ஆதி
08-01-2008, 09:15 AM
என் படைப்புகள் பற்றியும் என்னைப் பற்றியும் ஒரு அறிமுகம்
நீ கவிஞனா ? என்கிறக் கேள்வி என்னுள் எழுகிறப் போதெல்லாம் நான் எழுத ஆரம்பிக்கிறேன். இதுவரைக்கும் என்ன எழுதீட பெருசா, எழுததான் ஊங்கிட்ட என்ன இருக்கு புதுசா ? என எனக்குள் இருப்பவன் எழுப்பும் கேள்விகளுக்கு, பதில் தேடிப் புரப்பட்ட என் எழுத்துக்கள் இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றன அவனுக்கான பதிலை.
நீ எழுதுவது எல்லாம் எழுத்தா, உனக்கு என்ன தெரியும் எழுத ? என இன்னொரு துருவத்தில் இன்னொருவம் எழுப்பும் கேள்விகளில், கவிழ்தப் பாத்திரத்தில் கழலாமல் இருக்கிற பருக்கைகள் போல எஞ்சிக் கிடக்கிற என் ஏழை நம்பிக்கையும் சல்லி சல்லியாய் உடைகிறது.
சரி விடுங்கப்பா, அவன் எழுதிதான் பார்க்கட்டுமே.. என இன்னொரு முகமாய் இன்னொருத்தன், குறு முறுவலும், கொஞ்சம் நம்பிக்கையும், சில காகிதங்களையும் எழுதிப் பழுகு என கொடுத்துவிட்டுப் போகிறான் மற்றொரு துருவம் நோக்கி..
இந்த மூன்று துருவங்களின் மையப்ப புள்ளியில் இருந்து துவங்கி விடுகிறது தினம் தினம் ஒரு பயணம் படைப்பின் துருவம் நோக்கி..
இறுகிய ஆறுகள், நெகிழ்ந்த ஆறுகள், வறண்ட ஆறுகள், குளிர்ந்த ஆறுகள் என எல்லா ஆறுகளையும் அறுத்துக்கொண்டு நிகழும் என்றன் பயணங்களில் நான் அறிந்து கொண்டன சிலவே, அதுவும் முழுமையானது அல்ல..
இது தேவையான தேடலா, என் தேவைகளுக்கான தேடலா, இல்லை தேவைகளுக்கான தேவைகள் என கருதிக்கொண்டு தேவைகளாய் தேவைகளை தேவைகளற்று தேடும் தேடலா ? தெரியாமல் தெரியாத வழி போய் கொண்டிருக்கிறேன் வழிப்போக்கனாய்..
கையில் எடுப்பதும், விட்டெறிவதும், துறத்தி பிடிப்பதும், தரையில் அடிப்பதும், கைதட்டி சிரிப்பதும், மீண்டும் கையில் எடுப்பதும், என தொடரும் குழந்தையின் விளையாட்டுப் போல சிலப் பாடு பொருட்களை ஏந்திக் கொண்டு தொடர்கின்றன என் பயணங்கள் ஆசுவாசமில்லாமல்..
எண்ணக் குறிப்புகளாய் எழுதப்படுகிற சிலப் படைப்புகள், சின்னப் பிள்ளையின் மணல் வீடு போல குவிப்பதும் சரிவதும் மீள குவிப்பதும் சரிவதுமாய் தொடர்கிறது ஒரு முழுமை இல்லாமல்.
இந்த கவிதைகளின் என் ஏக்கத்தையும் தாகத்தையும் ஆற்றாமையையும் நீங்கள் சந்திக்க நேர்ந்தால் தயவு செய்து அவற்றை ஆற்றிப்போங்கள்..
இது என் கவிதை மழலைகள் தூங்கும் தொட்டில், பார்வையாளர்கள் தயவு செய்து சத்தம் போடாமல் உள்ளே வரவும், பார்வை நேரம் 00.00 - 24.00.
அன்பன் ஆதி
படைப்புகளின் முகவரிகள்
காதல் கவிதைகள்
காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13239)
உயிர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13679)
காதல் நாடி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14013)
நம் காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13713)
ஒரு துளிக் கடல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13752)
எப்படி இருக்கனும்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13414)
நீயும்.. நானும்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13575)
பிள்ளையார்சுழி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13536)
அவளுடன் ஒரு உரையாடால் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13841)
இளநகை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13342)
பதிலற்றக்கேள்விகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13413)
என் காதல் கடிதம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13957)
பொய்யுரைக்கணிதன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13954)
இல்லியல் கவிதைகள்
முற்றம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13167)
வெக்கை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13100)
முரண் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13081)
தவம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13255)
வீடு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13256)
ஜோடி (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=305516#post305516)
பரிசு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13440)
நீ கவிஞனா ? என்கிறக் கேள்வி என்னுள் எழுகிறப் போதெல்லாம் நான் எழுத ஆரம்பிக்கிறேன். இதுவரைக்கும் என்ன எழுதீட பெருசா, எழுததான் ஊங்கிட்ட என்ன இருக்கு புதுசா ? என எனக்குள் இருப்பவன் எழுப்பும் கேள்விகளுக்கு, பதில் தேடிப் புரப்பட்ட என் எழுத்துக்கள் இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றன அவனுக்கான பதிலை.
