தீபன்
17-12-2007, 02:19 PM
பல்கலைக்கழகம் முடித்து வெளியேறும்போது நடைபெறும் ஒன்றுகூடல் வைபவத்தில் பகிர்ந்துகொண்ட உணர்வுகளை இப்போது மன்ற நண்பர்களுடன் மீட்டிப் பார்க்கிறேன் - நண்பர்களும் பழைய நினைவுகளை அசைபோட இது வழிசெய்யுமென்ற நம்பிக்கையுடன்.
பல்கலை வாழ்வில்...
தவழ் பருவம் தாண்டி
தத்தி நடைபயின்றபோது
தொடங்கியது...
அன்னையின் கைபிடித்து
அயலவர் துணையெடுத்தபோது
ஆரம்பித்தது...
அப்பொழுதெல்லாம்
அவனும் அவளும்
அவர்களாகவே இருந்தார்கள்..!
காலங்கள்
வித்தைக்கும் விளையாட்டுக்கும் மட்டுமே
விரையாமாகின...!
பதின்ம வயதுகளின் தொடக்கம்...
பள்ளிப்பருவ மயக்கம்...
புள்ளிக்கோலமாயிருந்த வாழ்க்கை
வர்ண்ஜாலமாகி வானவில்லாக்கியது..!
ஆண் பெண் பேதம் கண்டு
தனித்தனி வேதம் வகுத்தது...!
நட்புக்கும் காதலுக்கும்
விளக்கம் தெரியாது
தயக்கம் கொண்டது...
உடற்கவர்ச்சி உயர்வாக
இனக்கவர்ச்சி தினவாக
நிஜமறியா நிழலே நிகழ்வாகியது..!
மயக்கங்களூடே கல்வியில் தேறி
வாலிபத்தின் உச்சத்தில் வளாகத்தை எட்டியபோது
பல்கலை என்ற பதத்தின் அர்த்தங்கள் புரியலானது...!
ஆண் பெண் கலப்பின்றி
தனி தனியாய் கற்றவர்களும்,
ஆணொடு பெண்ணாய்
கலவனாய் பயின்றவர்களும்,
பல்கலை புகுந்தபோது
பலவித உணர்வுகள்�
கூச்சத்தோடு பலர்...
கூட்டமாகச் சிலர்...
மேற்படிப்புக்கென்றுதான் வந்தோம் அன்று...
மேலான வாழ்வையும் படித்துவிட்டோம் இன்று..!
கற்றல் என்பதையும் தாண்டி
சுற்றம் என்பதை உணர்ந்தோம்!
புதிதாக பல உறவுகள்...
புதிராக சில நிகழ்வுகள்..!
தனியாக வந்தவர்களெவரும்
தனியாகச் செல்லவில்லை...
துணையின்றி நுளைந்த எவரும்
துணையின்றி போகவில்லை..!
நாலாண்டு நட்போடு
கரைகடந்த காதலோடு
புதிய உறவுகள்
பூத்துக் குலுங்குகிறது...
அறிமுக காலங்களில்
அனல் தெறிக்க பேசியவர்களும்
இடைப்பட்ட காலங்களில்
இடர்பல புரிந்தவர்களும்
இறுதி நாள் இன்று
கண்ணீரோடுதான் கலந்திருக்கின்றனர்..!
நட்பின் பலம் அது...!
சேர்ந்திருக்கையில் தெரியாத சேதி
பிரியும்போது பதைக்க செய்யும்...
போட்ட சண்டைகள்
பசுமை நினைவுகளாய்
பழசை கிளறும்...
சண்டைகளின் மூலமும்
நட்பில் கொண்ட உரிமையே என்ற
உண்மய் புரியும்...
சமுதாய சாக்கடையில்
மீழாத சமூகத்தில்
ஆண் பெண் நட்பு
ஆட்டங்காணப்போவதை நினைத்து
மருகும்...!
மறுவளமாய்,
நட்பென்று நினைத்த பல
அதைத்தாண்டி நடக்கும்...
தப்பென்று சொல்வதற்கில்லை
தகுந்தவர்கள் செய்வதானால்...
