ஆதவா
26-11-2007, 02:37 PM
நேற்றைக்கு வீட்டில் யாருமில்லாததால் திடீரென ஒரு யோசனை.. நாமே சமைத்துவிடலாமே என்று.. எனக்கு சில சமையல்கள் தெரியும் என்றாலும் ஆம்லெட் போட்டு சாப்பிடலாம் என்ற ஆசை வந்திட்டது. முட்டை சாப்பிட்டு வெகு நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வாயில் எச்சில் ஊற கடைக்குப் போய் ஐந்து முட்டைகள் வாங்கிவந்தேன். முட்டைகள் ஒவ்வொன்றும் நிர்ணயிக்கப் பட்ட அளவை விட பெரியதாக இருக்கவே எனக்கு ஒரு சந்தேகம். ஒருவேளை குஞ்சுகள் உறங்கிக் கொண்டிருக்குமோ என்று... நமக்குத்தான் ரசனைகெட்ட ரசனையாச்சே!
முட்டையை சமைப்பதில் பல வகைகள் உண்டு. முட்டையை வேக வைத்து தின்னலாம், ப்ளையின் ஆம்லெட், வெங்காய ஆம்லெட், ஆப்பாயில் போன்றவை தோசை வகைகள். முட்டையில் குழம்பு இருக்கிறது. வருவல் இருக்கிறது. முட்டைப் பொறியல், முட்டை தோசை, முட்டை புரோட்டா, முட்டை சாம்பார், முட்டை போண்டா, முட்டைக்கரு பஜ்ஜி, என பல அயிட்டங்கள் இருக்கின்றன. வேகமாக செய்து சாப்பிடவேண்டும், குறைவான சமையல்பொருள்களே உள்ளது எனில், தோசை வகையறாக்களே எளிதானது. எனக்கு ஆரம்பத்திலேயே ஆம்லெட் போட்டு சாப்பிடவேண்டுமென்ற குறிக்கோள் இருந்ததினால் மற்ற அயிட்டங்கள் கண்ணுக்குத் தென்படவில்லை.
ஆம்லெட்டுக்குத் தேவையான பொருட்கள் : (ஒரு ஆம்லெட்டுக்கு)
பெரியதாகவும் அல்லாமல் சிறியதாகவும் அல்லாமல், ஒரு கோழிமுட்டை
ஒன்றரை பெரிய வெங்காயம்
இரண்டரை மிளகாய்கள், சிவப்பு என்றால் பிரச்சனையில்ல, பச்சை மிளகாய் எனில் ஒன்றரையே போதும்
தக்காளி சிறியது ஒன்று. ( கொஞ்சம் எண்ணெய், கடுகு, )
கறிவேப்பிலைகள் ஒன்றிரண்டு.
ஒரு சிறுகரண்டி உப்பு
ஒரு சிறுகரண்டியளவு பெப்பர்,
இதையெல்லாவற்றையும் விட, தோசைக்கல்லும், அடுப்பும் முக்கியம். இனி எப்படி ஆம்லெட் போட்டேன் என்பதை என் வாயிலாகவே சொல்கிறேனே.!!
