PDA

View Full Version : முப்பதினாயிரம் நெருங்கும் லொள்ளுவாத்தி&



lolluvathiyar
05-12-2007, 10:15 AM
முப்பதினாயிரம் நெருங்கும் லொள்ளுவாத்தியார்

மன்ற நன்பர்களே


மனு நீதி காத்த
விர புறமுதுகிட்ட
மகா கஞ்சன்
மாவீரன் லொள்ளுவாத்தியார்

சிறந்த துப்பறியும் வீரன்
லைசன்ஸ் டு கில் பெற்ற
அமரன் கூட்டனியில்
இதயத்தை கலக்கிடும்
லொள்ளுவாத்தியார் 007

கஞ்சாதி கஞ்சன்
லொள்ளாதில் லொள்ளன்
லொள்ளுவாத்தியார்

அவர்கள்
இன்னும் சில நாளில்
30000 −−−−−−−−−−−−−எட்டவிருகிறார்.
அவர் மேலும் மேலும் பல −−−−−−−−−−− அடைய வாழ்த்து கூறும் ?

என்ன உடனே என் போஸ்டிங்கை பார்கிறீர்களா? அட என்னபா இது லொள்ளுவாத்தியாரை யாருமே நம்பரதில்லையா?
என்ன தனக்கு தானே வாழ்த்திகிறாரேனு பாக்கரீங்களா? (பின்ன நாம தான நம்மை வாழ்த்திகனும், ஏதாவது சாதனை செய்திருந்தாதான் இந்த பகுதியில் மத்தவங்க வாழ்த்துவாங்க)

இன்னும் குழப்பம் தீரலியா?
3000 பதிவு கூட எட்டாத லொள்ளுவாத்தியா எப்பப்பா 30000 எட்ட போறார்னு பூமகள் கொதிக்கரங்க போல தெரியுது.
ம்ஹூம் லொள்ளுவாத்தியார் பேரன் வந்து தான் 30000 பதிவாக்கனும்னு அக்னி புலம்பராரு போல இருக்கு.

நான் சொன்னனா? இல்ல நான் 30000 பதிவுனு சொன்னனா, நல்லா பாத்தீங்களா நான் 30000 −−−−−− தானே சொன்னேன்.
அது என்னப்பா −−−−−−−−−−−−− உ அப்படினு அன்புரசிகன் கேட்டதுக்காக சொல்லறேன்.












அது வேற ஒன்னும் இல்லீங்க இபணம் தானுங்க. ஆமாங்க இன்னும் 1000 கிடைச்சா 30000 இபணம் எட்ட போறேனுங்க.
நெனப்புதான் பொழப்ப கெடுக்கும்னு சிவா ஜி இந்த நேரத்துல எதுக்கு சொல்லனும்.
மவனே நீ எப்படி வாங்கிருவேனு பாத்துகறேன் − இது ஆதவா சவால்.
அட கஞ்சா கொடுத்தானே இபணம் கழியும் நு நம்ம மலரு சொல்லுதுங்கோ
அது ரொம்ப சிம்பிள் இந்த மாபெரும் பதிவை பார்த்து அறிஞர் அவர்கள் எனக்கு 2000 இபணம் தருவாருனு நானே நினைச்சுக்க வேண்டியதுதான்.

கஞ்சாதி கஞ்சன்
1 இபணம் மட்டும் வழங்கும்
அஞ்சா நெஞ்ச கருமி
லொள்ளுவாத்தியார் வாழ்க
(ஜூட்)

நேசம்
05-12-2007, 10:20 AM
வாத்தியரன்ன 1147.8 நமக்கு தள்ளுங்க.அப்புறம் அறிஞர் 2000? கொடுக்கும் போது நிங்க சொன்ன இலக்கை எட்டலாம்.இல்ல கூட போயிடும்.வாத்தி சொன்ன கர்க்டா இருக்கணும்

அக்னி
05-12-2007, 10:24 AM
இது என்ன கொடுமை வாத்தி...?
அடடா... வாத்திக்கு வாழ்த்துப் போடத் தவறிவிட்டதால், அவர் தனக்குத்தானே பதிவிட்டு ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றாரோ என்று, கவலையுடன் எட்டிப் பார்த்தால்,
இப்படி வெறுப்பேற்றுகின்றாரே....
சரி சரி... வாத்தியார் 30000 நெருங்க என்னிடம் மீதமாக இருக்கும் அனைத்து iCash ஐயும் அன்புடன் அளிக்கின்றேன்...

