PDA

View Full Version : என்னுயிர் நீதானே!!!



aren
21-12-2007, 05:20 AM
உன் நினைவுகள்
என் மனதில் என்றும்
அசைபோடும்!!!

கொஞ்சி விளையாடியபோது
நாட்கள் நொடியில் பறந்தன!!!

பிணக்கத்துடன் கழிந்த நாட்களில்
நொடிகள் கடக்கவே மறுத்தன!!!

உன் மூச்சுக்காற்று
கோடைகாலத்தில் தென்றலாக மாறி
என்னை குளிர்வித்தது
அதுவே
குளிர்காலத்தில் அனலாக மாறி
என்னை குளிர்காய வைத்தது!!!

உன் வாயில் அமுதூறும் பொழுது
என் உதட்டில் வறட்சி தோன்றி
கார்கால மேகத்தை பார்க்கும்
மயிலைப் ஞாபகப்படுத்தியது!!!

என்றும் உன் நினைவுகள்
நீ என்னருகில் இல்லாவிட்டாலும்
என் மனதைவிட்டு நீங்காமல்
இன்றும் என்னுடன்
எனக்குள்ளே இருக்கும்
என்னுயிர் நீதானே!!!

kavitha
21-12-2007, 05:35 AM
ஆரென் அண்ணா நம்ப முடியவில்லை... உங்கள் கவிதை தானா இது? நான் எப்படி படிக்காமல் போனேன்? எளிமையாக, பிழைகளின்றி மிக நன்றாக இருக்கிறது.

ஓவியன்
21-12-2007, 05:51 AM
உயிரை இடம்மாற்றி
உறவை பகிர்ந்து கொள்ளும்
இந்த
அழகான காதலை
எப்படி எழுதினும்
அழகாக இருக்கிறதே.......

ஆரென் அண்ணா சில நாட்களாக உங்கள் கவிதையைக் காணாமல் நாமும் வானம் பார்த்து தோகைவிரிக்க காத்திருக்கும் கானமயிலாயிருந்தோம், இன்று வானம் மகிழ்ந்து வந்த கவித்துளி கண்டு சிறகு விரித்துக் குதுகலிக்கிறோம். :)

ஷீ-நிசி
21-12-2007, 05:57 AM
நிஜமாகவே நல்ல முன்னேற்றம் கவிதையில்...


வாழ்த்துக்கள் ஆரெனாரே1

பூமகள்
21-12-2007, 05:57 AM
அரென் அண்ணா..!

நீண்ட நாளுக்கு பின் உங்க கவிதை கண்டு அகமகிழ்கிறோம். உங்களின் கவிதை சொல்கட்டும் அர்த்தமும் பொதிந்து அசத்துகிறது. :)

பாராட்டுகள் அரென் அண்ணா.

இன்னும் நிறைய கவிதைகள் கொடுங்கள்.

வாழ்த்துகள். :icon_b:

உதயா
03-01-2008, 04:04 AM
காதலித்தால் கவிதைகள் தானாக வரும்... மோ?

நேசம்
03-01-2008, 05:29 AM
நான் படிக்கும் ஆரெனின் முதல் கவிதை.எளிமையாகவும் அழகாகவும் இருந்தது.வாழ்த்துகள் ஆரென் அவர்களே

james
03-01-2008, 05:45 AM
எளிமையான, அழகான கவிதை !!:)
பாராட்டுக்கள் !!!:)