lolluvathiyar
10-01-2008, 05:46 AM
3000 குடிசைக்கு திவைத்த லொள்ளுவாத்தியார்
(முன்னமே பதித்தது அழின்து விட்டதால் ம்மறுபடியும் 3000 எட்டும்போது பதிகிறேன்)
முனுக் முனுகுனு இருந்துகிட்டு 300 குடிசைக்கு திவைப்பான் என்று அப்பாவியாக நடிப்பவனை சொல்வார்கள். அது போல தான் முனுக் முனுக்னு இருந்துகிட்டு 3000 குடிசைக்கு திவைத்து விட்டார் லொள்ளுவாத்தியார் என்று யாரோ முனுமுனுப்பது தெரிகிறது. அதென்ன 3000 குடிசை, அது வெறுன்னுமில்லீங்க 3000 பதிப்பு, அத தான் அப்படி சொல்லறேன். ஆம் இது என் 3000 ஆவது படைப்பு.
முதல் 1000 பதிப்புகள் என்னை ஒரு சிலருக்கு மட்டுமே அறிமுகபடுத்தியது. அதுவும் குறிபிட்ட முத்திரை குத்தபட்டு அறிமுகபடுத்தியது. அந்த சமயத்தில் நான் அதிகமாக விவாதங்களில் மட்டுமே பங்கு பெற்று கொண்டிருந்தேன். மன்றத்தை பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடியாமல் தவித்து கொண்டிருந்தேன். ஆனால் மன்றம் என்னை அறிந்து கொண்டது. சில சமயங்களில் விதிமுரை மீரல்கள் செய்து கொட்டு வாங்கி கொண்டேன்.
அடுத்த 2000 எட்டுவதற்குள் பதிவுக்குள் நான் கலாய்பு பகிதியில் பங்கு பெற ஆரம்பித்தேன். குறிப்பாக அரசியல் கலத்தில் பங்கு பெற்று நிரைய பேருடன் நட்பானேன். இந்த முரை மன்றம் பற்றி நன்றாகவே அறிந்து கொண்டு அதற்க்கு தகுந்தார் போல என்னை மாற்றி கொண்டேன். இந்த முரை கொட்டும் வாங்கவில்லை. அதே சமயம் முகம் சுழிக்கும் படைப்புகள் எதுவும் பதிக்கவில்லை.
இந்த 2000 - 3000 பதிவுகளில்தான் நான் மன்றத்தில் பல இடங்களில் சுற்ற ஆரம்பித்தேன். கதைகள் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் கவிதையை மறந்து விட்டேன். கொஞ்ச பிழைகள் குரைந்து விட்டது. இந்த 1000 பதிவுகல் மன்றத்தில் சாதர்ன லொள்ளுவாத்தியாராக இருந்த என்னை மாவீரன் லொள்ளுவாத்தியாராகவே மாற்றி விட்டது என்று சொல்லலாம். அதன் மூலம் எனனிடம் நிரைய பேர் பழக ஆரம்பித்து விட்டார்கள். இந்த சமயத்தில் மன்றத்தில் விவாதங்களும் குரைந்து விட்டது. கிருக்கு பட்டம் ஆ பத்து கேள்வி போன்ற அருமை திரி ஆரம்பிக்க பட்டு பிறகு ஏனோ தூங்கி விட்டது கவலையளிக்கிறது. இந்த முரை திரிகள் பூட்டபடுவது குரைந்து விட்டது மகிழ்சி அளிகிறது. கடந்த இரு மாதமாக உருப்பினர்கள் என்னிக்கையும் அதிகரித்தது போல் தெரிகிறது.
மன்றத்தில் கூட நிரைய மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது வரவேற்க்க கூடியது. தமிழ்மன்றம் பற்றிய என்னுடைய ஆலோசனைகள் சிலவற்றை முன்வைக்க விரும்புகிறேன்.
குறிப்பாக உருப்பினர்கள் கலந்து கொள்ளும் விதம் பற்றி சொல்லியாக வேண்டும்.
