PDA

View Full Version : உயிர்மெய் ஒருமை



நாகரா
25-01-2008, 07:57 AM
பொய்யான உயிரே
மண்ணில் தெரியும்
மெய்

மெய்யான உடம்பே
விண்ணில் மறையும்
உயிர்

உயிரின் தெரிதல் மெய்
மெய்யின் மறைதல் உயிர்

உயிர் பேயாய்த் திரியாமல்
மெய் பிணமாய்ச் சரியாமல்
தெரிவதை மறைத்தால்
மரணமிலாப் பெருவாழ்வு

உயிரென்றும் மெய்யென்றும் பொருள் இரண்டில்லை

உயிரெனும் மறைப்பொருளே
உடம்பெனும் மெய்ப்பொருளாய்த்
தெரியும்

உடம்பெனும் மெய்ப்பொருளே
உயிரெனும் மறைப்பொருளாய்
மறையும்

பொருள் ஒன்றே
பெயர் இரண்டு
தெரிந்தால் அதன் பெயர் மெய்
மறைந்தால் அதன் பெயர் உயிர்

இருபொருட் பிரமையால்
மரணம்

ஒருபொருட் பிரக்ஞையால்
மரணமிலாப் பெருவாழ்வு

உயிரும் மெய்யும் ஒன்றே அறிக
பேய்ப் பிண பிரமைகள் அறவே ஒழிக

உயிர்ச் சிவமே
மெய்ச் சக்தி

மெய்ச் சக்தியே
உயிர்ச் சிவம்

உயிரின் தரமே
மெய்யெனும் திடமாய்

திடத்தில் தரக்குறைவு
மனப் பிரமை

மனப் பிரமையால் தோன்றும்
நோய் தேய்வு மூப்பு மரணம்

சிவசக்தியெனும் உயிர்மெய் ஒன்றே அறிக
நவசித்தியெலாம் செயச் செய்யும் உபாயம் அதுவே

ஆதவா
26-01-2008, 08:59 AM
நண்பரே! கவிதை அருமை... (விமர்சனம் பின்பு இடுகிறேன்) நல்ல கருத்து... இதுவரை நான் கேட்ட கருத்துக்களின் சங்கமம்
வாழ்த்துகள்

ஆர்.ஈஸ்வரன்
26-01-2008, 10:07 AM
கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

அனுராகவன்
26-01-2008, 11:52 AM
நண்பரே உயிரையும்,உடலையும் தனித்து பிரித்தால் அங்கு இருப்பதோ பிணம்.
உயிர் மட்டும் பிரிந்தால் அது ஆன்மா அற்ற உடல்
அதனால் இரண்டையும் பிரிக்கயியலாது..
ம்ம் முதல் முறைபடித்தல் யாருக்குமே குழப்பம்தான் வரும்..
ஏனெனில் உயிரையும் ,உடலையும் மாற்றி மாற்றி வருவதால்
இரண்டு ஒரே பொருள் என்பதால் ,ஒரே ஒற்றுமை உள்ளதால் சற்று நிதானமாகதான் பிடித்தேன்..
பிறகுதான் புரிந்தது மிக அருமையாக உள்ளதென்று..
ம்ம் என் வாழ்த்துக்கள்

சுகந்தப்ரீதன்
26-01-2008, 12:41 PM
ஆஹா.. ஆன்மீக கவிதையா..? இல்லை அஞ்ஞானம் போக்கும் கவிதையா..? எதுவானாலும் நன்றாக இருக்கிறது கவிதைக்கு எனது வாழ்த்துக்கள் நண்பரே..!

நாகரா
27-01-2008, 03:46 AM
அன்பர்களே! பாராட்டுகளுக்கு நன்றி. உம் ஒவ்வொருவரைப் பற்றியும் அமையும் மிக உயர்ந்த உண்மையையே இக்கவிதை சுட்டுவதால், உங்களையே நீங்கள் பாராட்டிக் கொண்டீர்! இதை இய்யுகத்தில் வாழ்ந்து காட்ட வழி காட்டும் வள்ளலாரின் வாக்குறுதிகளை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14284) தியானம் செய்யுங்கள்.

நாகரா
30-01-2008, 08:38 AM
மெய்யும் உயிரும் ஒன்றென உணர்ந்தால்
மெய்யாம் இறவா நிலை