திவ்யா
09-01-2008, 03:34 PM
நான் கல்லூரியில்(பெண்கள் கல்லூரி) இரண்டாம் ஆண்டு படிக்கும் போது நடந்த சம்பவம் இது.
எங்களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர் ஒருவருக்கு பேச்சு சற்று குளறும்.
அவர் நடத்துவது எதுவும் எங்களுக்கு சரி வர புரியாது. அதனால் கவனிக்க மாட்டோம். (மற்ற வகுப்புகளை எல்லாம் நல்லா கவனிப்பேன் பா. ஏன்னா நான் நல்ல பொண்ணு).இதனால் பொதுவாகவே அவர் பாடம் நடத்தும் போது வகுப்பில் சத்தம் சற்று அதிகமாகவே இருக்கும். எங்கள் ஆசிரியரும் விடாமல் நடத்துவார். அப்போது அவரை பார்க்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.
நான், அவர் மனதை புண்படுத்தக்கூடாது என்பதற்காக கவனிப்பது போல் நடிப்பேன். ஒரு நாள் அவ்வாறு நடிக்கும் போது என்னையும் அறியாமல் தூக்கம் வந்துவிட்டது. அன்று அவருக்கு தொடற்சியாக இரண்டு வகுப்பு வேறு. தூங்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். யோசனையின் முடிவில் வீட்டிற்கு கடிதம் எழுத முடிவு செய்தேன்.
ஆசிரியருக்கு தெரியாமல் எழுத வேண்டும் என்பதால் (தெரிஞ்சா அவர் மனசு கஷ்டபடும் பாருங்க, அதான்)அவர் நடத்தும் போது என்ன எழுதலாம் என்று யோசிப்பேன் (அதாவது பாடத்தை கவனிப்பேன்).பின்பு அவர் கரும்பலகையில் எழுதும் போது, நானும் எழுதுவேன்.
வகுப்பில் அனைவரும் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் போது, நான் மட்டும் பாடத்தை கவனித்தது(!!!) அவருக்கு வியப்பையும், சந்தோஷத்தையும் அளித்தது. அவர் என்னை கவனித்ததை நான் பார்க்க வில்லை. அப்போது, அடுத்து என்ன எழுதுவது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன்.
என் பெயரைச் சொல்லி கூப்பிட்டார். நான் கடிதம் எழுதுவது தெறிந்துதான் எழச்சொல்கிறாரோ என்று பயந்துவிட்டேன். காரணம் புரியாமல் திருதிரு வென முழித்துகொண்டே எழுந்து நின்றேன்.என் நிலைமையை பார்த்து அருகில் இருந்த தோழிகள் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.
எப்போதும் கோபம் கொள்ளாத எங்கள் ஆசிரியருக்கு கடுங்கோபம் வந்து விட்டது.(பின்ன, அவர் வகுப்பை கவனிக்கும் ஒரே பெண் நான் தான், என்னை கேலி செய்தால் பொறுத்துக்கொள்வாரா,நீங்களே சொல்லுங்க.)அனைவரையும் பார்த்து "ஏன் அந்த பெண்ணை பார்த்து சிரிக்கிறீர்கள். அந்த பெண்ணை பார்த்து வகுப்பில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
பின்பு, என்னை பார்த்து "உனக்கு என்ன சந்தேகம் என்றாலும் தயங்காமல் கேள், பயப்படாதே" என்றார். அப்போது தான் எனக்கு தெரிந்தது, நான் கடிதத்தில் அடுத்து என்ன எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்ததை, அவர் நடத்திய பாடத்தில் எனக்கு ஏதோ சந்தேகம் என்று நினைத்துக் கொண்டார் என்பது.
என்ன நடத்தினார் என்று தெறிந்தால் தானே கேள்வி கேட்க முடியும். அதனால் நான், "sir எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அனைவரும் சத்தம் போடுவதால் நீங்கள் கூறுவது எதுவும் என் காதில் சரியாக விழவில்லை" என்றேன். அவர் மறுபடியும் அனைவரையும் திட்டிவிட்டு, எனக்காக திரும்பவும் அதனை நடத்தினார்.
அனைவரும் என்னை கோபமாக பார்த்தார்கள். நான் யாரையும் கண்டு கொள்ளாமல் ஒழுங்காக பாடத்தை கவனித்தேன் (வேறு வழியில்லாமல் தான்). வகுப்பு முடிந்து ஆசிரியர் வெளியில் சென்றதும் என் கதி என்னவாகிருக்கும் என்று நான் சொல்ல வேண்டுமா என்ன.
