லாமல் இதில் கால்சியம் சேர்ந்து இருக்கும்.

குளிர்பதனப் பெட்டியில் ஒரு பௌல் தண்*ரில் போட்டு வைத்துவிடலாம். ஒரு வாரம் கெடாமல் இருக்கும்.

5. சோயா எண்ணெய்: மற்ற எண்ணெய்களைப் போல இல்லாமல் சோயா எண்ணெயில் எந்த ஒரு சிறு கெடுதலும் இல்லை. இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்து இருப்பது இரத்தக்குழாய்களுக்கும், இருதயத்திற்கும் நன்மை செய்யும்.

6. சோயா சாஸ்: சோயாவை ஃபெர்மென்ட் செய்து உருவாக்கப்படும் இந்த சாஸ் பழுப்பு நிறத்தில் இருக்கும். மற்ற சாஸ் போலவே இதைப் பயன்படுத்தலாம். இதன் ஒரு குறை, இதில் ஐசோபிளேவினோன்கள் குறைவான அளவிலேயே இருக்கும். 100 கிராம் சாஸல் 1.6 மி.கிதான் இருக்கும். கூடவே உப்பு அதிகம் கலந்திருக்கும். கவனம் தேவை.

சோயா வகை - ஐசோபிளேவினோன்
உணவு அளவு - (100 கிராமுக்கு)

1. சோயா பீன் - 200 மி.கி.

2. சோயா பால் - 35 மி.கி.

3. டெக்ஸ்டர்ட் - சோயா 92.7 மி.கி.

4. சோயா சாஸ் - 1.6 மி.கி.

நன்றி :தமிழ் வெப்சைட் (கூடல்)

க.கமலக்கண்ணன்
09-03-2008, 09:29 AM
சிங்கையிலிருந்து தஞ்சை வந்தும் மிக அற்புதமான தகவல்களை அள்ளித்தரும் நீங்கள் மிகவும் அற்புதம்தான் நீங்கள்...

உங்களின் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து சுகமாக உங்களின் வாழ்வை நீங்கள் தொடங்க இருக்கும் அற்புதமான வாழ்விற்கு எனது வாழ்த்துக்கள் அனு...

அனுராகவன்
09-03-2008, 09:35 AM
நன்றி கமலகண்ணன் அவர்களே!!
என் நன்றி உங்களுக்கு...

க.கமலக்கண்ணன்
12-03-2008, 06:49 AM
இஞ்சியின்

இன்றியமையா பயனை

இனிமையாக எடுத்துரைத்த அனு

இன்றும் வாந்தி வருவது போல

இருந்தால் சிறிது எடுத்து வாயில் போட்டுக் கொண்டால்

இனியும் அந்த எண்ணம் வராது. நன்றி அனு

அனுராகவன்
13-03-2008, 01:12 AM
நன்றி கமலகண்ணன் அவர்களே!!
தொடர்ந்து வாருங்கள்
மருந்துகளை கண்டிபாக பார்த்து பயன்படுத்துங்கள்
சில மனிதர்கள் கண்டதே உண்டு அதற்கு மருந்து தேடுவார்கள்

அனுராகவன்
13-03-2008, 04:02 AM
சிறுநீரகத்தில் கற்கள்


வெயில் காலம் ஆரம்பித்து விட்டது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளும் ஆரம்பித்து விடும். இதைத் தவிர்க்க தினந்தோறும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஆரம்பித்து விடுங்கள்.

உடலில் தண்ணீர் குறையும் போது சிறுநீரகத்தில் கற்கள் தோன்றி அவஸ்தைப்படுத்தும். அதற்கு தினமும் காலையில் வாழைத்தண்டு சாறு அருந்துவது நல்ல பலனளிக்கும்.

அனுராகவன்
05-04-2008, 01:58 AM
நிறமும், சத்தும் --------------------

காய்கறிகள் மற்றும் பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானவை. சத்துக்கள் மற்றும் உட்பொருட்கள் வேறுபடும். ஒன்றைப் போல மற்றொன்று நிச்சயம் இருக்காது. இனி சில நிறங்களை அடிப்படையாக வைத்து எதை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும், எதை தவிர்க்க வேண்டும் என்று காண்போம்.

