அகத்தியன்
30-11-2007, 08:53 AM
பூக்கள் உதிரும் ஓர் மாலையில்
என்னோடு பார்வை பகிருவாய்.
அம்மரம் உன்னையும் என்னையும் ஆசிர்வதிக்கும்.
சாட்சியாகிப்போன மரம்-
இன்னும்,
என்னையும் உன்னையும்,
அடம்பிடித்து பெற்ற முத்தங்களையும்,
ஞாபகம் வைத்திருக்கும்.
எனக்கு மறந்து போயிற்று
உன் அழைப்புகள் வரும் வரை.
எவ்வாறானாலும்,
உன்னில் இருந்து
ஓடி ஒளியவே எத்தனிக்கின்றேன்.
இன்னுமொரு பூமரம்,
இன்னுமொரு கண்ணீர்,
இன்னுமொரு ஞாபகத்தொல்லைகள்
எனக்குள் தேவையில்லை.
என்னோடு பார்வை பகிருவாய்.
அம்மரம் உன்னையும் என்னையும் ஆசிர்வதிக்கும்.
சாட்சியாகிப்போன மரம்-
இன்னும்,
என்னையும் உன்னையும்,
அடம்பிடித்து பெற்ற முத்தங்களையும்,
ஞாபகம் வைத்திருக்கும்.
எனக்கு மறந்து போயிற்று
உன் அழைப்புகள் வரும் வரை.
எவ்வாறானாலும்,
உன்னில் இருந்து
ஓடி ஒளியவே எத்தனிக்கின்றேன்.
இன்னுமொரு பூமரம்,
இன்னுமொரு கண்ணீர்,
இன்னுமொரு ஞாபகத்தொல்லைகள்
எனக்குள் தேவையில்லை.