எங்களுக்கு வகுப்பு எடுக்கும் ஆசிரியர் ஒருவருக்கு பேச்சு சற்று குளறும்.
அவர் நடத்துவது எதுவும் எங்களுக்கு சரி வர புரியாது. அதனால் கவனிக்க மாட்டோம். (மற்ற வகுப்புகளை எல்லாம் நல்லா கவனிப்பேன் பா. ஏன்னா நான் நல்ல பொண்ணு).இதனால் பொதுவாகவே அவர் பாடம் நடத்தும் போது வகுப்பில் சத்தம் சற்று அதிகமாகவே இருக்கும். எங்கள் ஆசிரியரும் விடாமல் நடத்துவார். அப்போது அவரை பார்க்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும்.
நான், அவர் மனதை புண்படுத்தக்கூடாது என்பதற்காக கவனிப்பது போல் நடிப்பேன். ஒரு நாள் அவ்வாறு நடிக்கும் போது என்னையும் அறியாமல் தூக்கம் வந்துவிட்டது. அன்று அவருக்கு தொடற்சியாக இரண்டு வகுப்பு வேறு. தூங்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன். யோசனையின் முடிவில் வீட்டிற்கு கடிதம் எழுத முடிவு செய்தேன்.
ஆசிரியருக்கு தெரியாமல் எழுத வேண்டும் என்பதால் (தெரிஞ்சா அவர் மனசு கஷ்டபடும் பாருங்க, அதான்)அவர் நடத்தும் போது என்ன எழுதலாம் என்று யோசிப்பேன் (அதாவது பாடத்தை கவனிப்பேன்).பின்பு அவர் கரும்பலகையில் எழுதும் போது, நானும் எழுதுவேன்.
வகுப்பில் அனைவரும் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் போது, நான் மட்டும் பாடத்தை கவனித்தது(!!!) அவருக்கு வியப்பையும், சந்தோஷத்தையும் அளித்தது. அவர் என்னை கவனித்ததை நான் பார்க்க வில்லை. அப்போது, அடுத்து என்ன எழுதுவது என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன்.
என் பெயரைச் சொல்லி கூப்பிட்டார். நான் கடிதம் எழுதுவது தெறிந்துதான் எழச்சொல்கிறாரோ என்று பயந்துவிட்டேன். காரணம் புரியாமல் திருதிரு வென முழித்துகொண்டே எழுந்து நின்றேன்.என் நிலைமையை பார்த்து அருகில் இருந்த தோழிகள் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.
எப்போதும் கோபம் கொள்ளாத எங்கள் ஆசிரியருக்கு கடுங்கோபம் வந்து விட்டது.(பின்ன, அவர் வகுப்பை கவனிக்கும் ஒரே பெண் நான் தான், என்னை கேலி செய்தால் பொறுத்துக்கொள்வாரா,நீங்களே சொல்லுங்க.)அனைவரையும் பார்த்து "ஏன் அந்த பெண்ணை பார்த்து சிரிக்கிறீர்கள். அந்த பெண்ணை பார்த்து வகுப்பில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்.
பின்பு, என்னை பார்த்து "உனக்கு என்ன சந்தேகம் என்றாலும் தயங்காமல் கேள், பயப்படாதே" என்றார். அப்போது தான் எனக்கு தெரிந்தது, நான் கடிதத்தில் அடுத்து என்ன எழுத வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்ததை, அவர் நடத்திய பாடத்தில் எனக்கு ஏதோ சந்தேகம் என்று நினைத்துக் கொண்டார் என்பது.
என்ன நடத்தினார் என்று தெறிந்தால் தானே கேள்வி கேட்க முடியும். அதனால் நான், "sir எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. அனைவரும் சத்தம் போடுவதால் நீங்கள் கூறுவது எதுவும் என் காதில் சரியாக விழவில்லை" என்றேன். அவர் மறுபடியும் அனைவரையும் திட்டிவிட்டு, எனக்காக திரும்பவும் அதனை நடத்தினார்.
அனைவரும் என்னை கோபமாக பார்த்தார்கள். நான் யாரையும் கண்டு கொள்ளாமல் ஒழுங்காக பாடத்தை கவனித்தேன் (வேறு வழியில்லாமல் தான்). வகுப்பு முடிந்து ஆசிரியர் வெளியில் சென்றதும் என் கதி என்னவாகிருக்கும் என்று நான் சொல்ல வேண்டுமா என்ன.