சுகந்தப்ரீதன்
04-02-2008, 08:23 AM
காலை எட்டு மணிக்கு மணி செல்வாவின் அறைக்கதவை தட்டிக் கொண்டிருந்தான்..!
"டேய் டேய்...மாப்ள..? கதவை திறடா..! மணி எட்டாச்சு இன்னுமா தூங்கிகிட்டு இருக்க..?"
கதவு தட்டும் ஓசை கேட்கவும் செல்வா படுக்கையிலிருந்து எழாமலே "யார்ரா அவன் காலாங்காத்தால கதவை தட்டுறது..?" என்றான்!
"டேய் நான் தாண்டா மாப்ளே மணி, கதவை திறடா முதல்ல..!" என்றான் மணி!
மணியும் செல்வாவும் அந்த கல்லூரியில் நெருங்கிய நண்பர்கள்.. பார்ப்பதற்க்கு தோற்றத்தில் வேறுபாடு இருந்தாலும் கல்லூரி வளாகத்தில் எந்த இடத்திலும் இந்த இருவரும் சேர்ந்தே காணப்படுவதால் மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கு ட்விண்ஸ் என்ற பட்டப்பெயர் உண்டு.!
மெல்ல போர்வையை விலக்கி எழுந்த செல்வா "வீட்டுல நிம்மதியா தூங்க முடியலன்னு படிக்க முடியலன்னு பொய்சொல்லி விடுதியில சேந்தேன், இங்க என்னடான்னா இவன் தொல்லை தாங்கமுடியல!" என்றுக் கூறிக்கொண்டே தட்டுதடுமாறி கதவை திறந்தான்..!
வெளியே மணி படுஜோராக குளித்து முடித்து புதிய உடையை உடுத்தியபடி பிரகாசமாக நிற்பதை பார்த்ததும் செல்வா "சரி எப்படா ட்ரீட்?" என்று மணியை கேட்டான்..!
"ட்ரீடா.. எதுக்கு...?"-இது மணி!
"காலையிலியே எழுந்திரிச்சி குளிச்சி புதுட்ரஸ் போட்டுட்டு வந்து நிக்கிறன்னா உனக்கு பிறந்தாநாளாதான் இருக்கும் அதுக்குதான் கேட்டேன்" என்றான் செல்வா..!
"டேய் கடுப்படிக்காத மாப்ள..! நேத்திக்கு உன்கிட்ட நான் சொன்னது மறந்து போச்சாடா..?"
"யாரு நான் கடுப்படிக்கிறனா..? திரும்ப திரும்ப மாப்ள மாப்ளன்னு கூப்பிட்டு நீதான் கடுப்படிக்கிற" என்றான் செல்வா..!
"சரிடா மாப்ள..இனி நான் உன்னை மாப்ளன்னு கூப்பிடல..சரியா..?"
"ம்ம்ம் சரி வந்த விசயத்த சொல்லுடா..?சுந்தரியை பாத்தியா..?"
"இல்லடா மாப்ள.. எனக்கு தயக்கமா இருக்கு.. அதானல நேத்திக்கு நாம பேசியதுல சின்ன மாற்றம் செஞ்சிருக்கேன், அதுக்கு எனக்கு நீதான் உதவுனும்.." என்றான் மணி..!
"போடா பாடு... இதெல்லாம் நமக்கு ஒத்துவராது... வேற ஏதாவதுன்னு சொல்லு நான் செய்யுறேன்.." என்றான் செல்வா..!
"டேய்..டேய்.. எனக்கு உன்னவிட்டா யாருடா இருக்கா..? இதக்கூட நீ எனக்காக செய்யலன்னா எப்பிடிடா..?"- செண்டிமெண்டாக பேசினான் மணி..!
செல்வாவும் அதில் மதி மயங்கி, " சரி நான் என்ன பண்ணனும் சொல்லு..?" என்றான்.
"நீ ஒன்னும் பண்ண வேணாம் நான் சொல்றத மட்டும் செஞ்சா போதும்" என்ற மணி தொடர்ந்து, "நாளைக்கு காதலர்தினம் வருதுல்ல..?" என்றான்..!
"பொய் சொல்லாத நேத்து நைட் ஷோவுலக்கூட நாளை முதல் உங்கள் கணேஷாவில் "சேது"-ன்னுதான் சிலைடு போட்டான்..நீயும்தான பாத்தா..?." நக்கலாக கேட்டான் செல்வா..!
அதற்கு மணி, "ம்ம்ம் என்ன பண்ண நீயெல்லாம் நக்கல் பன்னுற அளவுக்கு ஆகிபோச்சு என்நிலமை.. இருக்கட்டும் இருக்கட்டும்" என்றுக்கூறிக் கொண்டே தொடர்ந்தான். " சரி நீ போயி குளிச்சிட்டு நல்லா ட்ரஸ் பண்ணிட்டு என்னோட ரூமுக்கு வா" என்றான்..!
"என்ன விசயம்னு நீ சொல்லாம நான் குளிக்க மாட்டேன் ஆமாம்..!" என்றான் செல்வா..!
"சரி சரி வீம்பு வெட்டாத சொல்லுறேன் கேளு.."
"ம்ம்ம் சொல்லு கேட்குறேன்..."
"நம்ப காலேஜ்ல ரோஸ் கிளப் இருக்கறது உனக்கு தெரியுமில்ல..?"
