lenram80
13-11-2007, 10:36 PM
நாசாவின் புதிய கண்டுபிடிப்பு!
உலகமே ஒருகணம் வியப்பு!
நிலவின் மேற்பரப்பில் நீர் திவலைகளாம்!
அவர்களுக்கு எப்போது தெரிய போகிறது?
உன்னை நிலவென நினைத்து
உன் நெற்றி வியர்வையை தான்
செயற்கை கோள்கள் படமெடுத்து அனுப்பிவிட்டன என்று?
நிலவு மனிதர்களிடம் கேட்பது எல்லாம்
ஒரே ஒரு காது கேட்கும் கருவியை தான்!
உந்தன் குரலை கேட்க வேண்டுமாம் அதற்காக!
நேற்றிரவு நிலவுக்கு தெரியும்படி நான் இப்படி எழுதி வைத்ததால்!
"குழலினிது யாழினிது என்பர் -என்னவளின்
கொஞ்சு மொழி கேளாதார்"
இஸ்ரோவே! 2020-ல் நிலவுக்கு ஆள் அனுப்பும் போது
தண்ணீர் எல்லாம் குடிக்க எடுத்து செல்ல வேண்டாம்!
என்னவளின் புகைப்படத்தை எடுத்துச் செல்லுங்கள்!
அவளது முகத்தை நிலவு பார்த்து விட்டால்
ஆனந்த கண்ணீரில்* அதன் குண்டு குழிகள் எல்லாம் நிரம்பி விடும்!
கடல் வற்றினாலும் இனி கவலை இல்லை!
ஒருமுறை இவள் இரவில் வெளிவந்து வாசலில் நின்றால் போதும்!
"என்னை விட பேரழகி அதோ" என்று
நிலவு அழும் போது விடும் கண்ணீரால் கடலை நிரப்பி விடலாம்!
என் வீட்டு நாள்காட்டியில் நான் குறித்து வைப்பது இது தான்!
தினமும் காலை 7 முதல் மாலை 7 வரை பௌர்ணமி!
மாலை 7 முதல் காலை 7 வரை அமாவாசை!
உன்னை சந்திக்கும் அந்த தித்திக்கும் தருணங்களில் பௌர்ணமியாய்
பிரிந்து தத்தலிக்கும் தருணங்களில் அமாவாசையாகிறது என் நிலவு!
பூமிக்கு நிலவின் மீது கோபமாம்!
நான் போய் பூமியிடம் இப்படி சொன்னதால்!
"உன் அந்தரங்கங்கள் நிலவுக்கு தெரிந்து விட்டது"!
பூமிக்கு எங்கே புரியப் போகிறது?
நீ "புவியியல்" படித்ததை தான் நான் இப்படி சொன்னேன் என்று!
மனிதர்கள் உருவான பின்பு பூமிக்கும் வஞ்சக எண்ணம் வந்து விட்டதோ?
நிலவு அழகாய் இருப்பதை பொறுக்க முடியாமல்
உன்னை படைத்து, நிலவை பழிக்குப் பழி வாங்கி விட்டதே!
முதன் முதலாய் நிலவை மிதித்தவன் - அந்த இரக்கமே இல்லாத ஆம்ஸ்ட்ராங்!
அணுகுண்டை போட்ட நாட்டில் பிறந்தவனிடம் பிறகு என்ன எதிர் பார்க்க முடியும்?
முதன் முதலாய் நிலவின் கை பிடித்தவன் நான் தானே!
அஹிம்சை பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் நாட்டில் பிறந்தவன் என்பதால்!
பொறுங்கள்!
நான் ஒன்றும் காந்தியின் அஹிம்சை பற்றி இங்கே சொல்லவில்லை!
அவளை தான் (இம்சை என்று... மன்னிக்கவும்...:-)
அஹிம்சை என்று அடை மொழிந்தேன்!
பூமியை சுற்றும் ஈயாய் அந்த நிலா!
என்னை சுற்றும் சேயாய் இந்த நிலா!
நான் சுற்றும் தாயாய் எந்தன் நிலா!