பல்கலைய்யில் ஒரு கலையாய்
காதலையும் பலர் கற்றார்�
பாஸ் பண்ணினதென்னவோ சிலர்தான்!
அரியஸ் வைத்து சிலர்
ஆசையிருந்தும் ஆச்சாரம் பார்த்து இன்னும் சிலர்...
தேர்வுக்கு தோற்றாமலேயே தோற்றுப் பலர்..!
நட்பென்ற பெயரில்
வந்த காதலுக்கு வய்ப்பூட்டு போட்டனர்...
தப்பென்று சொல்லி
கொண்ட காதலை கொன்று போட்டனர்...
துணிந்து சிலர் கிளர்ந்து எளுந்தனர்
கனிந்த காதலை கனியாக்கி மகிழ்ந்தனர்!
வாலிப ஆற்றுக்கு வாய்க்கால் அமைத்தனர்
வாழ்க்கைப் பயிரை வளமாய் வளர்த்தனர்!
நான்காண்டுகளுக்கு முன்னர்,
வரும்ப்போது நாம் ஏழைகள்தான்...
எம்மிடம் எதுவுமில்லைத்தான்...
படிப்பில்லை, பக்குவமில்லை
முதிர்ந்த நட்பில்லை,
கனிந்த காதலில்லை...
இருந்ததெல்லாம்
கோபமும் வேகமும்தான்!
இன்று,
எல்லாம் அடைந்த
ஏற்றம் மிகுந்தவர்களானோம்!
புதிய நட்புகள்
புதிய உறவுகள்
வாழ்க்கை நீட்டிப்பிற்கும்
வரமாயமைந்த துணைகள்...!
வாழ்வேட்டின்
முதன்மை அத்தியாயம் முடிவடைகிறது...
காலப்பயணத்தின் பிரதனபாதை
நிறைவடைகிறது..!
வளங்களும் வசந்தங்களும் நிறைந்த
வாழ்வை விட்டு
வம்புகளும் வன்மங்களும் நிறைந்த எதிர்காலத்தில்
நுழைகிறோம்..!
இந்நாளில்
மீட்டிப் பார்ப்போம் நம்
வசந்த காலங்களை...
ஆய்ந்து பார்ப்போம் நம்
பல்கலைப் பேறுகளை...!
பல்கலை வாழ்வில்...
தவழ் பருவம் தாண்டி
தத்தி நடைபயின்றபோது
தொடங்கியது...
அன்னையின் கைபிடித்து
அயலவர் துணையெடுத்தபோது
ஆரம்பித்தது...
அப்பொழுதெல்லாம்
அவனும் அவளும்
அவர்களாகவே இருந்தார்கள்..!
காலங்கள்
வித்தைக்கும் விளையாட்டுக்கும் மட்டுமே
விரையாமாகின...!
பதின்ம வயதுகளின் தொடக்கம்...
பள்ளிப்பருவ மயக்கம்...
புள்ளிக்கோலமாயிருந்த வாழ்க்கை
வர்ண்ஜாலமாகி வானவில்லாக்கியது..!
ஆண் பெண் பேதம் கண்டு
தனித்தனி வேதம் வகுத்தது...!
நட்புக்கும் காதலுக்கும்
விளக்கம் தெரியாது
தயக்கம் கொண்டது...
உடற்கவர்ச்சி உயர்வாக
இனக்கவர்ச்சி தினவாக
நிஜமறியா நிழலே நிகழ்வாகியது..!
மயக்கங்களூடே கல்வியில் தேறி
வாலிபத்தின் உச்சத்தில் வளாகத்தை எட்டியபோது
பல்கலை என்ற பதத்தின் அர்த்தங்கள் புரியலானது...!
ஆண் பெண் கலப்பின்றி
தனி தனியாய் கற்றவர்களும்,
ஆணொடு பெண்ணாய்
கலவனாய் பயின்றவர்களும்,
பல்கலை புகுந்தபோது
பலவித உணர்வுகள்�
கூச்சத்தோடு பலர்...
கூட்டமாகச் சிலர்...
