IDEALEYE
21-11-2007, 11:18 AM
மரணம் நோக்கிய
எம் எல்லோரது பயணத்திலும்
வாழ்க்கை வழியோரத்தில்
நின்று நிலைக்கும்
ஏதோவொன்றுЕ
எனக்கு - காதல்.
உத்தமக்காதல்
வீணாய் வராது
வீம்பாய் வராது
வினையும் தராது
விசும்பலும் தாராது
வீரமற்று ஓரம்போகாது
காலத்தால், சூழ்நிலையால்
நிலைகுழைக்கப்பட்டு
நீர்த்துப்போகாது
அது
உன்மீது வந்த அந்த தருணம்
எனக்குள் மட்டுமல்ல
அது உனக்குள்ளும்
கருக்கொண்டதாய்
அறிந்த பொழுதுகளில்
என் வாழ்வு அர்த்தப்பட்டுப்
போனது
உன் வதனம்
முக்காட்டுக்குள்
ஒழிந்திருந்தும்
உன் விழிவழியே
உன் இதயம் திறந்தாய்
அன்றுதான்
உன்விழி - என்விழி
ஒரு மின்னல் சந்திப்பில்,
ஒருநொடி
எல்லாம் மாறிப்போனது.
கலீல் ஜிப்ரானுடைய
கவிவரிகளும்
தாஜ்மஹாலின்
சவரக்கற்களும்
வர்மாவின்
ஓவியங்களும்
என் புல்லாங்குழல்
இசையும்
உன் பெயருக்கு முன்
வலுவிழந்து போயிற்று
ஒரு அட்டைப்பைக்குள்
அடங்கிப்பேன
வேதம் நீ
ஒரு பழைய அரைக்குள்
பூட்டப்பட்ட
பெட்டகம் நீ
அடுக்களையில்
அடுப்பூதும்
ஒரு புல்லாங்குழல் நீ
மௌனம் கண்டெடுத்த
சங்கீதம் நீ
முடவன் கை
பேனா நீ
குரங்கின் கை
பூமாலை நீ
என்று உன்னை
கவிவடிக்கும்
துர்ப்பாக்கியம்
எனக்குத் தேவையில்லை.
நீ பெண் - நீ பூ
பெண் என்பதும்
ஆண் என்பதும்
எமக்குத்தரப்படும்
விலங்கும், விடுதலையும்
அல்ல.
அது ஒரு தேவை கருதிய
கடவுள் நியதி
அவ்வளவுதான்
அத்தேவை தவிர்த்து
வேறு எதுவும்
அதற்குள் இருப்பதாய்
எனக்குத்தெரியாது
எனவே
நீ என்னுடன் சமமாய்
நடந்துவா,
வாழ்வு இருவருக்கும் பொதுவானதே
உன் அளவில் நீ என்னுடன்
பகிர்ந்துகொள்
என் அளவில் நான் உன்னுடன்
பகிர்ந்து கொள்வேன்
சோதிப்புகள் Ц சாதிப்புகள்
எல்லாம் பொதுவாய்
போகட்டும்
உனக்குள் நான் எனக்குள் நீ
தொலைந்துபோகும் வரை
இப்படியே இருப்போம்.
IDEALEYE
எம் எல்லோரது பயணத்திலும்
வாழ்க்கை வழியோரத்தில்
நின்று நிலைக்கும்
ஏதோவொன்றுЕ
எனக்கு - காதல்.
உத்தமக்காதல்
வீணாய் வராது
வீம்பாய் வராது
வினையும் தராது
விசும்பலும் தாராது
வீரமற்று ஓரம்போகாது
காலத்தால், சூழ்நிலையால்
நிலைகுழைக்கப்பட்டு
நீர்த்துப்போகாது
அது
உன்மீது வந்த அந்த தருணம்
எனக்குள் மட்டுமல்ல
அது உனக்குள்ளும்
கருக்கொண்டதாய்
அறிந்த பொழுதுகளில்
என் வாழ்வு அர்த்தப்பட்டுப்
போனது
உன் வதனம்
முக்காட்டுக்குள்
ஒழிந்திருந்தும்
உன் விழிவழியே
உன் இதயம் திறந்தாய்
அன்றுதான்
உன்விழி - என்விழி
ஒரு மின்னல் சந்திப்பில்,
ஒருநொடி
எல்லாம் மாறிப்போனது.
கலீல் ஜிப்ரானுடைய
கவிவரிகளும்
தாஜ்மஹாலின்
சவரக்கற்களும்
வர்மாவின்
ஓவியங்களும்
என் புல்லாங்குழல்
இசையும்
உன் பெயருக்கு முன்
வலுவிழந்து போயிற்று
ஒரு அட்டைப்பைக்குள்
அடங்கிப்பேன
வேதம் நீ
ஒரு பழைய அரைக்குள்
பூட்டப்பட்ட
பெட்டகம் நீ
அடுக்களையில்
அடுப்பூதும்
ஒரு புல்லாங்குழல் நீ
மௌனம் கண்டெடுத்த
சங்கீதம் நீ
முடவன் கை
பேனா நீ
குரங்கின் கை
பூமாலை நீ
என்று உன்னை
கவிவடிக்கும்
துர்ப்பாக்கியம்
எனக்குத் தேவையில்லை.
நீ பெண் - நீ பூ
பெண் என்பதும்
ஆண் என்பதும்
எமக்குத்தரப்படும்
விலங்கும், விடுதலையும்
அல்ல.
அது ஒரு தேவை கருதிய
கடவுள் நியதி
அவ்வளவுதான்
அத்தேவை தவிர்த்து
வேறு எதுவும்
அதற்குள் இருப்பதாய்
எனக்குத்தெரியாது
எனவே
நீ என்னுடன் சமமாய்
நடந்துவா,
வாழ்வு இருவருக்கும் பொதுவானதே
உன் அளவில் நீ என்னுடன்
பகிர்ந்துகொள்
என் அளவில் நான் உன்னுடன்
பகிர்ந்து கொள்வேன்
சோதிப்புகள் Ц சாதிப்புகள்
எல்லாம் பொதுவாய்
போகட்டும்
உனக்குள் நான் எனக்குள் நீ
தொலைந்துபோகும் வரை
இப்படியே இருப்போம்.
IDEALEYE