PDA

View Full Version : பேராசை



rocky
28-01-2008, 03:58 AM
யாரும் ஆசைப்பட்டு அவதிப்படக் கூடாதென்று
ஆசைகளை வெறுக்கச்சொன்னார் புத்தர் - அதுபோல்
யாரும் காதலித்து கவலைப்படக் கூடாதென்று
காதலை வெறுக்கச்சொன்னேன் நான் - ஆனால்
புத்தரின் ஆசை கூட நிறைவேறும்
என் ஆசை மட்டும் நிறைவேறாது,
உன் போன்ற பெண்களும்
அந்தக் கண்களும் இருக்கும் வரை.

ஓவியன்
03-02-2008, 04:13 PM
காதலிக்கக் கூடாதா ராக்கி.....???
இந்தக் காதல் தானே
பல கலைகளின்
ஊற்றுக் கண்ணாக இருக்கிறது....!! :)

இளசு
03-02-2008, 06:52 PM
கண்களே கண்களே
காதல் செய்வதை விட்டுவிடுங்கள்!
பெண்களே பெண்களே
வாலிபரை கொஞ்சம் வாழவிடுங்கள்!

- கண்ணதாசன் சொல்லி ஆண்டுகள் ஆயின பல..
கதை இன்னும் மாறவேயில்லை ராக்கி!

பெண்களும் அவர்தம் பேசும் கண்களும் இருக்கும்வரை
உங்கள் பேராசை வெறும் நிராசை!

பூமகள்
03-02-2008, 07:03 PM
எலிக்கு பயந்து வீட்டினை கொழுத்துவது நியாயமோ???
காதல் தவறென்றால்..

தாஜ்மஹால் எங்கே..??

கலை தான் எங்கே..??

செய்பவர் பொறுத்தே
அனைத்தும் மாறும்..!

நாம் பார்க்காமல் இடறி
தவறி விழுந்ததும்..
கல்லு தட்டியதாக சொல்வது தானே வாடிக்கை...!!


"சொர்க்கம் - நரகம்..
இரண்டில் ஒன்று
இங்கே நிச்சயம்..!

காதலித்துப் பார்..!"

-பத்மஸ்ரீ வைரமுத்து அவர்களின் வரிகள் மறந்துவிட்டீர்களா??


---------------------

ஆயினும், கவிதை சொல்லிய கரு.. நிஜமாக வாழ்த்துகள்..!