நம் மன்றத்தில் நிரைய உருப்பினர்கள் கலாய்ப்பு பகுதியில்தான் அதிக நாட்டம் காட்டுகிறார்கள். அதில் தவறில்லை, ஆனால் கலாய்ப்பு ஓவராக இருக்க கூடாது. சம்மந்தமில்லாமல் திசை மாரி திரி பக்கம் பக்கமாக வளர கூடாது அல்லவா. முடிந்த வரையில் ஒரு வரி பதிப்புகளை குரைக்கலாமே. அதே போல அடுத்தது கவிதை பக்கம் சுருசுருப்பாக இயங்குகிறது. ஆனால் இலக்கியம், மருத்துவம் ஆன்மீகம் பயனுள்ள தகவல்கள் எல்லாம் சுருசுருப்பில்லாமல் இருக்கிறது. நானும் அந்த பக்கம் போவதில்லை என்பதையும் ஏற்று கொள்கிறேன்.
நமது மன்றம் தமிழ் மன்றம் (கலாய்ப்பு மன்றம் அல்லது கவிதை மன்றம் அல்ல). அதனால் மன்ற உருப்பினர்கள் (என்னையும் சேர்த்து) சில மாற்றங்களை ஏற்படுத்துவோம். அப்பப்ப மற்ற ஏரியாகளையும் ஒரு ரவுண்ட் வந்து பங்களிப்பவர்களை ஊக்குவிப்போம். அந்த பகுதியில் படைப்பவர்கள் உழைப்பு அதிகம். நாமும் அங்கு படைப்புகளை அதிக படுத்த வேண்டும். யவனிகாவின் ஜாலியா இளைக்கலாம் வாங்க போன்ற நகைசுவை கலந்த அதே சமயம் ஆக்கபூர்வமான படைப்புகள் ஆன்மீக பகுதி உட்பட கொடுக்க வேண்டும். அதே சமயம் ஆன்மீகம் மருத்துவம் பகுதியில் படைப்பவர்கள் சொந்த படைப்புகளை மட்டுமே பதிக்குமாரும் கேட்டு கொள்கிறேன். சாம்ந்தி மன்றத்தை நல்ல பல அறிய தகவல்களால் நிரப்புவோம்.
அடுத்தது நம் மன்றத்தில் சிலருக்கு கோட் பன்னுவதை சரியாக கடைபிடிப்பதில்லை. முழு டெக்ஸ்டையும் கோட் செய்து விடுகிறார்கள். அதை குரைக்க வேண்டும். பதிவில் குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் கோட் செய்து கருத்து சொல்லலாம். அதுவும் ஒருவர் பதிவுக்கு நேர் அடுத்த பதிவு பதிக்கும் போது கோட் செய்ய வேண்டாம். இதனால் பக்க அளவு அதிகரித்து பக்கம் திறக்க நேரம் ஆகிறது. மல்டி கோட் பழகி விடுங்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மூத்த உருப்பினர்கள் சிலர் கூட முழு டெஜ்ஸ்டையும் கோட் செய்கிறார்கள். அவர்களுக்கு தனி மடல் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.
அடுத்தது சில உருப்பினர்கள், கலந்து கொள்ளும் அனைத்து இடங்களிலும் தங்களுடைய கொள்கையில் மட்டுமே குறியாக இருப்பார்கள். அவர்கள் சம்மந்த பட்ட கருத்தை தவிர வேறு கருத்துகளை தரவேமாட்டார்கள். இதில் ஜோக் என்னன்னா சம்மந்தமில்லாத திரியிலும் கூட சம்மந்தமில்லாத சர்சையை கிளப்புவார்கள். ஆனால் போக போக மன்றத்தை உனர்ந்து மாறிகொள்கிறார்கள் என்பதில் சந்தோசம். அந்த மாதிரி சம்மந்தமில்லாமல் சர்சையை மட்டுமே பதிப்பவர்களின் பதிப்புகளை நாம் இக்னோர் செய்து விட்டால் புரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு பொருப்பாளர்களை தவிர மற்றவர்கள் அறிவுரை கூட சொல்வதை தவித்து விடலாம்.