"ஆமாம்.. தெரியும்.. வருசத்துக்கு ஒருநாள் மட்டும் மாமா வேலை பாத்துட்டு மத்த நாளெல்லாம் கிளப்ப கிடப்புள போடுற அந்த குரூப்ப தெரியாமா இருக்குமா என்ன..?" என்றான் செல்வா..!
"அதேதாண்டா மாப்ள..! நீ என்ன பன்னுற அந்த கிளப்புல நான் வாங்கி கொடுக்கற ரோசாப்பூவ கொண்டுபோயி சுந்தரிக்கிட்ட நான் சொல்ற மாதிரி சொல்லி ஒப்படைக்கனும் சரியா?" என்றான்.
"அது சரி சுந்தரிக்கிட்ட நான் எதுக்கு கொண்டுபோயி கொடுக்கனும்..? ரோசாப்பூவுக்கு மேல இன்னும் பத்துரூபா காசக்கொடுத்தா அந்த குருப்புல இருக்குறவங்களே அதையும் செஞ்சிருவாங்களே..!" என்றான் செல்வா..!
"அதெல்லாம் எனக்கு மட்டும் தெரியாதா என்ன..? ஆனா நம்ப காலேஜ்லதான் தனக்கு புடிச்ச பொண்ணுக்கு அடுத்தவன் பேர போட்டு அனுப்பறதையே எல்லா பயலும் வழக்கமா வச்சிருக்கறதால அந்த மாமா குருப் கொடுக்கற எதையும் எவளும் சீரியஸா எடுத்துக்க மாட்டா..? இப்ப இதை நீ கொண்டுபோயி சுந்தரிக்கிட்ட கொடுத்தன்னு வச்சிக்க.. அவ கண்டிப்பா இதை நம்புவா..? ஏன்னா நம்ப ரெண்டுபேரை பத்திதான் நம்ப காலேஜூக்கே தெரியுமாச்சே..! ப்ளீஸ்டா மச்சான் முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதடா.." என்று கெஞ்சினான் மணி செல்வாவிடம்..!
"தினம்தினம் உன்ன சுந்தரி பாக்கறத நானும் பாத்துக்கிட்டுதான இருக்கேன்.. அப்புறம் எப்படிடா முடியாதுன்னு சொல்ல முடியும்.. உனக்காக இதை நான் செய்ய்றேண்டா மணி" என்றான் செல்வா..!
"ரொம்ப நன்றிடா மாப்ள.. சரி போயி குளிச்சிட்டு வா... கேண்டின்ல இன்னிக்கு உனக்கு என்னோட ட்ரீட்" என்றான் உற்சாகமாக மணி..!
"இது ட்ரீடா..?இல்ல நாளைக்கு நான் செய்ய போற உபகாரத்துக்கு லஞ்சமா..?" என்றான் செல்வா..!
"எப்பிடி வேணாலும் வச்சிக்க..! இப்ப நான் சந்தோசமா இருக்கேன் அதை கொண்டாடனும் அவ்வளவுதான்" என்றான் மணி..!
"அப்ப சரி ஒரு பத்து நிமிசத்துல உன் ரூம்ல இருப்பான் இந்த செல்வா" என்றுக் கூறிக்கொண்டே குளியலறைக்கு செல்வா செல்லவும் மணி தன்னறைக்கு திரும்பினான்..!
அடுத்தநாள் காலை வழக்கத்துக்கு மாறாக செல்வா சீக்கிரமே எழுந்து குளித்து முடித்து தன் நண்பனுக்கு உதவ தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான்..!
அதற்குள் மணியே செல்வாவின் அறைக்கு வந்துவிட்டான்..! வந்தவன் செல்வாவை பார்த்ததும், " டேய் என்னடா மாப்ள.. மாப்பிள்ளை கணக்கா கிளம்பிட்டு இருக்க..? நேரமாச்சுடா.. இப்ப போனாதான் சுந்தரியை கேண்டில வச்சி பிடிக்கமுடியும்..காலையில கேண்டில்ல அவ்வளவா யாரும் இருக்க மாட்டாங்க.. இல்லண்ணா அப்புறம் அவ கிளாஸூக்கு போயிடுவா.. அதன்பிறகு அவளை சந்திக்கறது கஸ்டமாயிடும்.. அதனால இந்த ரோஸ்சை எடுத்துக்கிட்டு கிளம்புடா" என்றான் மணி..!
"சரி சரி டென்ஷனாகாத இதோ கிளம்பிட்டேன்.. என்று கூறியவாறு வாசனை திரவியத்தை வழியவிட்டபடி வெளியே வந்தான் செல்வா..!
இருவரும் கேண்டினை அடைந்து முதன்முறையாக தனித்தனியாக அமர்ந்து கொண்டனர். செல்வா வழக்கமாக சுந்தரி அமரும் இருக்கைக்கு எதிர் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்..! மணிக்கு செல்வா சுந்தரியிடன் தன் காதலை சொல்வதை காணவேண்டும் என்ற ஆவலில் அறையின் மூலையிலிருந்த இருக்கையில் சென்று அமைதியாக அமர்ந்துக் கொண்டான்..!
சற்று நேரத்தில் சுந்தரி சந்தனக்கலர் சுடிதாரில் தேவதை போல நடந்து வந்தாள்..! வந்தவள் வழக்கமாக செல்வாவும் மணியும் அமரும் இடத்தில் பார்வையை செலுத்த அங்கே இருவரும் இல்லாமல் போகவே வாட்டத்துடன் தன் இருக்கைக்கு திரும்பியவளுக்கு அங்கே செல்வா அமர்ந்திருப்பதை கண்டதும் முகத்தில் பிரகாசம் தோன்றியது..!
