பூமகள்
21-01-2008, 05:34 PM
பூங்கிளி கதை..!
எத்தனை பெரிய வீட்டில் வாடகைக்கு வசித்தாலும் சின்ன வீடானாலும் சொந்த வீட்டில் இருக்கும் சுகமே தனி தான். பதினான்கு ஆண்டுகால வாடகை வீட்டு சந்தோசமான வாழ்க்கைக்கு பின்பு சொந்த வீட்டில் என் பாதம் பட்டது. அந்த சந்தோசத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன்.
என்ன தான் வாடகை வீட்டில் சந்தோசமாய் இருந்தாலும், நமக்கென்று குட்டி குட்டி ஆசை இருக்கும். வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பது, பிடித்தமான செடிகள், மரங்கள் வளர்ப்பது, பிடித்தது போல் வீட்டின் வெளிப்புறத்தினை அழகு படுத்துவது இப்படி! எனக்கும் அத்தகைய வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சி மனத்தில் ஊற்றெடுக்கத் துவங்கியிருந்தது.
எங்க சொந்த வீட்டின் சற்று தொலைவில் தென்னந் தோப்பு இருக்கும். அதனால், தினமும் அதிகாலையிலும், மாலையிலும் கூட்டம் கூட்டமாக கிளிகள் பறந்து வானில் செல்லும். ஒவ்வொரு முறையும் வானம் பார்த்து ரசித்து ரசித்து கிளிகள் மேல் தீராத பாசம் உண்டானது.
அதே சந்தர்ப்பத்தில் கிராமத்துக்கு என் பாட்டி ஊருக்கு சென்ற எனக்கு, அங்கு எங்க ஒரு உறவினரின் வீட்டில் கையில் வைத்தே கிளி வளர்த்து, என் கைக்கு கொடுக்க, அது தன் சிவப்பான மூக்கு கொண்டு என் விரலைப் பற்றி ஏறி நின்று கொள்ள, அந்த குறுகுறுப்பும் ஊசி போன்ற மெலிதாக நகத்தின் குத்தும் என்னை சிலிர்க்க வைக்கத் துவங்கியது. அது கீ கீ என்று அழைத்து இயல்பாய் எல்லார் இடத்தும் வந்து ஒட்டிக் கொண்டது.
இந்தச் சம்பவம், ஊருக்கு நான் வந்த பின்பும் என்னை தூங்க விடாமல், கிளியினைச் சுற்றியே இருந்தது.
இப்போ கதைக்கு வருகிறேன். இயல்பாகவே, அதிகமாக இயற்கையில் ரசனை உள்ளவள் பூ என்பதால், அப்பாவிடம் அடம் பிடித்து கிளி வளர்க்க ஒப்புதல் வாங்கினேன்.
அப்பாவும், சண்டே மார்க்கெட் (சனி,ஞாயிறு கிழமைகளில் வரும் துணி, மற்றும் ஏனைய விற்பனை இடம்) அருகில் விற்று வந்த கிளியை வாங்கிவந்தார். அது சின்ன கூட்டில் ஒரு பச்சைப் பசேளென்ற ஒற்றைப் பச்சைக் கிளி. ஜோடியாய் கிடைக்க வில்லை என்று சொல்லி, ஒற்றைக் கிளியை வாங்கி வர, உடனே அருகில் இருப்பவர்கள், கிளி வளர்த்தால் வீட்டுக்கு ஆகாது..! என்று சோதிடம் பேச ஆரம்பித்திருந்தனர்.
பக்கத்து வீட்டு வாலுப்பசங்க அவங்களே முன் வந்து, ஒரு அழகான வீடு போன்ற பச்சை நிற பெயிண்ட் அடித்த கூண்டைத் தந்தார்கள். ஆங். மறந்துட்டேனே பச்சைக் கிளிக்கு பெயர் வைக்கும் விழா இனிதே நடந்தேறியது. சீனு! என்று பெயரிட்டோம்.. அது ஆண் கிளி என்ற நம்பிக்கையில்!
சீனுவுக்கு ஏனோ புதிய இடமாதலால் ஒரே கோபம்.. கையை கூண்டினுள் விட்டாலே. கடிக்க வந்தது. பின்பு வெளியே எப்படி வளர்க்க..?? ஒருவேளை அந்த கிளி விற்பவர் ரொம்ப கொடுமை செய்திருப்பாரோ என்னவோ!! எப்படியோ அந்த கூட்டிலிருந்து எடுத்து, பெரிய வீட்டுக்கு (பெரிய கூண்டிற்கு) குடி புகச் செய்தோம்.
