இளசு
05-02-2008, 08:28 PM
அறிவியல் மைல்கற்கள்- 29
யாரோ... என்ன பேரோ...
-------------------------------------------------
அ.மை.(28) - வாணிபக் காற்று இங்கே:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14039
------------------------------------------------------
அ.மை (29): யாரோ என்ன பேரோ..
கரோலஸ் லின்னேயஸ் ( Carolus Linnaeus) 1707 - 1778
**********************************************************************************************
உயிரியலாளர்கள் ( Biologists) எல்லா உயிரினங்களையும்
''லின்னேயன்'' முறைப்படி இரு பாகப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
Equus caballus - என்றால் நாம் பழக்கி வளர்க்கும் நாட்டுக்குதிரை இனம்.
எல்லாருக்கும் தெரிந்தது Hibiscus rosasinensis (செம்பருத்தி).
லின்னேயன் பெயரின் முதல் பாதி எப்போதும் கேபிட்டல் எழுத்தில் தொடங்கும்.
இது அந்த உயிரினத்தின் Genus எனப்படும் தொகுப்பைக் குறிக்கும்.
இரண்டாம் பாகம் எப்போதும் முழுதும் சிறிய எழுத்துக்களால் எழுதப்படும்.
இது அந்தக் குறிப்பிட்ட இனத்தை ( species) மட்டுமே குறிக்கும்.
ஒரு தொகுப்பில் (Genus) பல இனங்கள் ( species) இருக்கலாம்.
உதாரணமாக Equus burchelli என்றால் சமவெளிகளில் வாழும் குறிப்பிட்ட
வரிக்குதிரையின் பெயர்.
Equus - குதிரை இனங்களின் தொகுப்புப் பெயர். முதல் பாதி.
caballus, burchelli - குறிப்பிட்ட ஓர் இன உயிர்களுக்கான தனிப்பெயர். பின் பாதி.
இரட்டையாய் முழுதாக்கி சொல்லும்போது, சட்டென எல்லாருக்கும்
அந்தக் குறிப்பிட்ட இனம் மட்டுமே என உரைப்பது - லின்னேயன் பெயர்முறையின் வெற்றி!
கரோலஸ் லின்னேயஸ் - ஸ்வீடன் நாட்டு மருத்துவர்; இயற்கை ஆர்வலர்.
1735-ல் அவர் அர்ப்பணித்த இம்முறை அச்சாக இரண்டரை நூற்றாண்டு கடந்தும்
அப்படியே இன்றும் பின்பற்றப்படுகிறது.
லின்னேயஸ் புதிதாய் ஒரு பெயர் முறையைக் கொண்டு வர என்ன அவசியம்?
அதற்கு முன் அரிஸ்ட்டாட்டில் முறை பயனில் இருந்தது. அம்முறையிலும் ஒரு பொது (தொகுப்புப்)
பெயரும் , ஒரு தனி (specific) பெயரும் வைத்து உயிரினங்கள் அழைக்கப்பட்டன..
ஆனால் பெயர் சொன்னாலே போதும், அதன் தோற்றம் தன்னாலே விளங்கும் என்னும்
கொள்கையுடன், தனிப்பெயர்கள் உயிரிகளின் அங்க அடையாளச் சிறப்புகளைக் குறித்து
இடப்பட்டன.
ஒரு சிறிய தேசத்தில் சில உயிரினங்கள் மட்டும் பழக்கத்தில் இருக்கும்வரை
இந்த அரிஸ்ட்டாட்டில் முறை தாக்குப்பிடிக்கவே செய்தது.
ஆனால் பரவலான பயணங்கள், சேகரிப்புகளால் உலக உயிரினங்களின் எண்ணிக்கை
அதிவேகமாய் உயர, உயர அம்முறை பலத்த அடிவாங்கி நைந்துபோனது.
எடுத்துக்காட்டாய்,Solanum caule inerme herbaceo, foliis pinnatis incisis,nacemis simplicibus
என்றால் நம்ம தக்காளியைக் குறிக்கும் பெயர்.