அடுத்தது அடிகடி அவதாரை மாற்றாதீர்கள். சில சமயம் குழப்பி விடுகிறது. அப்படி விசேச நாட்களில் மாற்றினால் விரைவில் பழைய அவதாருக்கு வந்துவிடுங்கள்.
நம் மன்றத்தில் என்னை மிகவும் கவர்ந்தது ஒரே பாலிசிதான், யாரை திருப்தி படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் யாரையும் புன்படுத்த கூடாது என்ற கட்டுகோப்புடன் இயங்குவதுதான். அதற்க்கு மன்றத்தில் பொருப்பாளர்களில் உழைப்புதான் முக்கிய காரனம். சமீபகாலங்களாக நம் மன்றத்தி தனி நபர் சாடல் சுத்தமாக குரைந்து விட்டன என்பது மகிழ்ச்சியான செய்தி.
சிரிப்பு விடுகதை இரண்டையும் தனிதனியாக பிரித்து விடலாம் என்பது என் கருத்து. அரட்டை பகுதி என்று தனியாக ஒரு பகுதி மல்லி மன்றத்தில் வைக்கலாம். சில மாற்ற வேண்டிய பகுதிகளை பட்டியலிடுகிறேன்.
வாழ்த்துகள் தாமரை மன்றத்தில் இருப்பதற்க்கு பதிலாக மல்லி மன்றத்துக்கு கொண்டு செல்லலாம்
செய்தி சோலையை மல்லி மன்றத்தில் இருப்பதற்க்கு பதிலாக சாமந்தி மன்றத்துக்கு கொண்டு செல்லலாம்
இலங்கியம் புத்தகம் மல்லி மன்றத்தில் இருப்பதற்க்கு பதிலாக செவ்வந்தி மன்றத்துக்கு கொண்டு செல்லலாம்
கல்வி அறிவியல் சாமந்தி மன்றத்தில் இருப்பதற்க்கு பதிலாக ரோஜா மன்றத்துக்கு கொண்டு செல்லலாம்
இப்படி சில மாற்றங்களை செய்யலாம்.
அடுத்தது இந்த முரை மன்றத்தில் என்னை சங்கடமாக்கிய விசயம் ஒன்றையும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். வெறும் பாராட்டை மட்டும் சொல்லி விட்டு சங்கடங்களையும் சொல்லாமல் செல்வது நிரைவு ஆகாது. அதே சமயம் அது என் மனதில் உருத்தி கொண்டே இருக்கும். அது வெறு ஒன்றும் இல்லை. இனியா அவர்கள் ஆரம்பித்த ஒரு பட்டி மன்றத்தின் தலைப்பு மன்றத்தில் வயதான உருப்பினர்கள் பங்கு பெற ஆர்வமாக இருந்த போது ஒரு சில இழைய உருப்பினர்கள் அதற்க்கு ஆட்சேபம் செய்தார்கள். கருத்தை ஆட்சேபம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு (அதை நான் வரவேற்க்க கூடியவன்). ஆனால் தலைப்பை விவாதம் நடைபறுவதையே ஆட்சேபித்தது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. சங்கடம் ஆட்சேபித்தவர்களால் அல்ல. அதற்க்கு நிர்வாகம் அந்த தலைப்பை விவாதிக்க தடை செய்ததுதான் எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதை ஏன் நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன் என்றால், மூத்த உருப்பினர்கள் பலர் பட்டிமன்றம் நிறுத்தபட்டது பற்றி வருத்தம் கொண்டு பொதுவில் பதிக்காமல் என்னிடம் தனி மடல் மூலம் தங்கள் அதிர்ப்தியை தெரிவித்தார்கள். அவர்கள் அனைவர் சார்பாகவும் இந்த கருத்தை நான் இந்த 3000 ஆவது பதிப்பில் பொது கவனத்துக்கும் கொண்டு வருகிறேன். மன்ற நேயர்களே விவாதங்களில் தனி நபர் சாடல் மதம் அரசியல் சாடல் தவிர்க்க பட வேண்டுமே தவிர சமுதாயத்தில் ஏதார்த்தமாக நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை ஆக்கபூர்வமாக விவாதிக்க கூடாது என்று ஆட்சேபம் செய்வது நல்லதில்லை. யோசித்து பாருங்கள் இப்படி ஒவ்வொரு தலைப்பை யாராவது ஆட்சேபம் செய்து கொண்டிருந்தால் பிறகு எதை தான் விவாதிக்க முடியும். பட்டி மன்றத்தில் கலந்து பாயிண்டுக்கு கவுண்டர் பாயிண்ட் கொடுக்க வேண்டும்.