அடுத்து சீனுக்கு என்னென்ன சாப்பிடக் கொடுக்கலாம்னு ஒரு பெரிய மீட்டிங் நடந்தது. யாரோ மிளகாய் பழம் கொடுத்தா கிளி பேசும் என்று சொல்ல. நாங்களும் அதை நம்பி.. நன்கு பழுத்த மிளகாயைத் தேடி குட்டி கிண்ணத்தில் போட்டு உள்ளே வைத்தோம்.. அவ்வளவு தான் அதை வந்து பார்த்து.. ஒரு கொத்து கொத்திட்டு.. ஏற்கனவே படு கோபத்தில் இருந்த சீனு. கோபம் உச்சிக்கு ஏறி.. .கூண்டின் இருபுறமும் நடந்து நடந்து கிண்ணத்தைத் தட்டி விட்டது.
சரி சீனுவுக்கு என்ன கொடுக்கலாம்னு யோசித்து.. கொய்யாப்பழத்தை சிறு துண்டுகளாக்கி முதலில் கிண்ணத்தில் போட்டோம். அப்புறம்.. நிலக்கடலை.. சீட் லெஸ் மாதுளை இப்படி நான் சாப்பிடும் எல்லாமும் அதற்கு பரிமாறப்பட்டது.. நான் சாப்பிடாட்டியும் அதுக்கு கொடுத்து வந்தேன் ஆனா சீனுவுக்கு எங்க குடும்பத்து மேல் இருந்த கோபம் மட்டும் குறையவே இல்லை. எங்களோடு பழகவுமில்லை.
எந்த இடத்தில் கூண்டினை மாட்டுவது என்று கேள்வி எழ எங்க வீட்டில் வெளிப்புறத்தில் ஒரு வராண்டா போல இருக்கும் இடத்தில் கதவின் அருகில் கட்டித் தொங்கவிட்டோம். கூண்டிலிருந்து சீனுவின் கழிவு உரமாக, மண்தரை அடியில் இருக்கும் இடத்தில் கூண்டினைப் பொருத்தினோம்.. அந்த மண் தரையில் தான் எங்க மினி கார்டனிங் ஆரம்பித்திருந்தோம். மருதாணி, எலுமிச்சை, ஜாதிமுல்லை, மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி, துளசி, லைன் கீரை, கற்பூரவல்லி இலை இப்படி பல.
இந்த களேபரங்கள் முடிய மாலை துவங்க ஆரம்பித்திருந்தது.
தென்னந்தோப்புகளுக்கு கூடு நோக்கித் திரும்பும் கிளிகள் வானில் கீ கீ..! என்று கத்திக் கொண்டு செல்ல.. கூண்டில் இருக்கும் சீனு படாத பாடு படும்.. வானைப் பார்த்து. இந்தப்பக்கமும் அந்தப் பக்கமும் ஓடி ஓடிச் சென்று அது படும் பாடு சொல்லி மாளாது. உள்ளே சாப்பிட வைத்திருக்கும் கிண்ணம் அதன் கால் தட்டி கவிழும். எல்லா உணவுப் பொருளும் மண் தரையில் விழும். இரவில் பூனைகளின் அட்டூழியம் தாங்காமல், தினமும் சீனுவினைப் பாதுக்காக்க, எங்க வீட்டில் உள்ள சமையல் அறையில் கூண்டினை எடுத்து வைத்துவிடுவோம்.
சீனு படும் அவஸ்தை என் மனதை உலுக்கி எடுத்தது. தினம் தினம் காலையும் மாலையும் இதே நிலை தொடர்ந்தது. அது இரவில் படு சோகமாய் அமர்ந்திருக்கும் நிலை பார்த்து (தூக்கத்தில் அப்படி இருக்கா துக்கத்தில் அப்படி இருக்கா என்று புரியாட்டியும்:confused::icon_ush:) ஏனோ.. அது அழுவது போல் தோன்ற.. எனக்கும் அழுகை முட்டிக் கொண்டு வரும்! அதன் கூடவே வெகுநேரம் அமர்ந்து நானும் அதன் சோகத்தில் பங்கெடுத்துக் கொள்வேன்.
