இளசு
07-01-2008, 09:23 PM
அறிவியல் மைல்கற்கள்- 28
வாணிபக் காற்று
----------------------------------------------------------
அ.மை.(27) - வாலறிவன் இங்கே:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12257
------------------------------------------
அ.மை (28): வாணிபக் காற்று
ஜார்ஜ் ஹேட்லி ( George Hadley) 1685 - 1768
பதினெட்டாம் நூற்றாண்டில் மாலுமிகள் அனுபவித்து உணர்ந்த ஒன்று -
காலம்,இடத்துக்குத் தக்க வீசும் வேகக்காற்றின் குணநலன்கள்.
நிலநடுக்கோட்டுக்கு வடக்கே காற்று வடகிழக்கிலிருந்து வீசும்..
நிலநடுக்கோட்டுக்குத் தெற்கே காற்று தென்கிழக்கிலிருந்து வீசும்.
கப்பல்கள் அதன் திசையிலே பயணித்தால் - பயணங்கள் சுகமானவை; வேகமானவை.
அதே நிலநடுக்கோட்டை நெருங்கிவிட்டால்... அந்தக்காற்றும் இல்லாமல், இந்தக்காற்றும் இல்லாமல்
அந்தரத்தில் ''திரிசங்காய்'' விட்டுவிடும். ஆங்கிலத்தில் ''doldrums'' என்றழைக்கப்படும் இந்நிலை
மாலுமிகளைக் குலைநடுங்க வைக்கும். சிக்கினால் கப்பல் அங்கேயே அல்லாடும்.
(டோல்ட்ரம் என்றால் திக்பிரமை/விரக்தியில் தேமேன்னு சமைஞ்சு இருக்கும் கிறக்க நிலை)
ஜார்ஜ் ஹேட்லி - அந்த நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலேயே வழக்கறிஞர்.
அவருக்கு வானிலை மாற்றங்களில் வற்றாத ஆர்வம். அதிலும் நிலமகளின் உடல் தழுவும்
காற்றோட்டங்கள், காலம்/இடம் பொருத்த சில கணிப்புகளுக்கேற்ப வீசுவதை
இன்னும் ஆராய ஆர்வம்.
வழக்கறிஞராக மட்டுமன்றி, ராயல் இலண்டன் கழகத்தின் வானிலை ஆராய்ச்சிப் பிரிவின்
பொறுப்பாளராகவும் இரட்டிப்பாய் உழைத்தார் ஹேட்லி. இரண்டாவது உழைப்புதான்
அவருக்கு அழியாப்புகழையும், இந்த மைல்கல் நாயகர் பட்டத்தையும் அவருக்கு ஈட்டித்தந்தது.
நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு லண்டன் கழகத்துக்கு 1735-ல் இந்த வாணிபக்காற்றின்
இயற்பியல் சூட்சுமங்களை விளக்கி, கட்டுரையாக சமர்ப்பித்தார். அதில் ஹேட்லி கூறிய
கோட்பாடுகள்:
1) சூரிய வெப்பத்தால் பூமத்திய ரேகைக்கு இருபக்கமும் உள்ள வெப்பமண்டலங்களில்
(Tropics) காற்று சூடாகிறது. சூடான காற்று,எடைக்குறைவால் நிலநடுக்கோட்டுப் பகுதிகளில்
மேலே எழும்புகிறது. துருவங்கள் அருகே குளிர்ந்து , எடை கூடி கீழிறங்குகிறது.
இதனால் வடக்கு, தெற்கு என இரு பிரிவுகளில் காற்றின் Convection Cell'' - அனல் அறைகள்
உருவாகின்றன. இவற்றுக்கு ஹேட்லி செல்கள் எனப் பெயர்.
நிலப்பரப்பின் அருகே உள்ள காற்று, நிலநடுக்கோட்டுக்குப் பயணிக்க,
உயர்ந்த மலைக்காற்று துருவம் நோக்கி ஓட்டமெடுக்க..
காற்றின் பயணத்திசைகள் இப்போது தெளிவாகின..
நிலநடுக்கோட்டுக்கு இருபக்கமும் காற்று நடுக்கோடு நோக்கியே வீசுவது புரியத்தொடங்கியது.