அன்புரசிகன்
05-12-2007, 10:27 AM
அடக்கடவுளே.... 30000 வரூதா?? அறிஞரிடம் 2000 வாங்கி வாத்தியாரின் எதிரியின் அளவிலும் விஞ்சுவதற்கு பார்க்கிறார்... :D :D :D

lolluvathiyar
05-12-2007, 10:32 AM
எதிரியின் அளவிலும் விஞ்சுவதற்கு பார்க்கிறார்... :D :D :D

அது யார் அந்த எதிரினு கவனிச்சீங்களா? அதான் நம்ம தேடீட்டு இருக்கும் ?.
இன்னும் 1000 பிடிச்சா போதும் அவர மிஞ்சிரலாம்

அன்புரசிகன்
05-12-2007, 10:35 AM
அது யார் அந்த எதிரினு கவனிச்சீங்களா?


அவர் தான் பெருங்காயம் எனும் பெரும் காயங்களை ஏற்படுத்தவல்ல ரசாயன வெடிபொருளை தயாரிப்பவர்..... எருமைக்கு லாடம் கட்டியவர். :lachen001:

யவனிகா
05-12-2007, 11:39 AM
எங்க ஊருல மொய் விருந்து வெப்பாங்க...அது போல இது மொய்த்திரியா?

என்ன கொடும இது...
யாராவது கேளுங்களேன்...

பூ நீ கேளேன்...
மலரு நீ கேளேன்...
சுகு நீயாவது கேளேன்...
(நேத்துத் தான் பொல்லாதவன் படம் பாத்தேன்...அதோட* பாதிப்பு தான் இது)

இருந்தாலும் அண்ணணோட அஞ்சா நெச்சத்தைப் பாராட்டி அவருக்கு ஆயிரம் இ.பணம் அன்பளிப்பாத் தரேன். யவனிகா முதன் முதலா எங்கூரு வாத்தியாருக்குத்தான் அன்பளிப்பு தர்றதால,
எல்லாரும் ஒருமுறை கைதட்டி அவங்க அவங்க பாராட்டை இருந்த இடத்திலிருந்தே தெரிவிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஜெயாஸ்தா
05-12-2007, 11:54 AM
டும்...டும்...டும்... இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்...... வாத்தியாரின் அழுகாச்சியின் காரணமாக அவருக்கு 440 இணையகாசுகள் கொடுத்து அவரை 30000த்தை தொடவைத்த பெருமை இந்த ஜெயாஸ்தவையே சாரும்.......! (ம்...நாங்கள்ளலாம் வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத பரம்பரயைச் சேர்ந்தவர்கள்....)

இதயம்
05-12-2007, 12:02 PM
அது யார் அந்த எதிரினு கவனிச்சீங்களா? அதான் நம்ம தேடீட்டு இருக்கும் ?.
இன்னும் 1000 பிடிச்சா போதும் அவர மிஞ்சிரலாம்

அடச்சே.... இதெல்லாம் ஒரு பொழைப்பு..!! இதுக்கு பழனிமலை அடிவாரத்துல உட்கார்ந்து பிச்சையெடுக்கலாமே..!! இந்த பிச்சைக்காரருக்கு ஃபைனான்ஸ் பண்றதுக்கும் ஆளுங்க இருக்கிறதை பார்த்தாதான் எனக்கு சிரிப்பு, சிரிப்பா வருது..!! :D:D

அன்புரசிகன்
05-12-2007, 12:02 PM
ஆனாலும் யாரும் அவரது எதிரியை தொடுவதற்கு உதவவில்லையே....

அன்புரசிகன்
05-12-2007, 12:04 PM
எனக்கு சிரிப்பு, சிரிப்பா வருது..!! :D:D

தப்பில்ல.. சிரிச்சிடுங்க....

சிவா.ஜி
05-12-2007, 12:07 PM
ஆனாலும் யாரும் அவரது எதிரியை தொடுவதற்கு உதவவில்லையே....