காரணம் அதன் வழவழப்பான தண்டு, வெட்டுப்பட்ட காது போன்ற இலை, அதன் ஒளிரும் நிறம்
எல்லாம் குறிப்பிடப்பட்டு இப்படி அதன் பெயர் வால் போல் நீண்டுபோனது.
லின்னேயன் முறையில் தக்காளியின் பெயர் : Solanum lycopersicum.
லின்னேயஸ் இந்த அங்கலட்சண விவரிப்பு சமாசாரத்தை வீசி எறிந்தார்.
இரண்டாம் பாகம் கண்டுசொன்னவர் பெயரோ, எதுவோ - எளிமையாய் ஒரு சொல்லாக்கினார்.
இப்படி நாம் எல்லோரும் உயிரியல் வகுப்பில் மயங்கி வீழாமல் காத்த லின்னேயஸூக்கு
நன்றி சொல்ல, இம்மைல்கல் நாயகர் பட்டத்தை அவருக்கு அளித்து நன்றி கூர்வோம்.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்களை முறையாய்த் தொகுத்து
அவர் படைத்த நூல்கள் பல தலைமுறைக்கு உயிர் இனம் தேட வழிகாட்டி!
தொகுப்பு உயிர்களை மேலும் தொகுத்து , பெரிய தொகுதிகளாய் பிரித்த பெருமையும்
அவருக்கே...! பாலூட்டும் அகங்கள் இருக்கும் உயிர்களை Mammalia என்று
முதலில் அழைத்தவரும் அவரே.!
அந்த பாலூட்டித் தொகுதியின் ஓர் இனமே நம் மனித இனம்..
நம் இனம் மொத்தத்துக்கும் லின்னேயன் இட்டது ஒரே பெயர்: Homo sapiens
ஆனால் நிறத்தாலும் மதத்தாலும் நம் தேசத் தனிப்பெருமையாம் சாதிச்சனியனாலும்
நமக்கு நாமே எத்தனை எத்தனை கூடுதல் பெயர்கள் வைத்து
லின்னேயஸ் முன்னோக்கி சென்றதை எத்தனை பின்னடைய வைத்துவிட்டோம்!!
யாரோ... என்ன பேரோ...
-------------------------------------------------
அ.மை.(28) - வாணிபக் காற்று இங்கே:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14039
------------------------------------------------------
அ.மை (29): யாரோ என்ன பேரோ..
கரோலஸ் லின்னேயஸ் ( Carolus Linnaeus) 1707 - 1778
**********************************************************************************************
உயிரியலாளர்கள் ( Biologists) எல்லா உயிரினங்களையும்
''லின்னேயன்'' முறைப்படி இரு பாகப் பெயரிட்டு அழைக்கிறார்கள்.
Equus caballus - என்றால் நாம் பழக்கி வளர்க்கும் நாட்டுக்குதிரை இனம்.
எல்லாருக்கும் தெரிந்தது Hibiscus rosasinensis (செம்பருத்தி).
லின்னேயன் பெயரின் முதல் பாதி எப்போதும் கேபிட்டல் எழுத்தில் தொடங்கும்.
இது அந்த உயிரினத்தின் Genus எனப்படும் தொகுப்பைக் குறிக்கும்.
இரண்டாம் பாகம் எப்போதும் முழுதும் சிறிய எழுத்துக்களால் எழுதப்படும்.
இது அந்தக் குறிப்பிட்ட இனத்தை ( species) மட்டுமே குறிக்கும்.
ஒரு தொகுப்பில் (Genus) பல இனங்கள் ( species) இருக்கலாம்.
உதாரணமாக Equus burchelli என்றால் சமவெளிகளில் வாழும் குறிப்பிட்ட
வரிக்குதிரையின் பெயர்.
Equus - குதிரை இனங்களின் தொகுப்புப் பெயர். முதல் பாதி.
caballus, burchelli - குறிப்பிட்ட ஓர் இன உயிர்களுக்கான தனிப்பெயர். பின் பாதி.
இரட்டையாய் முழுதாக்கி சொல்லும்போது, சட்டென எல்லாருக்கும்
அந்தக் குறிப்பிட்ட இனம் மட்டுமே என உரைப்பது - லின்னேயன் பெயர்முறையின் வெற்றி!
