வசீகரன்
15-12-2007, 12:51 PM
நிஜமன்றி நீடித்தது நிமிடங்கள்....
நிழலிடை பாரித்தது நீர்த்துளிகள்....
இதயக்கூடு ஒருங்கே இனங்க மறுத்த
இணக்கமற்ற சூழல்...
ஆற்றாமை ஆர்ப்பறித்த அவல நிலை...
அழுகை நிலையில் என் தனிமை....!
சூடு சொற்களில் எனைசுட்டு விட்டாள்....
சூட்டின் வேகம் என் கைகள்....
அவள் கன்னத்தில் தீண்டிவிட்டது...!
வெடித்து சிதறி வெளிச்சென்று விட்டாள்
போடா நீயும் வேண்டாம்... உன் காதல்
புன்ணாக்கும் வேண்டாம்....!
போயே விட்டாள்... !
அகன்று சென்ற பிறகுதான்.... அருகாமையை
மனம் தேடியது....
மழலைமுகத்தை மனம் நாடியது....!
கோபம் சென்ற இடம் தெரியவில்லை...
கோர்வை காட்சிகள்
கோடிட்டிட முடியவில்லை...!
என்னுடன் என்றும் உரிமையாக
சண்டையிடுவாள்...
என் செல்லக்குறும்புகளை சேமித்து
வெட்கப்புன்னகைகளாய்
வெளித்தருவாள்...!
நான் சேமித்த செல்வமாக அவள்
புன்னகையை எண்ணியிருந்தேன்....!
வெற்று புன்னகைகளை பெற்றிருந்த
நேரங்களில்.... வேதனை புண்களை...
உற்றிருந்த காலங்களில்...!
முழுப்பெற்ற மலரது கொண்ட மலர்ச்சியை
முகம்தனில் நிறைந்து..... கடலென விரிந்த
கடாஷம் கண்களில் உறைந்து....
விரல்களால் தலைகோதி....
மனதினின்பாரம் மட்டினில்
மறைந்திட மார்போடு எனை
அனைத்துக்கொண்டவளே...!
மறந்து விடவில்லையடி மனம் நிறைத்த
மாலை வேலைகளை.... மறந்தனையோ....
மதியின் மடியில் மையல்
கதை பேசிய வேளைகளை....!
உனை கேட்டு உழலும் உள்ளம் உறைந்து
போகிறது..... உயிரே.... உடனே வந்து விடு...
என் இரு கைகள் விரித்து நின்று விடுகிறேன்....
உன் கோபம் குறையுமட்டும் என்னை....
கொடுங்கோல் புரிந்து விடு....!
கோபம் உனை வெல்லுமாயின்
எவ்வளவேணும் எனை வென்றுவிடு
தாங்கிக்கொள்கிறேன்.....!
தாபம் உனை வெல்லுமாயின்...
தயங்காமல் வந்துவிடு
இருகைகள் இணைகொண்டு இன்முகத்துடன்
ஏந்திக்கொள்கிறேன்....!
நிழலிடை பாரித்தது நீர்த்துளிகள்....
இதயக்கூடு ஒருங்கே இனங்க மறுத்த
இணக்கமற்ற சூழல்...
ஆற்றாமை ஆர்ப்பறித்த அவல நிலை...
அழுகை நிலையில் என் தனிமை....!
சூடு சொற்களில் எனைசுட்டு விட்டாள்....
சூட்டின் வேகம் என் கைகள்....
அவள் கன்னத்தில் தீண்டிவிட்டது...!
வெடித்து சிதறி வெளிச்சென்று விட்டாள்
போடா நீயும் வேண்டாம்... உன் காதல்
புன்ணாக்கும் வேண்டாம்....!
போயே விட்டாள்... !
அகன்று சென்ற பிறகுதான்.... அருகாமையை
மனம் தேடியது....
மழலைமுகத்தை மனம் நாடியது....!
கோபம் சென்ற இடம் தெரியவில்லை...
கோர்வை காட்சிகள்
கோடிட்டிட முடியவில்லை...!
என்னுடன் என்றும் உரிமையாக
சண்டையிடுவாள்...
என் செல்லக்குறும்புகளை சேமித்து
வெட்கப்புன்னகைகளாய்
வெளித்தருவாள்...!
நான் சேமித்த செல்வமாக அவள்
புன்னகையை எண்ணியிருந்தேன்....!
வெற்று புன்னகைகளை பெற்றிருந்த
நேரங்களில்.... வேதனை புண்களை...
உற்றிருந்த காலங்களில்...!
முழுப்பெற்ற மலரது கொண்ட மலர்ச்சியை
முகம்தனில் நிறைந்து..... கடலென விரிந்த
கடாஷம் கண்களில் உறைந்து....
விரல்களால் தலைகோதி....
மனதினின்பாரம் மட்டினில்
மறைந்திட மார்போடு எனை
அனைத்துக்கொண்டவளே...!
மறந்து விடவில்லையடி மனம் நிறைத்த
மாலை வேலைகளை.... மறந்தனையோ....
மதியின் மடியில் மையல்
கதை பேசிய வேளைகளை....!
உனை கேட்டு உழலும் உள்ளம் உறைந்து
போகிறது..... உயிரே.... உடனே வந்து விடு...
என் இரு கைகள் விரித்து நின்று விடுகிறேன்....
உன் கோபம் குறையுமட்டும் என்னை....
கொடுங்கோல் புரிந்து விடு....!
கோபம் உனை வெல்லுமாயின்
எவ்வளவேணும் எனை வென்றுவிடு
தாங்கிக்கொள்கிறேன்.....!
தாபம் உனை வெல்லுமாயின்...
தயங்காமல் வந்துவிடு
இருகைகள் இணைகொண்டு இன்முகத்துடன்
ஏந்திக்கொள்கிறேன்....!