அப்றம் நாப்பதாயிரம் தொடும் லொள்ளுவாத்தின்னு இன்னொரு திரியைக் கொளுத்திப்போட்டு அப்பாவி அக்னி,தாரளத் தங்கை யவனிகா,வள்ளல் ஜெயஸ்தா...இவங்ககிட்டருந்து இ-பணத்தை லவுட்டுவாரே.....!!!1

ஜெயாஸ்தா
05-12-2007, 12:10 PM
அப்றம் நாப்பதாயிரம் தொடும் லொள்ளுவாத்தின்னு இன்னொரு திரியைக் கொளுத்திப்போட்டு அப்பாவி அக்னி,தாரளத் தங்கை யவனிகா,வள்ளல் ஜெயஸ்தா...இவங்ககிட்டருந்து இ-பணத்தை லவுட்டுவாரே.....!!!1

அட... இது நல்ல வழியாக இருக்கே.....! 5000-த்தை தொடும் ஜெயாஸ்தான்னு ஒரு திரியை ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்...!

இதயம்
05-12-2007, 12:13 PM
அட... இது நல்ல வழியாக இருக்கே.....! 5000-த்தை தொடும் ஜெயாஸ்தான்னு ஒரு திரியை ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்...!

இதென்னப்பா புது ஐடியாவா இருக்கு..! எல்லாரும் பிச்சையெடுத்தே நம்மளை பின்னுக்கு தள்ளிடுவாங்க போலிருக்கே..!! இதயம் எச்சரிக்கையா இரு...!!:fragend005::fragend005:

முதல்ல உங்க அவதார மாத்துங்க..! நீங்க உண்ணாம, உறங்காம 24 மணி நேரத்தையும் யோசிக்கிறதிலேயே செலவு பண்றாமாதிரி இருக்கு..!!:D:D

யவனிகா
05-12-2007, 12:24 PM
அப்றம் நாப்பதாயிரம் தொடும் லொள்ளுவாத்தின்னு இன்னொரு திரியைக் கொளுத்திப்போட்டு அப்பாவி அக்னி,தாரளத் தங்கை யவனிகா,வள்ளல் ஜெயஸ்தா...இவங்ககிட்டருந்து இ-பணத்தை லவுட்டுவாரே.....!!!1

ஆமா அவரு மறந்தாலும் நீங்க எடுத்துக் குடுங்க...

நுரையீரல்
05-12-2007, 12:31 PM
இப்படியெல்லாம் கூட சம்பாதிக்கலாமா? சிலரு வேற தாராளமா தர்மம் கொடுக்குறாங்க... நமக்கு தரலயேனு பக்கிரி போன்றோர் வயிற்றெரிச்சல் வேற படுறாங்க...

ஓவியன்
05-12-2007, 12:36 PM
ஆமா, வாத்தியாரிடமிருந்து இ-காசு கொள்ளை அடிக்க விருப்பம் உள்ளவர்களெல்லாம் கையை உயத்துங்க பார்ப்போம்.........!! :)

தாமரை
05-12-2007, 12:47 PM
ஆமா, வாத்தியாரிடமிருந்து இ-காசு கொள்ளை அடிக்க விருப்பம் உள்ளவர்களெல்லாம் கையை உயத்துங்க பார்ப்போம்.........!! :)

:huepfen024: :icon_clap: :huepfen024:

சிவா.ஜி
05-12-2007, 12:51 PM
:huepfen024: :icon_clap: :huepfen024:

அப்பா என்னா குத்தாட்டம் போடறார் இந்த தாமரை.....

அக்னி
05-12-2007, 12:58 PM
அட... இது நல்ல வழியாக இருக்கே.....! 5000-த்தை தொடும் ஜெயாஸ்தான்னு ஒரு திரியை ஆரம்பிக்கலாமான்னு யோசிச்சிக்கிட்டிருக்கேன்...!
நல்ல வேளை. லட்சம், கோடி என்று சொல்லாம விட்டவரை சந்தோஷம்...

ஆமா, வாத்தியாரிடமிருந்து இ-காசு கொள்ளை அடிக்க விருப்பம் உள்ளவர்களெல்லாம் கையை உயத்துங்க பார்ப்போம்.........!! :)
நானும், நானும்...