மெல்ல அன்னநடை நடந்து வந்து செல்வாவுக்கு எதிரில் அமர்ந்தாள்..! சுந்தரியை அருகில் கண்டதும் ஏனோ செல்வாவுக்கு ஒருவித நடுக்கம் தோன்ற ஆரம்பித்தது..! எப்படி ஆரம்பிப்பது என்று ஒரே குழப்பம் செல்வாவுக்கு.. உடனே எதிர்மூலையில் அமர்ந்திருந்த மணியை நோக்கினான்..! மணி சைகை மூலம் நம்பிக்கை கொடுக்க.. ஒருவழியாகதைரியத்தை வரவழைத்துக் கொண்டு ரோசாவை எடுத்து நீட்டியவாறு பேச ஆரம்பித்தான் செல்வா..!
"சுந்தரி உங்ககிட்ட நான் ஒன்னு சொல்லனும்..அதுக்கு முன்னாடி இந்த ரோசாவ புடிங்க.." என்றான் செல்வா..!
சிறிதும் தயக்கமின்றி ரோசாவை வாங்கி கொண்ட சுந்தரி "சரி எதோ சொல்லனும்ன்னு சொன்னீங்களே சொல்லுங்கசெல்வா..?" என்றாள்..!
"அது அது வந்து எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு எனக்கு தெரியல.. நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே..?" என்று தயங்கினான்செல்வா..!
"நீங்க ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டேன் ரெண்டு சொன்னாதான் தப்பா எடுத்துக்குவேன்" என்று செல்வாவை கிண்டலடித்தாள் சுந்தரி..!
"அது ஒன்னுமில்ல... நான் வந்து வந்து..." என்று இழுத்தான் செல்வா..!
"அதான் கிட்ட வந்தாச்சே இன்னும் என்ன வந்து வந்துன்னுக்கிட்டு சொல்ல வந்ததை தயங்காம சொல்லுங்க செல்வா.." என்றாள்..!
"என் நண்பன் உன்னை காதலிக்கிறேன்னு..." செல்வா சொல்லி முடிப்பதற்க்குள் சுந்தரி, "உங்கள சொன்னாரா..? ஆமா அந்த அண்ணாவுக்கு எப்படி தெரிஞ்சுது..? நானே வந்து உங்ககிட்ட சொல்லமுடியாம இத்தனை நாளா தவிச்சிக்கிட்டு இருந்தேன்...! ஆனா என் அதிர்ஷ்டம் பாருங்க செல்வா.. வழக்கமா உன்கூட வர அந்த அண்ணா இன்னிக்கு வரல.. சரி நானே உங்ககிட்ட சொல்லலாம்ன்னு வந்தா எனக்கு முன்னாடி முந்திக்கிட்டு நீங்களே சொல்லிட்டீங்க என்ன காதலிக்கிறன்னு.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு செல்வா..! ஆமாம் தினம்தினம் நான் உன்ன பாக்கறது கூட தெரியாத மரமண்டையா நீங்க..? அந்த அண்ணா சொன்ன பிறகுதான் உங்களுக்கு தெரிஞ்சுதாக்கும்.. எப்படியோ அந்த அண்ணாவுக்குதான் நன்றி சொல்லனும்.." என்று கடகடவென சொல்லி முடித்துதான் கொண்டுவந்த ரோசாப்பூவை செல்வாவிடம் நீட்டினாள்..! அனிச்சை செயலாக அதை வாங்கிய செல்வா..சுந்தரியின் சொற்பொழிவில் சொக்கிபோய் வாயடைத்து அமர்ந்திருந்தான்..!
அதைக் கண்ட சுந்தரி "ஏய்..செல்வா என்னாச்சு.. அதுக்குள்ள கனவுல என்கூட டூயட்பாட கிளம்பிட்டியா..?! சரி சரி எனக்கு கிளாஸுக்கு நேரமாச்சு.. நான் இப்ப கிளம்புறேன்.. நீயும் கிளாஸூக்கு கிளம்பு.. மதியத்துக்கு மேல நாம வெளியில போகலாம்" என்று கூறிவிட்டு கேண்டினிலிருந்து வெளியே புறப்பட்டாள்..!
தூரத்திலிருந்து என்ன நடக்கிறது என்று குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மணி சுந்தரி கிளம்பி போகவும் ஆர்வமுடன் செல்வாவை நோக்கி வந்தான்..! வந்தவன்.. செல்வாவிடம், "என்னடா மாப்ளே என்ன சொன்னா சுந்தரி..?" என்றான் ஆர்வமுடன்..!
"ஒன்னுமில்ல மச்சான்(?) உன்னை மாதிரியேதாண்டா இருக்கா அவளும்" என்றான்..!
"என்னடா சொல்ற..? அவளும் காதலிக்கிறாளா..?" என்றான் மணி!
"ஆமாண்டா மச்சான் உன்ன மாதிரியே அவளும் என்னை பாத்து மாப்ளன்னுட்டு போறாடா" என்றான் செல்வா..!
"டேய்..என்னடா சொல்ற..? எனக்கு ஒன்னும் புரியல..!" -இது மணி..!
