PDA

View Full Version : வண்டுகளும் பூவும்.. மூன்றடியார் கவிதைகள்..



rambal
03-04-2003, 12:03 PM
என் அருமை நண்பரின் கவிதைகள்..நான் வைத்திருக்கும் செல்லப்பெயர் மூன்றடியார்..
அப்படி ஒரு மோகம் மூன்று வரிக் கவிதைகள் மீது...
அப்படி நான் ரசித்த அவரின் கவிதைகள் உங்கள் பார்வைக்கு..



பல வண்டுகள் தேன் குடிக்க
மலர் மட்டும் பூஜை அறையில்
பல ஆண்கள் சுவைத்த அவளோ?



(பின் குறிப்பு: இதைப் படித்த பொழுது இந்த விஷயத்தையும் இப்படி சொல்ல முடியுமா என்ற வியப்புத்தான் என்னிடம்)

இளசு
03-04-2003, 01:18 PM
பலபூவில் சேகரித்தும் சிறுதுளிதான் தேன் தேறும்
பலமான கருத்துகளும் சிறுவரியால் சுவையூறும்.
தந்த நண்பர் நாரதருக்கு பாராட்டுகள்.

anushajasmin
03-04-2003, 01:18 PM
சரியான முரண்பாடு இது... அதை தொலை நோக்கு பார்வையில் சிந்தித்த
நண்பருக்கு பாராட்டுகள்

Narathar
10-04-2003, 07:16 AM
நாராயனா!! நாராயனா!!!