ஆதி
10-01-2008, 11:18 AM
அதரம் பலுக்கிய அகரம்
ஆறாம் வகுப்பில் அனைவரும் ஆறுதன் வரலாறு கூறுதல் படித்துக் கொண்டிருந்த அதே தருணத்தில்தான் அ.., ஆ.. கற்க ஆரம்பித்தேன் நான்.
என் தந்தை மத்திய அரசு நிறுவணத்தில் பணியாற்றுவதால், நான் ஐந்தாம் வகுப்பு வரை மத்திய அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அதுவும் ஆங்கிலம் தவிர மற்றப் பாடங்கள் அனைத்தும் ஹிந்தியில்தான் இருக்கும்.
என் பால்யம் ஹிந்தி எழுத்துக்களில் சிக்கி கிடந்தது, என் நண்பர்களில் பெரும்பாலோர் வட இந்தியர் என்பதால் தமிழ் நான் வீட்டில் பேசப் பயன்படுத்தும் மொழியாக மட்டுமே இருந்தது.
மொழிப்பாடத்திலும் நான் ஹிந்தியில்தான் நிறையப் மதிப்பெண் எடுப்பேன், ஹிந்தியில் நான் அதிக மதிப்பெண் பெருவதை நான் என் பெற்றவர்களுக்கு தேடித்தரும் பெருமையாக எண்ணினேன்.
இப்படி தமிழின் அறிமுகம் இல்லாமல் பயணித்துக் கொண்டிருந்தக் காலத்தில், ஐதாம் வகுப்பு விடுமுறையில் எங்கள் சொந்த ஊர்க்கு சென்றோம்.
என் பெரியப்பா, ஒரு ஆசிரியர், அவருக்குதான் நான் மிகவும் அஞ்சுவேன், அவர் என்னை அடித்ததே இல்லை, இருந்தாலும் இன்றும் அவரிடம் பேசும் போதும் என் தொண்டைக்குழிகள் தான் வார்த்தைகளை உச்சரிக்கும் அவ்வளவு மரியாதை அவர் மீது எனக்கு.
நான் அதிகம் சேட்டை செய்யும் வால்பையன் என்பதால், என்னை அடக்க அவர் ஒரு யுக்தி வைத்திருந்தார், என்னவெனில் அவர் சொல்லும் பாடங்களைப் படித்து எழுதிக்காட்டுவதுதான். ஆங்கிலம்தான் பெரும்பாலும் எழுத வைப்பார். அந்த விடுமுறையில் என் பெயரை தமிழில் எழுதச் சொன்னார், மொழி தெரியாத ஊரில் பேசத் தெரிந்தவனும் ஊமை என்பதுப் போல், பெப்ப பெப்ப என முழிக்க ஆரம்பித்தேன்..
"தாய் மொழியில் பெயர் எழுதத் தெரியாத அளவுக்கு ஊஊர்ல இல்லாதப் பிள்ளைய வளது வச்சுருகீங்க" என எந்தைக்கும் தாய்க்கும் விழுந்த வசையின் பயனாய். தமிழை மொழிப்பாடமாய்க் கொண்ட மற்றொருப்பள்ளிக்கு மற்றப் பட்டேன் அந்த வருடம்..
புதியப் பள்ளி, புனித வள்ளனார்ப் பள்ளி, புது மாணவனாய் புதியப் பள்ளிச் சீருடையுடன், புத்தம் புது பூவாய் பூத்தேன் அங்கே. என் பெயர் என்ன ?, எந்தப் பள்ளியில் இதற்கு முன் படித்தேன் ?, என உசாவும் ஆவலில் என் புதிய நண்பர்கள் என்னை சூழ. ஒரே பதிலையே அனைவருக்கம் திரும்ப திரும்பச் சொல்லி குரல்வளை வறண்ட முதல் நாளை என்னால் மறக்க முடியாது..
அந்த நாள் என் வாழ்வில் ஒரு இறுக்கமான நாள், என் மனதில் நெருப்பு துளிகளை உதறிப்போன நாள், பழைய நண்பர்களை பிரிந்த சோகமும் புதிய இடத்தில், புதியவர்களிடம் நான் கடைப்பிடித்த தூரமும், என்னுள் தனிமையையும், எனக்கென இந்த உலகில் யாருமில்லை என்கிற அர்த்தமற்ற வெறுமையையும் கொட்டிப்போன நாள்..
என் இறுக்கங்களை குறைத்துக் கொண்டு மற்றவர்களுடன் நெருக்கங்கள் கொள்ள துவங்கியப் பொழுதுதான், துவங்கியது ஆறு தன் வரலாறு கூறுதல் பாடம். முதல் பாடம் என என் தமிழ் ஆசிரியைச் சொன்னக் காரணத்தால், தமிழ் நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைத் திறந்துவைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன், என் விழிகள் வினோதமானப் பொருட்களைப் பார்ப்பதுப் போல தமிழ் எழுத்துக்களைப் பார்த்துக் கொண்டிருந்தன..
தொடரும்..