முட்டையை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, வெங்காயங்களை அறிந்தேன், ஆம்லெட்டுக்கு வெங்காயம் வெகு முக்கியம்.வெங்காயத்தை உரிக்க உரிக்க அதில் ஒன்றுமே இருக்காது என்று கவியரசர் சொல்லியிருக்கிறார்.. ஒன்றுமே இல்லாத வெங்காயமா நம்மை அழவைக்கிறது? இந்த மாபெரும் சிந்தனையோடு வெங்காயத்தில் சிலவற்றை உரித்து எடுத்து வைத்தேன். அடுத்து பச்சை மிளகாய் வேண்டும். அந்த நேரம் பார்த்து பச்சை மிளகாய் இல்லை. சிவப்பு மிளகாய்தான் இருந்தது. இதில் ஒரு அதிசயம் பாருங்கள். சிவப்பு கோபத்தைக் குறிப்பிடுகிறது, பச்சை சாந்தத்தைக் குறிப்பிடுகீறது. ஆனால் மிளகாயைப் பொறுத்தவரையில் நிலைமை தலைகீழ். சிவப்பு மிளகாயை விட பச்சை மிளகாய் காரம் அதிகம்... ரெண்டுக்கும் வித்தியாசம் ஏறும்போது தெரியாது. இறங்கும்போதுதான் தெரியும். :D
சரி விடுங்க... போனாப்போவுது என்று சிவப்பு மிளகாயை நறுக்கி வைத்துவிட்டு சில கறிவேப்பிலைகளைக் கிள்ளி, ஒரு பாத்திரத்தில் கொட்டினேன். தக்காளியை அறுத்து, சட்டியில் போட்டு தாழித்து தனியே எடுத்து வைத்திருந்தேன். தக்காளியை ஆம்லெட்டில் கலக்கிவிட்டால் சுவை இன்னும் கூடும், இந்த ரகசியம் நமக்குள் மட்டும் இருக்கட்டும். வெளியே யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். முட்டை ஐந்தையும் உடைத்து ஊற்றி கலக்கி, கொஞ்சம் உப்பு போட்டு, தயார் நிலையில் வைத்திருந்தேன். அடுத்தது அடுப்பு பற்ற வைக்கணுமே, லைட்டரைத் தேடி அடுப்பை பற்ற வைத்துவிட்டு, ஒரு கிரேட் சமையலுக்கு என்னை நான் தயார் செய்தேன்.
தோசைக்கல்லை எடுத்து, நெருப்பில் காயவைத்து எண்ணெய் கொஞ்சம் ஊற்றினேன். இப்போது முட்டைக் கலவையை தோசை போல ஊற்றிவிட்டு, சிறிது நேரம் தோசைக் கல்லில் காயவைத்தேன். வறுத்த தக்காளியை ஆங்காங்கே தெளிக்கவிட்டு சிறிதுநேரத்தில் நல்லபதம் வந்தபின்னர் பெப்பரைத் தூவிவிட்டு எடுக்க முயன்று ஒரு கரண்டி நோண்டினேன்.. அடடா! நாக்கில் தேன் ஊறியது. ஆம்லெட்டின் நிறம் என் நாவை துள்ளவைத்தது. பற்றாக்குறைக்கு வயிற்றுப் பசிவேறு! டேய் ஆதவா சீக்கிரம் வேக வையுடா என்று கிள்ளிவிட, ஆம்லெட்டைத் திருப்ப முயல்கையில்...
ஒரு கையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் ஆம்லெட்டை திருப்பிக் கொண்டிருக்க, நன்றாக ஒட்டிக் கொண்டது. அடடா! என்னடா இது? இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணி, அடுப்பின் நெருப்பளவை சற்று குறைத்து தோசைக் கரண்டியால் வரக்கு வரக்கு என்று ஆம்லெட்டைத் திருப்பிப் போட போராடினேன். கொஞ்ச நேரத்திலேயே கருகும் வாடை வந்துவிட்டது. என் வயிறோ என்னை அல்லோலகல்லோலப் படுத்திவிட்டது. அட போங்கப்பா நீங்களும் உங்க ஆம்லெட்டும் என்று நானே ஒரு நிலையில் சலிப்பாகிவிட, சரி இது போனால் என்ன இன்னொன்று முயற்சி செய்வோம் என்று நினைத்துக் கொண்டே அடுத்ததையும் ஊற்றினேன். ஓரளவுக்கு என் வழிக்கு வந்தாலும் ஆம்லெட்டின் முழு உருவம் என் கைக்கு வரவில்லை. ஒரு வழியாக தட்டில் எடுத்துப் போட்டு ஏற்கனவே நுனிக்கி வைத்திருந்த மிளகுத் தூளை அங்கங்கே தூவி, எடுத்து வாயில் வைப்பதற்குள் சூடு தாங்க மாட்டாமல் மீண்டும் தட்டிலேயே போட்டுவிட்டேன். வயிறு, பொறுமை மவனே பொறுமை என்றது. மெல்ல மெல்ல எட்டு ஆம்லெட்டுகளை சுட்டுவிட்டென். அட பாருய்யா, கவிஞர்னாலே எதுகை தானா அமையும் போல... என்னதான் தின்பதற்கு நாக்கு அத்தனை ஜொள்ளு விட்டாலும்ன் எட்டையும் முழுங்க நான் என்ன வாத்தியாரா? (சும்மா லுலுவாயி:D :D) மூன்றே மூன்றுதான் தின்ன முடிந்தது. எனக்கு என் நாக்கின் மீதே கோவம். திகட்டுத் தனம் ஊறிப் போய்விட்ட நாக்கு ஹாயாக படுத்திருந்தது. ஒருசில சிவப்பு மிளகாய்கள் தப்பித் தவறி உள்ளே சென்றாலும் ருசி அடக்கிவிட்டது.