இந்த 3000 பதிவில் நான் எந்த அளவுக்கு சாதித்தேன் என்பதை விட பல முத்தான நட்புகளை சம்பாரித்து விட்டேன் என்பதை நினைத்தாலே என் சந்தோசம் பன்மடங்கு ஆகிறது. சிலர் அவ்வபோது எனக்கு தனி மடலில் அன்பு அள்ளிதந்து என்னை கரைத்து விடுவார்கள். இரவு கனவில் கூட மன்ற நன்பர்கள் அவதார் மூலம் வந்து விளையாடுகிறார்கள் (கலாய்கிறார்கள்). கனவிலேயே அப்படி என்றால் நினைவில் பகல் கனவில் எந்த அளவுக்கு இம்சை கொடுத்திருப்பார்கள். இறுதியாக மன்றத்துக்கு நான் சொல்லிகொள்வது என் தமிழை வளர்த்தி, எழுத்து பிழைகளை குரைத்து, பன்பட்டவனாக்கி சில அறிவுகளை வளர்த்தி சந்தோசமாக வைத்திருக்கும் உறவுகளுக்கு என் மனமார்ந்த நன்றி.
(முன்னமே பதித்தது அழின்து விட்டதால் ம்மறுபடியும் 3000 எட்டும்போது பதிகிறேன்)
முனுக் முனுகுனு இருந்துகிட்டு 300 குடிசைக்கு திவைப்பான் என்று அப்பாவியாக நடிப்பவனை சொல்வார்கள். அது போல தான் முனுக் முனுக்னு இருந்துகிட்டு 3000 குடிசைக்கு திவைத்து விட்டார் லொள்ளுவாத்தியார் என்று யாரோ முனுமுனுப்பது தெரிகிறது. அதென்ன 3000 குடிசை, அது வெறுன்னுமில்லீங்க 3000 பதிப்பு, அத தான் அப்படி சொல்லறேன். ஆம் இது என் 3000 ஆவது படைப்பு.
முதல் 1000 பதிப்புகள் என்னை ஒரு சிலருக்கு மட்டுமே அறிமுகபடுத்தியது. அதுவும் குறிபிட்ட முத்திரை குத்தபட்டு அறிமுகபடுத்தியது. அந்த சமயத்தில் நான் அதிகமாக விவாதங்களில் மட்டுமே பங்கு பெற்று கொண்டிருந்தேன். மன்றத்தை பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடியாமல் தவித்து கொண்டிருந்தேன். ஆனால் மன்றம் என்னை அறிந்து கொண்டது. சில சமயங்களில் விதிமுரை மீரல்கள் செய்து கொட்டு வாங்கி கொண்டேன்.
அடுத்த 2000 எட்டுவதற்குள் பதிவுக்குள் நான் கலாய்பு பகிதியில் பங்கு பெற ஆரம்பித்தேன். குறிப்பாக அரசியல் கலத்தில் பங்கு பெற்று நிரைய பேருடன் நட்பானேன். இந்த முரை மன்றம் பற்றி நன்றாகவே அறிந்து கொண்டு அதற்க்கு தகுந்தார் போல என்னை மாற்றி கொண்டேன். இந்த முரை கொட்டும் வாங்கவில்லை. அதே சமயம் முகம் சுழிக்கும் படைப்புகள் எதுவும் பதிக்கவில்லை.
