PDA

View Full Version : மொழியானவளே..!



யாழ்_அகத்தியன்
12-01-2008, 01:57 PM
நான் - உறக்கம்
நீ - கனவு

உன் வரவுக்காகவே
விடிய விடியத்
தூங்குவேன்

*
என்னைத் தொலைக்காமல்
உன்னைத் தேடினேன்
என்பதில் பெருமை எனக்கு

என்னை நான் தேடவே நீ
கிடைத்தாய் என்பதில்
பெருமை உனக்கு

*

என் சொந்தங்களில் நான்தான்
முதல் கவிவாசகன் என்பதில்
சிறியகவலை எனக்கு

இதுவரை யாருமே உன்னை
பார்த்து யார் எழுதியது என்று
விசாரித்ததில்லையே

*
உன் தாயைப்போல்
என் நேரமும்
உன்னைக் கவனிக்க
என்னால்
முடியாமல் போனாலும்

உன்னைக்
காணத நேரங்களில்
தாயாக நான் ஏங்கித்
தவிப்பதுண்டு

*
உனக்காக காத்திருந்தால்
என் கால்கள் வலிப்பதில்லை

என் மனசு ஏறி நிற்பதால்
என் தலைதான் வலிக்கும்

-யாழ்_அகத்தியன்

பூமகள்
12-01-2008, 02:44 PM
உனக்காக காத்திருந்தால்
என் கால்கள் வலிப்பதில்லை

என் மனசு ஏறி நிற்பதால்
என் தலைதான் வலிக்கும்.
ரொம்பவும் அழகான வரிகள் அகத்தியரே..!
அசத்திட்டீங்க..! :icon_b:

விரைந்து வரட்டும் காதலியும்... போகட்டும் தலை வலியும்..!!:)

அறிஞர்
12-01-2008, 04:59 PM
உன்னைக்
காணத நேரங்களில்
தாயாக நான் ஏங்கித்
தவிப்பதுண்டு

*
உனக்காக காத்திருந்தால்
என் கால்கள் வலிப்பதில்லை

என் மனசு ஏறி நிற்பதால்
என் தலைதான் வலிக்கும்

-யாழ்_அகத்தியன்மொழியானவளுக்கு
சித்தரித்த மொழிகள்.. அருமை... அன்பரே..

ஆர்.ஈஸ்வரன்
13-01-2008, 10:25 AM
[QUOTE=யாழ்_அகத்தியன்;316201]நான் - உறக்கம்
நீ - கனவு




என் மனசு ஏறி நிற்பதால்
என் தலைதான் வலிக்கும்

விரைவில் தலைவலி இப்புத்தாண்டில் குணமாகும்.