PDA

View Full Version : அவை கால்தடங்கள் மட்டுமன்று



ப்ரியன்
26-11-2007, 10:30 AM
மழை ஓய்ந்த நாளொன்றில்
நடைபயிலும் மழலைகளின்
கால்தடங்களை
தன் அறை சுவர் ஓவியங்களாக
பத்திரப்படுத்திக் கொள்கிறது பூமி!

- ப்ரியன்.

பூமகள்
26-11-2007, 10:40 AM
மழையீர மண்தடத்தில்..
மழலையின் கால்தடம்..
பத்திரப்படுத்தும் பூமிக்குடம்..!
துளித்துளியாய் சுவடுகளை..!!

அற்புதமான கவிதை..! 4 வரியில் அசத்தல் கவிதை..!!

பாராட்டுகள் ப்ரியன்.
உங்களின் வலைப்பூ பார்த்தேன். நல்ல கவிதைகள் பல படைத்திருக்கிறீர்கள். இனி உங்களிடமிருந்து மன்றத்துக்கு பல நல்ல கவிதைகளை எதிர்பார்க்கலாம் என்று நம்புகிறேன்.

வசீகரன்
26-11-2007, 11:10 AM
அழகான வரிகள்...! பச்சிளம் பாதம் பதிந்த பூமி கூட அழகுதான்...!
நன்று..... நண்பர் பிரியன்...!

வசீகரன்

விகடன்
26-11-2007, 11:21 AM
சிறந்த கற்பனை நிஜத்தில்.
நானும் ஒரு கணம் குழந்தையானேன் உங்கள் கவிதையால்,
காரணம்...
பூமியின் மடியில் அனைவருக் குழந்தைகளே.

சிவா.ஜி
26-11-2007, 11:31 AM
பிஞ்சுக்கால்களின் தடம்,பூமியில் அதற்கென்று ஒரு இடம்.பஞ்சுப்பாதங்களின் தடமே ஒரு கவிதை...அவற்றை தாங்கி வந்த இந்த வரிகளும் ஒரு மென்கவிதை.வாழ்த்துகள் ப்ரியன்.

யவனிகா
26-11-2007, 12:36 PM
"பிரியன்" பெயரைப் போலவே அழகான கவிதை.அறை சுவர் ஓவியங்களை அடிக்கடிப் பார்த்து ரசிக்குமோ பூமி?பிள்ளைகளின் உள்ளத்து மகிழ்ச்சியை தேக்கி அறையெங்கும் நிரப்பட்டும் காலடிகள்.

அமரன்
26-11-2007, 01:30 PM
மீண்டுமொரு மழைநாள்
காணாமல்
போகுமா ஓவியங்கள்..!

அக்னி
01-12-2007, 11:42 AM
பதிந்த தடங்கள் சேமிக்கப்பட்டால்,
அது,
அழகுணர்ச்சியல்ல... வரட்சி...

மழலைகளின்
மென்மைத் தடங்கள் தாங்க,
உள்வாங்கிக் கொண்ட பூமி...
இறுகிப் போய்விட்ட தடங்களைக் காட்டி,
வானிடம் கேட்குமோ,
பிச்சை...???

சேர்ந்துவிட்ட தடங்கள்
சொல்வது...
காய்ந்து போகும் பூமியின்,
நிலை...

வரட்சியையும் குளிர்மையாகச் சொல்லும் கவி...

அவை கால்த்தடங்கள் மட்டுமன்று..,
காய்வைச் சொல்லும் தடங்களுமே...
பொருந்துகின்றது தலைப்பு...

பாராட்டுக்கள் ப்ரியன் அவர்களே...

ஓவியன்
09-12-2007, 02:24 PM
ஓ...!!
நீராடி வந்த
பூமாதேவி பதுக்கி வைக்கிறாளா
பாலர் பாதச் சுவடை........???

அழகான, இனிமையான கற்பனை ப்ரியன்...!
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்......!! :icon_b:

jpl
09-12-2007, 02:26 PM
ஓவியனை வழிமொழிகிறேன்..

தாமரை
10-12-2007, 03:22 AM
மழை ஓய்ந்த நாளொன்றில்
நடைபயிலும் மழலைகளின்
கால்தடங்களை
தன் அறை சுவர் ஓவியங்களாக
பத்திரப்படுத்திக் கொள்கிறது பூமி!

- ப்ரியன்.

தமிழன்னை
தன் மடியில்
பெருமையுடன் தாங்கும்
இன்னொரு குழந்தையின் கால்தடம்
இக்கவிதை!

சுகந்தப்ரீதன்
12-12-2007, 02:09 PM
ப்ரியன்... மழலையயும் மழையையும் இணைத்து மனம் விரும்பும் கவிதையை தந்தமைக்கு எனது வாழ்த்துக்கள்..!