ஆர்.ஈஸ்வரன்
19-12-2007, 01:42 PM
இளைஞனே! வரதட்சணை வாங்கித்தான்
நம் வாழ்வை வளமாக்க முடியுமென்றால்
அவ்வாழ்வு நமக்குத் தேவைதானா?
ஒரு படகு நீரில் மிதக்க
இன்னொரு படகு நீரில் மூழ்க வேண்டுமா?
இன்று நித்ய கன்னியாய்
காலந்தள்ளும் கன்னிகளெத்தனை?
கேட்டால் குருபலம் அமையவேண்டுமேயென்பீர்
குருபலம் எங்கே அமையும்
கையில் பணமும், கழுத்தில் நகையும்
இருந்தால்தானே குருபலம் அமையும்
நமக்குப் பெண் வேண்டும்
திருமணமாகும்வரை அம்மா,பின் மனைவி
ஆனால் தனக்குப் பிறக்கும் குழந்தைமட்டும்
பெண்ணாய் இருக்கக்கூடாது - இது
எந்தவகையில் நியாயம் - இளைஞனே!
சிந்திப்போம், சபதமேற்போம்
வரதட்சணை வாங்குவதில்லையென்று!
நம் வாழ்வை வளமாக்க முடியுமென்றால்
அவ்வாழ்வு நமக்குத் தேவைதானா?
ஒரு படகு நீரில் மிதக்க
இன்னொரு படகு நீரில் மூழ்க வேண்டுமா?
இன்று நித்ய கன்னியாய்
காலந்தள்ளும் கன்னிகளெத்தனை?
கேட்டால் குருபலம் அமையவேண்டுமேயென்பீர்
குருபலம் எங்கே அமையும்
கையில் பணமும், கழுத்தில் நகையும்
இருந்தால்தானே குருபலம் அமையும்
நமக்குப் பெண் வேண்டும்
திருமணமாகும்வரை அம்மா,பின் மனைவி
ஆனால் தனக்குப் பிறக்கும் குழந்தைமட்டும்
பெண்ணாய் இருக்கக்கூடாது - இது
எந்தவகையில் நியாயம் - இளைஞனே!
சிந்திப்போம், சபதமேற்போம்
வரதட்சணை வாங்குவதில்லையென்று!