இந்த 2000 - 3000 பதிவுகளில்தான் நான் மன்றத்தில் பல இடங்களில் சுற்ற ஆரம்பித்தேன். கதைகள் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் கவிதையை மறந்து விட்டேன். கொஞ்ச பிழைகள் குரைந்து விட்டது. இந்த 1000 பதிவுகல் மன்றத்தில் சாதர்ன லொள்ளுவாத்தியாராக இருந்த என்னை மாவீரன் லொள்ளுவாத்தியாராகவே மாற்றி விட்டது என்று சொல்லலாம். அதன் மூலம் எனனிடம் நிரைய பேர் பழக ஆரம்பித்து விட்டார்கள். இந்த சமயத்தில் மன்றத்தில் விவாதங்களும் குரைந்து விட்டது. கிருக்கு பட்டம் ஆ பத்து கேள்வி போன்ற அருமை திரி ஆரம்பிக்க பட்டு பிறகு ஏனோ தூங்கி விட்டது கவலையளிக்கிறது. இந்த முரை திரிகள் பூட்டபடுவது குரைந்து விட்டது மகிழ்சி அளிகிறது. கடந்த இரு மாதமாக உருப்பினர்கள் என்னிக்கையும் அதிகரித்தது போல் தெரிகிறது.
மன்றத்தில் கூட நிரைய மாற்றம் ஏற்பட்டு கொண்டிருக்கிறது வரவேற்க்க கூடியது. தமிழ்மன்றம் பற்றிய என்னுடைய ஆலோசனைகள் சிலவற்றை முன்வைக்க விரும்புகிறேன்.
குறிப்பாக உருப்பினர்கள் கலந்து கொள்ளும் விதம் பற்றி சொல்லியாக வேண்டும்.
நம் மன்றத்தில் நிரைய உருப்பினர்கள் கலாய்ப்பு பகுதியில்தான் அதிக நாட்டம் காட்டுகிறார்கள். அதில் தவறில்லை, ஆனால் கலாய்ப்பு ஓவராக இருக்க கூடாது. சம்மந்தமில்லாமல் திசை மாரி திரி பக்கம் பக்கமாக வளர கூடாது அல்லவா. முடிந்த வரையில் ஒரு வரி பதிப்புகளை குரைக்கலாமே. அதே போல அடுத்தது கவிதை பக்கம் சுருசுருப்பாக இயங்குகிறது. ஆனால் இலக்கியம், மருத்துவம் ஆன்மீகம் பயனுள்ள தகவல்கள் எல்லாம் சுருசுருப்பில்லாமல் இருக்கிறது. நானும் அந்த பக்கம் போவதில்லை என்பதையும் ஏற்று கொள்கிறேன்.
நமது மன்றம் தமிழ் மன்றம் (கலாய்ப்பு மன்றம் அல்லது கவிதை மன்றம் அல்ல). அதனால் மன்ற உருப்பினர்கள் (என்னையும் சேர்த்து) சில மாற்றங்களை ஏற்படுத்துவோம். அப்பப்ப மற்ற ஏரியாகளையும் ஒரு ரவுண்ட் வந்து பங்களிப்பவர்களை ஊக்குவிப்போம். அந்த பகுதியில் படைப்பவர்கள் உழைப்பு அதிகம். நாமும் அங்கு படைப்புகளை அதிக படுத்த வேண்டும். யவனிகாவின் ஜாலியா இளைக்கலாம் வாங்க போன்ற நகைசுவை கலந்த அதே சமயம் ஆக்கபூர்வமான படைப்புகள் ஆன்மீக பகுதி உட்பட கொடுக்க வேண்டும். அதே சமயம் ஆன்மீகம் மருத்துவம் பகுதியில் படைப்பவர்கள் சொந்த படைப்புகளை மட்டுமே பதிக்குமாரும் கேட்டு கொள்கிறேன். சாம்ந்தி மன்றத்தை நல்ல பல அறிய தகவல்களால் நிரப்புவோம்.
