நேசம்
22-11-2007, 02:27 AM
வாரியார் சுவாமிகள் ஒரு கோவில் திருவிழாவில் திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு செய்து கொண்டு இருந்தார்.
சுவாமிகளிம் சொற்பொழிவை கேட்பவர்கள் மிக கவனமாக இருப்பார்கள்.அதிலும் முன் வரிசையில் இருப்பவர்கள் மிக மிக
கவனமாக இருப்பார்கள்.வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுக்கு இடையில் கேள்வி கேட்பார்கள்.
அன்று வழக்கம்போல் ஒரு சிறுவனை எழுப்பி "தம்ப்!தருமிக்கு பாட்டு
எழுதி கொடுத்தது யாரு?" என்று கேட்டார்கள்.
(அப்போது திருவிளையாடல் வெளிவந்த சமயம்)
அந்த பையன் சட்டென்று "சிவாஜி " என்று கூறினான்.இதை கேட்ட அனைவரும் சிரித்தனர்.
வாரியார் கூட்டத்தை பார்த்து "என் சிரிக்கிறிங்க.பையன் சரியாக சொல்லி இருக்கிறான்".வடக்கில் மரியாதையாக அழைக்க "ஜி" போட்டு அழைப்பது வழக்கம்.அதனால் தான் நேருவை "நேருஜி" என்றும்,காந்தியை "காந்திஜி" என்று அழைப்பது போல இந்த பையன் சிவாஜி ன்னு சொல்லி இருக்கிறான்.
கூட்டம் வாரியார் சுவாமிகளின் நகைச்சுவை திறமை கண்டு வியந்தது
சுவாமிகளிம் சொற்பொழிவை கேட்பவர்கள் மிக கவனமாக இருப்பார்கள்.அதிலும் முன் வரிசையில் இருப்பவர்கள் மிக மிக
கவனமாக இருப்பார்கள்.வாரியார் சுவாமிகள் சொற்பொழிவுக்கு இடையில் கேள்வி கேட்பார்கள்.
அன்று வழக்கம்போல் ஒரு சிறுவனை எழுப்பி "தம்ப்!தருமிக்கு பாட்டு
எழுதி கொடுத்தது யாரு?" என்று கேட்டார்கள்.
(அப்போது திருவிளையாடல் வெளிவந்த சமயம்)
அந்த பையன் சட்டென்று "சிவாஜி " என்று கூறினான்.இதை கேட்ட அனைவரும் சிரித்தனர்.
வாரியார் கூட்டத்தை பார்த்து "என் சிரிக்கிறிங்க.பையன் சரியாக சொல்லி இருக்கிறான்".வடக்கில் மரியாதையாக அழைக்க "ஜி" போட்டு அழைப்பது வழக்கம்.அதனால் தான் நேருவை "நேருஜி" என்றும்,காந்தியை "காந்திஜி" என்று அழைப்பது போல இந்த பையன் சிவாஜி ன்னு சொல்லி இருக்கிறான்.
கூட்டம் வாரியார் சுவாமிகளின் நகைச்சுவை திறமை கண்டு வியந்தது