*ஆனந்த கண்ணீர் உப்பு கரிக்காதாம்.
உலகமே ஒருகணம் வியப்பு!
நிலவின் மேற்பரப்பில் நீர் திவலைகளாம்!
அவர்களுக்கு எப்போது தெரிய போகிறது?
உன்னை நிலவென நினைத்து
உன் நெற்றி வியர்வையை தான்
செயற்கை கோள்கள் படமெடுத்து அனுப்பிவிட்டன என்று?
நிலவு மனிதர்களிடம் கேட்பது எல்லாம்
ஒரே ஒரு காது கேட்கும் கருவியை தான்!
உந்தன் குரலை கேட்க வேண்டுமாம் அதற்காக!
நேற்றிரவு நிலவுக்கு தெரியும்படி நான் இப்படி எழுதி வைத்ததால்!
"குழலினிது யாழினிது என்பர் -என்னவளின்
கொஞ்சு மொழி கேளாதார்"
இஸ்ரோவே! 2020-ல் நிலவுக்கு ஆள் அனுப்பும் போது
தண்ணீர் எல்லாம் குடிக்க எடுத்து செல்ல வேண்டாம்!
என்னவளின் புகைப்படத்தை எடுத்துச் செல்லுங்கள்!
அவளது முகத்தை நிலவு பார்த்து விட்டால்
ஆனந்த கண்ணீரில்* அதன் குண்டு குழிகள் எல்லாம் நிரம்பி விடும்!
கடல் வற்றினாலும் இனி கவலை இல்லை!
ஒருமுறை இவள் இரவில் வெளிவந்து வாசலில் நின்றால் போதும்!
"என்னை விட பேரழகி அதோ" என்று
நிலவு அழும் போது விடும் கண்ணீரால் கடலை நிரப்பி விடலாம்!
என் வீட்டு நாள்காட்டியில் நான் குறித்து வைப்பது இது தான்!
தினமும் காலை 7 முதல் மாலை 7 வரை பௌர்ணமி!
மாலை 7 முதல் காலை 7 வரை அமாவாசை!
உன்னை சந்திக்கும் அந்த தித்திக்கும் தருணங்களில் பௌர்ணமியாய்
பிரிந்து தத்தலிக்கும் தருணங்களில் அமாவாசையாகிறது என் நிலவு!
பூமிக்கு நிலவின் மீது கோபமாம்!
நான் போய் பூமியிடம் இப்படி சொன்னதால்!
"உன் அந்தரங்கங்கள் நிலவுக்கு தெரிந்து விட்டது"!
பூமிக்கு எங்கே புரியப் போகிறது?
நீ "புவியியல்" படித்ததை தான் நான் இப்படி சொன்னேன் என்று!
மனிதர்கள் உருவான பின்பு பூமிக்கும் வஞ்சக எண்ணம் வந்து விட்டதோ?
நிலவு அழகாய் இருப்பதை பொறுக்க முடியாமல்
உன்னை படைத்து, நிலவை பழிக்குப் பழி வாங்கி விட்டதே!
முதன் முதலாய் நிலவை மிதித்தவன் - அந்த இரக்கமே இல்லாத ஆம்ஸ்ட்ராங்!
அணுகுண்டை போட்ட நாட்டில் பிறந்தவனிடம் பிறகு என்ன எதிர் பார்க்க முடியும்?
முதன் முதலாய் நிலவின் கை பிடித்தவன் நான் தானே!
அஹிம்சை பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் நாட்டில் பிறந்தவன் என்பதால்!
பொறுங்கள்!
நான் ஒன்றும் காந்தியின் அஹிம்சை பற்றி இங்கே சொல்லவில்லை!
அவளை தான் (இம்சை என்று... மன்னிக்கவும்...:-)
அஹிம்சை என்று அடை மொழிந்தேன்!
பூமியை சுற்றும் ஈயாய் அந்த நிலா!
என்னை சுற்றும் சேயாய் இந்த நிலா!
நான் சுற்றும் தாயாய் எந்தன் நிலா!
*ஆனந்த கண்ணீர் உப்பு கரிக்காதாம்.