"எனக்கு மட்டும் புரியுதாக்கும்..? ஆனா ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது.. நான் பலதடவை உன்கிட்ட என்ன மாப்ளன்னு கூப்பிடாதன்னு சொன்னேன்.. நீ கேட்கல.. கடையில பாரு இப்ப நிஜமாலுமே நான் மாப்ளையாயிட்டேன்.. நீ எனக்கு மச்சானாயிட்ட..!" என்றான் செல்வா..!
"டேய் கொன்னே போட்டுருவேன் என்ன நடந்துதுன்னு தெளிவா சொல்லி தொலைடா.." என்றான் மணி கோபமாக..!
செல்வாவோ (கூலாக )" மச்சான் நான் நீ சொன்ன மாதிரி சுந்தரிக்கிட்ட ரோசாவை குடுத்து என் நண்பன் உன்னை காதலிக்கிறேன்னு என்கிட்ட சொன்னான்..அதை உன்கிட்ட சொல்லிட்டு அவன் கொடுத்த ரோசாவ உன்கிட்ட கொடுத்துட்டு போகலாம்ன்னு வந்தேன்னு சொல்ல வந்தேன்.. அதற்குள் அவள் முந்திக்கொண்டு என்னன்னவோ பேசிட்டு போயிட்டாடா..முக்கியமா உன்னை அண்ணான்னும் என்னை காதலிக்கிறேன்னும் சொன்னாடா மச்சான்..!" என்றான்..!
செல்வா சொல்ல சொல்ல மணிவாயடைத்து போய் உட்காந்திருந்தான்..! இப்படி நடக்கும் என்று அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை..! செல்வா கூறியதை கேட்டு மணி அந்த நொடியில் தன் மனதுக்குள் ஒரு முடிவெடுத்தான்..இனி யாரையும் எதற்காகவும் மாப்ளன்னு அழைக்ககூடாதென்று..!!!
பின்னர் மணி செல்வாவை பார்த்து சந்தோசமாக, " சரி மாப்ள... அப்ப இன்னிக்கு எனக்கு நீ ட்ரீட் தரப்போற..!" என்றான் புன்னகையுடன்..!
செல்வா அவனை குழப்பமாக பார்த்தபடி, " டேய் அவ உன்னை அண்ணான்னு சொல்லிட்டு என்ன காதலிக்கிறேன்னு சொன்னதுல உனக்கு கொஞ்சம் கூட வருத்தமில்லையா..?" என்றான்..!
அதற்கு மணி, "எதுக்கு வருத்தப்படனும்.. என் தங்கச்சி உன்னைதான் விரும்புறான்னு எனக்கு ஏற்கனவே தெரியும்டா.. அதனாலதான் நீ என்னை மாப்ளன்னு கூப்பிடாதன்னு சொன்னதையும் கேட்காம நான் உன்னை அப்படி கூப்பிட்டேன்!" என்றான்..!
இப்போது செல்வாவுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.."என்னடா சொல்லுற நீ..?" என்றான் மணியிடம்..!
"மாப்ள நீயும் சுந்தரியும் ஒருத்தரை ஒருத்தர் மனதுக்குள்ளியே விரும்புறீங்கன்னு எனக்கு ஏற்கனவே தெரியும்.. உங்கள் இருவரோட பார்வை பறிமாற்றத்துலியே அதை நான் புரிஞ்சுக்கிட்டேன்.. ஆனா ஏதோ ஒரு தயக்கத்துல நீ அதை என்கிட்ட கூட சொல்லாம மறைச்சிட்ட.. நானும் நீயா சொல்லுவன்னு எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.. சரி சுந்தரியை கேட்கலாம்ன்னு பாத்தா.. அவ நீங்களா எப்படி கற்பனை பண்ணலாம்ன்னு என்னை கேட்டுவிடுவாளோன்னு ஒரு பயம்.. உங்கள்ல ஒருத்தராவது தன்காதலை உங்களுக்குள் வெளிபடுத்திக்கீவிங்கன்னு எதிர்பார்த்தேன்..ம்ம்ம்ஹூம் சரி கடைசிவரை இப்படியே இருந்து ரெண்டு பேரும் உங்க காதலை புதைச்சிட்டு போயிடுவீங்களோன்னு பயந்துபோய்இதுக்கு வேறென்னதான் வழின்னு யோசிச்சப்பத்தான் எனக்கு இந்த ஐடியா ஒர்க்கவுட் ஆச்சி..! எனக்காக நீ எதையும் செய்வன்னு எனக்கு தெரியும்..அதனால நான் அவளை காதலிப்பதாக கூறி அதற்கு தூதாக உன்னை அனுப்புவதுபோல் உன்னை அவளிடம் தனிமையில் பேச வைக்க முயற்ச்சித்தேன்.. என் முயற்சியும் வெற்றியடைஞ்சிருச்சி.. நான் எதிர்பார்த்த பலனும் கிடைச்சிருச்சிடா மாப்ள..ஆனா அது நடந்த விதத்தை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை.. அதாண்டா மாப்ள.. நீ சொல்லி முடிச்சதும் கொஞ்ச நேரம் வாயடைச்சு போயி உட்காந்துட்டேன்.." என்றான்மணி மகிழ்ச்சியுடன்..!
கண்களில் ஆனந்த கண்ணீர் வடிய தன் நண்பணை கட்டி அணைத்த செல்வா, " உன்னைபோல் ஒரு நண்பன் கிடைக்க உண்மையிலியே நான் கொடுத்து வச்சிருக்கனும்டா.." என்றான் நாதழுதழுக்க..!!