அடுத்தது நம் மன்றத்தில் சிலருக்கு கோட் பன்னுவதை சரியாக கடைபிடிப்பதில்லை. முழு டெக்ஸ்டையும் கோட் செய்து விடுகிறார்கள். அதை குரைக்க வேண்டும். பதிவில் குறிப்பிட்ட வார்த்தைகளை மட்டும் கோட் செய்து கருத்து சொல்லலாம். அதுவும் ஒருவர் பதிவுக்கு நேர் அடுத்த பதிவு பதிக்கும் போது கோட் செய்ய வேண்டாம். இதனால் பக்க அளவு அதிகரித்து பக்கம் திறக்க நேரம் ஆகிறது. மல்டி கோட் பழகி விடுங்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மூத்த உருப்பினர்கள் சிலர் கூட முழு டெஜ்ஸ்டையும் கோட் செய்கிறார்கள். அவர்களுக்கு தனி மடல் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.
அடுத்தது சில உருப்பினர்கள், கலந்து கொள்ளும் அனைத்து இடங்களிலும் தங்களுடைய கொள்கையில் மட்டுமே குறியாக இருப்பார்கள். அவர்கள் சம்மந்த பட்ட கருத்தை தவிர வேறு கருத்துகளை தரவேமாட்டார்கள். இதில் ஜோக் என்னன்னா சம்மந்தமில்லாத திரியிலும் கூட சம்மந்தமில்லாத சர்சையை கிளப்புவார்கள். ஆனால் போக போக மன்றத்தை உனர்ந்து மாறிகொள்கிறார்கள் என்பதில் சந்தோசம். அந்த மாதிரி சம்மந்தமில்லாமல் சர்சையை மட்டுமே பதிப்பவர்களின் பதிப்புகளை நாம் இக்னோர் செய்து விட்டால் புரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு பொருப்பாளர்களை தவிர மற்றவர்கள் அறிவுரை கூட சொல்வதை தவித்து விடலாம்.
அடுத்தது அடிகடி அவதாரை மாற்றாதீர்கள். சில சமயம் குழப்பி விடுகிறது. அப்படி விசேச நாட்களில் மாற்றினால் விரைவில் பழைய அவதாருக்கு வந்துவிடுங்கள்.
நம் மன்றத்தில் என்னை மிகவும் கவர்ந்தது ஒரே பாலிசிதான், யாரை திருப்தி படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் யாரையும் புன்படுத்த கூடாது என்ற கட்டுகோப்புடன் இயங்குவதுதான். அதற்க்கு மன்றத்தில் பொருப்பாளர்களில் உழைப்புதான் முக்கிய காரனம். சமீபகாலங்களாக நம் மன்றத்தி தனி நபர் சாடல் சுத்தமாக குரைந்து விட்டன என்பது மகிழ்ச்சியான செய்தி.
சிரிப்பு விடுகதை இரண்டையும் தனிதனியாக பிரித்து விடலாம் என்பது என் கருத்து. அரட்டை பகுதி என்று தனியாக ஒரு பகுதி மல்லி மன்றத்தில் வைக்கலாம். சில மாற்ற வேண்டிய பகுதிகளை பட்டியலிடுகிறேன்.
வாழ்த்துகள் தாமரை மன்றத்தில் இருப்பதற்க்கு பதிலாக மல்லி மன்றத்துக்கு கொண்டு செல்லலாம்
செய்தி சோலையை மல்லி மன்றத்தில் இருப்பதற்க்கு பதிலாக சாமந்தி மன்றத்துக்கு கொண்டு செல்லலாம்
இலங்கியம் புத்தகம் மல்லி மன்றத்தில் இருப்பதற்க்கு பதிலாக செவ்வந்தி மன்றத்துக்கு கொண்டு செல்லலாம்
கல்வி அறிவியல் சாமந்தி மன்றத்தில் இருப்பதற்க்கு பதிலாக ரோஜா மன்றத்துக்கு கொண்டு செல்லலாம்
இப்படி சில மாற்றங்களை செய்யலாம்.