ஒரு கிளியின் மனம் எனக்கு புரிய ஆரம்பித்திருந்தது. என் சீனு என்னோடு இருக்க வேண்டும் எப்போதும் என்ற எண்ணம் என்னில் மறையத்துவங்கியிருந்தது. அடுத்து, என் சீனுவின் சந்தோசம் எதுவென்று யோசிக்க ஆரம்பித்தேன். பறவைகளைக் கூண்டில் அடைப்பது எவ்வளவு பிழை என்று பலர் சொல்லக் கேட்டாலும், அனுபவத்தில் அறிந்து கொண்டேன். அடுத்து, என் வீடே.. சீனுவின் சந்தோசத்திற்கு வழி காண யோசிக்கலாயிற்று.
நானும் என் அண்ணனும் முதல் கட்டப் பணியை ஆரம்பித்திருந்தோம்.
சீனுவுக்கு பறக்கத் தெரியுமா?? என்று ஒரு கேள்வி எழுந்ததால்.. அப்போ அதனைச் சோதிக்க.. முன் அறையில் சீனுவினைக் கொண்டு வந்து எல்லா ஜன்னல்களையும் சாத்திவிட்டு, கூண்டினைத் திறந்தோம். அண்ணன் மெல்ல சீனுவினைப் பிடித்து மேல் நோக்கி விட அது சிறகுகள் அடிக்க அடிக்க மேலே செல்லாமல் கீழே வந்தது. புரிந்தது சீனுவுக்கு.. இறகுகள் வெட்டப்பட்டிருக்கு பறக்க போதுமானதாக இல்லை.. இதற்கிடையில் தற்காலிகமாய் விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில் எங்களிடம் ஏற்கனவே வெகு கோபமாய் இருந்த சீனு, பீரோ அடியில் சென்று ஒளிந்து கொண்டது. கையை விட்டால் என் அண்ணனுக்கு கடி மிச்சம்.. மீறி குச்சி விட்டால் வெளிவந்து.. கட்டிலின் அடியில் சென்றது நான், அண்ணா, அம்மா எல்லாரும் சேர்ந்து சீனுவைப் பிடித்து ஒருவழியாய் மீண்டும் கூண்டில் அடைத்தோம். வீரச் செயலில் வெற்றிவாகை சூடியவர் என் அண்ணா.
அடுத்த கட்ட நடவடிக்கை.
சீனுவுக்கு இறகு வளரும் வரை உணவிட்டு வளர்த்து, பறக்க பயிற்சி கொடுப்பது என்ற தீர்மானம் ஒரு மனதாக எங்க வீட்டில் எடுக்கப்பட்டது. இதற்கிடையில், சீனு படும் துயர் பார்த்து தினம் தினம் நான் அழுவது கண்டு, கிளி பாவம்.. வாங்காதேன்னு சொன்னா கேட்குறாளா பூவு.. இப்ப சீனு சோகத்தைப் பார்த்து உட்காந்துட்டு அழுகை வேறு இப்படி சரமாரியாக வசை மொழி நான் வாங்க, கிளி பிடிப்பவரிடமிருந்து காப்பாத்தினேனே. நான் பத்திரமா தானே வச்சிருக்கேன் என்று சொல்லி அம்மாவிடம் என் தன்னிலை விளக்கம் கொடுத்தேன்.
ஒரு மாத காலம் இந்த நிலை. இதற்குள்.. சீனு நல்ல புஸ்டியாய் ஆனதோடு மட்டுமல்லாமல் சிறகுகளும் வளர்ந்திருந்தது. ஒரு நாள் காலை, நான் பள்ளிக்குச் செல்ல ஆயுத்தமாகிக் கொண்டிருக்க என் அண்ணா சாப்பிட்டு முடித்து வெளிவர, சீனு வழக்கம் போல், மேலே சென்ற கிளிக்கூட்டம் கண்டு தாவித் தாவி ஓட ஆரம்பித்து கீ கீ என்று உச்ச சாயலில் தனது ஏக்கத்தையும் வருத்தத்தையும் சொல்லி அந்த கிளிக்கூட்டத்தை தன் புறம் அழைக்க
அப்போ தான் நடந்தது அந்த அற்புத நிகழ்வு....:icon_b:
ஆம் என் அண்ணா என் சீனுவுக்கு விடுதலை கொடுத்திருந்தார். பல நாள் பயிற்சி பெற்ற சீனு இறகுகள் அடித்து வெகு வேகமாய் மேலே எழும்பிச் சென்று கிளிக்கூட்டத்தோடு இணைந்து V வடிவ கூட்டத்தில் இரு முனையில் ஒரு முனைக்குச் சென்று பறக்கலாயிற்று.