:huepfen024: :icon_clap: :huepfen024:
எல்லாரையும் கூப்பிடுங்க... வாத்திக்கு மொட்டையடிப்பம்...

ஓவியன்
05-12-2007, 01:00 PM
:huepfen024: :icon_clap: :huepfen024:

ஐ, இதுக்கு தாமரை அண்ணாவே சப்போர்டா.....???
இனியென்ன வாத்தியாரை ஒரு வழி பண்ணிடலாம்....!! :D:D:icon_wink1:

இதயம்
05-12-2007, 01:01 PM
நல்ல வேளை. லட்சம், கோடி என்று சொல்லாம விட்டவரை சந்தோஷம்...

நானும், நானும்...

எல்லாரையும் கூப்பிடுங்க... வாத்திக்கு மொட்டையடிப்பம்...

நான் வர்றேன், கூட ஆயிரம் பேரை கூட்டிக்கிட்டு..!! எட்றா வண்டிய..!!!

அன்புரசிகன்
05-12-2007, 01:02 PM
ஐ, இதுக்கு தாமரை அண்ணாவே சப்போர்டா.....???
இனியென்ன வாத்தியாரை ஒரு வழி பண்ணிடலாம்....!! :D:D:icon_wink1:

நான் எதிர்ப்பு.... வேணாம்... அப்புபுறம் :icon_shout: அழுதுடுவீங்க... :icon_nono::icon_nono::icon_nono:

ஓவியன்
05-12-2007, 01:02 PM
வாத்திக்கு மொட்டையடிப்பம்...

அதுமட்டும் முடியாது அக்னி, ஏற்கனவே அவருக்கு மொட்டையாம்...!! :D:D:D

மனோஜ்
05-12-2007, 01:22 PM
என்ன கொடுமைஇது
வாத்தி பாவம் அதனால அவருக்கு 1 இபணம் சமர்பணம்

ஜெயாஸ்தா
05-12-2007, 01:44 PM
முதல்ல உங்க அவதார மாத்துங்க..! நீங்க உண்ணாம, உறங்காம 24 மணி நேரத்தையும் யோசிக்கிறதிலேயே செலவு பண்றாமாதிரி இருக்கு..!!:D:D

காதை கிட்ட கொண்டுவாங்க.... ஒரு உண்மையை சொல்றேன் இதயம்...! அப்படி யோசிச்சு இந்த மகத்தான ஐடியாவை வாத்தியாருக்கு கொடுத்ததே நான்தான்...! வசூல்ல எனக்கு பாதி தர்றேன்னு சொல்லியிருக்காரு...!

ஓவியன்
05-12-2007, 01:48 PM
காதை கிட்ட கொண்டுவாங்க.... ஒரு உண்மையை சொல்றேன் இதயம்...! அப்படி யோசிச்சு இந்த மகத்தான ஐடியாவை வாத்தியாருக்கு கொடுத்ததே நான்தான்...! வசூல்ல எனக்கு பாதி தர்றேன்னு சொல்லியிருக்காரு...!

அப்படியா சேதி...!!

வாத்தியாரிடமுள்ள இ-பணம் எல்லாத்தையும் சுடப் போகிறோம், அப்போது உங்களிடமிருந்தும் பாதி சுடப்படும்.........!!:lachen001:

ஜெயாஸ்தா
05-12-2007, 01:50 PM
அப்படியா சேதி...!!

வாத்தியாரிடமுள்ள இ-பணம் எல்லாத்தையும் சுடப் போகிறோம், அப்போது உங்களிடமிருந்தும் பாதி சுடப்படும்.........!!:lachen001:

தல.... அப்படியெல்லாம் செஞ்சிராதீங்க...! உங்களுக்கு வேணும்னா இதை விட நல்ல ஐடியா தர்றேன்....!

அறிஞர்
05-12-2007, 03:21 PM
30000 பதிவு எப்ப வரப்போகுது...

வாத்தியாரிடம் கொள்ளை அடிப்பது ஈஸிதான்... வேணாம் விட்டுவிடுவோம்...

ஆதவா
05-12-2007, 03:26 PM
மன்றத்துக்கு கணக்கு காமிங்க... அப்படி இல்லாட்டி, பக்கவிளைவுகள், பின் விளைவுகள் எல்லாம் சந்திக்க வேண்டி வரும்..