ஆனால் எனக்கு ஒன்றுமட்டும் விளங்கவே இல்லை. ஏன் ஆம்லெட் மட்டும் யார் போட்டாலும் ஒரேமாதிரி ருசியாக இருக்கிறது? இது ஆம்லெட்டுக்கே வெளிச்சம் என்கிறீர்களா? சரி நான் மேட்டருக்கு வருகிறேன். மீதமானது மொத்தம் நான்கு ஆம்லெட்டுகள். அருகே யாராவது இருந்தாலாவது கொடுக்கலாம். யாருமில்லை. என்ன செய்ய? ஒரே யோசனை. பேசாமல் ஆப்பாயில் போட்டாவது சாப்பிட்டிருக்கலாம். அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. எல்லா முட்டைகளையும் உடைத்துவிட்டேனே!. ஆப்பாயிலும் இதேமாதிரி ஒட்டிக் கொண்டால் அது இன்னும் சிரமம்தான். அதைத் திருப்பிப் போட்டுகூட சரிசெய்யமுடியாது.
ஆப்பாயில் என்றவுடனே எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. எங்கள் ஊரில் முக்காபாயில் என்று ஒன்று போடுவார்கள். ஆப்பாயிலைத் திருப்பிப் போட்டு வெந்தும் வேகாமலும் அரைவேக்காடில் கொண்டுவருவார்கள். அப்படி போடுவதற்கும் வழியில்லாமல் முழித்துக் கொண்டிருந்தேன். உடனே ஒரு யோசனை. என் நண்பன் ஒருவனுக்குப் போன் செய்து, உடனே வா, கறி சமைத்து வைத்திருக்கிறேன் என்று சொல்ல, அவனோ, எங்கள் வீட்டிலேயே அதுதாண்டா என்று கடுப்பேத்த, வேற வழியில்லாமல் இன்னொரு பொய் சொல்லவேண்டியிருந்தது. "ஜிக் இருக்கு வரியா?" என்றேன். உடனே ஒத்துக் கொண்டான். இது ஒரு சங்கேத பாஷை. எங்களுக்கு மட்டுமே புரியும்படி இருக்கும். அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆள் வீட்டு வாசலில் வந்து நின்றான். எங்கேடா ஜிக் என்று கேட்டான். பொறு ஓபன் பண்றேன் என்று சொல்லி, முதலில் ஆம்லெட், அப்பறம் ஜிக் என்றேன். அவனோ, ஜிக்கோடுதான் ஆம்லெட் சாப்பிடுவேன் என்றான். இதென்னடா வம்பா போச்சு என்று அவனிடம் பேசி சமாளிப்பதற்குள் ஆம்லெட் வாடை அடிக்க ஆரம்பித்துவிட்டது.