வெள்ளைக் காளான், உருளைக்கிழங்கு, வெங்காயத்தைக் காட்டிலும் காலி பிளவரை அதிகமாக சாப்பிடுங்கள்.

பச்சை, பச்சை நிறக் காய்கறிகளில் பொதுவாக நிறைய சத்து காணப்படுவது உண்மை தான். அதிலும் அடர்த்தியான பச்சை நிறம் கொண்ட கீரைகள், சிவப்பு நிற இலைகளை உடைய கீரைகள், பசலைக் கீரை ஆகியவற்றை தாரளமாக சாப்பிடுங்கள். பச்சை நிற காலி பிளவர், முளை விட்ட பயிர்களை நிறைய சாப்பிடலாம்.

மஞ்சள்-ஆரெஞ்சு, ஆரஞ்சு, திராட்சை, இனிப்பு உருளைக்கிழங்கு, காரட், வாழைப் பழங்கள் ஆகியவற்றை வேண்டுகிற அளவுக்கு சாப்பிடலாம்.

சிவப்பு, தினந்தோறும் ஒரு ஆப்பிள் சாப்பிட வேண்டும் என்பதைக் காட்டிலும் தக்காளி, சிவப்பு நிற மிளகு, ஸ்ட்ராபெர்ரி ஆகிய பழங்களை தாரளமாக சாப்பிட்டு வரவும்.

அனுராகவன்
10-04-2008, 10:33 AM
அன்னாசிபழம்-மருத்துவ குணங்கள்
பழங்களை உண்பவர்களுக்கு நோய் எதிர்ப்புத் தன்மை மற்றும் ஆயுள் அதிகம் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அன்னாசிப்பழம் மிகுந்த சுவையான, மணமான, இனிமையான பழமாகும். மஞ்சள் நிறத்தில் வெளிப்பக்கம் சொரசொரப்பாக இருந்தாலும் தோலை நீக்கியப் பின் பார்ப்பதற்கும். உண்பதற்கும் இனிமையான பழச்சதையைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அன்னாசி மிகுந்த சத்துடைய ஒரு பழமாகும். இப்பழம் அனைவர்க்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை ஈந்து உடலை வளர்க்கிறது. ஆரோக்கியத்தைத் தருகிறது. சில நோய்களைக் குணமாக்குகிறது.

அன்னாசிப்பழ சதையில் நீர்ச்சத்து 85 சதவிகிதம் உள்ளது. சர்க்கரைப் பொருட்கள் 13 சதவிகிதமும் புரதச்சத்து 0.60 தாது உப்புகள் 0.05 நார்ச்சத்து 0.30 சதவிகித அளவிலும் உள்ளன. சுண்ணாம்புச் சத்து. மணிச்சத்து. இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. மேலும் வைட்டமின் ஏ, பி, சி போன்றவைகளும் அடங்கியுள்ளன.

அன்னாசிப்பழம் குடல் செயல்களை ஊக்குவிக்கும். புழுக்கொல்லி, விஷம் நீக்கியாகச் செயல்படும். ஜீரணத்தைக்கூட்டும். சிறுநீரைப் பெருக்கும். பசியைத் தூண்டும். குளிர்ச்சியை ஊட்டும். மேலும் மஞ்சள் காமாலை, சீதபேதி, இவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரகக் கற்களை கரைக்கும். உடல்வலி, இடுப்புவலி ஆகியவற்றை குறைக்கும். பித்தத்தை நீக்கும். உடலுக்கு அழகைத்தரும். உள் உறுப்புகளை பலப்படுத்தும்.