*****முற்றும்*****
"டேய் டேய்...மாப்ள..? கதவை திறடா..! மணி எட்டாச்சு இன்னுமா தூங்கிகிட்டு இருக்க..?"
கதவு தட்டும் ஓசை கேட்கவும் செல்வா படுக்கையிலிருந்து எழாமலே "யார்ரா அவன் காலாங்காத்தால கதவை தட்டுறது..?" என்றான்!
"டேய் நான் தாண்டா மாப்ளே மணி, கதவை திறடா முதல்ல..!" என்றான் மணி!
மணியும் செல்வாவும் அந்த கல்லூரியில் நெருங்கிய நண்பர்கள்.. பார்ப்பதற்க்கு தோற்றத்தில் வேறுபாடு இருந்தாலும் கல்லூரி வளாகத்தில் எந்த இடத்திலும் இந்த இருவரும் சேர்ந்தே காணப்படுவதால் மாணவர்கள் மத்தியில் அவர்களுக்கு ட்விண்ஸ் என்ற பட்டப்பெயர் உண்டு.!
மெல்ல போர்வையை விலக்கி எழுந்த செல்வா "வீட்டுல நிம்மதியா தூங்க முடியலன்னு படிக்க முடியலன்னு பொய்சொல்லி விடுதியில சேந்தேன், இங்க என்னடான்னா இவன் தொல்லை தாங்கமுடியல!" என்றுக் கூறிக்கொண்டே தட்டுதடுமாறி கதவை திறந்தான்..!
வெளியே மணி படுஜோராக குளித்து முடித்து புதிய உடையை உடுத்தியபடி பிரகாசமாக நிற்பதை பார்த்ததும் செல்வா "சரி எப்படா ட்ரீட்?" என்று மணியை கேட்டான்..!
"ட்ரீடா.. எதுக்கு...?"-இது மணி!
"காலையிலியே எழுந்திரிச்சி குளிச்சி புதுட்ரஸ் போட்டுட்டு வந்து நிக்கிறன்னா உனக்கு பிறந்தாநாளாதான் இருக்கும் அதுக்குதான் கேட்டேன்" என்றான் செல்வா..!
"டேய் கடுப்படிக்காத மாப்ள..! நேத்திக்கு உன்கிட்ட நான் சொன்னது மறந்து போச்சாடா..?"
"யாரு நான் கடுப்படிக்கிறனா..? திரும்ப திரும்ப மாப்ள மாப்ளன்னு கூப்பிட்டு நீதான் கடுப்படிக்கிற" என்றான் செல்வா..!
"சரிடா மாப்ள..இனி நான் உன்னை மாப்ளன்னு கூப்பிடல..சரியா..?"
"ம்ம்ம் சரி வந்த விசயத்த சொல்லுடா..?சுந்தரியை பாத்தியா..?"
"இல்லடா மாப்ள.. எனக்கு தயக்கமா இருக்கு.. அதானல நேத்திக்கு நாம பேசியதுல சின்ன மாற்றம் செஞ்சிருக்கேன், அதுக்கு எனக்கு நீதான் உதவுனும்.." என்றான் மணி..!
"போடா பாடு... இதெல்லாம் நமக்கு ஒத்துவராது... வேற ஏதாவதுன்னு சொல்லு நான் செய்யுறேன்.." என்றான் செல்வா..!
"டேய்..டேய்.. எனக்கு உன்னவிட்டா யாருடா இருக்கா..? இதக்கூட நீ எனக்காக செய்யலன்னா எப்பிடிடா..?"- செண்டிமெண்டாக பேசினான் மணி..!
செல்வாவும் அதில் மதி மயங்கி, " சரி நான் என்ன பண்ணனும் சொல்லு..?" என்றான்.
"நீ ஒன்னும் பண்ண வேணாம் நான் சொல்றத மட்டும் செஞ்சா போதும்" என்ற மணி தொடர்ந்து, "நாளைக்கு காதலர்தினம் வருதுல்ல..?" என்றான்..!
"பொய் சொல்லாத நேத்து நைட் ஷோவுலக்கூட நாளை முதல் உங்கள் கணேஷாவில் "சேது"-ன்னுதான் சிலைடு போட்டான்..நீயும்தான பாத்தா..?." நக்கலாக கேட்டான் செல்வா..!
அதற்கு மணி, "ம்ம்ம் என்ன பண்ண நீயெல்லாம் நக்கல் பன்னுற அளவுக்கு ஆகிபோச்சு என்நிலமை.. இருக்கட்டும் இருக்கட்டும்" என்றுக்கூறிக் கொண்டே தொடர்ந்தான். " சரி நீ போயி குளிச்சிட்டு நல்லா ட்ரஸ் பண்ணிட்டு என்னோட ரூமுக்கு வா" என்றான்..!
"என்ன விசயம்னு நீ சொல்லாம நான் குளிக்க மாட்டேன் ஆமாம்..!" என்றான் செல்வா..!
"சரி சரி வீம்பு வெட்டாத சொல்லுறேன் கேளு.."
"ம்ம்ம் சொல்லு கேட்குறேன்..."
"நம்ப காலேஜ்ல ரோஸ் கிளப் இருக்கறது உனக்கு தெரியுமில்ல..?"
"ஆமாம்.. தெரியும்.. வருசத்துக்கு ஒருநாள் மட்டும் மாமா வேலை பாத்துட்டு மத்த நாளெல்லாம் கிளப்ப கிடப்புள போடுற அந்த குரூப்ப தெரியாமா இருக்குமா என்ன..?" என்றான் செல்வா..!
