Hayah Roohi
19-11-2007, 02:49 AM
அவிழத்துடித்த
ரோஜா மொட்டு
உதிர்ந்து விழுகிறது!
அசைந்து ஆடி
கதை பேசிய
உன் கால்கள்....
தொய்ந்து கிடக்கின்றன!
ஒரு
மூன்று மாதக்கனவு
கலைந்து போகிறது!
காற்றுத்தேடி
களைத்துப் போன
குட்டி இதயம்
என்றைக்குமாய்
துடிக்க மறுத்தது!
`இப்போது விரியும்`
என்பதான
விழிச்சுவர்கள்
இறுகிக்கிடக்கின்றன!
இரங்க மறுக்கும்
இருண்ட கதவுகளை
தட்டி தட்டி
சோர்ந்து போனதா
உன்
உயிரின் குரல்?
உனக்காய்
நாமெல்லாம்
உயிரில் நொந்ததை...
குருவிசேர்ப்பதாய்
காசு சேர்த்ததை....
காணச்சகியாமல்
ஒரேயடியாய்
உன் கண் மூடினாயா?
வெள்ளைத்துணியில்
சுற்றி வைத்த
சிட்டுக்குருவியாய்
உன்
அசைவற்ற உடல்!
--
ஒரு
பனித்துளியின் பாடல்
போன்ற
உன் கன்னங்களில்
உறைந்து போகிறது
மனசு!
இதோ...
உன்னைத்தூக்குகிறார்கள்.....
.......................
கடைசி கடைசியாய்
நான்
கட்டறுந்து அழுகிறேன்........
உன்னை
மண் தாங்கிக்கொள்கிறது...
.................................
மலரைக் காம்பு தாங்குவதான
மென்மையுடன்
உன்னைத்தாங்கிக்கொள்கிறது!!!
இறைவன் போதுமானவன்!!!
பிஞ்சு ஹம்தாவைப் பிரிந்து வாடும் பெற்றோருக்கு
இறைவன் அமைதியையும் மன உறுதியையும்
அளிக்க....
ஏந்துவோம் எம் கரங்களை!!!
ரோஜா மொட்டு
உதிர்ந்து விழுகிறது!
அசைந்து ஆடி
கதை பேசிய
உன் கால்கள்....
தொய்ந்து கிடக்கின்றன!
ஒரு
மூன்று மாதக்கனவு
கலைந்து போகிறது!
காற்றுத்தேடி
களைத்துப் போன
குட்டி இதயம்
என்றைக்குமாய்
துடிக்க மறுத்தது!
`இப்போது விரியும்`
என்பதான
விழிச்சுவர்கள்
இறுகிக்கிடக்கின்றன!
இரங்க மறுக்கும்
இருண்ட கதவுகளை
தட்டி தட்டி
சோர்ந்து போனதா
உன்
உயிரின் குரல்?
உனக்காய்
நாமெல்லாம்
உயிரில் நொந்ததை...
குருவிசேர்ப்பதாய்
காசு சேர்த்ததை....
காணச்சகியாமல்
ஒரேயடியாய்
உன் கண் மூடினாயா?
வெள்ளைத்துணியில்
சுற்றி வைத்த
சிட்டுக்குருவியாய்
உன்
அசைவற்ற உடல்!
--
ஒரு
பனித்துளியின் பாடல்
போன்ற
உன் கன்னங்களில்
உறைந்து போகிறது
மனசு!
இதோ...
உன்னைத்தூக்குகிறார்கள்.....
.......................
கடைசி கடைசியாய்
நான்
கட்டறுந்து அழுகிறேன்........
உன்னை
மண் தாங்கிக்கொள்கிறது...
.................................
மலரைக் காம்பு தாங்குவதான
மென்மையுடன்
உன்னைத்தாங்கிக்கொள்கிறது!!!
இறைவன் போதுமானவன்!!!
பிஞ்சு ஹம்தாவைப் பிரிந்து வாடும் பெற்றோருக்கு
இறைவன் அமைதியையும் மன உறுதியையும்
அளிக்க....
ஏந்துவோம் எம் கரங்களை!!!