ஒரு மிகப் பெரும் மகிழ்ச்சி என் மனதில் அன்று தோன்றியது. சீனு எங்களிடம் அன்பு மட்டும் காட்டவேயில்லை என்றாலும், இன்றும் அதன் நினைவாக சீனு விட்டுச் சென்றவை அற்புதமானவை.
சீனுவுக்காக நாங்கள் கொடுத்த உணவுப்பொருட்களான, நிலக்கடலை, மாதுளை போன்றவை சீனு கூண்டினுள் ஓடி ஓடி கிண்ணத்தைத் தட்டி விட்டதால், கீழே விழுந்து மண்ணில் முளைத்தன.
நிலக்கடலை விளைந்து நிறைய கடலை கொடுத்தது. மாதுளை மரமாய் வளர்ந்து பல சுவையான மாதுளங்கனிகளை எங்களுக்கு வழங்கியது. மாதுளை மரத்தினைத் தடவிக் கொடுக்கையில், சீனுவினை தடவிக் கொடுப்பது போன்ற ஒரு பிரமை மனதில் வந்து போகும். அதன் கனிகளைச் சுவைக்கையில், வெகு அழகான என் சீனுவின் முகம் என் கண் முன் நிழலாடுகிறது. இப்போது என் கவலையும் வேண்டுதலும், என் சீனு நல்ல படியாய் சுதந்திரமாய் இருந்து, எந்த துப்பாக்கிக்கும், வேட்டையருக்கும் சிக்காமல் சந்தோசமாய் இருக்க வேண்டுமென்பதே! :icon_ush::traurig001:
எத்தனை பெரிய வீட்டில் வாடகைக்கு வசித்தாலும் சின்ன வீடானாலும் சொந்த வீட்டில் இருக்கும் சுகமே தனி தான். பதினான்கு ஆண்டுகால வாடகை வீட்டு சந்தோசமான வாழ்க்கைக்கு பின்பு சொந்த வீட்டில் என் பாதம் பட்டது. அந்த சந்தோசத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. அப்போது நான் ஒன்பதாம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன்.
என்ன தான் வாடகை வீட்டில் சந்தோசமாய் இருந்தாலும், நமக்கென்று குட்டி குட்டி ஆசை இருக்கும். வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பது, பிடித்தமான செடிகள், மரங்கள் வளர்ப்பது, பிடித்தது போல் வீட்டின் வெளிப்புறத்தினை அழகு படுத்துவது இப்படி! எனக்கும் அத்தகைய வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சி மனத்தில் ஊற்றெடுக்கத் துவங்கியிருந்தது.
எங்க சொந்த வீட்டின் சற்று தொலைவில் தென்னந் தோப்பு இருக்கும். அதனால், தினமும் அதிகாலையிலும், மாலையிலும் கூட்டம் கூட்டமாக கிளிகள் பறந்து வானில் செல்லும். ஒவ்வொரு முறையும் வானம் பார்த்து ரசித்து ரசித்து கிளிகள் மேல் தீராத பாசம் உண்டானது.
அதே சந்தர்ப்பத்தில் கிராமத்துக்கு என் பாட்டி ஊருக்கு சென்ற எனக்கு, அங்கு எங்க ஒரு உறவினரின் வீட்டில் கையில் வைத்தே கிளி வளர்த்து, என் கைக்கு கொடுக்க, அது தன் சிவப்பான மூக்கு கொண்டு என் விரலைப் பற்றி ஏறி நின்று கொள்ள, அந்த குறுகுறுப்பும் ஊசி போன்ற மெலிதாக நகத்தின் குத்தும் என்னை சிலிர்க்க வைக்கத் துவங்கியது. அது கீ கீ என்று அழைத்து இயல்பாய் எல்லார் இடத்தும் வந்து ஒட்டிக் கொண்டது.