"அதேதாண்டா மாப்ள..! நீ என்ன பன்னுற அந்த கிளப்புல நான் வாங்கி கொடுக்கற ரோசாப்பூவ கொண்டுபோயி சுந்தரிக்கிட்ட நான் சொல்ற மாதிரி சொல்லி ஒப்படைக்கனும் சரியா?" என்றான்.
"அது சரி சுந்தரிக்கிட்ட நான் எதுக்கு கொண்டுபோயி கொடுக்கனும்..? ரோசாப்பூவுக்கு மேல இன்னும் பத்துரூபா காசக்கொடுத்தா அந்த குருப்புல இருக்குறவங்களே அதையும் செஞ்சிருவாங்களே..!" என்றான் செல்வா..!
"அதெல்லாம் எனக்கு மட்டும் தெரியாதா என்ன..? ஆனா நம்ப காலேஜ்லதான் தனக்கு புடிச்ச பொண்ணுக்கு அடுத்தவன் பேர போட்டு அனுப்பறதையே எல்லா பயலும் வழக்கமா வச்சிருக்கறதால அந்த மாமா குருப் கொடுக்கற எதையும் எவளும் சீரியஸா எடுத்துக்க மாட்டா..? இப்ப இதை நீ கொண்டுபோயி சுந்தரிக்கிட்ட கொடுத்தன்னு வச்சிக்க.. அவ கண்டிப்பா இதை நம்புவா..? ஏன்னா நம்ப ரெண்டுபேரை பத்திதான் நம்ப காலேஜூக்கே தெரியுமாச்சே..! ப்ளீஸ்டா மச்சான் முடியாதுன்னு மட்டும் சொல்லிடாதடா.." என்று கெஞ்சினான் மணி செல்வாவிடம்..!
"தினம்தினம் உன்ன சுந்தரி பாக்கறத நானும் பாத்துக்கிட்டுதான இருக்கேன்.. அப்புறம் எப்படிடா முடியாதுன்னு சொல்ல முடியும்.. உனக்காக இதை நான் செய்ய்றேண்டா மணி" என்றான் செல்வா..!
"ரொம்ப நன்றிடா மாப்ள.. சரி போயி குளிச்சிட்டு வா... கேண்டின்ல இன்னிக்கு உனக்கு என்னோட ட்ரீட்" என்றான் உற்சாகமாக மணி..!
"இது ட்ரீடா..?இல்ல நாளைக்கு நான் செய்ய போற உபகாரத்துக்கு லஞ்சமா..?" என்றான் செல்வா..!
"எப்பிடி வேணாலும் வச்சிக்க..! இப்ப நான் சந்தோசமா இருக்கேன் அதை கொண்டாடனும் அவ்வளவுதான்" என்றான் மணி..!
"அப்ப சரி ஒரு பத்து நிமிசத்துல உன் ரூம்ல இருப்பான் இந்த செல்வா" என்றுக் கூறிக்கொண்டே குளியலறைக்கு செல்வா செல்லவும் மணி தன்னறைக்கு திரும்பினான்..!
அடுத்தநாள் காலை வழக்கத்துக்கு மாறாக செல்வா சீக்கிரமே எழுந்து குளித்து முடித்து தன் நண்பனுக்கு உதவ தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தான்..!
அதற்குள் மணியே செல்வாவின் அறைக்கு வந்துவிட்டான்..! வந்தவன் செல்வாவை பார்த்ததும், " டேய் என்னடா மாப்ள.. மாப்பிள்ளை கணக்கா கிளம்பிட்டு இருக்க..? நேரமாச்சுடா.. இப்ப போனாதான் சுந்தரியை கேண்டில வச்சி பிடிக்கமுடியும்..காலையில கேண்டில்ல அவ்வளவா யாரும் இருக்க மாட்டாங்க.. இல்லண்ணா அப்புறம் அவ கிளாஸூக்கு போயிடுவா.. அதன்பிறகு அவளை சந்திக்கறது கஸ்டமாயிடும்.. அதனால இந்த ரோஸ்சை எடுத்துக்கிட்டு கிளம்புடா" என்றான் மணி..!
"சரி சரி டென்ஷனாகாத இதோ கிளம்பிட்டேன்.. என்று கூறியவாறு வாசனை திரவியத்தை வழியவிட்டபடி வெளியே வந்தான் செல்வா..!
இருவரும் கேண்டினை அடைந்து முதன்முறையாக தனித்தனியாக அமர்ந்து கொண்டனர். செல்வா வழக்கமாக சுந்தரி அமரும் இருக்கைக்கு எதிர் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்..! மணிக்கு செல்வா சுந்தரியிடன் தன் காதலை சொல்வதை காணவேண்டும் என்ற ஆவலில் அறையின் மூலையிலிருந்த இருக்கையில் சென்று அமைதியாக அமர்ந்துக் கொண்டான்..!
சற்று நேரத்தில் சுந்தரி சந்தனக்கலர் சுடிதாரில் தேவதை போல நடந்து வந்தாள்..! வந்தவள் வழக்கமாக செல்வாவும் மணியும் அமரும் இடத்தில் பார்வையை செலுத்த அங்கே இருவரும் இல்லாமல் போகவே வாட்டத்துடன் தன் இருக்கைக்கு திரும்பியவளுக்கு அங்கே செல்வா அமர்ந்திருப்பதை கண்டதும் முகத்தில் பிரகாசம் தோன்றியது..!