நீ எழுதுவது எல்லாம் எழுத்தா, உனக்கு என்ன தெரியும் எழுத ? என இன்னொரு துருவத்தில் இன்னொருவம் எழுப்பும் கேள்விகளில், கவிழ்தப் பாத்திரத்தில் கழலாமல் இருக்கிற பருக்கைகள் போல எஞ்சிக் கிடக்கிற என் ஏழை நம்பிக்கையும் சல்லி சல்லியாய் உடைகிறது.
சரி விடுங்கப்பா, அவன் எழுதிதான் பார்க்கட்டுமே.. என இன்னொரு முகமாய் இன்னொருத்தன், குறு முறுவலும், கொஞ்சம் நம்பிக்கையும், சில காகிதங்களையும் எழுதிப் பழுகு என கொடுத்துவிட்டுப் போகிறான் மற்றொரு துருவம் நோக்கி..
இந்த மூன்று துருவங்களின் மையப்ப புள்ளியில் இருந்து துவங்கி விடுகிறது தினம் தினம் ஒரு பயணம் படைப்பின் துருவம் நோக்கி..
இறுகிய ஆறுகள், நெகிழ்ந்த ஆறுகள், வறண்ட ஆறுகள், குளிர்ந்த ஆறுகள் என எல்லா ஆறுகளையும் அறுத்துக்கொண்டு நிகழும் என்றன் பயணங்களில் நான் அறிந்து கொண்டன சிலவே, அதுவும் முழுமையானது அல்ல..
இது தேவையான தேடலா, என் தேவைகளுக்கான தேடலா, இல்லை தேவைகளுக்கான தேவைகள் என கருதிக்கொண்டு தேவைகளாய் தேவைகளை தேவைகளற்று தேடும் தேடலா ? தெரியாமல் தெரியாத வழி போய் கொண்டிருக்கிறேன் வழிப்போக்கனாய்..
கையில் எடுப்பதும், விட்டெறிவதும், துறத்தி பிடிப்பதும், தரையில் அடிப்பதும், கைதட்டி சிரிப்பதும், மீண்டும் கையில் எடுப்பதும், என தொடரும் குழந்தையின் விளையாட்டுப் போல சிலப் பாடு பொருட்களை ஏந்திக் கொண்டு தொடர்கின்றன என் பயணங்கள் ஆசுவாசமில்லாமல்..
எண்ணக் குறிப்புகளாய் எழுதப்படுகிற சிலப் படைப்புகள், சின்னப் பிள்ளையின் மணல் வீடு போல குவிப்பதும் சரிவதும் மீள குவிப்பதும் சரிவதுமாய் தொடர்கிறது ஒரு முழுமை இல்லாமல்.
இந்த கவிதைகளின் என் ஏக்கத்தையும் தாகத்தையும் ஆற்றாமையையும் நீங்கள் சந்திக்க நேர்ந்தால் தயவு செய்து அவற்றை ஆற்றிப்போங்கள்..
இது என் கவிதை மழலைகள் தூங்கும் தொட்டில், பார்வையாளர்கள் தயவு செய்து சத்தம் போடாமல் உள்ளே வரவும், பார்வை நேரம் 00.00 - 24.00.
அன்பன் ஆதி
படைப்புகளின் முகவரிகள்
காதல் கவிதைகள்
காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13239)
உயிர் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13679)
காதல் நாடி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=14013)
நம் காதல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13713)
ஒரு துளிக் கடல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13752)
எப்படி இருக்கனும்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13414)
நீயும்.. நானும்.. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13575)
பிள்ளையார்சுழி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13536)
அவளுடன் ஒரு உரையாடால் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13841)
இளநகை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13342)
பதிலற்றக்கேள்விகள் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13413)
என் காதல் கடிதம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13957)
பொய்யுரைக்கணிதன் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13954)
இல்லியல் கவிதைகள்
முற்றம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13167)
வெக்கை (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13100)
முரண் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13081)
தவம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13255)
வீடு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13256)
ஜோடி (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=305516#post305516)
பரிசு (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=13440)