ஒருவழியாக வயிற்றுக்குள் செட்டில் ஆகிவிட, ஜிக் இல்லையென்ற கோவத்தில் வீட்டுக்குச் சென்றுவிட்டான். எனக்கு முட்டை வாங்கியது வீணாகவில்லை என்ற நிம்மதி. சிவப்பு மிளகாய் (தெலுகில் எர்ர மெரகாய்) வயிற்றுக்குள் கபளீகரம் பண்ணப் பார்க்க, எனக்கோ ஒரே கலக்கம். கிட்டத்தட்ட எட்டு ஆம்லெட்டில் ஐந்தை நானே தின்றிருக்கிறேன். சாதாரணமாக தோசையே அவ்வளவுதான் தின்பேன். இப்ப ஆம்லெட்டே ஐந்தென்றால் வயிறு சும்மா இருக்குமா? வயிற்று பயம் கொஞ்சம் ஆட்கொள்ள, நேரே கடைக்கு ஓடிப் போய் ஒரு ஏழரையை வாங்கிவந்தேன். ( ஏழு+அறை = 7+Up [அப்பினா அது அறை தானே :D] ) எதற்கும் முன்னெச்சரிக்கை தானே. ஏதோ வெறும் தண்ணியைக் குடித்ததைப் போலத்தான் இருந்தது.
மணி பத்தை கடந்துவிட்ட நன்றாகத் தூங்கிவிட்டேன். இனி ஒருநாளும் இந்தமாதிரி நிகழக்கூடாது, அதாவது கல்யாணம் முடித்து இப்படி நடக்கக் கூடாது என்பதைச் சொல்லுகிறேன்.
என்னடா இவன் மேட்டருக்கு வரவில்லை என்று நினைப்பவர்களுக்கு, ஆம்லெட் போட்டால் அதிகம் தின்னாதீர்கள். இது என் அறிவுரை. பின்னால் பிரச்சனை, பின்னாலும் பிரச்சனை. ஆப்பாயில் ஒருவேளை சாப்பிடக்கண்டால் அதை லாவகமாக எடுத்து தின்னவேண்டும். (ஆப்பாயில் சாப்பிடும் போது பலரிடம் பெட் கட்டுவேன். ஒரே ஒருவிரலில் கரு உடையாமல் நிற்கவைக்கவேண்டும்.. பலர் தோற்றிருக்கிறார்கள்..) அப்படி தின்னும்போது உடைந்து ஒழுகிவிட்டால், அன்றைய இரவு நீங்கள் ஒரு சாக்கடைக்குள் படுத்துப் புரளுவதைப் போலத்தான் தெரியும். அளவுக்கு அதிகமாக வெங்காயமோ அல்லது மிளகாயோ சேர்க்கவேண்டாம். அதேபோல பெப்பரைத் தூவும் போது கண்ணுள் படாமல் அழகாக ஆம்லெட்டின் எல்லா இடங்களிலும் படும்படி பரவிவிடவேண்டும். அதிலும் அதிகம் இருந்தால் தொண்டை காரமெடுக்கும். உடம்புக்கு ஏற்ற உணவுதான் சரி. அதனால் என்னை மாதிரி ஒல்லிப்பிச்சானாக இருப்பவர்களுக்கு மூன்று முட்டையும், வாத்தியார் மாதிரி குண்டாக இருப்பவர்களுக்கு ஐந்து முதல் எத்தனை முட்டையும் சாப்பிடலாம். ஆம்லெட்டோ அல்லது ஆப்பாயிலோ சமைக்க, நல்ல தோசைக்கல் வேண்டும். குறிப்பாக நான் ஸ்டிக் இருந்தால் சவுகரியம்,. (எங்கள் வீட்டில் நானே, ஸ்டிக் ஆகும் [நான்-சப்பாத்தி] ) ஆம்லெட் ஒட்டிக் கொண்டால் அதை எடுத்து தின்பது அசெளகரியம். அடுத்து, நீங்கள் சமைக்கும் போது அருகிலே யாரும் இல்லாமல் இருப்பது நலம். இல்லையென்றால் மானம் போய்விடும். அப்பறம் அடுத்தமுறை நீங்கள் சமைத்ததை நீங்கள் மட்டுமே சாப்பிடும் அவலம் நேரிடும்.