மெல்ல அன்னநடை நடந்து வந்து செல்வாவுக்கு எதிரில் அமர்ந்தாள்..! சுந்தரியை அருகில் கண்டதும் ஏனோ செல்வாவுக்கு ஒருவித நடுக்கம் தோன்ற ஆரம்பித்தது..! எப்படி ஆரம்பிப்பது என்று ஒரே குழப்பம் செல்வாவுக்கு.. உடனே எதிர்மூலையில் அமர்ந்திருந்த மணியை நோக்கினான்..! மணி சைகை மூலம் நம்பிக்கை கொடுக்க.. ஒருவழியாகதைரியத்தை வரவழைத்துக் கொண்டு ரோசாவை எடுத்து நீட்டியவாறு பேச ஆரம்பித்தான் செல்வா..!
"சுந்தரி உங்ககிட்ட நான் ஒன்னு சொல்லனும்..அதுக்கு முன்னாடி இந்த ரோசாவ புடிங்க.." என்றான் செல்வா..!
சிறிதும் தயக்கமின்றி ரோசாவை வாங்கி கொண்ட சுந்தரி "சரி எதோ சொல்லனும்ன்னு சொன்னீங்களே சொல்லுங்கசெல்வா..?" என்றாள்..!
"அது அது வந்து எப்படி உன்கிட்ட சொல்றதுன்னு எனக்கு தெரியல.. நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே..?" என்று தயங்கினான்செல்வா..!
"நீங்க ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டேன் ரெண்டு சொன்னாதான் தப்பா எடுத்துக்குவேன்" என்று செல்வாவை கிண்டலடித்தாள் சுந்தரி..!
"அது ஒன்னுமில்ல... நான் வந்து வந்து..." என்று இழுத்தான் செல்வா..!
"அதான் கிட்ட வந்தாச்சே இன்னும் என்ன வந்து வந்துன்னுக்கிட்டு சொல்ல வந்ததை தயங்காம சொல்லுங்க செல்வா.." என்றாள்..!
"என் நண்பன் உன்னை காதலிக்கிறேன்னு..." செல்வா சொல்லி முடிப்பதற்க்குள் சுந்தரி, "உங்கள சொன்னாரா..? ஆமா அந்த அண்ணாவுக்கு எப்படி தெரிஞ்சுது..? நானே வந்து உங்ககிட்ட சொல்லமுடியாம இத்தனை நாளா தவிச்சிக்கிட்டு இருந்தேன்...! ஆனா என் அதிர்ஷ்டம் பாருங்க செல்வா.. வழக்கமா உன்கூட வர அந்த அண்ணா இன்னிக்கு வரல.. சரி நானே உங்ககிட்ட சொல்லலாம்ன்னு வந்தா எனக்கு முன்னாடி முந்திக்கிட்டு நீங்களே சொல்லிட்டீங்க என்ன காதலிக்கிறன்னு.. எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு செல்வா..! ஆமாம் தினம்தினம் நான் உன்ன பாக்கறது கூட தெரியாத மரமண்டையா நீங்க..? அந்த அண்ணா சொன்ன பிறகுதான் உங்களுக்கு தெரிஞ்சுதாக்கும்.. எப்படியோ அந்த அண்ணாவுக்குதான் நன்றி சொல்லனும்.." என்று கடகடவென சொல்லி முடித்துதான் கொண்டுவந்த ரோசாப்பூவை செல்வாவிடம் நீட்டினாள்..! அனிச்சை செயலாக அதை வாங்கிய செல்வா..சுந்தரியின் சொற்பொழிவில் சொக்கிபோய் வாயடைத்து அமர்ந்திருந்தான்..!
அதைக் கண்ட சுந்தரி "ஏய்..செல்வா என்னாச்சு.. அதுக்குள்ள கனவுல என்கூட டூயட்பாட கிளம்பிட்டியா..?! சரி சரி எனக்கு கிளாஸுக்கு நேரமாச்சு.. நான் இப்ப கிளம்புறேன்.. நீயும் கிளாஸூக்கு கிளம்பு.. மதியத்துக்கு மேல நாம வெளியில போகலாம்" என்று கூறிவிட்டு கேண்டினிலிருந்து வெளியே புறப்பட்டாள்..!
தூரத்திலிருந்து என்ன நடக்கிறது என்று குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மணி சுந்தரி கிளம்பி போகவும் ஆர்வமுடன் செல்வாவை நோக்கி வந்தான்..! வந்தவன்.. செல்வாவிடம், "என்னடா மாப்ளே என்ன சொன்னா சுந்தரி..?" என்றான் ஆர்வமுடன்..!
"ஒன்னுமில்ல மச்சான்(?) உன்னை மாதிரியேதாண்டா இருக்கா அவளும்" என்றான்..!
"என்னடா சொல்ற..? அவளும் காதலிக்கிறாளா..?" என்றான் மணி!
"ஆமாண்டா மச்சான் உன்ன மாதிரியே அவளும் என்னை பாத்து மாப்ளன்னுட்டு போறாடா" என்றான் செல்வா..!
"டேய்..என்னடா சொல்ற..? எனக்கு ஒன்னும் புரியல..!" -இது மணி..!
"எனக்கு மட்டும் புரியுதாக்கும்..? ஆனா ஒன்னு மட்டும் தெளிவா தெரியுது.. நான் பலதடவை உன்கிட்ட என்ன மாப்ளன்னு கூப்பிடாதன்னு சொன்னேன்.. நீ கேட்கல.. கடையில பாரு இப்ப நிஜமாலுமே நான் மாப்ளையாயிட்டேன்.. நீ எனக்கு மச்சானாயிட்ட..!" என்றான் செல்வா..!
