யவனிகா
30-11-2007, 11:04 AM
"டே தருண்...எழுந்திருடா...நேரமாச்சி பாரு...பஸ் போயுடும்டா..." ஏழு வயது தருணை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாள் காவ்யா.
"அம்மா...கொஞ்ச நேரம்மா...குளிருதும்மா..பிளீஸ்மா...இன்னைக்குத்தான் நாம இண்டியா போறமில்ல...நான் ஸ்கூலுக்கு போகலைம்மா பிளீஸ்.." அழுகையுடன் கெஞ்சுகிறான் தருண்.
"டேய் இன்னைக்குத்தான் ஸ்கூல் கடைசி நாள்...மாங்கு மாங்குன்னு படிச்சு எக்ஸாம் எழுதினேல்ல... கரக்சன் முடிஞ்சு பேப்பர் தருவாங்கடா..அதை போய் வாங்கிட்டு வந்திடுமாம் எம் பட்டு குட்டி...அப்புறம் மூணு மாசம் நோ ஸ்கூல்...நோ ஹோம் வொர்க்...ஊருக்குப் போறோம்...ஜாலி தானே..." சமாதான முயற்சியில் காவ்யா.
"சரிமா இந்ததடவையும் நான் ஃபர்ட் ரேங்க் வாங்கினா...என்ன வாங்கித்தருவே?"
இந்தத் தடவ நான் எதும் வாங்கித்தர மாட்டேம்பா...உன் செல்லப் பாட்டி உனக்கு எல்லாம் வாங்கித் தருவாங்க.அவங்க கிட்டயே நீ என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கோ?
அம்மா எத்தனை மணிக்கு ஏர்ப்போர்ட் போகணும்? என் ட்ரெஸ்,ஸ்டோரி புக்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டயா?அந்த ஸ்பைடர் மேன் ட்ரெஸ் மட்டும் மறந்திராதம்மா. பி.எஸ்.2 எடுத்து வைம்மா பிளீஸ்.
சரிங்க சார், எல்லாம் எடுத்து வைக்கிறேன் முதல்ல வா குளிக்கலாம்.
அம்மா...பாட்டி நமக்காக சென்னை ஏர்போர்ட்ல வெயிட் பண்ணுவாங்கல்லமா?
கண்டிப்பா வருவாங்க...எல்லாருமே வருவாங்கடா...நீ யூனிஃபார்ம் போடு சீக்கிரம். இந்தா சாக்ஸ்...சீக்கிரம் ...பஸ் போயிடும். பாலைக் குடி..
அம்மா இன்னைக்கு ஸ்கூல் ஹாஃப் டே தாம்மா...கிளாஸ் நடக்காது...பேப்பர் மட்டும் தான் தருவாங்க...எதுக்குமா டெய்லி கொண்டு போற ட்ராலி பேக் எடுத்து வெச்சிருக்க...சின்ன பேக் குடுமா...
அய்யோ தருண் சின்ன பேக் அப்பா எங்க வெச்சாங்கன்னு தெரியலடா...எப்பவும் கொண்டு போற பேகை இன்னைக்கும் கொண்டு போனா என்ன?
போம்மா நீ ரொம்ப போர்.
என்னடா கண்ணா...இன்னைக்குத் தானடா கடைசி நாள்...அனத்தாமப் போயிட்டு வாயேன்.
அம்மா டுவல்வோ கிளாக் சார்ப்பா பால்கனில நில்லு...நான் தான் ஃப்ர்ஸ்ட் ரேங்க்குன்னு
நான் கத்திட்டே வருவேன் சரியா...
சரிடா செல்லம்...பஸ் வந்திருச்சு பாரு...சீக்கிரம் ஓடிப்போய் ஏறிக்கோ...
