PDA

View Full Version : உறங்க மறுக்கிறது...!



சூரியன்
29-11-2007, 02:28 PM
மன்றத்தில் கவிதை எழுதி பல நாள் ஆனது போல் ஒரு உணர்வு.. அதனால் ஒரு கவிதையை இங்கு பதிக்கிறேன்.
நண்பர்களின் கவிதையில் உள்ள குறைகளை எடுத்துக்காட்டவும்..



ஒரு சொல்லுக்காக
காத்திருந்தேன்!

மறு சொல் கூறி
உயிர் பறித்தாய்....

உடல் மட்டும்
இங்கு எரிகிறதே!

என் உணர்வுகளும்
உறங்க மறுக்கிறதே!

உணர்வுகளே உறங்குங்கள்...

ஜெயாஸ்தா
29-11-2007, 02:54 PM
மறுசொல் என்று தாங்கள் எழுதியிருப்பதன் பொருள் 'மறுத்து சொல்லுதல்' என்று பொருளா நண்பரே?

அமரன்
29-11-2007, 05:58 PM
"ஒருபொய்யாவது சொல்கண்ணே
உன்காதல் நாந்தான் என்று..
அந்த சொல்லில் உயிர்வாழ்வேன்.."


உறங்கா
உணர்வுகளின் தகிப்பினாலேயே
உஷ்ணம் கிடைக்கின்றது
உடலுக்கு..
உறங்கிவிட்டால்
சில்லிட்டுப் போகும் உடல்..

சில்லென்ற வாழ்விருக்க
சில்லிடல் உனக்கெதற்கு..