அக்னி
07-02-2008, 12:06 PM
மன்றத்தில் சென்ற மாத சிறந்த பங்காளர் போட்டிகள் நடைபெற்று, உறவுகளுக்கு ஊக்குவிப்பும் கௌரவிப்பும் வழங்கப்படுவது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த போட்டியை விறுவிறுப்பாக்கும் நோக்கத்துடன், இனிவரும் காலங்களில் சுழற்சி முறை விருது வழங்குவதற்கு தமிழ்மன்ற நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.
இதனால், தொடர்ந்தும் ஒருவரே சென்ற மாத சிறந்த பங்காளர் கௌரவிப்பை வென்று தக்கவைத்துக் கொள்ளலாம். அதாவது, ஒருவர் தொடர்ந்தும் சிபாரிசு செய்யப்படவோ, அல்லது, தெரிவு செய்யப்படவோ வழி வகை ஏற்படுகின்றது.
இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால் இதுவரை வழங்கப்பட்ட பதக்கங்களை என்ன செய்வது என்பதே...
எதிர்காலத்தில் எழப்போகும் கேள்விகளையும் குழப்பங்களையும் தவிர்க்கும் நோக்குடன்,
இதுவரை பதக்கங்கள் வழங்கப்பட்டவர்களிடமிருந்து அவை மீளப் பெறப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் 1000 இபணம் வழங்கப்படவுள்ளது.
எனவே கௌரவிக்கப்பட்ட உறவுகள் சஞ்சலப்படாமல், தளர்ச்சியடையாமல் புதிய நடைமுறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிர்வாகக்குழு கேட்டுக் கொள்கின்றது.
இனி வரும் காலங்களில் சிறந்த பங்காளர் போட்டிகள்,
மனங்கவர் பதிவாளர் என்ற தலைப்பில் நடாத்தப்படும்.
இதுவரை தெரிவுசெய்யப்பட்ட, தெரிவு செய்யப்படப்போகின்ற மனங்கவர் பதிவாளர்கள்,
மனங்கவர் பதிவாளர்கள் - பதிவேடு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14468) என்ற திரியில் பதிந்து கொள்ளப்படுவார்கள்.
மன்ற வளர்ச்சியில் மாற்றங்களை வரவேற்போம்.
நன்றி!
~நிர்வாகக்குழு
.
இந்த போட்டியை விறுவிறுப்பாக்கும் நோக்கத்துடன், இனிவரும் காலங்களில் சுழற்சி முறை விருது வழங்குவதற்கு தமிழ்மன்ற நிர்வாகக் குழு தீர்மானித்துள்ளது.
இதனால், தொடர்ந்தும் ஒருவரே சென்ற மாத சிறந்த பங்காளர் கௌரவிப்பை வென்று தக்கவைத்துக் கொள்ளலாம். அதாவது, ஒருவர் தொடர்ந்தும் சிபாரிசு செய்யப்படவோ, அல்லது, தெரிவு செய்யப்படவோ வழி வகை ஏற்படுகின்றது.
இப்போதுள்ள பிரச்சினை என்னவென்றால் இதுவரை வழங்கப்பட்ட பதக்கங்களை என்ன செய்வது என்பதே...
எதிர்காலத்தில் எழப்போகும் கேள்விகளையும் குழப்பங்களையும் தவிர்க்கும் நோக்குடன்,
இதுவரை பதக்கங்கள் வழங்கப்பட்டவர்களிடமிருந்து அவை மீளப் பெறப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவருக்கும் 1000 இபணம் வழங்கப்படவுள்ளது.
எனவே கௌரவிக்கப்பட்ட உறவுகள் சஞ்சலப்படாமல், தளர்ச்சியடையாமல் புதிய நடைமுறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிர்வாகக்குழு கேட்டுக் கொள்கின்றது.
இனி வரும் காலங்களில் சிறந்த பங்காளர் போட்டிகள்,
மனங்கவர் பதிவாளர் என்ற தலைப்பில் நடாத்தப்படும்.
இதுவரை தெரிவுசெய்யப்பட்ட, தெரிவு செய்யப்படப்போகின்ற மனங்கவர் பதிவாளர்கள்,
மனங்கவர் பதிவாளர்கள் - பதிவேடு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14468) என்ற திரியில் பதிந்து கொள்ளப்படுவார்கள்.
மன்ற வளர்ச்சியில் மாற்றங்களை வரவேற்போம்.
நன்றி!
~நிர்வாகக்குழு
.