பிச்சி
07-12-2007, 05:23 AM
இந்திரனின்
கொடிபடர்ந்த விழிகளினுள்
சுவை புரண்டு
திரண்ட கண்ணீர்
மழை.
முகில் வயிற்றில்
கருவாய் முளைத்து
ஊடல் மிகுந்து
உடைந்து போய்த்
தெறிக்கும் இரத்தம் - மழை.
கறையின்றி புலரும்
பொழுதொன்றில்
நிறமற்ற பூக்கள் தேடி
புன்னகை துளைக்கும்
பொய்கை - மழை.
வானமேடையில்
நெஞ்சவிழ்த்து
சோகம் பாடி அரற்றும்
களிக்கூத்து - மழை.
யாசகம் கேட்டு
கிளை நீட்டும்
புவியரங்கில்
ஈர்ந்தமிழ் கவி பேசும்
கவிப்பேரிளம்பெண் - மழை.
அவ்வகை
மழை தவிர்க்கும்
மாந்தர் கூட்டங்கள்,
நில ஓடையில்
நீந்தவியலா மீன்குஞ்சுகள்.
கொடிபடர்ந்த விழிகளினுள்
சுவை புரண்டு
திரண்ட கண்ணீர்
மழை.
முகில் வயிற்றில்
கருவாய் முளைத்து
ஊடல் மிகுந்து
உடைந்து போய்த்
தெறிக்கும் இரத்தம் - மழை.
கறையின்றி புலரும்
பொழுதொன்றில்
நிறமற்ற பூக்கள் தேடி
புன்னகை துளைக்கும்
பொய்கை - மழை.
வானமேடையில்
நெஞ்சவிழ்த்து
சோகம் பாடி அரற்றும்
களிக்கூத்து - மழை.
யாசகம் கேட்டு
கிளை நீட்டும்
புவியரங்கில்
ஈர்ந்தமிழ் கவி பேசும்
கவிப்பேரிளம்பெண் - மழை.
அவ்வகை
மழை தவிர்க்கும்
மாந்தர் கூட்டங்கள்,
நில ஓடையில்
நீந்தவியலா மீன்குஞ்சுகள்.