வருமான வரி அதிகாரி
ஆதவன்

யவனிகா
05-12-2007, 03:29 PM
மன்றத்துக்கு கணக்கு காமிங்க... அப்படி இல்லாட்டி, பக்கவிளைவுகள், பின் விளைவுகள் எல்லாம் சந்திக்க வேண்டி வரும்..

வருமான வரி அதிகாரி
ஆதவன்

எதிர் விளைவுகள், ஏடாகூடமான விளைவுகள், எக்குத்தப்பான விளைவுகள்...
இதெல்லாம் ஏன் விட்டுட்டீங்க ஆதவன்.

ஆதவா
05-12-2007, 03:31 PM
எதிர் விளைவுகள், ஏடாகூடமான விளைவுகள், எக்குத்தப்பான விளைவுகள்...
இதெல்லாம் ஏன் விட்டுட்டீங்க ஆதவன்.

அவருக்கு ரென்டு போதும்னு நெனச்சேன்....

mgandhi
05-12-2007, 04:31 PM
இன்னும் சில நாளில்

30000 −−−−−−−−−−−−− எட்டவிருகிறார், வாத்தியார்.......
அவர் மேலும் மேலும் பல பதிவுகள் பதிய வாழ்த்துக்கள்

அக்னி
05-12-2007, 04:36 PM
இன்னும் சில நாளில்

30000 −−−−−−−−−−−−− எட்டவிருகிறார், வாத்தியார்.......
அவர் மேலும் மேலும் பல பதிவுகள் பதிய வாழ்த்துக்கள்
அண்ணா... இது இ-பண நூதன திருட்டுத் திரி...

நேசம்
05-12-2007, 09:30 PM
அண்ணா... இது இ-பண நூதன திருட்டுத் திரி...
இல்லை இது இ-பண நூதன வசூல்.அதுக்கெல்லாம் முளை(?)வேண்டும்

அன்புரசிகன்
06-12-2007, 03:54 AM
இல்லை இது இ-பண நூதன வசூல்.அதுக்கெல்லாம் முளை(?)வேண்டும்

இப்போ யாருக்கு மூளை இல்லேங்குறீங்க? வாத்தியாருக்கா? அல்லது மற்றவங்களுக்கா???

யவனிகா
06-12-2007, 05:44 AM
திரிய கொளுத்திட்டு ஆளு உள்ளய வாராம எஸ்ஸூ...இனி மொய்ப்பணம் எண்ணத் தான் உள்ள வருவாரு...,வந்தாருன்னா "நாப்பதாயிரத்தை நெருங்கும் வாத்தி" அப்படின்னு ஆரம்பிச்சிட்டு அப்படியே அமைதியாயிருவாரு....என்ன டெக்னிக்குப்பா...

நேசம்
06-12-2007, 06:54 AM
இப்போ யாருக்கு மூளை இல்லேங்குறீங்க? வாத்தியாருக்கா? அல்லது மற்றவங்களுக்கா???
அங்க தொட்டு,இங்க தொட்டு கடைசியில் நம்மலே மாட்டி விடுறொங்க, அது சரி சொல்லி தான் தெரியனுமா

இதயம்
06-12-2007, 07:08 AM
இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் வெகு சீக்கிரம் ஐம்பதாயிரம் தாண்டும் இதயம்...!! என்ற திரியை உருவாக்க என் இனிய நண்பர்கள் ஓவியன், அமரன், அன்பு (இனிய என்று சொல்லியிருக்கிறேன், தயவு செய்து சதிகள் வேண்டாம்..!) ஆகியோர் தங்களுக்குள் போட்டியிட்டுக்கொண்டிருப்பதால் உங்களுடைய தாராள மனதை இன்னும் தாராளமாக திறந்து வைத்து, நீங்கள் வள்ளல் என்பதை இன்னுமொருமுறை நிரூபிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..!!:icon_rollout::icon_rollout:

நன்றி: ஐடியா அய்யா சாமி... மன்னிக்க... ஜெயாஸ்தா..!!:D:D

அமரன்
06-12-2007, 07:30 AM
ஆஹா... கிளம்பிட்டாங்கப்பா.. தேனொழுகப் பேசிபேசியே காரியத்தை சாதிச்சிடுறாங்கப்பா. நல்ல இருங்கப்பா. இவ்வகை திரிகளுக்கு முன்னோடியான வாத்தியாருக்கு எனது பாராட்டுக்கள். சின்ன சந்தேகம்... உங்களால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் முடிகின்றது. எனக்கு மட்டும் சொல்லுங்கள். அதுக்காக ஐகேஷ் பீஷாக கேட்காதீங்க..

