PDA

View Full Version : புலம்பெயர்வு..!



அமரன்
19-12-2007, 07:16 AM
வேரோரிடம்.
விழுதுகளோ வேறோரிடம்.
உச்சிகள் வெட்டப்பட்ட
விருட்சங்கள்போல நாம்..

எமது நிழல்களில்
உயிரிகள் பல இழைத்துக்கொண்டு
அவர்களில்
நாம் இளைப்பாறிக்கொண்டு..!

யார் சொன்னது
அகதிகள் நாம் என்று.

ஆதி
19-12-2007, 07:26 AM
புலம்பெயர்ந்தாலும்..
பிறந்த பூமியில்தான்
இன்னும் இருக்கிறது
எங்கள் வேர்கள்..
இன்னொரு விருட்சம் வளர்க்க..

அழுகையின் நகல்களாய்
அகதி என்கிறப் பெயரில்
நாங்கள்..

ஈரமூறிய வரிகளைத் தந்த அமருக்கு வாழ்த்துக்கள்..

-ஆதி

ஆர்.ஈஸ்வரன்
09-01-2008, 10:51 AM
வாழ்த்துக்கள்..

அறிஞர்
12-01-2008, 05:08 PM
புலம் பெயர்வின் தாக்கத்தை கூறிய வரிகள்
மனதை கனமாக்கி சிந்திக்க வைக்கிறது...

அமரன்
12-01-2008, 06:07 PM
அகதி வாழ்க்கையில் எத்தனையோ அசௌகரியங்கள் இருந்தாலும், மனதுக்கு ஆறுதல் தரும் விடயங்களும் அடங்கியுள்ளன. அதை சொல்லவிழைந்தேன்.. ஊட்டமிட்ட அனைவருக்கும் எனது நன்றி..