இதில் எனக்கு இரு சந்தேகங்கள். ஒன்று, ஆம்லெட் மற்றும் ஆப்பாயிலின் தமிழாக்கம் என்ன? இரண்டாவது, ஆங்கிலத்தில் இதை எப்படி எழுதுவது. அதாவது ஸ்பெலிங் என்னென்ன?
என்ன, நீங்க ஆம்லெட் போட தயாராகிவிட்டீர்களா?
முட்டையை சமைப்பதில் பல வகைகள் உண்டு. முட்டையை வேக வைத்து தின்னலாம், ப்ளையின் ஆம்லெட், வெங்காய ஆம்லெட், ஆப்பாயில் போன்றவை தோசை வகைகள். முட்டையில் குழம்பு இருக்கிறது. வருவல் இருக்கிறது. முட்டைப் பொறியல், முட்டை தோசை, முட்டை புரோட்டா, முட்டை சாம்பார், முட்டை போண்டா, முட்டைக்கரு பஜ்ஜி, என பல அயிட்டங்கள் இருக்கின்றன. வேகமாக செய்து சாப்பிடவேண்டும், குறைவான சமையல்பொருள்களே உள்ளது எனில், தோசை வகையறாக்களே எளிதானது. எனக்கு ஆரம்பத்திலேயே ஆம்லெட் போட்டு சாப்பிடவேண்டுமென்ற குறிக்கோள் இருந்ததினால் மற்ற அயிட்டங்கள் கண்ணுக்குத் தென்படவில்லை.
ஆம்லெட்டுக்குத் தேவையான பொருட்கள் : (ஒரு ஆம்லெட்டுக்கு)
பெரியதாகவும் அல்லாமல் சிறியதாகவும் அல்லாமல், ஒரு கோழிமுட்டை
ஒன்றரை பெரிய வெங்காயம்
இரண்டரை மிளகாய்கள், சிவப்பு என்றால் பிரச்சனையில்ல, பச்சை மிளகாய் எனில் ஒன்றரையே போதும்
தக்காளி சிறியது ஒன்று. ( கொஞ்சம் எண்ணெய், கடுகு, )
கறிவேப்பிலைகள் ஒன்றிரண்டு.
ஒரு சிறுகரண்டி உப்பு
ஒரு சிறுகரண்டியளவு பெப்பர்,
இதையெல்லாவற்றையும் விட, தோசைக்கல்லும், அடுப்பும் முக்கியம். இனி எப்படி ஆம்லெட் போட்டேன் என்பதை என் வாயிலாகவே சொல்கிறேனே.!!
முட்டையை ஒரு இடத்தில் வைத்துவிட்டு, வெங்காயங்களை அறிந்தேன், ஆம்லெட்டுக்கு வெங்காயம் வெகு முக்கியம்.வெங்காயத்தை உரிக்க உரிக்க அதில் ஒன்றுமே இருக்காது என்று கவியரசர் சொல்லியிருக்கிறார்.. ஒன்றுமே இல்லாத வெங்காயமா நம்மை அழவைக்கிறது? இந்த மாபெரும் சிந்தனையோடு வெங்காயத்தில் சிலவற்றை உரித்து எடுத்து வைத்தேன். அடுத்து பச்சை மிளகாய் வேண்டும். அந்த நேரம் பார்த்து பச்சை மிளகாய் இல்லை. சிவப்பு மிளகாய்தான் இருந்தது. இதில் ஒரு அதிசயம் பாருங்கள். சிவப்பு கோபத்தைக் குறிப்பிடுகிறது, பச்சை சாந்தத்தைக் குறிப்பிடுகீறது. ஆனால் மிளகாயைப் பொறுத்தவரையில் நிலைமை தலைகீழ். சிவப்பு மிளகாயை விட பச்சை மிளகாய் காரம் அதிகம்... ரெண்டுக்கும் வித்தியாசம் ஏறும்போது தெரியாது. இறங்கும்போதுதான் தெரியும். :D
சரி விடுங்க... போனாப்போவுது என்று சிவப்பு மிளகாயை நறுக்கி வைத்துவிட்டு சில கறிவேப்பிலைகளைக் கிள்ளி, ஒரு பாத்திரத்தில் கொட்டினேன். தக்காளியை அறுத்து, சட்டியில் போட்டு தாழித்து தனியே எடுத்து வைத்திருந்தேன். தக்காளியை ஆம்லெட்டில் கலக்கிவிட்டால் சுவை இன்னும் கூடும், இந்த ரகசியம் நமக்குள் மட்டும் இருக்கட்டும். வெளியே யாரிடமும் சொல்லிவிடாதீர்கள். முட்டை ஐந்தையும் உடைத்து ஊற்றி கலக்கி, கொஞ்சம் உப்பு போட்டு, தயார் நிலையில் வைத்திருந்தேன். அடுத்தது அடுப்பு பற்ற வைக்கணுமே, லைட்டரைத் தேடி அடுப்பை பற்ற வைத்துவிட்டு, ஒரு கிரேட் சமையலுக்கு என்னை நான் தயார் செய்தேன்.