ஆறாம் வகுப்பில் அனைவரும் ஆறுதன் வரலாறு கூறுதல் படித்துக் கொண்டிருந்த அதே தருணத்தில்தான் அ.., ஆ.. கற்க ஆரம்பித்தேன் நான்.
என் தந்தை மத்திய அரசு நிறுவணத்தில் பணியாற்றுவதால், நான் ஐந்தாம் வகுப்பு வரை மத்திய அரசுப் பள்ளியில்தான் படித்தேன். அதுவும் ஆங்கிலம் தவிர மற்றப் பாடங்கள் அனைத்தும் ஹிந்தியில்தான் இருக்கும்.
என் பால்யம் ஹிந்தி எழுத்துக்களில் சிக்கி கிடந்தது, என் நண்பர்களில் பெரும்பாலோர் வட இந்தியர் என்பதால் தமிழ் நான் வீட்டில் பேசப் பயன்படுத்தும் மொழியாக மட்டுமே இருந்தது.
மொழிப்பாடத்திலும் நான் ஹிந்தியில்தான் நிறையப் மதிப்பெண் எடுப்பேன், ஹிந்தியில் நான் அதிக மதிப்பெண் பெருவதை நான் என் பெற்றவர்களுக்கு தேடித்தரும் பெருமையாக எண்ணினேன்.
இப்படி தமிழின் அறிமுகம் இல்லாமல் பயணித்துக் கொண்டிருந்தக் காலத்தில், ஐதாம் வகுப்பு விடுமுறையில் எங்கள் சொந்த ஊர்க்கு சென்றோம்.
என் பெரியப்பா, ஒரு ஆசிரியர், அவருக்குதான் நான் மிகவும் அஞ்சுவேன், அவர் என்னை அடித்ததே இல்லை, இருந்தாலும் இன்றும் அவரிடம் பேசும் போதும் என் தொண்டைக்குழிகள் தான் வார்த்தைகளை உச்சரிக்கும் அவ்வளவு மரியாதை அவர் மீது எனக்கு.
நான் அதிகம் சேட்டை செய்யும் வால்பையன் என்பதால், என்னை அடக்க அவர் ஒரு யுக்தி வைத்திருந்தார், என்னவெனில் அவர் சொல்லும் பாடங்களைப் படித்து எழுதிக்காட்டுவதுதான். ஆங்கிலம்தான் பெரும்பாலும் எழுத வைப்பார். அந்த விடுமுறையில் என் பெயரை தமிழில் எழுதச் சொன்னார், மொழி தெரியாத ஊரில் பேசத் தெரிந்தவனும் ஊமை என்பதுப் போல், பெப்ப பெப்ப என முழிக்க ஆரம்பித்தேன்..
"தாய் மொழியில் பெயர் எழுதத் தெரியாத அளவுக்கு ஊஊர்ல இல்லாதப் பிள்ளைய வளது வச்சுருகீங்க" என எந்தைக்கும் தாய்க்கும் விழுந்த வசையின் பயனாய். தமிழை மொழிப்பாடமாய்க் கொண்ட மற்றொருப்பள்ளிக்கு மற்றப் பட்டேன் அந்த வருடம்..
புதியப் பள்ளி, புனித வள்ளனார்ப் பள்ளி, புது மாணவனாய் புதியப் பள்ளிச் சீருடையுடன், புத்தம் புது பூவாய் பூத்தேன் அங்கே. என் பெயர் என்ன ?, எந்தப் பள்ளியில் இதற்கு முன் படித்தேன் ?, என உசாவும் ஆவலில் என் புதிய நண்பர்கள் என்னை சூழ. ஒரே பதிலையே அனைவருக்கம் திரும்ப திரும்பச் சொல்லி குரல்வளை வறண்ட முதல் நாளை என்னால் மறக்க முடியாது..
அந்த நாள் என் வாழ்வில் ஒரு இறுக்கமான நாள், என் மனதில் நெருப்பு துளிகளை உதறிப்போன நாள், பழைய நண்பர்களை பிரிந்த சோகமும் புதிய இடத்தில், புதியவர்களிடம் நான் கடைப்பிடித்த தூரமும், என்னுள் தனிமையையும், எனக்கென இந்த உலகில் யாருமில்லை என்கிற அர்த்தமற்ற வெறுமையையும் கொட்டிப்போன நாள்..
என் இறுக்கங்களை குறைத்துக் கொண்டு மற்றவர்களுடன் நெருக்கங்கள் கொள்ள துவங்கியப் பொழுதுதான், துவங்கியது ஆறு தன் வரலாறு கூறுதல் பாடம். முதல் பாடம் என என் தமிழ் ஆசிரியைச் சொன்னக் காரணத்தால், தமிழ் நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைத் திறந்துவைத்துக் கொண்டு அமர்ந்திருந்தேன், என் விழிகள் வினோதமானப் பொருட்களைப் பார்ப்பதுப் போல தமிழ் எழுத்துக்களைப் பார்த்துக் கொண்டிருந்தன..
தொடரும்..