View Full Version : காகிதப் பூ
ஆர்.ஈஸ்வரன்
20-12-2007, 09:50 AM
பூவாய் நானிருந்தும்
ஒரு பூக்கூட
என்னைத் தீண்டவில்லை
பூவாய் நானிருந்தும்
ஒரு பூக்கூட
என்னைத் தீண்டவில்லை
இக்கவிதையைப் படிகையில் நா.காமராசனின் "காகித மலர்கள்" தொகுப்பே என் ஞாபகத்திற்கு வருகிறது..
அரவானிகளைப் பற்றிய கவிதையின் தலைப்பாய் இட்டிருப்பார்..
காகித மலர்கள் தானே அவர்களும்..
வாழ்த்துக்கள் ஈஸ்வரன்..
-ஆதி
james
20-12-2007, 10:28 AM
ஆழமான வரிகள்..பாராட்டுகள்.
பூமகள்
20-12-2007, 10:33 AM
காகிதப் பூ..!!
மலர்ந்து மணம் காணாத
வண்ண மலர்கள்..
முதிர்கன்னிகளாய்..!
கன்னி மனம்
ஏங்கும் உணர்வு
இங்கு காகிதப்பூவாய்
என் கோணத்தில்..!!
நல்லதொரு கவி.. இதுபோல் சிறு கவிதைகளை குறுங்கவிதைகள் பகுதியில் பதியுங்கள் நண்பரே..!!
பாராட்டுகள் ஈஸ்வரன்.
ஆர்.ஈஸ்வரன்
21-12-2007, 03:19 AM
நன்றி. எழுதுகிறேன். இப்படி கலர் கலராய் எழுத என்ன செய்ய வேண்டும்
ஷீ-நிசி
21-12-2007, 03:37 AM
வெறும் வடிவங்கள்
நிஜம் ஆகிடாதே!
நிழல் என்றறிந்தும்
நிஜங்களுடன் ஒப்பிட்டது ஏனோ?!
நல்ல கற்பனை நண்பரே!
ஓவியன்
21-12-2007, 04:01 AM
பூவாய் நானிருந்தும்
ஒரு பூக்கூட
என்னைத் தீண்டவில்லை
வலிக்க வைக்கின்றன வரிகள்.....
வாழ்த்துக்கள் நண்பரே...!!
மனிதம் ஒரு பூவாக இருப்பின் இது முதிர்கன்னியைப் பற்றியது...
பூக்களோடு பூக்கள் கலந்து இருப்பினும் வித்தியாசங்களாகப் பிரிந்து சமூக நாற்றத்தில் உழன்று தவிக்கிறார்கள்... இது பலதரப்பட்ட மக்களைப் பற்றியது..
காகிதப்பூ!! - செயற்கையாக மனிதனின் கையில் விளைந்த பூ!!! இதற்கு இலைகளோ நீரோ காற்றோ எதுவுமே தேவையில்லை... மணப்பதும் இல்லை.... தீண்டத் தகாதிருப்பதன் ரகசியம் இதுவே!! எந்த நிலையிலும் இயற்கையோடு ஒத்துப் போவதில்லை...
ஷீ யின் அர்த்தப் பிடித்தம்.... இருவருக்கும் பாராட்டுக்கள்...
ஆர்.ஈஸ்வரன்
15-01-2008, 09:22 AM
[QUOTE=ஷீ-நிசி;312942]வெறும் வடிவங்கள்
நிஜம் ஆகிடாதே!
நிழல் என்றறிந்தும்
நிஜங்களுடன் ஒப்பிட்டது ஏனோ?!
QUOTE]
நிஜங்களை விட நிழல்களோடு தானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.