இந்தச் சம்பவம், ஊருக்கு நான் வந்த பின்பும் என்னை தூங்க விடாமல், கிளியினைச் சுற்றியே இருந்தது.
இப்போ கதைக்கு வருகிறேன். இயல்பாகவே, அதிகமாக இயற்கையில் ரசனை உள்ளவள் பூ என்பதால், அப்பாவிடம் அடம் பிடித்து கிளி வளர்க்க ஒப்புதல் வாங்கினேன்.
அப்பாவும், சண்டே மார்க்கெட் (சனி,ஞாயிறு கிழமைகளில் வரும் துணி, மற்றும் ஏனைய விற்பனை இடம்) அருகில் விற்று வந்த கிளியை வாங்கிவந்தார். அது சின்ன கூட்டில் ஒரு பச்சைப் பசேளென்ற ஒற்றைப் பச்சைக் கிளி. ஜோடியாய் கிடைக்க வில்லை என்று சொல்லி, ஒற்றைக் கிளியை வாங்கி வர, உடனே அருகில் இருப்பவர்கள், கிளி வளர்த்தால் வீட்டுக்கு ஆகாது..! என்று சோதிடம் பேச ஆரம்பித்திருந்தனர்.
பக்கத்து வீட்டு வாலுப்பசங்க அவங்களே முன் வந்து, ஒரு அழகான வீடு போன்ற பச்சை நிற பெயிண்ட் அடித்த கூண்டைத் தந்தார்கள். ஆங். மறந்துட்டேனே பச்சைக் கிளிக்கு பெயர் வைக்கும் விழா இனிதே நடந்தேறியது. சீனு! என்று பெயரிட்டோம்.. அது ஆண் கிளி என்ற நம்பிக்கையில்!
சீனுவுக்கு ஏனோ புதிய இடமாதலால் ஒரே கோபம்.. கையை கூண்டினுள் விட்டாலே. கடிக்க வந்தது. பின்பு வெளியே எப்படி வளர்க்க..?? ஒருவேளை அந்த கிளி விற்பவர் ரொம்ப கொடுமை செய்திருப்பாரோ என்னவோ!! எப்படியோ அந்த கூட்டிலிருந்து எடுத்து, பெரிய வீட்டுக்கு (பெரிய கூண்டிற்கு) குடி புகச் செய்தோம்.
அடுத்து சீனுக்கு என்னென்ன சாப்பிடக் கொடுக்கலாம்னு ஒரு பெரிய மீட்டிங் நடந்தது. யாரோ மிளகாய் பழம் கொடுத்தா கிளி பேசும் என்று சொல்ல. நாங்களும் அதை நம்பி.. நன்கு பழுத்த மிளகாயைத் தேடி குட்டி கிண்ணத்தில் போட்டு உள்ளே வைத்தோம்.. அவ்வளவு தான் அதை வந்து பார்த்து.. ஒரு கொத்து கொத்திட்டு.. ஏற்கனவே படு கோபத்தில் இருந்த சீனு. கோபம் உச்சிக்கு ஏறி.. .கூண்டின் இருபுறமும் நடந்து நடந்து கிண்ணத்தைத் தட்டி விட்டது.
சரி சீனுவுக்கு என்ன கொடுக்கலாம்னு யோசித்து.. கொய்யாப்பழத்தை சிறு துண்டுகளாக்கி முதலில் கிண்ணத்தில் போட்டோம். அப்புறம்.. நிலக்கடலை.. சீட் லெஸ் மாதுளை இப்படி நான் சாப்பிடும் எல்லாமும் அதற்கு பரிமாறப்பட்டது.. நான் சாப்பிடாட்டியும் அதுக்கு கொடுத்து வந்தேன் ஆனா சீனுவுக்கு எங்க குடும்பத்து மேல் இருந்த கோபம் மட்டும் குறையவே இல்லை. எங்களோடு பழகவுமில்லை.