மேற்படிப்புக்கென்றுதான் வந்தோம் அன்று...
மேலான வாழ்வையும் படித்துவிட்டோம் இன்று..!
கற்றல் என்பதையும் தாண்டி
சுற்றம் என்பதை உணர்ந்தோம்!
புதிதாக பல உறவுகள்...
புதிராக சில நிகழ்வுகள்..!
தனியாக வந்தவர்களெவரும்
தனியாகச் செல்லவில்லை...
துணையின்றி நுளைந்த எவரும்
துணையின்றி போகவில்லை..!
நாலாண்டு நட்போடு
கரைகடந்த காதலோடு
புதிய உறவுகள்
பூத்துக் குலுங்குகிறது...
அறிமுக காலங்களில்
அனல் தெறிக்க பேசியவர்களும்
இடைப்பட்ட காலங்களில்
இடர்பல புரிந்தவர்களும்
இறுதி நாள் இன்று
கண்ணீரோடுதான் கலந்திருக்கின்றனர்..!
நட்பின் பலம் அது...!
சேர்ந்திருக்கையில் தெரியாத சேதி
பிரியும்போது பதைக்க செய்யும்...
போட்ட சண்டைகள்
பசுமை நினைவுகளாய்
பழசை கிளறும்...
சண்டைகளின் மூலமும்
நட்பில் கொண்ட உரிமையே என்ற
உண்மய் புரியும்...
சமுதாய சாக்கடையில்
மீழாத சமூகத்தில்
ஆண் பெண் நட்பு
ஆட்டங்காணப்போவதை நினைத்து
மருகும்...!
மறுவளமாய்,
நட்பென்று நினைத்த பல
அதைத்தாண்டி நடக்கும்...
தப்பென்று சொல்வதற்கில்லை
தகுந்தவர்கள் செய்வதானால்...
பல்கலைய்யில் ஒரு கலையாய்
காதலையும் பலர் கற்றார்�
பாஸ் பண்ணினதென்னவோ சிலர்தான்!
அரியஸ் வைத்து சிலர்
ஆசையிருந்தும் ஆச்சாரம் பார்த்து இன்னும் சிலர்...
தேர்வுக்கு தோற்றாமலேயே தோற்றுப் பலர்..!
நட்பென்ற பெயரில்
வந்த காதலுக்கு வய்ப்பூட்டு போட்டனர்...
தப்பென்று சொல்லி
கொண்ட காதலை கொன்று போட்டனர்...
துணிந்து சிலர் கிளர்ந்து எளுந்தனர்
கனிந்த காதலை கனியாக்கி மகிழ்ந்தனர்!
வாலிப ஆற்றுக்கு வாய்க்கால் அமைத்தனர்
வாழ்க்கைப் பயிரை வளமாய் வளர்த்தனர்!
நான்காண்டுகளுக்கு முன்னர்,
வரும்ப்போது நாம் ஏழைகள்தான்...
எம்மிடம் எதுவுமில்லைத்தான்...
படிப்பில்லை, பக்குவமில்லை
முதிர்ந்த நட்பில்லை,
கனிந்த காதலில்லை...
இருந்ததெல்லாம்
கோபமும் வேகமும்தான்!
இன்று,
எல்லாம் அடைந்த
ஏற்றம் மிகுந்தவர்களானோம்!
புதிய நட்புகள்
புதிய உறவுகள்
வாழ்க்கை நீட்டிப்பிற்கும்
வரமாயமைந்த துணைகள்...!
வாழ்வேட்டின்
முதன்மை அத்தியாயம் முடிவடைகிறது...
காலப்பயணத்தின் பிரதனபாதை
நிறைவடைகிறது..!
வளங்களும் வசந்தங்களும் நிறைந்த
வாழ்வை விட்டு
வம்புகளும் வன்மங்களும் நிறைந்த எதிர்காலத்தில்
நுழைகிறோம்..!
இந்நாளில்
மீட்டிப் பார்ப்போம் நம்
வசந்த காலங்களை...
ஆய்ந்து பார்ப்போம் நம்
பல்கலைப் பேறுகளை...!