அடுத்தது இந்த முரை மன்றத்தில் என்னை சங்கடமாக்கிய விசயம் ஒன்றையும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். வெறும் பாராட்டை மட்டும் சொல்லி விட்டு சங்கடங்களையும் சொல்லாமல் செல்வது நிரைவு ஆகாது. அதே சமயம் அது என் மனதில் உருத்தி கொண்டே இருக்கும். அது வெறு ஒன்றும் இல்லை. இனியா அவர்கள் ஆரம்பித்த ஒரு பட்டி மன்றத்தின் தலைப்பு மன்றத்தில் வயதான உருப்பினர்கள் பங்கு பெற ஆர்வமாக இருந்த போது ஒரு சில இழைய உருப்பினர்கள் அதற்க்கு ஆட்சேபம் செய்தார்கள். கருத்தை ஆட்சேபம் செய்ய யாருக்கும் உரிமை உண்டு (அதை நான் வரவேற்க்க கூடியவன்). ஆனால் தலைப்பை விவாதம் நடைபறுவதையே ஆட்சேபித்தது எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. சங்கடம் ஆட்சேபித்தவர்களால் அல்ல. அதற்க்கு நிர்வாகம் அந்த தலைப்பை விவாதிக்க தடை செய்ததுதான் எனக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. இதை ஏன் நான் இங்கு பகிர்ந்து கொள்கிறேன் என்றால், மூத்த உருப்பினர்கள் பலர் பட்டிமன்றம் நிறுத்தபட்டது பற்றி வருத்தம் கொண்டு பொதுவில் பதிக்காமல் என்னிடம் தனி மடல் மூலம் தங்கள் அதிர்ப்தியை தெரிவித்தார்கள். அவர்கள் அனைவர் சார்பாகவும் இந்த கருத்தை நான் இந்த 3000 ஆவது பதிப்பில் பொது கவனத்துக்கும் கொண்டு வருகிறேன். மன்ற நேயர்களே விவாதங்களில் தனி நபர் சாடல் மதம் அரசியல் சாடல் தவிர்க்க பட வேண்டுமே தவிர சமுதாயத்தில் ஏதார்த்தமாக நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை ஆக்கபூர்வமாக விவாதிக்க கூடாது என்று ஆட்சேபம் செய்வது நல்லதில்லை. யோசித்து பாருங்கள் இப்படி ஒவ்வொரு தலைப்பை யாராவது ஆட்சேபம் செய்து கொண்டிருந்தால் பிறகு எதை தான் விவாதிக்க முடியும். பட்டி மன்றத்தில் கலந்து பாயிண்டுக்கு கவுண்டர் பாயிண்ட் கொடுக்க வேண்டும்.
இந்த 3000 பதிவில் நான் எந்த அளவுக்கு சாதித்தேன் என்பதை விட பல முத்தான நட்புகளை சம்பாரித்து விட்டேன் என்பதை நினைத்தாலே என் சந்தோசம் பன்மடங்கு ஆகிறது. சிலர் அவ்வபோது எனக்கு தனி மடலில் அன்பு அள்ளிதந்து என்னை கரைத்து விடுவார்கள். இரவு கனவில் கூட மன்ற நன்பர்கள் அவதார் மூலம் வந்து விளையாடுகிறார்கள் (கலாய்கிறார்கள்). கனவிலேயே அப்படி என்றால் நினைவில் பகல் கனவில் எந்த அளவுக்கு இம்சை கொடுத்திருப்பார்கள். இறுதியாக மன்றத்துக்கு நான் சொல்லிகொள்வது என் தமிழை வளர்த்தி, எழுத்து பிழைகளை குரைத்து, பன்பட்டவனாக்கி சில அறிவுகளை வளர்த்தி சந்தோசமாக வைத்திருக்கும் உறவுகளுக்கு என் மனமார்ந்த நன்றி.