2) ஆனால் ஏன் வடக்காற்று வடகிழக்காய்? தென்காற்று தென்கிழக்காய்?
சற்றே சாய்ந்தபடி சுழலும் பூமியும் காற்றும் உரசுவதால், இந்த கீழைத்தன்மை காற்றின் பயணத்திசைக்கு..
3) மேலெழும்பி வரும் வடக்காற்றும், தென்காற்றும் சந்திக்கும் இடம்தான் - மோனநிலை தவழும் டோல்ட்ரம்.
மலைக்குகையின் இருள்மடியில்
தலைசாய்த்த இளவரசன்
மனங்கவர்ந்த காதலி
மடியில் இல்லை என மருகி
எறிந்த பெருமூச்சே
இரவின் பெருங்காற்று....
என அதுவரை கவிதையாய் உணரப்பட்ட காற்றுப் பிரசவம், அதன் பயணம்
ஹேட்லியின் ஆராய்ச்சி முடிவுகளால், சூரிய வெப்பம், பூமி உரசல் என
கவர்ச்சியற்ற அறிவியல் உண்மைகளாய் மாறின..
ஆனாலும் பல நல்ல ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்பட்ட '' உதாசீன நிலை''
ஹேட்லிக்கும் வாய்த்தது.
1793-ல் ஜான் டால்டன் ( அணுக்கொள்கை தந்த அதே டால்டன்
http://en.wikipedia.org/wiki/John_Dalton)..
ஹேட்லியின் கண்டுபிடிப்பை மறு -அறிவுபரப்பு செய்த பின்னரே
முன்னவருக்கு உரிய அங்கீகாரத்தை உலகம் அளித்தது..
நல்லவை உணரப்படாமலே மறைந்து விடுவது - பாபம்!
பின்னாளில் அவற்றை மறந்தும் விடுவது மகாபாபம்!!
ஹேட்லியை வாழவைத்த டால்டனுக்கு நன்றி சொல்லி
மைல்கல் நாயகர் ஹேட்லி நினைவைப் பாராட்டி முடிக்கிறேன்.
வாணிபக் காற்று
----------------------------------------------------------
அ.மை.(27) - வாலறிவன் இங்கே:
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12257
------------------------------------------
அ.மை (28): வாணிபக் காற்று
ஜார்ஜ் ஹேட்லி ( George Hadley) 1685 - 1768
பதினெட்டாம் நூற்றாண்டில் மாலுமிகள் அனுபவித்து உணர்ந்த ஒன்று -
காலம்,இடத்துக்குத் தக்க வீசும் வேகக்காற்றின் குணநலன்கள்.
நிலநடுக்கோட்டுக்கு வடக்கே காற்று வடகிழக்கிலிருந்து வீசும்..
நிலநடுக்கோட்டுக்குத் தெற்கே காற்று தென்கிழக்கிலிருந்து வீசும்.
கப்பல்கள் அதன் திசையிலே பயணித்தால் - பயணங்கள் சுகமானவை; வேகமானவை.
அதே நிலநடுக்கோட்டை நெருங்கிவிட்டால்... அந்தக்காற்றும் இல்லாமல், இந்தக்காற்றும் இல்லாமல்
அந்தரத்தில் ''திரிசங்காய்'' விட்டுவிடும். ஆங்கிலத்தில் ''doldrums'' என்றழைக்கப்படும் இந்நிலை
மாலுமிகளைக் குலைநடுங்க வைக்கும். சிக்கினால் கப்பல் அங்கேயே அல்லாடும்.
(டோல்ட்ரம் என்றால் திக்பிரமை/விரக்தியில் தேமேன்னு சமைஞ்சு இருக்கும் கிறக்க நிலை)
ஜார்ஜ் ஹேட்லி - அந்த நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலேயே வழக்கறிஞர்.
அவருக்கு வானிலை மாற்றங்களில் வற்றாத ஆர்வம். அதிலும் நிலமகளின் உடல் தழுவும்
காற்றோட்டங்கள், காலம்/இடம் பொருத்த சில கணிப்புகளுக்கேற்ப வீசுவதை
இன்னும் ஆராய ஆர்வம்.
