View Full Version : தண்ணீர்
பரணேறிய பழைய கவிதைகளில் இருந்து..
குழாயடிச் சண்டையில்
குடுமிப்பிடி கூத்து
மோதிக் கொண்டன வார்த்தைகள்
முதுகு நெளிந்தன குடங்கள்
முட்டி முறிந்தது பார்வை
வெட்டியாய் கொட்டியது வேர்வை
கட்டிப் புரண்டது கோபம்
கண்டு கரைந்தது கூட்டம்
கவனிப்பார் இன்றி
புழுதியில் புதைந்து ஊடியது
வாரத்திற்கு ஒருமுறை
வரும் தண்ணீர்..
-ஆதி
சிவா.ஜி
03-12-2007, 01:31 PM
அசத்தல் ஆதி.கவனிப்பாரற்று சிதறிய தண்ணீரைப் போலத்தான் பலரது இல்வாழ்க்கையும்.நீ பெரியவனா,நான் பெரியவனா என்ற சண்டையில்,வாழ்வில் ஒருமுறை வரும் இல்லறம் வீணாகிவிடுகிறது.
சொல்லடுக்கு மிகப் பிரமாதம்.ஒரு தாள லயத்துடன் அருமையாக அமைத்திருக்கிறது.வாழ்த்துகள் ஆதி.
அசத்தல் ஆதி.கவனிப்பாரற்று சிதறிய தண்ணீரைப் போலத்தான் பலரது இல்வாழ்க்கையும்.நீ பெரியவனா,நான் பெரியவனா என்ற சண்டையில்,வாழ்வில் ஒருமுறை வரும் இல்லறம் வீணாகிவிடுகிறது.
சொல்லடுக்கு மிகப் பிரமாதம்.ஒரு தாள லயத்துடன் அருமையாக அமைத்திருக்கிறது.வாழ்த்துகள் ஆதி.
வாழ்த்துக்கு நன்றிகள் சிவா.ஜி..
சந்தத்தில் மயங்கி கிடந்த காலத்தில் எழுடிய கவிதை..
வார்த்தைகளை வசப்படுத்திவிட செய்த சிறு குறு முயற்சிகள்..
-ஆதி
அமரன்
04-12-2007, 09:42 AM
மோதிக் கொண்டன வார்த்தைகள்
முதுகு நெளிந்தன குடங்கள்
வன்முறை அங்கே அரங்கேற்றப்படுள்ளதோ.. அழகாகச் சொல்லியுள்ளீர்கள் ஆதி..
அருமருந்தான ஒன்றுக்காக அடித்துக்கொள்வதை காட்டிலும், அமைதியான முறையில் பகிர்ந்து எடுத்துக்கொள்வது மேலானது. இங்கே பிரச்சினை என்ன? நான் முந்தி நீ முந்தி என்பதுதானே? நீ முந்திக்கோ விட்டுக்கொடுக்கலாம் பஞ்சமில்லாத ஒன்றுக்காக. பஞ்சம் தீர்க்கும் மருந்தும் எங்கள் கைகளில்தானே.
வாழ்த்துகள் ஆதி..
வன்முறை அங்கே அரங்கேற்றப்படுள்ளதோ.. அழகாகச் சொல்லியுள்ளீர்கள் ஆதி..
அருமருந்தான ஒன்றுக்காக அடித்துக்கொள்வதை காட்டிலும், அமைதியான முறையில் பகிர்ந்து எடுத்துக்கொள்வது மேலானது. இங்கே பிரச்சினை என்ன? நான் முந்தி நீ முந்தி என்பதுதானே? நீ முந்திக்கோ விட்டுக்கொடுக்கலாம் பஞ்சமில்லாத ஒன்றுக்காக. பஞ்சம் தீர்க்கும் மருந்தும் எங்கள் கைகளில்தானே.
வாழ்த்துகள் ஆதி..
பின்னூட்டத்திற்கு நன்றி அமரன்..
-ஆதி
செந்தமிழரசி
04-12-2007, 02:22 PM
சென்னையின் யதார்த்த நிலையைப் படபிடித்துக் காண்பித்துள்ளீர் ஆதி..
கவிதை அருமை, வாழ்த்துக்கள்..
நட்புடன் செந்தமிழரசி
சென்னையின் யதார்த்த நிலையைப் படபிடித்துக் காண்பித்துள்ளீர் ஆதி..
கவிதை அருமை, வாழ்த்துக்கள்..
நட்புடன் செந்தமிழரசி
வாழ்த்துக்கு நன்றி செந்தமிழரசி..
-ஆதி
அக்னி
05-12-2007, 11:21 AM
வெட்டியாய் கொட்டியது வேர்வை
தண்ணீர்ச் சண்டையில்
திறக்கப்பட்ட ஊற்று...
வியர்வை...
பாராட்டுக்கள் ஆதி...
பின்னூட்டத்திற்கு நன்றி அக்னி அவர்கட்கு..
-ஆதி