"டேய் கொன்னே போட்டுருவேன் என்ன நடந்துதுன்னு தெளிவா சொல்லி தொலைடா.." என்றான் மணி கோபமாக..!
செல்வாவோ (கூலாக )" மச்சான் நான் நீ சொன்ன மாதிரி சுந்தரிக்கிட்ட ரோசாவை குடுத்து என் நண்பன் உன்னை காதலிக்கிறேன்னு என்கிட்ட சொன்னான்..அதை உன்கிட்ட சொல்லிட்டு அவன் கொடுத்த ரோசாவ உன்கிட்ட கொடுத்துட்டு போகலாம்ன்னு வந்தேன்னு சொல்ல வந்தேன்.. அதற்குள் அவள் முந்திக்கொண்டு என்னன்னவோ பேசிட்டு போயிட்டாடா..முக்கியமா உன்னை அண்ணான்னும் என்னை காதலிக்கிறேன்னும் சொன்னாடா மச்சான்..!" என்றான்..!
செல்வா சொல்ல சொல்ல மணிவாயடைத்து போய் உட்காந்திருந்தான்..! இப்படி நடக்கும் என்று அவன் கனவிலும் எதிர்பார்க்கவில்லை..! செல்வா கூறியதை கேட்டு மணி அந்த நொடியில் தன் மனதுக்குள் ஒரு முடிவெடுத்தான்..இனி யாரையும் எதற்காகவும் மாப்ளன்னு அழைக்ககூடாதென்று..!!!
பின்னர் மணி செல்வாவை பார்த்து சந்தோசமாக, " சரி மாப்ள... அப்ப இன்னிக்கு எனக்கு நீ ட்ரீட் தரப்போற..!" என்றான் புன்னகையுடன்..!
செல்வா அவனை குழப்பமாக பார்த்தபடி, " டேய் அவ உன்னை அண்ணான்னு சொல்லிட்டு என்ன காதலிக்கிறேன்னு சொன்னதுல உனக்கு கொஞ்சம் கூட வருத்தமில்லையா..?" என்றான்..!
அதற்கு மணி, "எதுக்கு வருத்தப்படனும்.. என் தங்கச்சி உன்னைதான் விரும்புறான்னு எனக்கு ஏற்கனவே தெரியும்டா.. அதனாலதான் நீ என்னை மாப்ளன்னு கூப்பிடாதன்னு சொன்னதையும் கேட்காம நான் உன்னை அப்படி கூப்பிட்டேன்!" என்றான்..!
இப்போது செல்வாவுக்கு தலை சுற்ற ஆரம்பித்தது.."என்னடா சொல்லுற நீ..?" என்றான் மணியிடம்..!
"மாப்ள நீயும் சுந்தரியும் ஒருத்தரை ஒருத்தர் மனதுக்குள்ளியே விரும்புறீங்கன்னு எனக்கு ஏற்கனவே தெரியும்.. உங்கள் இருவரோட பார்வை பறிமாற்றத்துலியே அதை நான் புரிஞ்சுக்கிட்டேன்.. ஆனா ஏதோ ஒரு தயக்கத்துல நீ அதை என்கிட்ட கூட சொல்லாம மறைச்சிட்ட.. நானும் நீயா சொல்லுவன்னு எதிர்பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.. சரி சுந்தரியை கேட்கலாம்ன்னு பாத்தா.. அவ நீங்களா எப்படி கற்பனை பண்ணலாம்ன்னு என்னை கேட்டுவிடுவாளோன்னு ஒரு பயம்.. உங்கள்ல ஒருத்தராவது தன்காதலை உங்களுக்குள் வெளிபடுத்திக்கீவிங்கன்னு எதிர்பார்த்தேன்..ம்ம்ம்ஹூம் சரி கடைசிவரை இப்படியே இருந்து ரெண்டு பேரும் உங்க காதலை புதைச்சிட்டு போயிடுவீங்களோன்னு பயந்துபோய்இதுக்கு வேறென்னதான் வழின்னு யோசிச்சப்பத்தான் எனக்கு இந்த ஐடியா ஒர்க்கவுட் ஆச்சி..! எனக்காக நீ எதையும் செய்வன்னு எனக்கு தெரியும்..அதனால நான் அவளை காதலிப்பதாக கூறி அதற்கு தூதாக உன்னை அனுப்புவதுபோல் உன்னை அவளிடம் தனிமையில் பேச வைக்க முயற்ச்சித்தேன்.. என் முயற்சியும் வெற்றியடைஞ்சிருச்சி.. நான் எதிர்பார்த்த பலனும் கிடைச்சிருச்சிடா மாப்ள..ஆனா அது நடந்த விதத்தை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலை.. அதாண்டா மாப்ள.. நீ சொல்லி முடிச்சதும் கொஞ்ச நேரம் வாயடைச்சு போயி உட்காந்துட்டேன்.." என்றான்மணி மகிழ்ச்சியுடன்..!
கண்களில் ஆனந்த கண்ணீர் வடிய தன் நண்பணை கட்டி அணைத்த செல்வா, " உன்னைபோல் ஒரு நண்பன் கிடைக்க உண்மையிலியே நான் கொடுத்து வச்சிருக்கனும்டா.." என்றான் நாதழுதழுக்க..!!
*****முற்றும்*****