அனுராகவன்
11-04-2008, 12:23 AM
புண்பட்ட மனதை புகை ஆற்றுகிறதா?
---------------------------------------------

சிகரெட் குடிப்பவர்களிடம் ஏன் புகை பிடிக்கிறீர்கள் என்று கேட்டால் புண்பட்ட மனசை புகை விட்டு ஆற்றுகிறேன் என்பார்கள். இது உண்மையா? இந்த கேள்வியை ஆராய்ச்சிப் பொருள் ஆக்கி மிச்சிகன் பல்கலைக் கழக விஞ்ஞானி கள் ஆராய்ந்தனர். புகை பிடிப்பவர்களிடமும் பரிசோதனை நடத்தினர். புகை பிடிப்பதற்கு முன்பு அவர்கள் மன நிலை என்ன? புகை பிடித்தபிறகு அவர் களின் மன நிலை எப்படி இருக்கிறது? என்று ஆராய்ந்தனர். இதில் அவர்கள் கண்டறிந்த உண்மை என்ன தெரியுமா? புகைப் பிடிப்பவர்கள் மூளையில் ரசாயன மாற்றம் ஏற்படுகிறது. இதன் மூலம் அவர்கள் திருப்தி அடைகிறார்கள். மூளை ஸ்கேன் மூலம் இதை அவர்கள் கண்டறிந்தனர். இதன் மூலம் மேலும் ஆராய்ச்சிக்கு வழி பிறந்துள்ளது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். இனி புகை பிடிப்பவர்கள் மற்றும் புகை பிடிக்காதவர்கள் பற்றி உடல் ரீதியான மாற்றங் களை ஆய்வு செய்ய இருக்கிறார்கள். இதன் மூலம் புகையால் பாதிக்கப் பட்டவர்கள் பற்றி துல்லியமான விளக்கங்களை அவர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று தெரிகிறது.

அனுராகவன்
17-04-2008, 08:36 AM
இதைக் காயாகவும் சமைக்கலாம், பழமாகவும் சமைக்கலாம். பச்சையாகவே சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆனால் சாப்பிடுவதற்கு முன் பழத்தைச் சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.

காய் கறிகளில் மிகவும் எளிதிலும் விரைவாகவும் ஜீரணமாகக் கூடியது தக்காளி! உடம்புக்கு ஆரோக்கியம் அளிக்கும் மூன்று விதமான புளிப்புகளும் தக்காளிப் பழத்தில் இருக்கின்றன.

மற்றக் காய்களில் சிலவற்றில் ஒன்று அதிகமாகவும் மற்ற இரண்டும் குறைவாகவும் இருக்கும். மற்றும் சிலவற்றில் இரண்டு அதிகமாகவும் ஒன்று குறைவாகவும் இருக்கும். ஆனால் தக்காளிப் பழத்தில் மூன்றும் சரியான அளவில் இருக்கின்றன.

முதலாவது, ஆப்பிள் பழத்தில் இருக்கும் ஃபாலிக் அமிலம். இது பழத்துக்குப் புளிப்புத் தன்மை தருகிறது.

இரண்டாவது எலுமிச்சம் பழம், சாத்துக்குடி, நாரத்தை முதலியவற்றில் இருக்கும் "சிட்ரிக்"அமிலம் இதன் புளிப்பு கிருமிகளைக் கொல்லக் கூடியது.

மூன்றாவது ஃபாஸ்ப்போரிக் அமிலம். இது நரம்பு நாடி, நாடி சம்பந்தமான நோய்களுக்கு மிகவும் நல்லது.

சாதாரணமாக காய்கறிகளைச் செடியிலிருந்து பறித்தவுடன் அதன் பசுமை குறைந்து விடும். ஆனால் தக்காளியோ வாடாமல் பசுமையாக இருக்கும். ஆகையினால் இதன் ருசியும் வெகு நேரம் வரை குறையாமல் இருக்கும்.

சாப்பாட்டில் அரிசி அதிகமாக இருப்பதால் உடம்புக்கு நோய் தான் ஏற்படும். தக்காளி இதற்குச் சிறந்த தடுப்பு, இது உடலில் சேரும் கிருமிகளைக் கொன்று, அவை சுரக்கும் அமிலங்களைச் சக்தியற்றவையாக்குகிறது.

தவிர பலவீனம், சோம்பல் இவற்றை நீக்கிச் சுறுசுறுப்பைத் தருகிறது. இருதய சம்பந்தமான நோய்களுக்கு இது ஏற்றது.

