PDA

View Full Version : உலகமானவளே...!



யாழ்_அகத்தியன்
06-12-2007, 03:16 PM
உன்னை நாளையும் சந்திக்கலாம்
என்ற சந்தோசத்தைவிட இன்றும்
உன்னைப் பிரிவதே கொடிது

*

நம் முதல் சந்திப்பை
பற்றி யாரிடமாவது பேச
நினைக்கும் போதெல்லாம்
வாயடைத்துவிடுகிறது நம்
முதல் பிரிவு

*

ராஜ்மகாலில் கூட
கடைசியாக நின்றாலும்
நுழைந்துவிடலாம்

யாருமே காத்திராத
உன் வீடுதான்

என்னை நுழைய விடாது
உலக அதிசயமாய் தெரிகிறது

*

எப்பதான் எனை
உன் வீட்டுக்கு
கூட்டிச் செல்லப்
போகிறாய்

நான்
முதல் முதலாய்
வாங்கிக் கொடுத்த
பொம்மை
கிழவியான பிறகா..?

*

உன்னைப் பார்த்தால்
யாருக்கும் அலுக்காதுதான்

அதற்காக உன்னை உன்
வீட்டிலே வைத்திருந்தா

என் கண்கள் சும்மாவிடுமா..?


-யாழ்_அகத்தியன்

ஆதி
06-12-2007, 05:00 PM
அத்தனை வரிகளுமே அசத்தல்,

குறிப்பாக இவ்வரிகள் அருமை..

ராஜ்மகாலில் கூட
கடைசியாக நின்றாலும்
நுழைந்துவிடலாம்

யாருமே காத்திராத
உன் வீடுதான்

என்னை நுழைய விடாது
உலக அதிசயமாய் தெரிகிறது

உங்கள் காதல் கவிதைகளில் மென்மையும் ஈரமும் சமவிழுக்காடு கலந்துள்ளது..

பாராட்டுக்கள்..

-ஆதி

யாழ்_அகத்தியன்
06-12-2007, 05:09 PM
அத்தனை வரிகளுமே அசத்தல்,

குறிப்பாக இவ்வரிகள் அருமை..

ராஜ்மகாலில் கூட
கடைசியாக நின்றாலும்
நுழைந்துவிடலாம்

யாருமே காத்திராத
உன் வீடுதான்

என்னை நுழைய விடாது
உலக அதிசயமாய் தெரிகிறது

உங்கள் காதல் கவிதைகளில் மென்மையும் ஈரமும் சமவிழுக்காடு கலந்துள்ளது..

பாராட்டுக்கள்..

-ஆதி


உங்க ஈரமான வாழ்த்துக்கு மிக்க நன்றி

இலக்கியன்
09-12-2007, 10:30 AM
அகத்தியன் காதல் கவிதைகளால் கலக்கிகின்றீர்கள் வாழ்த்துக்கள்

ஷீ-நிசி
09-01-2008, 12:58 AM
ரொம்ப நன்றாக உள்ளது கவிதை... வாழ்த்துக்கள் நண்பரே!

சின்ன சந்தேகம்.. ராஜ்மகாலா.. தாஜ்மகாலா?