ஆதி
19-11-2007, 03:25 PM
இந்த கவிதை கவிச்சமரில் சகோதரி யவனிகா முடித்த பெண்கள் என்ற சொல்லைக் கொண்டு துடங்கி படைக்கப் பட்ட கவிதை, உங்கள் கருத்துக்காக இங்கே படைக்கிறேன், இக்கவிதையில் உயிர் உள்ளதா, இன்னும் மெறுக்கேற்ற என்ன செய்ய வேண்டும், என்கிற எண்ணதுடன் உங்கள் முன்வைக்கிறேன், ஈரிடத்தில் ஒரே கவிதை இருக்க கூடதாயின் இதை எடிட் செய்து வேறு கவிதை புனைந்து விடுகிறேன்.. நன்றி
வேலை...
சம்பளத்திற்காய்
சில மணிநேரம்...வெளியில்
ஊதியமே இல்லாமல்
பலமணி நேரம்...வீட்டில்
பாராட்டுகளே இல்லாமல்
பயணப் படுகிறோம்
வேலையெனும் வீதியில்...பெண்கள்...
பெண்கள் பெண்கள்
பிறப்பின் மாண்புகள்..
கைம்பெண் என்ன
கடவுளின் பிழைகளா?
எதிர்ப்பட்டால் வருமாம்
இடையூறு காரியத்தில்..
தறிகெட்ட சமூகதின்
சரிகெட்ட வார்த்தைகள்..
நெற்றி நிலா
இழந்த வானங்களே..
நெறிகெட்ட சொற்களில்
மதிநொந்து விடவேண்டாம்..
நயம்செத்த ஞாலத்தின்
பயன்கெட்ட வார்த்தையிவை..
கைம்பெண் குழலில்
கமழாத மலர்கள்
கற்பக பூவாயினும்
கருவாட்டுக்கே சமம்..
-ஆதி
வேலை...
சம்பளத்திற்காய்
சில மணிநேரம்...வெளியில்
ஊதியமே இல்லாமல்
பலமணி நேரம்...வீட்டில்
பாராட்டுகளே இல்லாமல்
பயணப் படுகிறோம்
வேலையெனும் வீதியில்...பெண்கள்...
பெண்கள் பெண்கள்
பிறப்பின் மாண்புகள்..
கைம்பெண் என்ன
கடவுளின் பிழைகளா?
எதிர்ப்பட்டால் வருமாம்
இடையூறு காரியத்தில்..
தறிகெட்ட சமூகதின்
சரிகெட்ட வார்த்தைகள்..
நெற்றி நிலா
இழந்த வானங்களே..
நெறிகெட்ட சொற்களில்
மதிநொந்து விடவேண்டாம்..
நயம்செத்த ஞாலத்தின்
பயன்கெட்ட வார்த்தையிவை..
கைம்பெண் குழலில்
கமழாத மலர்கள்
கற்பக பூவாயினும்
கருவாட்டுக்கே சமம்..
-ஆதி