மலர்
06-12-2007, 07:41 AM
இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் வெகு சீக்கிரம் ஐம்பதாயிரம் தாண்டும் இதயம்...!! என்ற திரியை உருவாக்க என் இனிய நண்பர்கள் ஓவியன், அமரன், அன்பு (இனிய என்று சொல்லியிருக்கிறேன், தயவு செய்து சதிகள் வேண்டாம்..!)
இனிய இதயம் அண்ணா...
உங்கள் பாசமுள்ள தங்கச்சிக்காக...
அந்த திரியை ஆரம்பிக்கும் முன் ஜீரோவில்(சைபரில்) இதயம் என்று ஒரு திரி ஆரம்பிங்களேன்.....
பார்க்க வேண்டும் போல் ஆசையா இருக்கு ....
Join Date: 20 Feb 2005
Location: தஞ்சவூதி
Posts: 2,271
iCash Credits: 0.0 [Donate (http://www.tamilmantram.com/vb/credits.php?do=manage&u=465#donate)]

இதயம்
06-12-2007, 07:55 AM
இனிய இதயம் அண்ணா...
உங்கள் பாசமுள்ள தங்கச்சிக்காக...
அந்த திரியை ஆரம்பிக்கும் முன் ஜீரோவில்(சைபரில்) இதயம் என்று ஒரு திரி ஆரம்பிங்களேன்.....
பார்க்க வேண்டும் போல் ஆசையா இருக்கு ....
Join Date: 20 Feb 2005
Location: தஞ்சவூதி
Posts: 2,271
iCash Credits: 0.0 [Donate (\\\\\\\"http://www.tamilmantram.com/vb/credits.php?do=manage&u=465#donate\\\\\\\")]

மலர்..பொதுவாக தங்கைன்னாலே பாசம்னு சொல்லுவாங்க..!! நீங்க அதை வேசம்னு மாத்திட்டீங்க போலிருக்கு..!! வேணாம் இந்த விபரீத விளையாட்டு..! வேணும்னா உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பாப்கார்ன், ஐஸ்க்ரீம், கேட்பரீஸ் சாக்லேட், நெல்லிக்காய், மிளகாய் பொடி தூவின மாங்காய் பத்தை, இலந்தை பழம் எல்லாம் வாங்கித்தர்றேன்..! இது மட்டும் வேணாம்..!!

நான் படிச்ச திரியிலேயே ஏண்டா படிச்சோம்னு வேதனைப்பட வைத்த திரி இதான்.!!! இதை படிச்சிட்டு எனக்கு ரொம்ப கஷ்டம் (உங்கள் மொழியில்..!:D) ஆயிட்டு..!:traurig001::traurig001:

அக்னி
06-12-2007, 07:58 AM
இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் வெகு சீக்கிரம் ஐம்பதாயிரம் தாண்டும் இதயம்...!!
திரியின் தலைப்புக்காக எனது பரிந்துரை...
ஐம்பதாயிர(ம்)ந்து தாண்டும் இதயம்..!!

இப்படி வச்சிடுங்கோ...