தோசைக்கல்லை எடுத்து, நெருப்பில் காயவைத்து எண்ணெய் கொஞ்சம் ஊற்றினேன். இப்போது முட்டைக் கலவையை தோசை போல ஊற்றிவிட்டு, சிறிது நேரம் தோசைக் கல்லில் காயவைத்தேன். வறுத்த தக்காளியை ஆங்காங்கே தெளிக்கவிட்டு சிறிதுநேரத்தில் நல்லபதம் வந்தபின்னர் பெப்பரைத் தூவிவிட்டு எடுக்க முயன்று ஒரு கரண்டி நோண்டினேன்.. அடடா! நாக்கில் தேன் ஊறியது. ஆம்லெட்டின் நிறம் என் நாவை துள்ளவைத்தது. பற்றாக்குறைக்கு வயிற்றுப் பசிவேறு! டேய் ஆதவா சீக்கிரம் வேக வையுடா என்று கிள்ளிவிட, ஆம்லெட்டைத் திருப்ப முயல்கையில்...
ஒரு கையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் ஆம்லெட்டை திருப்பிக் கொண்டிருக்க, நன்றாக ஒட்டிக் கொண்டது. அடடா! என்னடா இது? இப்படி ஆகிவிட்டதே என்று எண்ணி, அடுப்பின் நெருப்பளவை சற்று குறைத்து தோசைக் கரண்டியால் வரக்கு வரக்கு என்று ஆம்லெட்டைத் திருப்பிப் போட போராடினேன். கொஞ்ச நேரத்திலேயே கருகும் வாடை வந்துவிட்டது. என் வயிறோ என்னை அல்லோலகல்லோலப் படுத்திவிட்டது. அட போங்கப்பா நீங்களும் உங்க ஆம்லெட்டும் என்று நானே ஒரு நிலையில் சலிப்பாகிவிட, சரி இது போனால் என்ன இன்னொன்று முயற்சி செய்வோம் என்று நினைத்துக் கொண்டே அடுத்ததையும் ஊற்றினேன். ஓரளவுக்கு என் வழிக்கு வந்தாலும் ஆம்லெட்டின் முழு உருவம் என் கைக்கு வரவில்லை. ஒரு வழியாக தட்டில் எடுத்துப் போட்டு ஏற்கனவே நுனிக்கி வைத்திருந்த மிளகுத் தூளை அங்கங்கே தூவி, எடுத்து வாயில் வைப்பதற்குள் சூடு தாங்க மாட்டாமல் மீண்டும் தட்டிலேயே போட்டுவிட்டேன். வயிறு, பொறுமை மவனே பொறுமை என்றது. மெல்ல மெல்ல எட்டு ஆம்லெட்டுகளை சுட்டுவிட்டென். அட பாருய்யா, கவிஞர்னாலே எதுகை தானா அமையும் போல... என்னதான் தின்பதற்கு நாக்கு அத்தனை ஜொள்ளு விட்டாலும்ன் எட்டையும் முழுங்க நான் என்ன வாத்தியாரா? (சும்மா லுலுவாயி:D :D) மூன்றே மூன்றுதான் தின்ன முடிந்தது. எனக்கு என் நாக்கின் மீதே கோவம். திகட்டுத் தனம் ஊறிப் போய்விட்ட நாக்கு ஹாயாக படுத்திருந்தது. ஒருசில சிவப்பு மிளகாய்கள் தப்பித் தவறி உள்ளே சென்றாலும் ருசி அடக்கிவிட்டது.
