ஆதி
27-11-2007, 06:08 PM
பரணேறிய என் பழைய கவிதைகளில் இருந்து..
பக்கத்து வீட்டுக்காரிகளே
கொறிப்பதற்கு ஏதுமில்லாததால்
என் அகவையை
சவைக்காதீர்கள்..
இரண்டாயிரம் ஆண்டுகளாய்
இரத்தம் உறிஞ்சும் வரதட்சனை
அட்டைப் பூச்சிகளை
நசுக்க துனியாமல்
நக்கல் சொற்களால்
என் குரல்வளை நெரித்து
கூர்வாள் நாக்கால் என்னை
கூரு போடாதீர்கள்..
அடுக்களையுடன் முடிகிற உரிமையில்
ஆயுள்காப்பீடு அற்ற அடுப்பில்
மாமியாரின்
மண்ணெண்ணை சோதனைக் கூடத்தில்
நாத்தனார்களின் கை முத்தத்தில்
சில சமயங்களில் கணவர்
சிகரெட் அனைக்கும் புண்களுடன்
வாழுதற்குதான் வரதட்சனையா ?
பூப்படைந்தும் பயனற்று
கண்ணீர் விறகுகளில்
உடன்கட்டை ஏறும் கனவுகளை
உணர இயலாத சில பெற்றவர்கள்
முதல் வகுப்பில் பயணச்சீட்டு
எடுத்து தர தாகாததால்
திருமண வாகனத்தில்
இரண்டாம் வகுப்பில்
அமர்த்தி விடுகிறார்கள்..
தமயந்திக்காகவே பிறந்திருந்தாலும்
அதிக வரதட்சனைக் கொடுத்ததால்
அடுத்தவளை மணந்த நளன்களை
எத்தனை..
சொர்க்கத்தில் அல்ல
வர்க்கத்தில் தான் முடிவாகிறது
இன்றைக்கும்
பல திருமணங்கள் இங்கு..
-ஆதி
பக்கத்து வீட்டுக்காரிகளே
கொறிப்பதற்கு ஏதுமில்லாததால்
என் அகவையை
சவைக்காதீர்கள்..
இரண்டாயிரம் ஆண்டுகளாய்
இரத்தம் உறிஞ்சும் வரதட்சனை
அட்டைப் பூச்சிகளை
நசுக்க துனியாமல்
நக்கல் சொற்களால்
என் குரல்வளை நெரித்து
கூர்வாள் நாக்கால் என்னை
கூரு போடாதீர்கள்..
அடுக்களையுடன் முடிகிற உரிமையில்
ஆயுள்காப்பீடு அற்ற அடுப்பில்
மாமியாரின்
மண்ணெண்ணை சோதனைக் கூடத்தில்
நாத்தனார்களின் கை முத்தத்தில்
சில சமயங்களில் கணவர்
சிகரெட் அனைக்கும் புண்களுடன்
வாழுதற்குதான் வரதட்சனையா ?
பூப்படைந்தும் பயனற்று
கண்ணீர் விறகுகளில்
உடன்கட்டை ஏறும் கனவுகளை
உணர இயலாத சில பெற்றவர்கள்
முதல் வகுப்பில் பயணச்சீட்டு
எடுத்து தர தாகாததால்
திருமண வாகனத்தில்
இரண்டாம் வகுப்பில்
அமர்த்தி விடுகிறார்கள்..
தமயந்திக்காகவே பிறந்திருந்தாலும்
அதிக வரதட்சனைக் கொடுத்ததால்
அடுத்தவளை மணந்த நளன்களை
எத்தனை..
சொர்க்கத்தில் அல்ல
வர்க்கத்தில் தான் முடிவாகிறது
இன்றைக்கும்
பல திருமணங்கள் இங்கு..
-ஆதி