ஜெயாஸ்தா
06-12-2007, 02:09 PM
இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் வெகு சீக்கிரம் ஐம்பதாயிரம் தாண்டும் இதயம்...!! என்ற திரியை உருவாக்க என் இனிய நண்பர்கள் ஓவியன், அமரன், அன்பு (இனிய என்று சொல்லியிருக்கிறேன், தயவு செய்து சதிகள் வேண்டாம்..!) ஆகியோர் தங்களுக்குள் போட்டியிட்டுக்கொண்டிருப்பதால் உங்களுடைய தாராள மனதை இன்னும் தாராளமாக திறந்து வைத்து, நீங்கள் வள்ளல் என்பதை இன்னுமொருமுறை நிரூபிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..!!:icon_rollout::icon_rollout:

நன்றி: ஐடியா அய்யா சாமி... மன்னிக்க... ஜெயாஸ்தா..!!:D:D

யோசிக்கிறதே யோசிக்கிறீங்க.... அதென்ன பிச்சைக்காரத்தனமா ஐம்பதாயிரம்... அறுவதாயிரம்ன்னு....! இணையகாசுகள் உருவாக்கும் அறிஞரின் கல்லாவை காலி பண்ணும் அளவுக்கு ஐடியா பண்ணுங்க சாமிங்களா....!

lolluvathiyar
06-12-2007, 02:10 PM
அட பாவமே பதித்துவிட்டு வீட்டுக்கு போயிட்டு திரும்பி வரதுகுள்ள ஒரே நாள்ல 40 பதிவு பதிச்சு வளத்தீட்டாங்களா?

சரி முதலில் பாரா(தி)ட்டிய நன்பர்களுக்கு நன்றி. தற்போதைக்கு லொள்ளுவாத்தியார்தான் பஸ்ட், இரன்டாம் இடத்தில் இருக்கும் இதயம் பூகளால் மூன்றா இடத்துக்கு தள்ள பட்டுவிட்டார். அவருக்கு ஒரு பாராட்டை கொடுத்து விட்டு, இனியாவாது ஒழுங்கா கஞ்சதனமில்லாம இபணம் பரிசளிக்க முடிவு செய்துள்ளேன்.

யவனிகா
06-12-2007, 03:29 PM
லொள்ளுவாத்தியார்தான் பஸ்ட், இரன்டாம் இடத்தில் இருக்கும் இதயம் .

இதயத்தை வெற்றி கொண்ட லொள்ளு வாத்தியார் வாழ்க! வாழ்க!

mgandhi
06-12-2007, 05:31 PM
அண்ணா... இது இ-பண நூதன திருட்டுத் திரி...

ஆம் உங்கள்ஆக்கம் சிரிய மாற்த்துடன்.

இதயம்
07-12-2007, 05:48 AM
இதயத்தை வெற்றி கொண்ட லொள்ளு வாத்தியார் வாழ்க! வாழ்க!
யாரோட இதயத்தைன்னு சொன்னா இன்னொரு கிசு, கிசு போட வசதியா இருக்கும்ல..?!!:D:D

சூரியன்
19-12-2007, 12:18 PM
என்ன வாத்தியாரே திரியின் தலைப்பை பார்த்து ஆவலாய் உள்ளே வந்தா இப்படி பொசுக்குனு போயிடுச்சு.

சூரியன்
19-12-2007, 12:19 PM
அட பாவமே பதித்துவிட்டு வீட்டுக்கு போயிட்டு திரும்பி வரதுகுள்ள ஒரே நாள்ல 40 பதிவு பதிச்சு வளத்தீட்டாங்களா?

சரி முதலில் பாரா(தி)ட்டிய நன்பர்களுக்கு நன்றி. தற்போதைக்கு லொள்ளுவாத்தியார்தான் பஸ்ட், இரன்டாம் இடத்தில் இருக்கும் இதயம் பூகளால் மூன்றா இடத்துக்கு தள்ள பட்டுவிட்டார். அவருக்கு ஒரு பாராட்டை கொடுத்து விட்டு, இனியாவாது ஒழுங்கா கஞ்சதனமில்லாம இபணம் பரிசளிக்க முடிவு செய்துள்ளேன்.

அதன் முதல் செயலாய் எனக்கு ஒரு 5000 வெட்டுங்க*.
:lachen001:

praveen
20-12-2007, 06:43 AM
வாத்தியாரிடம் இபணம் யாரும் வாங்காதீர்கள், ஏனென்றால் நாய் விற்ற காசு குரைக்குமா என்று ஒரு பழமொழி இருப்பதற்கு மாறாக லொள்ளு வாத்தியாரிடம் இபணம் வாங்கினால் பிறகு அவர் லொள்ளு நம்மிடம் வந்து சேரும். (இதை படித்து டென்சனாகி விடாதீர்கள், வாத்தியாரே, நல்லவேளை உங்களுக்கு வேறு ஏதும் வியாதி என்று சொல்லாம போனேனே என்று சந்தோசப்படுங்கள்:lachen001:).