ஆனால் எனக்கு ஒன்றுமட்டும் விளங்கவே இல்லை. ஏன் ஆம்லெட் மட்டும் யார் போட்டாலும் ஒரேமாதிரி ருசியாக இருக்கிறது? இது ஆம்லெட்டுக்கே வெளிச்சம் என்கிறீர்களா? சரி நான் மேட்டருக்கு வருகிறேன். மீதமானது மொத்தம் நான்கு ஆம்லெட்டுகள். அருகே யாராவது இருந்தாலாவது கொடுக்கலாம். யாருமில்லை. என்ன செய்ய? ஒரே யோசனை. பேசாமல் ஆப்பாயில் போட்டாவது சாப்பிட்டிருக்கலாம். அதற்கும் வழியில்லாமல் போய்விட்டது. எல்லா முட்டைகளையும் உடைத்துவிட்டேனே!. ஆப்பாயிலும் இதேமாதிரி ஒட்டிக் கொண்டால் அது இன்னும் சிரமம்தான். அதைத் திருப்பிப் போட்டுகூட சரிசெய்யமுடியாது.
ஆப்பாயில் என்றவுடனே எனக்கு ஒன்று ஞாபகம் வருகிறது. எங்கள் ஊரில் முக்காபாயில் என்று ஒன்று போடுவார்கள். ஆப்பாயிலைத் திருப்பிப் போட்டு வெந்தும் வேகாமலும் அரைவேக்காடில் கொண்டுவருவார்கள். அப்படி போடுவதற்கும் வழியில்லாமல் முழித்துக் கொண்டிருந்தேன். உடனே ஒரு யோசனை. என் நண்பன் ஒருவனுக்குப் போன் செய்து, உடனே வா, கறி சமைத்து வைத்திருக்கிறேன் என்று சொல்ல, அவனோ, எங்கள் வீட்டிலேயே அதுதாண்டா என்று கடுப்பேத்த, வேற வழியில்லாமல் இன்னொரு பொய் சொல்லவேண்டியிருந்தது. "ஜிக் இருக்கு வரியா?" என்றேன். உடனே ஒத்துக் கொண்டான். இது ஒரு சங்கேத பாஷை. எங்களுக்கு மட்டுமே புரியும்படி இருக்கும். அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆள் வீட்டு வாசலில் வந்து நின்றான். எங்கேடா ஜிக் என்று கேட்டான். பொறு ஓபன் பண்றேன் என்று சொல்லி, முதலில் ஆம்லெட், அப்பறம் ஜிக் என்றேன். அவனோ, ஜிக்கோடுதான் ஆம்லெட் சாப்பிடுவேன் என்றான். இதென்னடா வம்பா போச்சு என்று அவனிடம் பேசி சமாளிப்பதற்குள் ஆம்லெட் வாடை அடிக்க ஆரம்பித்துவிட்டது.
ஒருவழியாக வயிற்றுக்குள் செட்டில் ஆகிவிட, ஜிக் இல்லையென்ற கோவத்தில் வீட்டுக்குச் சென்றுவிட்டான். எனக்கு முட்டை வாங்கியது வீணாகவில்லை என்ற நிம்மதி. சிவப்பு மிளகாய் (தெலுகில் எர்ர மெரகாய்) வயிற்றுக்குள் கபளீகரம் பண்ணப் பார்க்க, எனக்கோ ஒரே கலக்கம். கிட்டத்தட்ட எட்டு ஆம்லெட்டில் ஐந்தை நானே தின்றிருக்கிறேன். சாதாரணமாக தோசையே அவ்வளவுதான் தின்பேன். இப்ப ஆம்லெட்டே ஐந்தென்றால் வயிறு சும்மா இருக்குமா? வயிற்று பயம் கொஞ்சம் ஆட்கொள்ள, நேரே கடைக்கு ஓடிப் போய் ஒரு ஏழரையை வாங்கிவந்தேன். ( ஏழு+அறை = 7+Up [அப்பினா அது அறை தானே :D] ) எதற்கும் முன்னெச்சரிக்கை தானே. ஏதோ வெறும் தண்ணியைக் குடித்ததைப் போலத்தான் இருந்தது.