வழக்கறிஞராக மட்டுமன்றி, ராயல் இலண்டன் கழகத்தின் வானிலை ஆராய்ச்சிப் பிரிவின்
பொறுப்பாளராகவும் இரட்டிப்பாய் உழைத்தார் ஹேட்லி. இரண்டாவது உழைப்புதான்
அவருக்கு அழியாப்புகழையும், இந்த மைல்கல் நாயகர் பட்டத்தையும் அவருக்கு ஈட்டித்தந்தது.
நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு லண்டன் கழகத்துக்கு 1735-ல் இந்த வாணிபக்காற்றின்
இயற்பியல் சூட்சுமங்களை விளக்கி, கட்டுரையாக சமர்ப்பித்தார். அதில் ஹேட்லி கூறிய
கோட்பாடுகள்:
1) சூரிய வெப்பத்தால் பூமத்திய ரேகைக்கு இருபக்கமும் உள்ள வெப்பமண்டலங்களில்
(Tropics) காற்று சூடாகிறது. சூடான காற்று,எடைக்குறைவால் நிலநடுக்கோட்டுப் பகுதிகளில்
மேலே எழும்புகிறது. துருவங்கள் அருகே குளிர்ந்து , எடை கூடி கீழிறங்குகிறது.
இதனால் வடக்கு, தெற்கு என இரு பிரிவுகளில் காற்றின் Convection Cell'' - அனல் அறைகள்
உருவாகின்றன. இவற்றுக்கு ஹேட்லி செல்கள் எனப் பெயர்.
நிலப்பரப்பின் அருகே உள்ள காற்று, நிலநடுக்கோட்டுக்குப் பயணிக்க,
உயர்ந்த மலைக்காற்று துருவம் நோக்கி ஓட்டமெடுக்க..
காற்றின் பயணத்திசைகள் இப்போது தெளிவாகின..
நிலநடுக்கோட்டுக்கு இருபக்கமும் காற்று நடுக்கோடு நோக்கியே வீசுவது புரியத்தொடங்கியது.
2) ஆனால் ஏன் வடக்காற்று வடகிழக்காய்? தென்காற்று தென்கிழக்காய்?
சற்றே சாய்ந்தபடி சுழலும் பூமியும் காற்றும் உரசுவதால், இந்த கீழைத்தன்மை காற்றின் பயணத்திசைக்கு..
3) மேலெழும்பி வரும் வடக்காற்றும், தென்காற்றும் சந்திக்கும் இடம்தான் - மோனநிலை தவழும் டோல்ட்ரம்.
மலைக்குகையின் இருள்மடியில்
தலைசாய்த்த இளவரசன்
மனங்கவர்ந்த காதலி
மடியில் இல்லை என மருகி
எறிந்த பெருமூச்சே
இரவின் பெருங்காற்று....
என அதுவரை கவிதையாய் உணரப்பட்ட காற்றுப் பிரசவம், அதன் பயணம்
ஹேட்லியின் ஆராய்ச்சி முடிவுகளால், சூரிய வெப்பம், பூமி உரசல் என
கவர்ச்சியற்ற அறிவியல் உண்மைகளாய் மாறின..
ஆனாலும் பல நல்ல ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்பட்ட '' உதாசீன நிலை''
ஹேட்லிக்கும் வாய்த்தது.
1793-ல் ஜான் டால்டன் ( அணுக்கொள்கை தந்த அதே டால்டன்
http://en.wikipedia.org/wiki/John_Dalton)..
ஹேட்லியின் கண்டுபிடிப்பை மறு -அறிவுபரப்பு செய்த பின்னரே
முன்னவருக்கு உரிய அங்கீகாரத்தை உலகம் அளித்தது..
நல்லவை உணரப்படாமலே மறைந்து விடுவது - பாபம்!
பின்னாளில் அவற்றை மறந்தும் விடுவது மகாபாபம்!!
ஹேட்லியை வாழவைத்த டால்டனுக்கு நன்றி சொல்லி
மைல்கல் நாயகர் ஹேட்லி நினைவைப் பாராட்டி முடிக்கிறேன்.