தக்காளியை, பருப்பு சேர்த்து கறி, கூட்டு, சாம்பார், குழம்பு, ரசம் இத்தனையும் தயாரிக்கலாம். புளிப்புப் பச்சடியாகவோ, இனிப்புப் பச்சடியாகவோ சமைத்து உண்டு மகிழலாம்.

கனிந்த தக்காளிப் பழங்களைப் பிழிந்து சாறு எடுத்தும் சாப்பிடலாம். தக்காளிச் சாதம், தக்காளி தோசை, தக்காளி இட்லி இப்படியும் தயாரித்து உண்ணலாம். அனைத்தும் வெகு சுவையாயிருக்கும்.

தக்காளியில் ஒரு விதமான ரசம் இருக்கிறது. அது உடலில் கட்டியிருக்கும் கபத்தைக் கரைத்து விடுகிறது. எனவே எளிதில் சளி வெளிவந்து விடுகிறது.

மலச்சிக்கலை நீக்கவும் மற்ற உணவுப் பதார்த்தங்களை விடத் தக்காளியில் அதிக அளவில் மக்னீசியம் இருக்கிறது.

இதில் மக்னீசியத்தைத் தவிர இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், செம்பு, சிறிது கால்சியம் ஆகியவையும் இருக்கின்றன.

இது சுமார் ஒரு மணி நேரத்தில் ஜீரணமாகிவிடும். அதனால் ஜீரண சக்தி குறைவாயுள்ளவர்களுக்குத் தக்காளி ரசம் மிகவும் ஏற்றது. குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல புஷ்டியான ஒரு சிறந்த உணவு.

தக்காளியிலுள்ள மக்னீசியம் எலும்புகளையும் பற்களையும் உறுதிப்படுத்துகிறது.

கால்சியத்தினால் எலும்பு வளர்ச்சி ஏற்பட்டாலும் மக்னிசியம் சிமெண்டைப் போல் எலும்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்கிறது. எலும்புகளும் உறுதிப்பட்டு ஒழுங்காக அமைகின்றன.

குழந்தைகளும் பெரியவர்களும் மக்னீசியம் உள்ள தக்காளியோடு கூட, கால்சியம் உள்ள பால் தயிர் முதலியன உட்கொள்வது மிகவும் அவசியம்.

அதனால் தக்காளி தயிர்ப்பச்சடி செய்து அவ்வப்போது உண்டு வரலாம்.

SathyaThirunavukkarasu
21-04-2008, 12:47 PM
அனு நீங்க ஒரு நடமாடும் மறுத்துவ குறிப்போ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அனுராகவன்
26-04-2008, 05:55 AM
அனு நீங்க ஒரு நடமாடும் மறுத்துவ குறிப்போ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

நன்றி தங்கையே!!
நீங்களும் உங்கள் படைப்பை சேர்த்துக்கொள்ளுங்கள்..
இன்னும் நல்லயிருக்குமே!

அனுராகவன்
26-04-2008, 06:19 AM
ஏலக்காயின் மருத்துவ குணங்கள்..
அதற்கு இங்கு சுட்டவும்..
ஏலக்காய் மருத்துவம் (http://www.podiyan.com/pages2007/4/elakkai.htm)

நன்றி :போடியன்.காம்

SathyaThirunavukkarasu
27-04-2008, 10:59 AM
ஏலக்காயின் மருத்துவ குணங்கள்..
அதற்கு இங்கு சுட்டவும்..
ஏலக்காய் மருத்துவம் (http://www.podiyan.com/pages2007/4/elakkai.htm)

நன்றி :போடியன்.காம்

நிச்சயமாக என் குறிப்புகளையும் தருகிறேன்

அனுராகவன்
29-04-2008, 04:58 AM
நிச்சயமாக என் குறிப்புகளையும் தருகிறேன்
நன்றி சத்தியா நானும் எதிர்ப்பார்க்கிறேன்..
ம்ம் என் பாராட்டுக்கள்..