நிரன்
24-11-2007, 04:45 AM
சில கவிதைளும் சிலரின் கவிதைளும் என்னை கவர்ந்தது அதில் நித்தியா அக்காவின் கவி எனக்கு மிகவும் பிடித்தது அது உங்களுக்காக தமிழ் மன்றத்தில் சமர்ப்பிக்கிறேன் இதில் ஒலிவடிவம் என்னை மிகவும் கவர்ந்தது இதை பார்த்துத்தான் எனக்கும் ஒலிவடிவில் அமைக்கும் ஆசை வந்தது.......
http://bp0.blogger.com/_RDQ7R-gL4lI/Ri491tNGMPI/AAAAAAAAAA8/RtlzfzCBSzM/s320/love(7).jpg
ஒலிவடிவில்.. (http://www.acidplanet.com/components/embedfile.asp?asset=972719&T=4574)
என் போர்வைக்குள் - ஒரு
வெப்பம் இருந்தது.
தேகம் அசைவின்மையால்
செயலிழந்து கிடந்தது.
முழுநிலச் சந்திரனாய் அவன்
என் கண்கள் பார்த்து
காதல் செய்து கொண்டிருந்தான்.
பிஞ்சு விரல்களில் நுழைந்து -என்
எடை எண்ணிக் கொண்டிருந்தான்.
அவன் கரம் பட்ட
என் கன்னக்குழி
நாணத்தில் மெளனமாய் இருந்தது.
மரியாதைக்குரியவனின்
மலர்முகம் பார்க்குமுன்
கலைந்து போயிற்று என் கனவு...!
வெற்றுக் காகிதமும்
எழுதுகோலும் மாத்திரமே - என்
அருகாமையில் இருந்தது...!
புரிகிறது!
காய்ச்சலின் பிரதிபலிப்பு - என்
போர்வையின் வெப்பம் என்பதும்..
தலையின் அமுக்கம் -என்
தேகத்தின் செயலிழப்பு என்பதும்..
ம்..
என் சுகவீனம் கூட
காதல்வைத்துக் காத்திருக்கிறது.
நான் வருடிய மயிலிறகு என்னையும்
ஒரு நாள் வருடுமென்று...
ஒலிவடிவில்.. (http://www.acidplanet.com/components/embedfile.asp?asset=972719&T=4574)
நன்றி அக்கா..........................என்றும் நிரஞ்சன்
http://bp0.blogger.com/_RDQ7R-gL4lI/Ri491tNGMPI/AAAAAAAAAA8/RtlzfzCBSzM/s320/love(7).jpg
ஒலிவடிவில்.. (http://www.acidplanet.com/components/embedfile.asp?asset=972719&T=4574)
என் போர்வைக்குள் - ஒரு
வெப்பம் இருந்தது.
தேகம் அசைவின்மையால்
செயலிழந்து கிடந்தது.
முழுநிலச் சந்திரனாய் அவன்
என் கண்கள் பார்த்து
காதல் செய்து கொண்டிருந்தான்.
பிஞ்சு விரல்களில் நுழைந்து -என்
எடை எண்ணிக் கொண்டிருந்தான்.
அவன் கரம் பட்ட
என் கன்னக்குழி
நாணத்தில் மெளனமாய் இருந்தது.
மரியாதைக்குரியவனின்
மலர்முகம் பார்க்குமுன்
கலைந்து போயிற்று என் கனவு...!
வெற்றுக் காகிதமும்
எழுதுகோலும் மாத்திரமே - என்
அருகாமையில் இருந்தது...!
புரிகிறது!
காய்ச்சலின் பிரதிபலிப்பு - என்
போர்வையின் வெப்பம் என்பதும்..
தலையின் அமுக்கம் -என்
தேகத்தின் செயலிழப்பு என்பதும்..
ம்..
என் சுகவீனம் கூட
காதல்வைத்துக் காத்திருக்கிறது.
நான் வருடிய மயிலிறகு என்னையும்
ஒரு நாள் வருடுமென்று...
ஒலிவடிவில்.. (http://www.acidplanet.com/components/embedfile.asp?asset=972719&T=4574)
நன்றி அக்கா..........................என்றும் நிரஞ்சன்