மதியம் வரை வேலை பெண்டு எடுத்து விட்டது காவ்யாவை. பேக் செய்பவற்றை எல்லாம் செய்து முடித்து வீட்டை சுத்தமாக வாக்குவம் செய்து என....ஆனால் வேலைகளூடே விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் நினைவு மெல்லிய சந்தோச சரிகையாய்
ஓடிக்கொண்டிருந்தது.
தருணுக்குத் தான் எத்தனை சந்தோசம்...சிறைபட்ட பறவைகளாய் மனிதர்கள் வெளி நாடுகளில்...ஆண்டுக்கொருமுறை சிறை திறக்கப் படுகிறது...விரும்பியே மறு முறையும் சிறை புகுகிறோம்...அடுத்த ஆண்டு விரைவில் வரப் ப்ரார்த்தித்தபடி....
சென்ற ஆண்டு, இந்தியாவிற்குப் போய் வந்ததிலிருந்து தருண் நச்சரிக்கத் துவங்கி இருந்தான். "மறுபடி எப்பம்மா இந்தியா போவோம்?" என்பது அவனது தினசரிக் கேள்விகளில் ஒன்றாகப் பழகிப்போய் விட்டது காவ்யாவிற்கு. ஒருவருடமாய் தருண் எதிர் நோக்கியிருந்த தினம் இன்று. இன்று பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்ப அவளுக்கும் விருப்பமில்லை தான். என்ன செய்ய பரீட்சை பேப்பர் தரும் தினமாயிற்றே. முடிவுகளைப் பார்த்து விட்டுச் சென்றால் திருப்தியாயிருக்கும். நினைவுகளோடேயே மணித்துளிகளும் பேய் வேகத்தில் பயணித்தன.
அடடா...தருண் வரும் சமயமாயிற்றே....பால்கனியிலிருந்து பார்த்தால், ஸ்கூல் பஸ் வருவது தெரியும். பால்கனி கதவைத் திறந்தாள், காவ்யா. உலர்ந்து விட்டிருந்த துணிகளை கைகள் சேகரிக்க, கண்கள் தெருவையே
நோக்கிக் கொண்டிருந்தன. அப்பாடா...பஸ் வந்தாகி விட்டது.
முழுவதுமாக ஏஸி செய்யப்பட்ட பஸ்ஸின் ஜன்னல் வழியே தருண் தென்பட்டான்.வெற்றி என்பது போல கட்டை விரலை உயர்த்திக் காட்டியபடி இறங்க ஆயத்தமானான். தோழர்களிடம் கதை பேசி முடியவில்லை போலும்.ஊருக்குப் போகும் கதை பெரிய கதை அல்லவா?
பஸ்ஸை விட்டு குதிக்காத குறையாக இறங்கினான். பஸ்சின் தானியங்கிக் கதவு தன்னாலே மூடிக் கொண்டது. முத்தாய்ப்பாய் தோழர்களைப் பார்த்து கடைசியாக கையசைத்தான். பஸ்சும் புறப்பட்டது.பஸ்சின் தானியங்கிக் கதவிலே சிக்கிக் கொண்ட ட்ராலி பேகின் கைப்பிடி பஸ்ஸுடனேயே பயணப் பட்டது, தருணையும் இழுத்துக் கொண்டு.
நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த காவ்யா, விபரீதம் உணர்ந்து, "பஸ்ஸை நிறுத்துங்க...அய்யோ எம் புள்ளை..."என்று கதறிக் கொண்டு இறங்குவதற்குள் காரியம் கை மீறி இருந்தது.
கருப்புத் தார் ரோட்டில் சிவப்புக் கோடாக தருண் சில மீட்டர் தூரங்கள் இழுபட்டிருந்தான்.தலையில் பலத்த அடி.
அம்மாவின் மடியில்,உயிர் பிரியும் தருவாயில்.... தருண் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள்...
"அம்மா, பாட்டி நமக்காக ஏர்போர்ட்டில் வெயிட் பண்ணுவாங்க இல்லைமா?".
