யாழ்_அகத்தியன்
05-12-2007, 01:52 PM
நீ எழுதும்
கவிதை அழகுதான்
அதற்காக
யார்
கண்ணையும்
நம்பி என்னைக்
கைவிட்டுவிடாதே
*
நீ
இல்லாத
தருணங்களில்
வாடிப்போகும்
எனக்காக
நீ கொடுத்த
பூச்செடிதான்
என்னை
மலரவைத்துக்
கொண்டிருக்கிறது
*
எதுவும் கேக்காமலே
என் மடியில் நீ
உறங்கியபோதுதான்
தெரிந்தது
உன் அன்பின் ஏக்கம்
அதற்காக
உன் குழந்தைதனத்தை
கையிலுமா வைத்திருப்பாய்
என்னை பிடித்தவாறே
உறங்குகிறாய்
*
எவ்வளவு அவசரமாய்
வாசல் கடக்கையிலும்
உன்னை
ஞாபகப்படித்தி
விடுகிறது
முதல் முதல் சந்திப்பில்
நான் வரும்வரை நீ
சாய்ந்து நின்ற வீதிச்சுவர்
*
நீ பிரியும்போது
கவனமாய் இரு என்று
சொன்னதற்கு பதிலாய்
உன் வலதுகையை
கொடுத்துவிட்டு
போயிருக்கலாம்
என்னை பிரியவிடாது
அணைத்துக் கொண்டிருந்திருக்கும்
-யாழ்_அகத்தியன்
கவிதை அழகுதான்
அதற்காக
யார்
கண்ணையும்
நம்பி என்னைக்
கைவிட்டுவிடாதே
*
நீ
இல்லாத
தருணங்களில்
வாடிப்போகும்
எனக்காக
நீ கொடுத்த
பூச்செடிதான்
என்னை
மலரவைத்துக்
கொண்டிருக்கிறது
*
எதுவும் கேக்காமலே
என் மடியில் நீ
உறங்கியபோதுதான்
தெரிந்தது
உன் அன்பின் ஏக்கம்
அதற்காக
உன் குழந்தைதனத்தை
கையிலுமா வைத்திருப்பாய்
என்னை பிடித்தவாறே
உறங்குகிறாய்
*
எவ்வளவு அவசரமாய்
வாசல் கடக்கையிலும்
உன்னை
ஞாபகப்படித்தி
விடுகிறது
முதல் முதல் சந்திப்பில்
நான் வரும்வரை நீ
சாய்ந்து நின்ற வீதிச்சுவர்
*
நீ பிரியும்போது
கவனமாய் இரு என்று
சொன்னதற்கு பதிலாய்
உன் வலதுகையை
கொடுத்துவிட்டு
போயிருக்கலாம்
என்னை பிரியவிடாது
அணைத்துக் கொண்டிருந்திருக்கும்
-யாழ்_அகத்தியன்