மணி பத்தை கடந்துவிட்ட நன்றாகத் தூங்கிவிட்டேன். இனி ஒருநாளும் இந்தமாதிரி நிகழக்கூடாது, அதாவது கல்யாணம் முடித்து இப்படி நடக்கக் கூடாது என்பதைச் சொல்லுகிறேன்.
என்னடா இவன் மேட்டருக்கு வரவில்லை என்று நினைப்பவர்களுக்கு, ஆம்லெட் போட்டால் அதிகம் தின்னாதீர்கள். இது என் அறிவுரை. பின்னால் பிரச்சனை, பின்னாலும் பிரச்சனை. ஆப்பாயில் ஒருவேளை சாப்பிடக்கண்டால் அதை லாவகமாக எடுத்து தின்னவேண்டும். (ஆப்பாயில் சாப்பிடும் போது பலரிடம் பெட் கட்டுவேன். ஒரே ஒருவிரலில் கரு உடையாமல் நிற்கவைக்கவேண்டும்.. பலர் தோற்றிருக்கிறார்கள்..) அப்படி தின்னும்போது உடைந்து ஒழுகிவிட்டால், அன்றைய இரவு நீங்கள் ஒரு சாக்கடைக்குள் படுத்துப் புரளுவதைப் போலத்தான் தெரியும். அளவுக்கு அதிகமாக வெங்காயமோ அல்லது மிளகாயோ சேர்க்கவேண்டாம். அதேபோல பெப்பரைத் தூவும் போது கண்ணுள் படாமல் அழகாக ஆம்லெட்டின் எல்லா இடங்களிலும் படும்படி பரவிவிடவேண்டும். அதிலும் அதிகம் இருந்தால் தொண்டை காரமெடுக்கும். உடம்புக்கு ஏற்ற உணவுதான் சரி. அதனால் என்னை மாதிரி ஒல்லிப்பிச்சானாக இருப்பவர்களுக்கு மூன்று முட்டையும், வாத்தியார் மாதிரி குண்டாக இருப்பவர்களுக்கு ஐந்து முதல் எத்தனை முட்டையும் சாப்பிடலாம். ஆம்லெட்டோ அல்லது ஆப்பாயிலோ சமைக்க, நல்ல தோசைக்கல் வேண்டும். குறிப்பாக நான் ஸ்டிக் இருந்தால் சவுகரியம்,. (எங்கள் வீட்டில் நானே, ஸ்டிக் ஆகும் [நான்-சப்பாத்தி] ) ஆம்லெட் ஒட்டிக் கொண்டால் அதை எடுத்து தின்பது அசெளகரியம். அடுத்து, நீங்கள் சமைக்கும் போது அருகிலே யாரும் இல்லாமல் இருப்பது நலம். இல்லையென்றால் மானம் போய்விடும். அப்பறம் அடுத்தமுறை நீங்கள் சமைத்ததை நீங்கள் மட்டுமே சாப்பிடும் அவலம் நேரிடும்.
இதில் எனக்கு இரு சந்தேகங்கள். ஒன்று, ஆம்லெட் மற்றும் ஆப்பாயிலின் தமிழாக்கம் என்ன? இரண்டாவது, ஆங்கிலத்தில் இதை எப்படி எழுதுவது. அதாவது ஸ்பெலிங் என்னென்ன?
என்ன, நீங்க ஆம்லெட் போட தயாராகிவிட்டீர்களா?