"அம்மா...கொஞ்ச நேரம்மா...குளிருதும்மா..பிளீஸ்மா...இன்னைக்குத்தான் நாம இண்டியா போறமில்ல...நான் ஸ்கூலுக்கு போகலைம்மா பிளீஸ்.." அழுகையுடன் கெஞ்சுகிறான் தருண்.
"டேய் இன்னைக்குத்தான் ஸ்கூல் கடைசி நாள்...மாங்கு மாங்குன்னு படிச்சு எக்ஸாம் எழுதினேல்ல... கரக்சன் முடிஞ்சு பேப்பர் தருவாங்கடா..அதை போய் வாங்கிட்டு வந்திடுமாம் எம் பட்டு குட்டி...அப்புறம் மூணு மாசம் நோ ஸ்கூல்...நோ ஹோம் வொர்க்...ஊருக்குப் போறோம்...ஜாலி தானே..." சமாதான முயற்சியில் காவ்யா.
"சரிமா இந்ததடவையும் நான் ஃபர்ட் ரேங்க் வாங்கினா...என்ன வாங்கித்தருவே?"
இந்தத் தடவ நான் எதும் வாங்கித்தர மாட்டேம்பா...உன் செல்லப் பாட்டி உனக்கு எல்லாம் வாங்கித் தருவாங்க.அவங்க கிட்டயே நீ என்ன வேணுமோ கேட்டு வாங்கிக்கோ?
அம்மா எத்தனை மணிக்கு ஏர்ப்போர்ட் போகணும்? என் ட்ரெஸ்,ஸ்டோரி புக்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டயா?அந்த ஸ்பைடர் மேன் ட்ரெஸ் மட்டும் மறந்திராதம்மா. பி.எஸ்.2 எடுத்து வைம்மா பிளீஸ்.
சரிங்க சார், எல்லாம் எடுத்து வைக்கிறேன் முதல்ல வா குளிக்கலாம்.
அம்மா...பாட்டி நமக்காக சென்னை ஏர்போர்ட்ல வெயிட் பண்ணுவாங்கல்லமா?
கண்டிப்பா வருவாங்க...எல்லாருமே வருவாங்கடா...நீ யூனிஃபார்ம் போடு சீக்கிரம். இந்தா சாக்ஸ்...சீக்கிரம் ...பஸ் போயிடும். பாலைக் குடி..
அம்மா இன்னைக்கு ஸ்கூல் ஹாஃப் டே தாம்மா...கிளாஸ் நடக்காது...பேப்பர் மட்டும் தான் தருவாங்க...எதுக்குமா டெய்லி கொண்டு போற ட்ராலி பேக் எடுத்து வெச்சிருக்க...சின்ன பேக் குடுமா...
அய்யோ தருண் சின்ன பேக் அப்பா எங்க வெச்சாங்கன்னு தெரியலடா...எப்பவும் கொண்டு போற பேகை இன்னைக்கும் கொண்டு போனா என்ன?
போம்மா நீ ரொம்ப போர்.
என்னடா கண்ணா...இன்னைக்குத் தானடா கடைசி நாள்...அனத்தாமப் போயிட்டு வாயேன்.
அம்மா டுவல்வோ கிளாக் சார்ப்பா பால்கனில நில்லு...நான் தான் ஃப்ர்ஸ்ட் ரேங்க்குன்னு
நான் கத்திட்டே வருவேன் சரியா...
சரிடா செல்லம்...பஸ் வந்திருச்சு பாரு...சீக்கிரம் ஓடிப்போய் ஏறிக்கோ...
மதியம் வரை வேலை பெண்டு எடுத்து விட்டது காவ்யாவை. பேக் செய்பவற்றை எல்லாம் செய்து முடித்து வீட்டை சுத்தமாக வாக்குவம் செய்து என....ஆனால் வேலைகளூடே விடுமுறைக்கு ஊருக்குச் செல்லும் நினைவு மெல்லிய சந்தோச சரிகையாய்
ஓடிக்கொண்டிருந்தது.
