View Full Version : பலதாரத்திருமணம்
IDEALEYE
04-12-2007, 04:29 PM
இரு மலர்கள்
ஒரு முள்
முத்தம் மட்டும் தேவை
இரத்தமின்றி
முடிந்தால் முயன்று பார்
முள்ளோடுதான் முத்தங்களா
- வைரமுத்து - காதல் ரோஜாவே - ரோஜா
ஏன் முடியாது..
முள்ளை முதுகுப்புறமாய்
முத்தமிடுங்கள்..
-ஆதி
ஜெயாஸ்தா
05-12-2007, 02:38 AM
முள்ளோடுதான் முத்தங்களா
- வைரமுத்து - காதல் ரோஜாவே - ரோஜா
ஏன் முடியாது..
முள்ளை முதுகுப்புறமாய்
முத்தமிடுங்கள்..
-ஆதி
மோதலில் புறமுதுகுத் தாக்குதல் அநீதி....
காதலில் புறமுதுகுத் தாக்குதல் நீதி....
என்னே....விந்தையிது...!
மோதலில் புறமுதுகுத் தாக்குதல் அநீதி....
காதலில் புறமுதுகுத் தாக்குதல் நீதி....
என்னே....விந்தையிது...!
போரில் தாக்கி கொல்வர்
காதல் தாக்கி கொள்வர்
இதில் (அ)நீதி என்ன ?
வி(ந்)தை என்ன ?
சிவா.ஜி
05-12-2007, 03:26 AM
இந்தக் காலத்தில் இரத்தம் உறுதி.முள் முனை உடையும்,மலர்கள் முட்களாகும்.நல்லதொரு குறுங்கவி ஐடியல்-ஐ.வாழ்த்துகள்.
ஜெயாஸ்தா
05-12-2007, 07:51 AM
போரில் தாக்கி கொல்வர்
காதல் தாக்கி கொள்வர்
இதில் (அ)நீதி என்ன ?
வி(ந்)தை என்ன ?
கொள்வதும் மட்டும்
காதலல்ல....!
சில சமயம்
கொல்வதும் காதல்தானே....!
காதல் யாரையும் கொல்வதில்லை..
காதலர்கள்தான் கொல்கிறார்கள்
காதலை..
காதலிணையை..
சுகந்தப்ரீதன்
05-12-2007, 08:16 AM
அழகிய கவிதை வாழ்த்துக்கள் ஐடியல்..!
அமரன்
06-12-2007, 07:26 AM
கவிதையும், தொடர்ந்த கருத்தாடல்களும் அருமை.
அனைவருக்கும் எனது பாராட்டுகள்.
IDEALEYE
06-12-2007, 10:20 AM
அமரன் அண்ணா, உங்கள் ஊக்கத்திற்கும் என் அனைத்து மன்ற உறவுகளினதும் உற்சாகத்திற்கும் என் பணிவுகள், நன்றிகள்
ஐஐ
இரு மலர்கள்
ஒரு முள்
முத்தம் மட்டும் தேவை
இரத்தமின்றி
முடிந்தால் முயன்று பார்
பலதாரத் திருமணமா? இல்லை இருதார நிலையா?
முற்களின் மேல் படுத்தவர்கள் உண்டு.. முற்களின் செறிவைக் கூட்டும்பொழுது,
ஒரே ஒரு முள் உயிரைக் கிழித்ததுண்டு..
மலர்களுக்கு முற்களால் பயனுண்டு.. முத்தத்தால்???
முயன்றால் முடியாததில்லை.... முயற்சியில் முன்னே பயிற்சியில், நல்ல எழுச்சி வேண்டும்...
தலைப்பு பொருந்தவில்லை, அல்லது பொருத்தம் எப்படி என்பதை சொல்லுங்கள்....
வாழ்த்துகள்
முள்ளோடுதான் முத்தங்களா
- வைரமுத்து - காதல் ரோஜாவே - ரோஜா
ஏன் முடியாது..
முள்ளை முதுகுப்புறமாய்
முத்தமிடுங்கள்..
-ஆதி
முள்ளோடு முத்தம் - முதுகில் குத்தும் உம் வரிகள் பெரும் முரண்????
முற்கள் உன் பற்கள்
தவழ்ந்து வருவது எல்லாம்
விடம்.