இதற்கு ஆதாரம், மகா கஞ்சனான அவர், 30,000 இபணம் இலக்கு அடைய ஆசைப்பட்ட போது, நண்பர்கள் ஜெயாஸ்தே/அக்னி இவர்கள் பணம் கொடுத்த பின் தான் அவர்கள் தண்மை இவருக்கு வந்து இப்போது பிறருக்கும் இனி இபணம் அன்பளிப்பு தருவதாக செய்தி வந்திருக்கிறது பாருங்கள்.

வாத்தியார் வாழ்க, அவர் லொள்ளு ஒழிக. மொத்தத்தில் லொள்ளுவாத்தியார் :confused:

ஓவியன்
20-12-2007, 06:52 AM
அப்படியா பிரவின்....!!!

அப்போ இனி அக்னி போல வாத்தியார் சுடுவாரா.....?? :aetsch013:

அமரன்
20-12-2007, 06:57 AM
அப்படியா பிரவின்....!!!

அப்போ இனி அக்னி போல வாத்தியார் சுடுவாரா.....?? :aetsch013:
அக்னி வாத்தியாரா? யாருங்க அவரு? அவரு எப்போ சுட்டார்? என்னத்தை சுட்டார்?

ஓவியன்
20-12-2007, 07:08 AM
அக்னி வாத்தியாரா? யாருங்க அவரு? அவரு எப்போ சுட்டார்? என்னத்தை சுட்டார்?

நீங்க சுட்டு வைச்ச வடையைச் சுட்டார்.....!! :aetsch013:

மயூ
20-12-2007, 07:16 AM
முப்பதினாயிரமா???? கடவுளே... இரண்டு வருடத்த்தில் 3000 மே என்னால் தாண்ட முடியவில்லை. நீங்கள் 30000 தாண்டியுள்ளமை வியப்பையும் பெருமையையும் தருகின்றது....
கலக்குங்க வாத்தி!!!! :)

praveen
20-12-2007, 07:19 AM
நீங்க சுட்டு வைச்ச வடையைச் சுட்டார்.....!! :aetsch013:

அமரனை பாட்டியாக்கி அக்னியை காக்கா-வாக்கி விட்டீர்களே, சரி இதில் நரி நம்ம வாத்தியார் தானே :) ?

ஜெயாஸ்தா
20-12-2007, 01:35 PM
அமரனை பாட்டியாக்கி அக்னியை காக்கா-வாக்கி விட்டீர்களே, சரி இதில் நரி நம்ம வாத்தியார் தானே :) ?

அருமையான கற்பனை பிரவீண். அமரனை பாட்டியாக நினைக்கும் போது சிரிப்பு வருவதை அடக்க முடியவில்லை. அந்த ஆலமரத்தடியில் நம் பாட்டி (அமரன்) வடைசுட்டு விற்றுக்கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த நம்ம காக்கா (அக்னி...கோபப்படாதீங்க.... ராமநாதபுரம் பக்கத்தில் காக்கா என்றால் அண்ணன் என்று அர்த்தம். இஸ்லாமியர்களிடையே புழங்கப்படும் 'பாய்' என்னும் பதத்தை போல இதுவும்) வடையெடுத்து கொண்டு போய் மரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கும் வரும் நம்ம வாத்தியார்...' 'அக்னி... அக்னி.... ஒரு பாட்டு பாடுங்க...!' அப்படின்னு சொல்றார்.....

நம்ம அக்னி.... வடையை எடுத்து காலில் வைத்துக் கொண்டு பாட்டு பாடுகிறார். இனிமேல்தான் கதையுடைய ட்விஸ்ட்டே....

உடனே நம்ம அக்னி வடையை காலிலிருந்து எடுத்து மரக்கிளையில் வைத்துவிட்டு பின் ஆடிப்பாடுகிறார். நம் வாத்தியார் ஏமாந்து போய் நடையை கட்டினார். (ஒரு வழியாக பாட்டி வடை சுட்ட கதையை மன்றத்தாருக்கு சொல்லிவிட்டேன்)