எந்த இடத்தில் கூண்டினை மாட்டுவது என்று கேள்வி எழ எங்க வீட்டில் வெளிப்புறத்தில் ஒரு வராண்டா போல இருக்கும் இடத்தில் கதவின் அருகில் கட்டித் தொங்கவிட்டோம். கூண்டிலிருந்து சீனுவின் கழிவு உரமாக, மண்தரை அடியில் இருக்கும் இடத்தில் கூண்டினைப் பொருத்தினோம்.. அந்த மண் தரையில் தான் எங்க மினி கார்டனிங் ஆரம்பித்திருந்தோம். மருதாணி, எலுமிச்சை, ஜாதிமுல்லை, மல்லிகை, கனகாம்பரம், செவ்வந்தி, துளசி, லைன் கீரை, கற்பூரவல்லி இலை இப்படி பல.
இந்த களேபரங்கள் முடிய மாலை துவங்க ஆரம்பித்திருந்தது.
தென்னந்தோப்புகளுக்கு கூடு நோக்கித் திரும்பும் கிளிகள் வானில் கீ கீ..! என்று கத்திக் கொண்டு செல்ல.. கூண்டில் இருக்கும் சீனு படாத பாடு படும்.. வானைப் பார்த்து. இந்தப்பக்கமும் அந்தப் பக்கமும் ஓடி ஓடிச் சென்று அது படும் பாடு சொல்லி மாளாது. உள்ளே சாப்பிட வைத்திருக்கும் கிண்ணம் அதன் கால் தட்டி கவிழும். எல்லா உணவுப் பொருளும் மண் தரையில் விழும். இரவில் பூனைகளின் அட்டூழியம் தாங்காமல், தினமும் சீனுவினைப் பாதுக்காக்க, எங்க வீட்டில் உள்ள சமையல் அறையில் கூண்டினை எடுத்து வைத்துவிடுவோம்.
சீனு படும் அவஸ்தை என் மனதை உலுக்கி எடுத்தது. தினம் தினம் காலையும் மாலையும் இதே நிலை தொடர்ந்தது. அது இரவில் படு சோகமாய் அமர்ந்திருக்கும் நிலை பார்த்து (தூக்கத்தில் அப்படி இருக்கா துக்கத்தில் அப்படி இருக்கா என்று புரியாட்டியும்:confused::icon_ush:) ஏனோ.. அது அழுவது போல் தோன்ற.. எனக்கும் அழுகை முட்டிக் கொண்டு வரும்! அதன் கூடவே வெகுநேரம் அமர்ந்து நானும் அதன் சோகத்தில் பங்கெடுத்துக் கொள்வேன்.
ஒரு கிளியின் மனம் எனக்கு புரிய ஆரம்பித்திருந்தது. என் சீனு என்னோடு இருக்க வேண்டும் எப்போதும் என்ற எண்ணம் என்னில் மறையத்துவங்கியிருந்தது. அடுத்து, என் சீனுவின் சந்தோசம் எதுவென்று யோசிக்க ஆரம்பித்தேன். பறவைகளைக் கூண்டில் அடைப்பது எவ்வளவு பிழை என்று பலர் சொல்லக் கேட்டாலும், அனுபவத்தில் அறிந்து கொண்டேன். அடுத்து, என் வீடே.. சீனுவின் சந்தோசத்திற்கு வழி காண யோசிக்கலாயிற்று.
நானும் என் அண்ணனும் முதல் கட்டப் பணியை ஆரம்பித்திருந்தோம்.
சீனுவுக்கு பறக்கத் தெரியுமா?? என்று ஒரு கேள்வி எழுந்ததால்.. அப்போ அதனைச் சோதிக்க.. முன் அறையில் சீனுவினைக் கொண்டு வந்து எல்லா ஜன்னல்களையும் சாத்திவிட்டு, கூண்டினைத் திறந்தோம். அண்ணன் மெல்ல சீனுவினைப் பிடித்து மேல் நோக்கி விட அது சிறகுகள் அடிக்க அடிக்க மேலே செல்லாமல் கீழே வந்தது. புரிந்தது சீனுவுக்கு.. இறகுகள் வெட்டப்பட்டிருக்கு பறக்க போதுமானதாக இல்லை.. இதற்கிடையில் தற்காலிகமாய் விடுதலை கிடைத்த மகிழ்ச்சியில் எங்களிடம் ஏற்கனவே வெகு கோபமாய் இருந்த சீனு, பீரோ அடியில் சென்று ஒளிந்து கொண்டது. கையை விட்டால் என் அண்ணனுக்கு கடி மிச்சம்.. மீறி குச்சி விட்டால் வெளிவந்து.. கட்டிலின் அடியில் சென்றது நான், அண்ணா, அம்மா எல்லாரும் சேர்ந்து சீனுவைப் பிடித்து ஒருவழியாய் மீண்டும் கூண்டில் அடைத்தோம். வீரச் செயலில் வெற்றிவாகை சூடியவர் என் அண்ணா.