கரோலஸ் லின்னேயஸ் - ஸ்வீடன் நாட்டு மருத்துவர்; இயற்கை ஆர்வலர்.
1735-ல் அவர் அர்ப்பணித்த இம்முறை அச்சாக இரண்டரை நூற்றாண்டு கடந்தும்
அப்படியே இன்றும் பின்பற்றப்படுகிறது.
லின்னேயஸ் புதிதாய் ஒரு பெயர் முறையைக் கொண்டு வர என்ன அவசியம்?
அதற்கு முன் அரிஸ்ட்டாட்டில் முறை பயனில் இருந்தது. அம்முறையிலும் ஒரு பொது (தொகுப்புப்)
பெயரும் , ஒரு தனி (specific) பெயரும் வைத்து உயிரினங்கள் அழைக்கப்பட்டன..
ஆனால் பெயர் சொன்னாலே போதும், அதன் தோற்றம் தன்னாலே விளங்கும் என்னும்
கொள்கையுடன், தனிப்பெயர்கள் உயிரிகளின் அங்க அடையாளச் சிறப்புகளைக் குறித்து
இடப்பட்டன.
ஒரு சிறிய தேசத்தில் சில உயிரினங்கள் மட்டும் பழக்கத்தில் இருக்கும்வரை
இந்த அரிஸ்ட்டாட்டில் முறை தாக்குப்பிடிக்கவே செய்தது.
ஆனால் பரவலான பயணங்கள், சேகரிப்புகளால் உலக உயிரினங்களின் எண்ணிக்கை
அதிவேகமாய் உயர, உயர அம்முறை பலத்த அடிவாங்கி நைந்துபோனது.
எடுத்துக்காட்டாய்,Solanum caule inerme herbaceo, foliis pinnatis incisis,nacemis simplicibus
என்றால் நம்ம தக்காளியைக் குறிக்கும் பெயர்.
காரணம் அதன் வழவழப்பான தண்டு, வெட்டுப்பட்ட காது போன்ற இலை, அதன் ஒளிரும் நிறம்
எல்லாம் குறிப்பிடப்பட்டு இப்படி அதன் பெயர் வால் போல் நீண்டுபோனது.
லின்னேயன் முறையில் தக்காளியின் பெயர் : Solanum lycopersicum.
லின்னேயஸ் இந்த அங்கலட்சண விவரிப்பு சமாசாரத்தை வீசி எறிந்தார்.
இரண்டாம் பாகம் கண்டுசொன்னவர் பெயரோ, எதுவோ - எளிமையாய் ஒரு சொல்லாக்கினார்.
இப்படி நாம் எல்லோரும் உயிரியல் வகுப்பில் மயங்கி வீழாமல் காத்த லின்னேயஸூக்கு
நன்றி சொல்ல, இம்மைல்கல் நாயகர் பட்டத்தை அவருக்கு அளித்து நன்றி கூர்வோம்.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரினங்களை முறையாய்த் தொகுத்து
அவர் படைத்த நூல்கள் பல தலைமுறைக்கு உயிர் இனம் தேட வழிகாட்டி!
தொகுப்பு உயிர்களை மேலும் தொகுத்து , பெரிய தொகுதிகளாய் பிரித்த பெருமையும்
அவருக்கே...! பாலூட்டும் அகங்கள் இருக்கும் உயிர்களை Mammalia என்று
முதலில் அழைத்தவரும் அவரே.!
அந்த பாலூட்டித் தொகுதியின் ஓர் இனமே நம் மனித இனம்..
நம் இனம் மொத்தத்துக்கும் லின்னேயன் இட்டது ஒரே பெயர்: Homo sapiens
ஆனால் நிறத்தாலும் மதத்தாலும் நம் தேசத் தனிப்பெருமையாம் சாதிச்சனியனாலும்
நமக்கு நாமே எத்தனை எத்தனை கூடுதல் பெயர்கள் வைத்து
லின்னேயஸ் முன்னோக்கி சென்றதை எத்தனை பின்னடைய வைத்துவிட்டோம்!!