தருணுக்குத் தான் எத்தனை சந்தோசம்...சிறைபட்ட பறவைகளாய் மனிதர்கள் வெளி நாடுகளில்...ஆண்டுக்கொருமுறை சிறை திறக்கப் படுகிறது...விரும்பியே மறு முறையும் சிறை புகுகிறோம்...அடுத்த ஆண்டு விரைவில் வரப் ப்ரார்த்தித்தபடி....
சென்ற ஆண்டு, இந்தியாவிற்குப் போய் வந்ததிலிருந்து தருண் நச்சரிக்கத் துவங்கி இருந்தான். "மறுபடி எப்பம்மா இந்தியா போவோம்?" என்பது அவனது தினசரிக் கேள்விகளில் ஒன்றாகப் பழகிப்போய் விட்டது காவ்யாவிற்கு. ஒருவருடமாய் தருண் எதிர் நோக்கியிருந்த தினம் இன்று. இன்று பிள்ளையைப் பள்ளிக்கு அனுப்ப அவளுக்கும் விருப்பமில்லை தான். என்ன செய்ய பரீட்சை பேப்பர் தரும் தினமாயிற்றே. முடிவுகளைப் பார்த்து விட்டுச் சென்றால் திருப்தியாயிருக்கும். நினைவுகளோடேயே மணித்துளிகளும் பேய் வேகத்தில் பயணித்தன.
அடடா...தருண் வரும் சமயமாயிற்றே....பால்கனியிலிருந்து பார்த்தால், ஸ்கூல் பஸ் வருவது தெரியும். பால்கனி கதவைத் திறந்தாள், காவ்யா. உலர்ந்து விட்டிருந்த துணிகளை கைகள் சேகரிக்க, கண்கள் தெருவையே
நோக்கிக் கொண்டிருந்தன. அப்பாடா...பஸ் வந்தாகி விட்டது.
முழுவதுமாக ஏஸி செய்யப்பட்ட பஸ்ஸின் ஜன்னல் வழியே தருண் தென்பட்டான்.வெற்றி என்பது போல கட்டை விரலை உயர்த்திக் காட்டியபடி இறங்க ஆயத்தமானான். தோழர்களிடம் கதை பேசி முடியவில்லை போலும்.ஊருக்குப் போகும் கதை பெரிய கதை அல்லவா?
பஸ்ஸை விட்டு குதிக்காத குறையாக இறங்கினான். பஸ்சின் தானியங்கிக் கதவு தன்னாலே மூடிக் கொண்டது. முத்தாய்ப்பாய் தோழர்களைப் பார்த்து கடைசியாக கையசைத்தான். பஸ்சும் புறப்பட்டது.பஸ்சின் தானியங்கிக் கதவிலே சிக்கிக் கொண்ட ட்ராலி பேகின் கைப்பிடி பஸ்ஸுடனேயே பயணப் பட்டது, தருணையும் இழுத்துக் கொண்டு.
நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த காவ்யா, விபரீதம் உணர்ந்து, "பஸ்ஸை நிறுத்துங்க...அய்யோ எம் புள்ளை..."என்று கதறிக் கொண்டு இறங்குவதற்குள் காரியம் கை மீறி இருந்தது.
கருப்புத் தார் ரோட்டில் சிவப்புக் கோடாக தருண் சில மீட்டர் தூரங்கள் இழுபட்டிருந்தான்.தலையில் பலத்த அடி.
அம்மாவின் மடியில்,உயிர் பிரியும் தருவாயில்.... தருண் கடைசியாகச் சொன்ன வார்த்தைகள்...
"அம்மா, பாட்டி நமக்காக ஏர்போர்ட்டில் வெயிட் பண்ணுவாங்க இல்லைமா?".