அடுத்த கட்ட நடவடிக்கை.
சீனுவுக்கு இறகு வளரும் வரை உணவிட்டு வளர்த்து, பறக்க பயிற்சி கொடுப்பது என்ற தீர்மானம் ஒரு மனதாக எங்க வீட்டில் எடுக்கப்பட்டது. இதற்கிடையில், சீனு படும் துயர் பார்த்து தினம் தினம் நான் அழுவது கண்டு, கிளி பாவம்.. வாங்காதேன்னு சொன்னா கேட்குறாளா பூவு.. இப்ப சீனு சோகத்தைப் பார்த்து உட்காந்துட்டு அழுகை வேறு இப்படி சரமாரியாக வசை மொழி நான் வாங்க, கிளி பிடிப்பவரிடமிருந்து காப்பாத்தினேனே. நான் பத்திரமா தானே வச்சிருக்கேன் என்று சொல்லி அம்மாவிடம் என் தன்னிலை விளக்கம் கொடுத்தேன்.
ஒரு மாத காலம் இந்த நிலை. இதற்குள்.. சீனு நல்ல புஸ்டியாய் ஆனதோடு மட்டுமல்லாமல் சிறகுகளும் வளர்ந்திருந்தது. ஒரு நாள் காலை, நான் பள்ளிக்குச் செல்ல ஆயுத்தமாகிக் கொண்டிருக்க என் அண்ணா சாப்பிட்டு முடித்து வெளிவர, சீனு வழக்கம் போல், மேலே சென்ற கிளிக்கூட்டம் கண்டு தாவித் தாவி ஓட ஆரம்பித்து கீ கீ என்று உச்ச சாயலில் தனது ஏக்கத்தையும் வருத்தத்தையும் சொல்லி அந்த கிளிக்கூட்டத்தை தன் புறம் அழைக்க
அப்போ தான் நடந்தது அந்த அற்புத நிகழ்வு....:icon_b:
ஆம் என் அண்ணா என் சீனுவுக்கு விடுதலை கொடுத்திருந்தார். பல நாள் பயிற்சி பெற்ற சீனு இறகுகள் அடித்து வெகு வேகமாய் மேலே எழும்பிச் சென்று கிளிக்கூட்டத்தோடு இணைந்து V வடிவ கூட்டத்தில் இரு முனையில் ஒரு முனைக்குச் சென்று பறக்கலாயிற்று.
ஒரு மிகப் பெரும் மகிழ்ச்சி என் மனதில் அன்று தோன்றியது. சீனு எங்களிடம் அன்பு மட்டும் காட்டவேயில்லை என்றாலும், இன்றும் அதன் நினைவாக சீனு விட்டுச் சென்றவை அற்புதமானவை.
சீனுவுக்காக நாங்கள் கொடுத்த உணவுப்பொருட்களான, நிலக்கடலை, மாதுளை போன்றவை சீனு கூண்டினுள் ஓடி ஓடி கிண்ணத்தைத் தட்டி விட்டதால், கீழே விழுந்து மண்ணில் முளைத்தன.
நிலக்கடலை விளைந்து நிறைய கடலை கொடுத்தது. மாதுளை மரமாய் வளர்ந்து பல சுவையான மாதுளங்கனிகளை எங்களுக்கு வழங்கியது. மாதுளை மரத்தினைத் தடவிக் கொடுக்கையில், சீனுவினை தடவிக் கொடுப்பது போன்ற ஒரு பிரமை மனதில் வந்து போகும். அதன் கனிகளைச் சுவைக்கையில், வெகு அழகான என் சீனுவின் முகம் என் கண் முன் நிழலாடுகிறது. இப்போது என் கவலையும் வேண்டுதலும், என் சீனு நல்ல படியாய் சுதந்திரமாய் இருந்து, எந்த துப்பாக்கிக்கும், வேட்டையருக்கும் சிக்காமல் சந்தோசமாய் இருக்க வேண்டுமென்பதே! :icon_ush::traurig001: